தமிழகத்தில் வாக்குப்பதிவன்று மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள், வாக்குப்பதிவு முடிந்தவுடன் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நுழைந்து, தேர்தல் அதிகாரிகளிடம் வெற்றுத்தாளில், சட்டமன்றத் தொகுதி எண், வாக்குச்சாவடி எண், மொத்த வாக்குகள், பதிவான வாக்குகள், ஈ.வி.எம். எண் ஆகியவற்றை எழுதச்சொல்லி ஒவ்வொரு வார்டுக்குரிய தனி அரசு சீல் வைத்து கையெழுத்தும் வாங்கியிருக்கிறார்கள்.
"ஏன் உங்களிடம் இந்த தரவுகளைத் தரவேண்டும்?' என்று சில அதிகாரிகள் கேட்டதற்கு, ""இது தேர்தல் கமிஷன் உத்தரவு இதில் ஒன்றும் தப்பில்லை என்று அதிகாரிகளை விட்டு சொல்லச் சொன்னார்கள். நாங்களும் முழு விவரத்தை எழுதி சீல்வைத்து கையெழுத்துப் போட்டுவிட்டோம். வெளியில் வந்து தேர்தல் பணியிலிருந்த மற்ற அதிகாரிகளிடம் கேட்டபோது, "ஆமா என்னிடமும் கேட்டார்கள். நான் பக்கத்திலிருந்த வாக்குச்சாவடி அதிகாரி யிடம் கேட்டேன். அவர் இதில் ஒன்றுமில்லை சும்மா போட்டுக்கொடுங்கள்' என்றார். நானும் சீல்வைத்து கொடுத்துவிட்டேன். எல்லோரிடமும் இதுபோல் வாங்கியிருக்கிறார்கள் என்றால் ஏதோ சந்தேகம் உள்ளது. நீங்கள் கொஞ்சம் விசாரியுங்கள்''’என்று நம்மிடம் வந்தார் தேர்தலன்று பணியிலிருந்த அதிகாரி.
தேர்தல் பணி செய்த மற்றொரு பள்ளி ஆசிரியர் ஒருவர் நம்மிடம், ""என் நண்பர் மதுரை, திருப்பரங்குன்றம் தொகுதி, நிலையூர், கைத்தறி நகர், என்.கே.குப்பையன், ரத்தினசபாபதி தொடக்கப்பள்ளியில் தேர்தல் பணிக்காகச் சென்றிருந்தார். இதேபோல் வாக்குப்பதிவு முடிந்தவுடன் சி.ஆர்.பி.எப். அதிகாரிகள் விவரம் வாங்கியபோது, அங்கிருக்கும் தேர்தல் அலுவலர்கள் ஆட்சேபனை தெரிவித் தார்கள். ஆனால் தேர்தல் அதிகாரி சீல் வைத்துக் கொடுத்து விட்டார். வாக்களிப்பு முடிந்தவுடன் ஒவ் வொரு ஓட்டுப்பதிவு எந்திரத்தையும் மூடி அதைச்சுற்றி அந்தந்த வாக்குச்சாவடி எண் உள்ள முத்திரை வைக் கப்பட்டு அந்த வாக்கு மையத்தின் பொறுப் பாளர் கையெழுத் திடுவார்.
இந்த முத்திரை ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் மாறுபடும். இந்த முத்திரை மிகவும் ரகசியமாக தேர்தல் அதிகாரியிடம் மட்டும் தான் இருக்கும். அது தொலைந்துபோனால் அந்த அதிகாரி பதில் சொல்லவேண்டும். அப்படியிருக்கும்போது எதன் அடிப்படையில், எவ்வளவு ஓட்டுகள் ஒவ்வொரு ஈ.வி.எம். மெஷினிலும் பதிவாகி யிருக்கிறது... அதன் சீரியல் எண், வாக்குச் சாவடி விவரம், அதன் முத்திரை மற்றும் அதி காரியின் கையெழுத்து ஆகியவற்றை சி.ஆர். பி.எஃப். வீரர்கள் வாங்கினர். இதை வைத்து வேறொரு ஓட்டுப்பெட்டியில் இதே ஓட்டை அவர் கள் யாருக்கு வேண்டு மானாலும் போட்டு, டேப் சுற்றி அதே முத்திரை வைத்து, அதி காரியின் கையெழுத் தையும் போலியாக போட்டு ஏற்கனவே உள்ள ஓட்டுப் பெட்டியை மாற்ற வாய்ப்பிருக்கிறது'' என்றார்.’’
தேர்தல் அலுவலர் பணிக்குச் சென்ற பள்ளி ஆசிரியர் ஒருவர், ""நான் பணி செய்த வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு முடிந்தபின் கடைசி நேரத்தில் வந்த அதிகாரி முழு விவரத்தை வாங்கி அதிகாரியிடம் கையெழுத்து வாங்கினார். இது அங்கிருக்கும் வாக்குச்சாவடி சி.சி.டி.வி. கேமராவில்கூட பதிவாகியிருக்கிறது. எதற்காக தரவுகளையும் பெறறுக்கொண்டு, முத்திரை மற்றும் கையெழுத்துப் பெற்றனர் என்பது தெரியவேண்டும். இதுவரை எவ்வளவோ தேர்தல் பணிக்குச் சென்றிருக்கிறேன். சி.ஆர்.பி.எப். வீரர்கள் வெளியேதான் நிற்பார்கள். இதுபோல தரவுகள் வாங்கியது இல்லை. ஏதோ நடக்கிறது. இதை உடனே கவனத்தில் எடுக்கவேண்டும் இல்லை யென்றால் எதுவும் நடக்கலாம். கடைசி நேரத்தில் வெற்றுப்பெட்டியை வைக்கவருகிறோம் என ஏதாவது சொல்லி கொண்டுவந்து பெட்டியை மாற்றினாலும் மாற்றுவார்கள்'' என்றார் பதட்டமாக.
மாவட்ட ஆட்சியரிடம் இதுகுறித்து தொடர்புகொண்டோம். அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. திருப்பரங்குன்றம் தேர்தல் பொறுப்பாளரும் தாசில்தாருமான முருகேஸ்வரி யிடம் கேட்டோம். அவர், ""ஒவ்வொரு வாக்குச் சாவடியில் பதிவாகும் தரவுகள் அனைத்தும் வாக்குப்பதிவு முடிந்தவுடன் அந்தந்த கட்சியால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டிடம் 17 சி, பாரத்தில் மொத்த வாக்குகள் எவ்வளவு பதிவாகியிருக்கிறது என்று கொடுப்போம். சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு கொடுக்கவேண்டும் என்று எதுவும் இல்லை. அப்படி எழுதி வாங்க அவர்களுக்கு அதிகாரமும் இல்லை''’ என்று முடித்துக்கொண்டார்.
"நடைமுறையில் இல்லாத புதிய பழக்கம், மதுரைப் பகுதியில் ஏன் பின்பற்றப்பட்டது, அது மதுரை சுற்றுவட்டாரத்தில் மட்டும்தானா தமிழகம் முழுவதுமே இத்தகைய விவரங்கள் சேகரிக்கப் பட்டனவா, வாக்களித்த பின்னும் கட்சிகளையும், வாக்காளர்களையும் ஏன் பதற்றத்தில் தத்தளிக்க விடுவகிறது தேர்தல் ஆணையம், மக்கள் வாக்களித்த விதத்திலே தேர்தல் முடிவுகளை வெளிப்பட அனுமதிப்பார்களா?' எனப் பல்வேறு தத்தளிப்புகள் சாதாரணக் குடிமகனின் நெஞ்சத்தில் எழுகிறது.