டி.டி.வி. தினகரன் செய்த ரகசிய வேலையால் எடப்பாடி பழனிசாமி சிக்கிக்கொண்டு முழிக்கிறார். இதனால் இரட்டை இலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்கிறார்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். இரட்டை இலை சின்னத்துக்காக லஞ்சம் கொடுத்த வழக்கில் சிக்கிய சுகேஷ் சந்திரசேகர்தான் அதே இரட்டை இலை முடக்கப்படுவதற்கு காரணமாக இருந்துள்ளார்.
தன்மீது உள்ள மோசடி வழக்குகளில் இருந்து தப்பிக்க பிளான் போட்ட சுகேஷ் சந்திரசேகர், அவருக்கும் தினகரனுக்கும் உள்ள ரகசிய டீலிங்குகள், இருவரும் சேர்ந்து பலான விவகாரங்களில் அடித்த லூட்டிகள், அ.தி.மு.க.வின் அரசியலையே இருவரும் சேர்ந்து டீல் செய்த விதம் ஆகிய இவை அனைத்தையும் விலாவாரியாகப் போட்டுக் கொடுத்துள்ளார்.
இதில் சசிகலாவின் சொத்துக்கள் விவரம், சசி குடும்பத்தில் நிலவும் உட்பூசல், தினகரன் சசிகலாவை ஏமாற்றும் விதம், சசிகலாவின் சொத்துக்கள், தினகரன் மற்றும் உறவினர்களிடம் சிக்கியதால், தற்பொழுது வெறும் மிடாஸ் கோல்டன் பிஸ்லரீஸ் வருமானத்தை வைத்து சசிகலா வாழும் நிலை, சொத்துக்களை எல்லாம் சசிகலா விற்கும் சூழ்நிலை என அனைத்து தகவல்களையும் சுகேஷ் சந்திரசேகரிடமிருந்து திரட்டிக் கொண்ட பா.ஜ.க., தினகரனை அழைத்தது. “எப்.ஐ.ஆர்.ரெடி. சிறைக்குப் போகிறாயா’என சுகேஷ் சந்திரசேகர் வாக்குமூலத்தை வைத்து மிரட்டியது.
ரகசியங்கள் அம்பலமானதால் மிரண்டுபோன தினகரன் சாஷ்டாங்கமாக பா.ஜ.க.வின் காலில் விழுந்தார். அவருடன் பா.ஜ.க. டீல் பேசியது. “"சசிகலாவை அ.ம.மு.க.வில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தென் மாவட்ட முக்குலத்தோர் வாக்குகளை நீங்கள் திரட்ட வேண்டும். உங்களுக்கு இரண்டு எம்.பி. சீட். எம்.பி. தேர்தல் முடிந்தவுடன் தினகரனுக்கு ராஜ்யசபா சீட். மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் தினகரனுக்கு அமைச்சரவை யில் பதவி” எனவும், இந்த டீலுக்கு சசிகலா ஒத்து வரவில்லை எனில் அவரை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். சசிகலா எந்தக் கட்சிக்கு வேண்டு மானாலும் போகட்டும்'' ’இதுதான் டீல்.
அடுத்தது ஓ.பி.எஸ். விவகாரம். ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். என இரட்டைத் தலைமையுடன் இயங்கிவந்த அ.தி.மு.க.வில் இ.பி.எஸ். பொதுச்செயலாளர் என ஒற்றைத் தலைமை மற்றும் ஓ.பி.எஸ். நீக்கம் இவற் றைப்பற்றி பா.ஜ.க.விடம் இ.பி.எஸ் ஆலோசிக்க வில்லை. திடீரென இந்த முடிவை எடுத்த எடப் பாடியின் நகர்வுகள் பா.ஜ.க.விற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனால் ஓ.பி.எஸ். பா.ஜ.க.விடம் புலம்பினார். “அனைத்தையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், உங்களை கைவிட மாட் டோம்” என பா.ஜ.க., இ.பி.எஸ்.ஸுக்கு உறுதி கொடுத்தது.
இதை எடப்பாடி எதிர்பார்க்கவில்லை. பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்ந்தெடுக்கப்பட வேண்டி யுள்ளது. அத்துடன் இரட்டை இலையை எடப்பாடி அணி பெறவேண்டியுள்ளது. இந்த இரண்டும் மத்திய பா.ஜ.க.வின் உதவி இல்லாமல் நடக்காது என்ற சூழ்நிலையில் ஓ.பி.எஸ்.ஸுக்கும் தினகரனுக்கும் சசிகலா வுக்கும் பா.ஜ.க. ஆதரவளிப்பது எடப்பாடியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது பற்றி விவாதிக்க டெல்லிக்குச் சென்ற இ.பி.எஸ்.சை பிரதமர் மோடி சந்திக்க மறுத்துவிட்டார். அமித்ஷா விடம் இதுபற்றி எடப்பாடியால் பேச முடியவில்லை. எடப்பாடியின் உறவினர் ராம லிங்கம் மீது கர்நாடக போலீசார் எடுத்த நடவடிக்கைகளை நிறுத்துங்கள் என கோரிக்கை வைத்ததோடு அமித்ஷாவுடனான சந்திப்பை எடப்பாடி முடித்துக்கொண்டார்.
சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமரை சந்திக்க எடப்பாடி முயற்சி மேற்கொண்டார். மதுரை விமான நிலையத்தில் எடப்பாடியும், ஓ.பி.எஸ்.ஸும் பிரதமரை வரவேற்க தனித்தனியாக நின்றிருந்தனர். இருவரையும் ஒன்றாக அழைத்த பிரதமர், இருவரிடமும் பூங்கொத்துக்களைப் பெற்று, இருவரும் ஒன்றாகவே இருக்க வேண்டும் என பொதுமேடையில் உணர்த்தினார்.
இந்தியா சிமென்ட் கம்பெனி விழாவிற்காக வந்த அமித்ஷாவிடம் எடப்பாடி தனியாக அப்பாயின்ட் மெண்ட் கேட்டிருந்தார். அவரை சந்திக்க மறுத்த அமித்ஷா, ஓ.பி.எஸ்.ஸை மட்டும் அவருக்கு வரவேற்பு கொடுக்க அனுமதித்தார். ஓ.பி.எஸ்.ஸை சேர்த்துக்கொள்ள வேண்டும்... இல்லையென்றால் இரட்டை இலையை முடக்கு வோம்’ என அமித்ஷா வெளிப் படையாகவே வலியுறுத்துவது எடப்பாடிக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது.
பிரதமர் மோடி விசிட்டுக்குப் பின்பு அ.தி.மு.க.வின் உயர்மட்டத் தலைவர்களுடன் எடப்பாடி ஆலோசனை நடத்தினார். அப்போது “தமிழகத்தில் பா.ஜ.க. ஒரு கட்சியே அல்ல. அவர்களுக்கு எந்த பலமும் இல்லை. அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேராவிட்டால் அவர்கள் என்ன தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பார்களா? பா.ஜ.க., தி.மு.க.வுடன் கூட் டணி வைத்தால் அது அ.தி. மு.க.வுக்கு நல்லது. அ.தி.மு.க. மைனாரிட்டி வாக்குகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து பெரும் வெற்றி பெறும். அ.தி.மு.க.வை வெறும் கொங்கு மண்டலக் கட்சியாக பா.ஜ.க. நினைக்கிறது. தென் மாவட்டம் முழுவதும் ஓ.பி.எஸ்., சசிகலா, தினகரன் கையில் இருப்ப தாக கணக்குப் போடுகிறது. பா.ஜ.க.வினர் தினகரனை வைத்து நம்மை மிரட்டு கிறார்கள். இரட்டை இலை யை முடக்குவோம் என் கிறார்கள். அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் இல்லையென் றால் என்ன? நாம் ஏற் கெனவே சேவல் சின்னத்திலும், இரட்டைப் புறா சின்னத்திலும் போட்டியிட்டவர்கள்தானே?''’என எடப்பாடி ஆவேசமாக பேசியிருக்கிறார். அத்துடன் நில்லாமல் சீனியர் அமைச்ச ரான செங்கோட்டையனை ஈரோடு மாவட்டத்தில் ஒரு ஊழியர் கூட்டம் நடத்தச் சொல்லி அந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க. தனித்துப் போட்டி யிடத் தயார் என அறிவிக்கவும் எடப்பாடி உத்தரவிட்டார்.
எடப்பாடி மீது அடுத்தடுத்து ரெய்டுகள் நடத்த பா.ஜ.க. திட்டமிட்டு வருகிறது.
____________________________
தமிழை தூக்கிப்பிடித்த முதல்வர்! அண்ணாமலைக்கு அட்வைஸ் தந்த பிரதமர்!
திண்டுக்கல் அருகே காந்திகிராம பல்கலைக்கழகத்தில் கடந்த நவம்பர் 11ஆம் தேதி நடைபெற்ற 36வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடியும், தமிழக முதல்வர் ஸ்டாலினும் கலந்துகொண்டனர். தனி விமானம் மூலம் மதுரை வந்த மோடியை, பி.ஜே.பி. நிர்வாகிகளுடன், ஓ.பி.எஸ்., எடப்பாடி, தமிழக அமைச்சர்களான சக்கரபாணி, தங்கம் தென்னரசு உட்பட அமைச்சர்கள் சிலர் வரவேற்றனர். அதைத் தொடர்ந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக அம்பாத்துரை வந்த மோடியை முதல்வரும், ஐ.பி.யும் வரவேற்றனர். அதைத்தொடர்ந்து, விழா மேடையில் நான்கு மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கிய பிரதமர், இசைஞானி இளையராஜாவுக்கும், மிருதங்க வித்வான் சிவராமனுக்கும் கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கினார்.
விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், காந்தியையும் தமிழையும் புகழ்ந்ததோடு, கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டுமென வலியுறுத்தினார்.
இறுதியாக மோடி பேசும்போது, "இந்தியாவின் சாதனை எதிர்காலம் இளைஞர் களின் கையில்தான் உள்ளது. அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியாவை வழிநடத்தும் பொறுப்பு இளைஞர்களிடமே உள்ளது'' என்று குறிப்பிட்டார். விழா முடிந்ததும் காரில் ஏறவந்த மோடி, கார் டிரைவர் சீட்டுக்கு அருகே நின்றுகொண்டிருந்த அண்ணாமலையையும் தனது காரில் ஏற்றிக்கொண்டார். அப்போது மழை வலுத்துப் பெய்ததால், கார் மூலமாகவே மதுரை செல்லும் வழியில், அண்ணாமலையிடம் தமிழக அரசியல் நிலவரங்கள் பலவற்றையும் ஆலோசித்து அறிவுரை கூறியபடி பயணித்திருக் கிறார் மோடி.
-சக்தி