விஸ்மயா... ஆயுர்வேத மருத்துவ மாணவியான இவரின் தற்கொலை மரணம் தான் கேரளாவில் வரதட்ச ணைக் கொடுமையின் கடைசி மரணமாக இருக்க வேண்டும் எனப் பலரும் குரல் எழுப்பி யிருக்கும் நிலையில், மேலும் இரு இளம் பெண்களின் தற்கொலை, கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. அங்கு கடந்த 20 நாட்களில் தொடர்ந்து 7 பெண்கள் வரதட்ச ணைக் கொடுமையால் உயிரை மாய்த்துள்ளனர். இவர்களெல் லோரும் திருமணமாகி நான்கைந்து மாதங்களேயான பட்டதாரிப் பெண்கள் என்பதால் இவர் களின் மரணம் அனை வரையும் திடுக்கிட வைத் துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்துவரும் காவல் துறையினர் கூறியதிலிருந்து...
சம்பவம் 1: கொல்லம் சாஸ்தான்கோட்டையைச் சேர்ந்த 4-ம் ஆண்டு ஆயுர்வேத மருத்துவ மாணவியான விஸ்மயாவுக்கும், வட்டார போக்குவரத்து ஆய்வாளரான கிரண்குமாருக்கும் நடந்த திருமணத்தின் போது, 100 பவுன் தங்க நகை, லட்சக்கணக்கான மதிப்புள்ள ஒரு ஏக்கர் நிலம், 11 லட்சம் மதிப்பிலான கார் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் என வரதட்சணையாக அள்ளிக் கொடுத்தனர் விஸ்மயாவின் பெற்றோர். இரண்டு வாரங்கள் கழித்து இன்னும் அதிக வரதட்சணையை கிரண்குமார் கேட்கவே, மறுத்த விஸ்மயாவை, தினமும் நிர்வாணப் படுத்தி கொடுமைப்படுத்தியதோடு அவளின் உடல் முழுக்க கீறி, அதில் எலுமிச்சை சாற்றையும், உப்பையும் கலந்துவிட்டு கொடுமை செய்தான் கிரண்குமார். கொடுமை தாங்கமுடியாத விஸ்மயா, ஜூன் 27-ம் தேதி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சம்பவம் 2: ஆலப்புழை வள்ளிகுந்நு பகுதியைச் சேர்ந்த எம்.காம். பட்டதாரியான சுசித்ராவை ராணுவத்தில் வேலை செய்யும் விஷ்ணுக்கு கட்டிக் கொடுக்கும்போது வரதட்சணை யாக 50 பவுன் நகை, 8 லட்சத்தில் கார், கையில் 5 லட்சம் ரொக்கம் கொடுக்கப்பட்டது. திருமண விருந்து முடிந்ததுமே கூடுதலாக 10 லட்சம் ருபாய் வரதட்சணை கேட்டு சுசித்ராவைச் சீண்டினா?? விஷ்ணு. அரைத்த மிளகாயை சுசித்ராவின் உடல் முழுக்க தேய்த்தும், அவள் மீது ஆல்க ஹாலை ஊற்றியும் தினமும் அடித்து உதைத்து சித்ரவதை செய்ததைத் தாங்க முடியாமல் பெற்றோரிடம் சொல்லியிருக் கிறாள். பெற்றோரோ 5 லட்சம் ரூபாய் கொடுக்க முன்வர, அதன் பின்னும் கொடுமை தொடர்ந்ததால் தன்னால் வாழ முடியாதென்பதை சகோதரியிடம் போனில் சொல்லி விட்டு தூக்கில் தொங்கினாள் சுசித்ரா.
சம்பவம் 3: திருவனந்தபுரம் வெம்பாயத்தைச் சேர்ந்த அர்ச்சனாவும் விஜின் ஜெகதீசும் காதலித்து, இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 7 லட்சம் ரூபாய் வரதட்சணை தரப்பட்டுள்ளது. இந்நிலையில், விஜின் ஜெகதீஷ் கூடுதலாக 5 லட்ச ரூபாய் கேட்டு அர்ச்சனாவைக் கொடுமைப் படுத்தினார். படுக்கையறையில் அர்ச்சனாவின் அந்தரங்கப் படத்தை எடுத்து அவளை மிரட்டியிருக்கிறான். தன்னுடைய ஏழைப் பெற்றோரால் இனியும் பணம் கொடுக்க இயலாதென்ப தால், வீட்டிலிருந்த டீசலை ஊற்றித் தீ வைத்து தற்கொலை செய்துகொண்டாள்.
சம்பவம் 4: நெடுமங்காட் டைச் சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரியான பிரியதரிசினிக்கு கணவன் உண்ணி ராஜன்தேவால் நடந்த வரதட்சணைக் கொடுமையால், பெற் றோரிடம் எந்தத் தொடர்பும் வைக்கமுடி யாமல் மூன்றே மாதத் தில் மனநிலை பாதிப் பாகி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் பிரியதரி சினி. இதேபோல கடந்த ஆண்டு கொல் லம் அஞ்சல் அருகே, திருமணத்தின்போது வரதட்சணையாக 100 பவுன் நகை, கார் எனக் கொண்டுசென்ற உத்ராவிடம், இரண்டு மாதத்திலே கணவரும் அவருடைய பெற்றோரும் மேலும் ஒரு வீட்டை வரதட்சணையாகக் கேட்டு கொடுமைப்படுத்தி, பாம்பை விட்டுக் கடிக்கவைத்து கொலை செய்தார் கணவர் சுராஜ். இவற்றில், விஸ்மயாவின் தற்கொலை மரணம் தான் நாடு முமுவதும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு பெண்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, இனி வரதட்சணை கொடுக்க மாட்டோம், "வரதட்சணை கேட்டு வருவோரே வெளியே போ'' என வீட்டு வாசலில் எழுதிவைத்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர் இளம்பெண்கள். இனியொரு வரதட்சணை மரணம் கேரளாவில் நடக்காதிருக்க ஆண் பிள்ளைகளை பெற்ற பெண்கள் அனைவரும் உறுதியெடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேரளா குடும்ப ஸ்த்ரி (குடும்ப பெண்கள்) அமைப்பின் அரசு தூதுவரும் பிரபல நடிகையுமான மஞ்சுவார்யார் காட்டமாக வேண்டுகோள் விடுத்தார். நடிகர் மோகன்லாலும் வரதட்சணை கொடுமையைக் கண்டித்ததோடு, வரதட்சணைக்காக அப்பாவிப் பெண்களின் மரணத்தை தொடரவிடாமல் தடுக்க வேண்டுமென்றும், தனது "ஆராட்டு' திரைப்படத்தில் இதை வலியுறுத்துவேன் என்றும் கூறினார். காந்திய இயக்கங்கள் சார்பில் வரதட்சணைக்கு எதிரான உண்ணாவிரதத்தில் கேரளா கவர்னர் ஆரீப் முகம்மது கான் கலந்துகொண்டு எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்நிலையில் கடந்த 11-ம் தேதி. திருவனந்த புரம் பாப்பனங்கோடு பகுதியைச் சேர்ந்த எம்.எஸ்சி பட்டதாரியான ஆதிரா, வீட்டுக் குளியலறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். திருமணம் முடிந்து 5 மாதங்களேயான நிலையில், கப்பல் நிறுவனத்தில் பணியாற்றும் கணவர் விவேக் கிருஷ்ணாவும், அவரின் குடும்பத்தினரும் வரதட் சணை கொடுமை செய்வதால் தன்னால் வாழ முடிய வில்லையென்று கடிதம் எழுதிவைத்து தற்கொலை செய்துள்ளார். இதே நாளில், கொல்லம் சக்திகுளம் கரையைச் சேர்ந்த அனுஜா, திருமணம் முடிந்து மூன்று மாதங்களேயான நிலையில், கணவர் சதீஷின் பெற்றோர் 45 பவுன் நகைகளைப் பிடுங்கிக்கொண்டு, மேலும் 20 பவுன் நகை கேட்டு அடித்துத் துன்புறுத் தியதோடு, கதவில்லாத பாத்ரூமைப் பயன்படுத்த வைத்து கொடுமைப்படுத்தியதால் தூக்கில் தொங்கிய தாக கொல்லம் உதவி கமிஷனர் பிரதீப்குமார் கூறியுள்ளார்.
இந்த சம்பவங்கள், கேரள இளம் பெண்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் ஆத்திரத்தை மேலும் தூண்டியுள்ளது. இதுகுறித்து நம்மிடம் பேசிய, கேரளா சேவா பெண்கள் அமைப்பின் பொதுச்செய லாளர் டாக்டர் சோனியா ஜார்ஜ், "இந்தியாவில் 2 மணி நேரத்துக்கு ஒரு பெண் வரதட்சணைக் கொடுமையால் மரணம் அடைகிறார் என்று புள்ளி விபரம் தெரிவிக்கிறது. அதேபோல் கேரளாவில் கடந்த 13 ஆண்டுகளில் 212 பெண்கள் வரதட்சணைக் கொடு மையால் மரணமடைந்திருக்கிறார்கள். வரதட்சணைக் கொடுமைக்காகக் கைது செய்யப்படும் குற்றவாளிகள், ஓரிரு நாட்கள் மட்டும் சிறைத்தண்டனை அனுபவித்து விட்டு தப்பித்து விடுகிறார்கள். அதோடு வேறு பெண்ணையும் திருமணம் செய்து கொள்கிறார்கள். வரதட்சணைக் கொடுமையால் பெண் தற்கொலை செய்வதுபோல், அதற்குக் காரணமானவர்களும் வாழ்நாள் முமுக்க அனுபவிக்கும்விதமாகத் தண்டனை வழங்க சட்டத்தைத் திருத்த வேண்டும். மேலும், போக்சோ சட்டத்தைப் போன்று வரதட் சணைக் கொடுமைக்கும் சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும். முமுமையான கல்வி அறிவு பெற்ற கேரளாவில் இன்றைய காலத்திலும் வரதட்சணைக் கொடுமை நடப்பது அவமானமாக உள்ளது'' என்றார்.