"ஹலோ தலைவரே, தேர்தல் முடிவு வருவதற்கு முன்பே ராகுலைக் கண்டு மோடி ரொம்பவே பயப் படுகிறார்''”
"ஆமாம்பா, நாடாளுமன்றத் தேர்த லில் ராகுல் ஜெயித்துவிடக்கூடாது என்று அவர் தவிக்கிறாரே?''”
"உண்மைதாங்க தலைவரே, நாடாளு மன்றத் தேர்தலில் ராகுல் எந்த வகையிலும் ஜெயித்துவிடக்கூடாது என்பதில் மோடி குறியாக இருக்கிறாராம். இந்தமுறை தனது உடல்நிலை காரணமாக சோனியா, தனது உ.பி. மாநில ரேபரேலி தொகுதியில், தனக்குப் பதில் ராகுலைக் களமிறக்குகிறார். கேரள மாநில வயநாட்டின் சிட்டிங் எம்.பி. யான ராகுல், இதனால் வயநாட்டிலும் ரேபரேலியிலும் ஒரே நேரத்தில் போட்டி யிடுகிறார். அவருக்கு வயநாட்டில் இந்தமுறை கடும் சவாலை பா.ஜ.க. ஏற் படுத்தியிருப்பதால், அவர் பாதுகாப்பு கருதி ரேபரேலியிலும் போட்டியிட சம்மதித்திருக் கிறார் என்கிறார்கள். இதைப் பார்த்த மோடியும், ஆர்.எஸ்.எஸ். தலைமையும், ரேபரேலியில் ராகுலைத் தோற்கடித்தே தீரவேண்டும் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு உத்தர விட, யோகியோ ரேபரேலியில் உளவுத்துறை மூலம் பல்ஸ் பார்த்திருக்கிறார். அங்கு ராகுலுக்கு சாதகமான நிலை இருப்பது அப்போது தெரிய வந்ததாம். இது மோடிக்கும் தெரிவிக்கப்பட, இதில் சற்றே கலவரமான மோடி, என்ன செய்வீர்களோ தெரியாது. ராகுல் தோற்றே ஆகவேண்டும் என்று மீண்டும் யோகியை முடுக்கிவிட்டிருக்கிறாராம்.''”
"லண்டன் சென்றிருக்கும் அமைச்சர் உதயநிதி சென்னை திரும்பியதும் தி.மு.க.வில் சில மாற்றங்கள் இருக்கும் என்கிறார்களே?''”
"கோடை விடுமுறையைக் கழிக்க லண்டன் சென்றுள்ள அமைச்சர் உதயநிதி, 10ஆம் தேதி சென்னை திரும்புகிறார். லண்டனில் இருந்தா லும் தமிழகத் தில் நிலவும் அரசியல் விவகாரங்கள் முதல் தி.மு.க.வின் கட்சி விவகாரங்கள் வரை அனைத் தையும் அவர் அன்றாடம் அறிந்து கொள்கிறா ராம். இந்த நிலையில், தேர்தல் ரிசல்ட் வந்ததும் இளைஞரணியின் மாநில நிர்வாகிகள் சிலருக்கு, கட்சியில் மா.செ.வாக பதவி உயர்வு அளிக்க அவர் திட்டமிட்டிருக்கிறாராம். இதற்காக, 4 மற்றும் 5 சட்டமன்ற தொகுதிகளை வைத்திருக் கும் மாவட்ட செயலாளர்களிடமிருந்து சில தொகுதிகளைப் பறித்து, கட்சிரீதியாக புதிய மாவட்டங்களையும், புதிய மா.செ.க்களையும் உருவாக்கலாம் என்பது அவர் கணக்காம். அப் படி உருவாக்கப்படும் புதிய மா.செ.க்களாக அவர் இளைஞரணியினரை அமர்த்த விரும்பு கிறாராம். அப்படி அவர் இளைஞரணி நிர்வாகி களை மா.செ.க்களாக நியமித்தால், இளைஞ ரணி மாநில பொறுப்புகளில் புதியவர்கள் சிலர் நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறுகிறார்கள்.''”
"அ.தி.மு.க.வில் ஒரு பிளவு நடவடிக்கை சீக்ரெட்டாக நடந்துவருகிறதே?''”
"ஆமாங்க தலைவரே,அ.தி.மு.க.வை பிளவை நோக்கித் தீவிரமாக நகர்த்தி வருகிறார் மாஜி மந்திரி வேலுமணி. கொங்கு மண்டல ஸ்ட்ராங் ரூம்களில் வாக்குப்பதிவு எந்திர கண் காணிப்புக்காக அமர்ந்திருக்கும் அ.தி.மு.க. ஏஜண்டுகளுக்கு, பா.ஜ.க. துண்டுகளை வேலு மணி அணிவித்திருப்பதாக, எடப்பாடிக்கு புகார்கள் போய்க்கொண்டிருக்கின்றன. எனினும் வேலுமணிக்கும் எடப்பாடிக்கும் இடையே கொடுக்கல், வாங்கல் விவகாரங்கள் நிறைய இருப்பதால் சிலவற்றில் எடப்பாடியால் அதிரடி முடிவுகளை எடுக்கமுடியாமல் திணறுகிறாராம். அதனால்தான், கடந்தகால அ.தி.மு.க. ஆட்சியை நானும் எடப்பாடியும்தான் பகிர்ந்து நடத்தினோம் என வேலுமணி பேசி வருவதை அறிந்தும் அவர் அமைதியாக இருக் கிறார் என்கிறார்கள். வேலுமணி இப்போது சசிகலா, ஓ.பி.எஸ். ஆகியோரோடு சேர்ந்து, அ.தி.மு.க.வைப் பிளக்கும் வேலைகளில் தீவிரமாக இருக்கிறாராம்.''”
"தமிழக பா.ஜ.க. நிர்வாகியை டெல்லிக்கு அழைத்து விசாரித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடுமையாக எச்சரித்தார் என்று தகவல் கசிகிறதே?''’
"ஆமாங்க தலைவரே, அந்த பா.ஜ.க. மாநில நிர்வாகி, மணல் மாஃபியாக்களிடம் தேர் தல் செலவுக்காக என்று 100 கோடி ரூபாயை வாங்கியதாக டெல்லிக்குப் புகார்கள் சென்றதாம். அதனால் அந்த பா.ஜ.க. நபரை, அமித்ஷாவே டெல்லிக்கு அழைத்து விசாரித்தாராம். அந்த நபரோ, ‘"அந்த 100 கோடியை நான் வாங்க வில்லை, எல்.முருகன்தான் வாங்கினார்'’என்று போட்டுக்கொடுத்தாராம். மேலும் ஒட்டுமொத்த மாக தமிழக பா.ஜ.க.வில் நடந்திருக்கும் தேர்தல் பண மோசடி குறித்தும், அந்த பா.ஜ.க. நபரிடம் விசாரித்த அமித்ஷா, அவரைக் கடுமையாகச் சாடியதோடு, மோசமாகத் திட்டி அனுப்பினா ராம். மேலும், இந்த நபரின் மைத்துனர் நடத் தும் குவாரிக்கு அரசாங்க ஆர்டர்கள் எல்லாம் வரவேண்டும் என்றும், அரசு சார்பில் நடத்தப் படும் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான செங்கல் போன்றவற்றை அங்கிருந்துதான் வாங்கவேண்டும் என்றும் தமிழக அமைச்சர் ஒருவர் உத்தரவிட்டது குறித்தும் டெல்லியில் விசாரித்தார்களாம்.''”
"பா.ஜ.க.வில் ஒரு புதிய பிரமுகரின் ஊடுருவல் அதிகமாகப் பேசப்படுகிறதே?''”
"ஆமாங்க தலைவரே, பா.ஜ.க.வில் ஒரு புதிய கேரக்டரின் அண்மைக்கால மூவ்கள் பரபரப்பாகப் பார்க்கப்படுகிறது. இல.கணே சன் காலத்தில் அமைதி யாக இருந்த அந்த நபர், இப்போது கொஞ்சம் தீவிரமாக திரையுலகில் இயங்கி வருகிறாராம். விருகை வெங்கடேஷ் என்ற அந்த பிரமுகர், ’"ரத்த வெறியாட்டம்'’ என்ற திரைப்படத்தை எடுத்துவரு கிறார். அவர் பா.ஜ.க. சீனியர் கேசவவிநாயகத்தின் கையில் இப் படத்திற்கான விளம்பர பதாகை களைக் கொடுத்து, தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். விருகை வெங்கடேசனுடன் கேசவவிநாயகத்தின் அண்மைக் கால நெருக்கம், கமலாலய வட் டாரத்தில் வினோத மாகப் பார்க் கப்படுகிறது.''”
"நடிகர் விஜய் தரப்பை தேர்தல் ஆணையம் பரிதவிக்க வைத்திருக்கிறதே?''”
"நடிகர் விஜய், தான் தொடங்கிய தமிழக வெற்றிக்கழகம் என்னும் அரசியல் கட்சியைப் பதிவு செய்வதற்காக, தலை மைத் தேர்தல் ஆணையத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி விண்ணப் பித்திருந்தார். அவரது விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டதாக இப்போது வரை, தேர்தல் ஆணையத்திடமிருந்து பதில் வர வில்லையாம். இதுகுறித்து அவர்களிடம் விசாரித்தபோது, "தேர்தல் ஆணைய அதி காரிகள், நாடாளுமன்றத் தேர்தல் நடந்துகொண்டி ருக்கிறது. அந்த வேலையில் நாங்கள் இருப்பதால், புதிதாக எந்த விண்ணப்பங்களையும் நாங்கள் பரிசீலிக்க வில்லை. எல்லாமே பென்டிங்கில் இருக்கிறது. தேர்தல் ரிசல்ட்டுக்கு பிறகுதான் அதையெல்லாம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வோம்' என்று சொன்னார்களாம். இத னால் தங்கள் விண்ணப்பம் ஏற்கப்படுமா? நிராகரிக்கப் படுமா? என்கிற குழப்பத்திலேயே இருக்கிறாராம் விஜய். அதனால், கட்சிக்கான புதிய உறுப்பினர் சேர்க்கையை அவர் நிறுத்தி வைத்திருப்பதோடு, மாநாடு நடத்தும் திட்டத்தையும் அவர் ஒத்திவைத்திருக்கிறாராம்.''”
"இந்தமுறை மோடி பிரதமராவது குறித்து பா.ஜ.க.வின் சீனியர் சு.சாமி, பகிரங்கமாகவே சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, கடந்த ஒன்றாம் தேதி சென் னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சு.சாமி, "இந்தத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத் தாலும், கடந்த முறை போல் மெஜாரிட்டிக்கும் கூடுத லான இடங்கள் கிடைக்காது. மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தாலும் மோடிதான் பிரதமர் என்று உறுதியாகக் கூற முடியாது' என்று. சந்தேகத்தைக் கிளப்பி திகைக்க வைத்திருக்கிறார். மேலும், "இந்தத் தேர்தலில் பா.ஜ.க.வில் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மட்டும்தான் வெற்றிபெற வாய்ப்பிருக்கிறது' என்றும் கூறி, ஆச்சரியத் தை ஏற்படுத்தியிருக்கிறார் சு.சாமி. இப்படி சு.சாமி, தானாக வந்து பத்திரிகையாளர்களிடம் மோடிக்கு எதி ரான கருத்தை அழுத்தம்திருத்தமாக வெளிப்படுத்தியிருப் பது டெல்லிவரை அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது.''’
"இப்படி, பா.ஜ.க.வில் நயினார் நாகேந்திரன் மட்டும் தான் வெற்றி பெறுவார்னு சு.சாமி சொல்லக் காரணம்?''’
"சொல்றேங்க தலைவரே, நயினாரின் தேர்தல் பொறுப்பாளராகப் பணியாற்றியவர் பெயர் நெல்லை கோமகன். இவர் சு.சாமியின் வலது கரம் போன்றவர். ஜனதா கட்சியிலிருந்து சு.சாமி வெளியேறி, தனிக்கட்சி தொடங்கியபோதே, அவரது உதவி யாளராக இருந்தவர்தான் இந்த கோமகன். சு.சாமி, பா.ஜ.க.வுக்கு வந்த பிறகு, அவருட னேயே கோமகனும் பா.ஜ.க.வில் ஐக்கியமானார். நயினார்நாகேந்திரன் பா.ஜ.க.வில் ஐக்கியமான பின்பு, அவரோடும் கோமகன் நெருக்கமானார். அவர் மூலமாகத்தான் நயினாருக்கு சு.சாமியின் நட்பு கிடைத்தது. இந்த கோமகன் மூலமாகத் தான் தனது தொகுதியில் பணப்பட்டுவாடாவை நடத்தினார் நயினார். எனவே அவர் சு.சாமி யிடம், வாக்காளர்களுக்கு அது போய்ச் சேர்ந்து விட்டதால் நயினார் வெற்றி பெறுவார்னு சொல்ல, அதையே சு.சாமி, இங்கே ஒப்பித்துவிட்டுப் போயிருக்கிறாராம்.''”
"4 கோடி விவகாரத்தில் இருந்து தப்பிக்க நயினார், பலவிதமாகவும் மூவ்களை நடத்திவருகிறாரே?''”
"வாக்காளர்களுக்கு பணம் கொடுப் பதற்காக சென்னையிலிருந்து நெல்லைக்கு நயினார் நாகேந்திரன் தரப்பு கடத்திய 4 கோடி ரூபாயை தேர்தல் அதிகாரிகள் பிடித் ததைத் தொடர்ந்து, கடத்தலில் ஈடுபட்ட நயினாரின் ஆட்களையும் மடக்கினர். பிடி பட்டவர்கள், அந்தப் பணம் நயினாருடை யதுதான் என்று தெளிவாக வாக்குமூலமும் கொடுத்தார்கள். நயினாருக்கு எதிரான இந்த வழக்கில், அமலாக்கத்துறையினர் உள்ளே நுழைந்து, வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் இருந்தும், நயினாரை காப்பாற்றும் வகையில் இந்த வழக்கில் அவர்கள் ஒதுங்கியே இருக் கிறார்கள். இந்த நிலையில், பறக்கும் படை யினரிடமிருந்த இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு சமீபத்தில் மாற்றப்பட்டது. அதனால், சி.பி.ஐ.டி.யின் வேகத்தைக் குறைக்க டெல்லியின் உதவியை நாடியுள்ளாராம் நயினார். மேலும் தமிழக காவல்துறையில் தனக்கிருக்கும் நண் பர்கள் மூலமாகவும் இந்த முயற்சியை நயினார் எடுத்து வருவதாகவும் சொல்கிறார்கள்.''”
"நானும் என் காதுக்கு வந்த ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்னும் நடைமுறையில் இருப்பதால், தலைமைச் செயலகத்துக்கு எந்த அமைச்சர்களும் வருவதில்லை. அதனால் எந்த மூவ்களும் பெரிதாக அங்கு நடப்பதில்லை. குறிப்பிட்ட சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மட்டும் அங்கு வந்துபோகிறார்களாம். மேலும், பா.ஜ.க. ஆட்சி டெல்லியில் அமைந்தால், அந்த தமிழக நிர்வாகி, டி.டி.வி.தினகரன் ஆகியோர் கேபினட் அமைச் சர்களாகவும், அதேபோல் ஓ.பி.எஸ்., சௌமியா அன்புமணி ஆகியோர் ராஜாங்க அமைச்சர்களாகவும் வரு வார்கள் என்கிற ஆருடம் ஒன்று பா.ஜ.க. தரப்பில் உலாவருகிறது.