திராவிட மாடல் சர்ச்சை கவர்னரைத் தூண்டிய அமித்ஷா!

dd

தி.மு.க. அரசுக்கு எதிரான தனது மோதல்களை மீண்டும் தொடங்கியிருக்கிறார் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. இதற்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது சமீபத்திய அவரது டெல்லி பயணம்.

amitsha

ஒரு பத்திரிகைக்குப் பேட்டியளித்த அவர், "திராவிட மாடல் ஆட்சி என்பது வெறும் அரசியல் கோஷம். காலாவதியான அந்த கொள்கையை உயிர்ப்புடன் வைக்க மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சி. திராவிட மாடல் என்பது நமது ஒரே பாரதம் என்கிற கொள்கைக்கு எதிரானது''”என்று தொடங்கி, "ஆளுநர் மாளிகைக்கு ஒதுக்கப்படும் நிதியில் முறைகேடு நடந்துள்ளது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வைத்த குற்றச்சாட்டுகள் பொய்யானது என்பதுவரை தி.மு.க. அரசை மிகக்கடுமையாக சாடியிருக்கிறார் கவர்னர் ரவி.

கவர்னரின் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளும்கட்சி தரப்பில் உடனடியாக பதிலடி தரப்பட்டாலும், அவை அந்தளவுக்கு வீரியம்மிக்கதாக இருக்கவில்லை. தற்போதுதான் மெல்ல, மெல்ல வேகமெடுத்திருக்கிறது தி.மு.க. அரசின் பதிலடி.

"மு.க.ஸ்டாலின் நல்ல மனிதர். தனிப்பட்ட முறையில் எனக்கும் அவருக்கும் இடையே நல்ல உறவு இருக்கிறது; பரஸ்பரம் மரியாதை இருக்கிறது' என்று சொல்லும் கவர்னர் ரவி, "தி.மு.க.வின் கொள்கை சார்ந்த அரசியலை மிக கடுமையாக இப்படி விமர்சிப்பதற்கு என்ன காரணம்? ஏதேனும் பின்னணி இருக்கிறதா?' என ராஜ்பவன் வட்டாரங்களில் விசாரித்தோம்.

amitsha

நம்மிடம் பேசிய ராஜ்பவன் தரப்பினர், "டெல்லி சென்று வந்த பிறகு கவர்னரிடம் புதிய உற்சாகத்தை பார்க்க முடிகிறது. அந்த உ

தி.மு.க. அரசுக்கு எதிரான தனது மோதல்களை மீண்டும் தொடங்கியிருக்கிறார் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. இதற்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது சமீபத்திய அவரது டெல்லி பயணம்.

amitsha

ஒரு பத்திரிகைக்குப் பேட்டியளித்த அவர், "திராவிட மாடல் ஆட்சி என்பது வெறும் அரசியல் கோஷம். காலாவதியான அந்த கொள்கையை உயிர்ப்புடன் வைக்க மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சி. திராவிட மாடல் என்பது நமது ஒரே பாரதம் என்கிற கொள்கைக்கு எதிரானது''”என்று தொடங்கி, "ஆளுநர் மாளிகைக்கு ஒதுக்கப்படும் நிதியில் முறைகேடு நடந்துள்ளது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வைத்த குற்றச்சாட்டுகள் பொய்யானது என்பதுவரை தி.மு.க. அரசை மிகக்கடுமையாக சாடியிருக்கிறார் கவர்னர் ரவி.

கவர்னரின் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளும்கட்சி தரப்பில் உடனடியாக பதிலடி தரப்பட்டாலும், அவை அந்தளவுக்கு வீரியம்மிக்கதாக இருக்கவில்லை. தற்போதுதான் மெல்ல, மெல்ல வேகமெடுத்திருக்கிறது தி.மு.க. அரசின் பதிலடி.

"மு.க.ஸ்டாலின் நல்ல மனிதர். தனிப்பட்ட முறையில் எனக்கும் அவருக்கும் இடையே நல்ல உறவு இருக்கிறது; பரஸ்பரம் மரியாதை இருக்கிறது' என்று சொல்லும் கவர்னர் ரவி, "தி.மு.க.வின் கொள்கை சார்ந்த அரசியலை மிக கடுமையாக இப்படி விமர்சிப்பதற்கு என்ன காரணம்? ஏதேனும் பின்னணி இருக்கிறதா?' என ராஜ்பவன் வட்டாரங்களில் விசாரித்தோம்.

amitsha

நம்மிடம் பேசிய ராஜ்பவன் தரப்பினர், "டெல்லி சென்று வந்த பிறகு கவர்னரிடம் புதிய உற்சாகத்தை பார்க்க முடிகிறது. அந்த உற்சாகம், ஆளும் தி.மு.க. அரசுக்கு எதிராக எந்த கருத்தையும் நீங்கள் முன்வைக்கலாம் என அவருக்கு டெல்லி க்ரீன் சிக்னல் கொடுத்திருப்பதையே உணர்த்துகிறது. காரணம், டெல்லியின் அனுமதியோ, உத்தரவோ இல்லாமல் பொதுவெளியில் தி.மு.க. அரசை இந்தளவுக்கு அவர் விமர்சிக்கமாட்டார்''’என்று சுட்டிக் காட்டுகிறார்கள்.

"டெல்லியில் அப்படி என்ன நடந்தது?' என்பது குறித்து விசாரித்தபோது, "டெல்லிக்கு வந்திருந்த கவர்னர் ரவி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத்தோவல் ஆகிய இருவரையும் சந்தித்தார். நீண்ட நேரம் நீடித்தது அந்த சந்திப்பு. சந்திப்பில் முதல் அஜெண்டாவாக, ராஜ்பவனுக்கு ஒதுக்கப்படும் நிதியில் முறைகேடு நடந்ததாக தி.மு.க. அரசு வைக்கும் குற்றசாட்டுகள் குறித்துதான் கவர்னரிடம் விவாதித்தனர். அப்போது, முந்தைய ஆட்சியின்போதும் இப்போதும் தமிழக அரசின் அனுமதி பெற்றும், நிதி செலவினங் களுக்குரிய சட்டவிதிகளின் படியும்தான் அந்த நிதிகள் செலவிடப்பட்டிருக்கிறது. ராஜ்பவனுக்கு ஒதுக்கப்படும் நிதி பட்ஜெட்டுக்கு உட்பட்டது என்றாலும், அதை செலவு செய்வதில் வரம்புகள் ஏதும் இல்லை''. ஆனாலும் ராஜ்பவ னின் செலவினங்கள் குறித்து தமிழக நிதியமைச்சர் கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்து அது குறித்தும் விளக்கமாக விவரித்திருக்கிறார் கவர்னர் ரவி.

இதனையடுத்து, தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை, தி.மு.க.வின் அரசியல், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்துவரும் ரெய்டுகள் குறித்தெல்லாம் அந்த சந்திப்பில் அடுத்தடுத்து விவாதிக்கப்பட்டன. ரெய்டுகளைப் பொறுத்தவரை ஏற்கனவே டெல்லிக்கு கவர்னர் ரவி கொடுத்திருந்த ரிப்போர்ட்டின் அடிப்படையிலேயே நடந்தது. அந்தவகையில் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு, தி.மு.க.வின் அரசியல் என ஒவ்வொரு தலைப்பிலும் ரிப்போர்ட்டுகள் தயாரித்து தன்னுடன் எடுத்துச்சென்ற கோப்புகளை அஜீத்தோவலிடம் ஒப்படைத்திருக்கிறார் கவர்னர் ரவி.

amitsha

அந்த சந்திப்பில் அரசியல்ரீதியாக பேச்சுகள் எழுந்தபோதுதான், "ராஜ்பவனுக்கு எதிராக தி.மு.க. அரசு முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கும், நிர் வாக ரீதியாக நடக்கும் தவறுகளுக்கும் ரியாக்ஷன் காட்டலாம்' என கவர்னருக்கு அறிவுறுத்தப்பட்டது. அதாவது, தி.மு.க. அரசை விமர்சிக்க க்ரீன் சிக்னல் தரப்பட்டது. அதன் வெளிப்பாடுதான் அந்த பேட்டியில் அவர் சொன்ன கருத்துகள்” என்று கவர்னரின் டெல்லி விசிட்டில் நடந்தவைகளை தெரிவிக்கிறார்கள் டெல்லியிலுள்ள தமிழக அதிகாரிகள் தரப்பினர்.

அதேசமயம், அமித்ஷா மற்றும் அஜீத்தோவலோடு கவர்னரின் டெல்லி விசிட் முடிந்துவிடவில்லை. இந்த சந்திப்புக்கு மறுநாள், மத்திய புலனாய்வு விசாரணை அமைப்புகளான சி.பி.ஐ., ஐ.பி., ரா, என்ஃபோர்ஸ்மெண்ட் ஆகியவைகளின் அதிகாரி களோடு ஆலோசனை நடத்திவிட்டே சென் னைக்குத் திரும்பினார் கவர்னர் ரவி.

பொதுவாகவே, கவர்னர் ரவி டெல்லிக்கு செல்லும்போதெல்லாம் இந்த அதிகாரிகளோடு விவாதிப்பது வழக்கம். அந்த வகையில்தான் இந்த முறையும் ஆலோசித்தார்.

இந்த நிலையில், சென்னை உள் ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்து முடிந்துள்ள ரெய்டுகளில் சிக்கிய ஆவணங்களை ஒருங்கிணைத்து வரு கிறது வருமானவரித்துறை. அதன் மீது ஆக்ஷன் எடுக்கப்படும்போது சம்மந்தப்பட்டவர்களுக்கு சிக்கல் காத்திருக்கிறது. என்கின்றன டெல்லி தகவல்கள்.

_____________

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

dd

மே 8ஆம் தேதி திங்களன்று, பிளஸ் 2 தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். கடந்த ஆண்டு 93.76% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு 94.03% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97% தேர்ச்சி விகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தையும், திருப்பூர் மாவட்டம் இரண்டாம் இடத்தையும், பெரம்பலூர் மாவட்டம் மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளது. இந்தத் தேர்வு முடிவுகள் மட்டுமே இறுதியில்லை என்றும், பெற்றோர்கள் மாணவர்களுக்கு அழுத்தம் தர வேண்டாமென்றும், தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூன் 19ஆம் தேதி துணைத்தேர்வு நடைபெறுமென்றும் அமைச்சர் தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி நந்தினி, அனைத்துப் பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

__________________

கவர்னருக்கு பதிலடி தந்த முதல்வர் ஸ்டாலின்!

காஞ்சிபும் வடக்கு மாவட்டம், கண்டோன்மெண்ட் பல்லாவரத்தில் திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசு மீது ஆளுநர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார். "கடந்த ஜனவரி 9ஆம் நாள் ஆளுநர் ரவி, நாம் தயாரித்து வழங்கிய உரையை வாசிக்காமல் அதனை திருத்தி வாசித்தார். அப்படி அவர் நடந்துகொண்டது அவையின் உரிமையை மீறிய செயல் என்பதால்தான், நாம் தயாரித்த உரையே அவைக் குறிப்பில் இடம்பெறும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினோம். தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இல்லை என்கிறாரே, இப்போது பா.ஜ.க. ஆளுகிற மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறதே! கர்நாடக மாநிலத் திலும் கலவரம் நடந்ததே? அது போல் தமிழ்நாட்டில் நடக்கிறதா?'' என்று கேள்வியெழுப்பினார்.

"பாப்புலர் பிரெண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்த தால் வன்முறை நடந்ததாக ஆளுநர் கூறுவதில் உண்மை இல்லை. வன்முறையோ, உயி ரிழப்போ நடக்கவில்லை. 16 பேர் கைது செய்யப்பட்டனர். 6 பேர் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டார்கள். தர்மபுரம் ஆதினத்துக்கு அவர் போனபோது வழிமறித்துத் தாக்கியதாகக் கூறுவது பச்சைப்பொய். அவர் வாகனம் சென்ற பிறகுதான் கருப்புக்கொடிகளை வீசியெறிந் துள்ளனர். மதுரையில் அமையும் கலைஞர் நூற்றாண்டு நூலகத் திற்கு அனைத்து தேசிய மொழிப் புத்தகங்களையும் வாங்க வேண்டு மென்கிறார் ஆளுநர். குஜராத் திலும், அவர் கவர்னராக இருந்த நாகாலாந்திலும் அனைத்து மொழிப் புத்தகங்களையும் வைக்கச்சொன்னாரா ஆளுநர்?'' என கேள்வியெழுப்பி, ஆளுநரின் அனைத்துப் புகார்களுக்கும் பதிலடி தந்துள்ளார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.

-கீரன்

nkn100523
இதையும் படியுங்கள்
Subscribe