""ஹலோ தலைவரே, முதல்வர் இ.பி. எஸ்.சும் துணைமுதல்வர் ஓ.பி.எஸ்.சும், ஹேப்பி அண்ணாச்சின்னு குஷியா இருக்காங்க.''’
""இருக்கமாட்டாங்களா? ஆட்சிக்கு வர இருந்த ஆபத்திலிருந்து, உயர்நீதிமன்றத் தீர்ப்பின் மூலம், தப்பிச்சிருக்காங்களே?''’
""ஆமாங்க தலைவரே, போன ஆண்டு பிப்ர வரியில், எடப்பாடி அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, ஆளுங்கட்சி கொறடா வின் உத்தரவுக்கு எதிரா வாக்களிச்ச, அன்றைய எடப்பாடியின் எதிரிகளான ஓ.பி.எஸ். டீம் மீது நடவடிக்கை எடுக்கணும்னு, தி.மு.க. சார்பில் தொடரப்பட்ட இந்த வழக்கு, பலத்த பரபரப்பை ஏற்படுத்திக்கிட்டு இருந்தது. ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்யணும்னு தீர்ப்பு வந்தால், ஆட்சியின் மெஜா ரிட்டி பறிபோயிடும். ஆனால், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல்குத்தூஸ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் தொடர்பான சபா நாயகரின் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியுமா? என்கிற வழக்கு, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்விடம் விசாரணையில் இருப்பதால், இந்த வழக்கைத் தள்ளுபடி செய்றோம்ன்னு சொல்லிடிச்சி.''’
""சுப்ரீம்கோர்ட்டில் தி.மு.க. மேல்முறையீடு செய்யும்னு ஸ்டாலின் சொல்லியிருக்காரே?''
""இது குறித்தும் சட்டநிபுணர்களிடம் விசாரிச்சேங்க தலைவரே, ஆந்திர மாநிலத்தில், கட்சி தாவல் சட்டப்படி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் எம்.எல்.ஏ.க்கள் மீது, அங்கிருக்கும் சபா நாயகர் நடவடிக்கை எடுக்கணும்ன்னு ஒரு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு இப்ப உச்சநீதி மன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சின் விசாரணையில் இருக்கு. அத னால் இது தொடர்பாக தி.மு.க. மேல்முறையீடு செய்தால், அந்த வழக்கோடு இந்த வழக்கும் சேர்த்து, விசாரணையை எதிர்கொள்ளும்ன்னு சொல்றாங்க. எடப்பாடி, ஓ.பி.எஸ். டீமோ, இந்த வழக்கின் விசாரணை முடிஞ்சி தீர்ப்பு வர்றதுக் குள்ள, நாம் நம்ம ஆட்சிக் காலத்தையே ஜாம் ஜாம்ன்னு சிக்கலில்லாமல் கழிச்சிடலாம்ன்னு மகிழ்ச்சியில் இருக்காங்க. இதேபோல் சொத்துக் குவிப்பு வழக்கின் குற்றவாளியான ஜெ.வின் படத்தை சட்டசபையில் இருந்து அகற்றணும்ன் னு தொடரப்பட்ட வழக்கிலும், சென்னை உயர்நீதிமன்றம், சட்ட சபையில் சபாநாயகர் எடுக் கும் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாதுன்னு சொல்லிடுச்சி.''
""ஆளுங்கட்சிக்கு சுக்ர திசை போலிருக் குப்பா...’சென்னை பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக மே 5-ந் தேதி சென் னைக்கு வரும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முதல்வர் எடப்பாடிக்கும் கவர்னர் பன்வாரி லாலுக்கும் இடையில் பஞ்சாயத்து பண்ணப் போறார்னு தகவல் கிளம்பியிருக்கே?''’
""உண்மைதாங்க தலைவரே, தமிழக உயர் கல்வித்துறை ஊழல்ல மூழ்கிடிச்சின்னு ஏற்கனவே கவர்னர் டெல்லிக்கு காரசாரமான ரிப்போர்ட் டை அனுப்பியிருக்காரு. அதேபோல் முதல்வர் எடப்பாடி தரப்பும், கவர்னரின் நடவடிக்கை சரி யில்லை. ஏகப்பட்ட சர்ச்சைகளை உருவாக்கிக் கிட்டு இருக்கார். காமராஜர் பல்கலைக் கழக பாலியல் விவகாரம் உட்பட எல்லா வகை யிலும் அவர் ராஜ்பவனின் பெயரைக் கெடுத்துக்கிட்டு இருக்கார்ங்கிற ரீதியில், புகார் அனுப்பியிருந்தது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் என்னதான் நடக்குதுன்னு டெல்லி மேலிடம், குழப்பத்தில் இருக்க, இந்தச் சூழல்ல தான் ஜனாதிபதி சென் னை வர்றார். அப்ப அவர், முதல்வர், கவர்னர்னு இருதரப்பிடமும் விசாரிக்க இருக்காருங்கிற தகவல் கசியுது. அதேபோல், ஜனாதிபதியிடம் கவர்னர் பற்றி புகார் சொல்ல இருக்கும் முதல்வர் எடப் பாடி, அவருக்கு எதிரான வலுவான ஆதாரமா ஒரு நபரைக் கையில் எடுத்திருக்காரு.''’
""திடீர் திருப்பமா இருக்கே? யாருப்பா அது?''’
""விரிவாவே சொல்றேங்க தலைவரே. நாமக் கல்லில் இருக்கும் அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்த சசிகுமார் என்பவரை மோசடி விவகாரத்தில் ஏப்ரல் 1-ந் தேதி காவல்துறை கைது செய்திருக்கு. இவர் தமிழகத்தின் செல்வாக்கான முக்கியப் புள்ளிகள் பலரிடமும் நட்பை வளர்த்துக்கிட்டு, அவர்களைக் காட்டியே, அதைச் செய்து தர்றேன். இதைச் செய்து தர்றேன்னு ஏகத்துக்கும் வசூல் பண்ணியிருக்கார். அந்த வகை யில் தன் ஊர்க்காரர் ஒருவரிட மும் மெடிக்கல் சீட் வாங்கித் தர்றேன்னு 85 லட்ச ரூபாயை "ஆட்டய'ப் போட்டிருக்கார். இதுதொடர்பான புகார் அமைச்சர் செங்கோட்டையனி டம் வர, அவர் நாமக்கல் எஸ்.பி .யை இது தொடர்பாக விசாரிக் கச் சொல்லியிருக்கார். இதை விசாரிக்கப் போன டி.எஸ்.பி. யிடம், "என் மேல் நடவடிக்கை எடுக்க வேண் டாம். வாங்கிய பணத்துக்கு ஈடா, என் இடத்தைக் கிரயம் பண்ணித் தந்துடறேன்'னு சொன்ன சசிகுமார், அதைச் செய்யாமல், தன்னை டி.எஸ். பி., சாதி ரீதியா டார்ச்சர் செய்தார்னு புகாரைக் கொடுக்க, இனியும் இவரை விட்டுவச்சா சரிப் படாதுன்னு, சசிகுமாரைக் கைது பண்ணி, சிறைக்கு அனுப்பிட்டாங்க. அந்த சசிகுமாரைதான் கவர்னருக்கு எதிரான ஆயுதமா எடப்பாடித் தரப்பு கையில் எடுத்திருக்கு.''’
""சசிகுமாருக்கும், கவர்னர் மாளிகைக்கும் என்ன சம்பந்தம்?''’
""சசிகுமாரின் ஜாதகத்தைத் தோண் டிய போலீஸ் டீம், அவரது மோசடிகளை எல்லாம் கண்டுபிடிச்சி அசந்துபோயிருக்கு. முன்பு டி.என்.பி.எஸ்.சி. சேர்மனா இருந்த விஜயகுமாரின் குடும்பத்தோடு நட்பை ஏற்படுத்திக் கொண்ட சசிகுமார், அவரின் சகலையான முதல்வரின் செயலாளர் விஜயகுமா ரோடும் நெருங்கிப் பழகியிருக்கார். அதன்பின் இந்த ரெண்டு விஜயகுமாரின் பெயரையும் சொல்லி கலெக்ஷன்ல புகுந்து விளையாடி இருக் கார். இதே பாணியில்தான் தன் மோசடிக் கரங் களால் ராஜ்பவனோடும் கை குலுக்கியிருக்காராம் சசிகுமார்.''’
""விவரத்தைச் சொல்லுப்பா?''’
""சர்ச்சையில் சிக்கியிருக்கும் காமராஜர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் போஸ்டிங் கை ராஜ்பவன் மூலம் வாங்கித் தர்றேன்னு, மனோன்மணியம் பல்கலைக் கழக பேராசிரி யரான மரியஜான் என்பவரிடம் 85 லட்ச ரூபாய் டீலிங் பேசியிருக்கார் சசிகுமார். இதன்படி கவர்னரின் செயலாளரான ராஜகோபால், பல்கலைக் கழகத் தேர்வுக் குழுவைச் சேர்ந்த மேத்தா ஆகியோரிடம், சசிகுமார் மூலம் மரியஜான் அந்தத் தொகையைக் கொடுத் திருக்கிறார். ஆனால், அங்கே துணைவேந்தராக செல்லதுரை உட்கார வைக்கப்பட்டு விட்டார். இதனால் ஏமாந்துபோன மரியஜான், சசிகுமார் மீது புகார் கொடுத்திருக்கிறார். ராஜ்பவன் லீலைகள் சம்பந்தப்பட்ட இந்த விவகாரத் தைதான் எடப்பாடி, இப்ப கையில் எடுத்திருக் கிறாராம். அதனால் ஜனாதிபதி விசிட்டின் போது ஒரு சீக்ரெட் பஞ்சாயத்து இருக்கலாம்னு எதிர்பார்க்கப்படுது.''’
""டெல்லியில் இருந்து ஜனாதிபதி இங்கு வந்து பஞ்சாயத்து நடத்துவது இருக்கட்டும். காங்கிரஸ் தலைமை இங்கிருந்து திருநாவுக்கரசரை டெல்லிக்கு அழைத்து பஞ்சாயத்து பண்ணியிருக்கே?''’
""உண்மைதாங்க தலைவரே, தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவரான திருநாவுக் கரசரை, ராகுல் டெல்லிக்கு அழைத்து, தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்கு எதிரா நீங்க செயல்படுறதா புகார்கள் வருது. உங்களை சரி பண்ணிக்கங்கன்னு கறார் குரல்ல சொல்லி யிருக்காரு. இதற்குத் தலையசைச்ச திருநாவுக் கரசர், கட்சிக்குள் கோஷ்டி அரசியல் பண்றவங்க மேல் நடவடிக்கை எடுக்க, எனக்கு அனுமதி தரணும்னு கேட்டிருக்கார். ராகுலோ, கட்சிக் கட்டுப்பாட்டை யார் மீறினாலும் நீங்க நட வடிக்கை எடுக்கலாம்ன்னு அழுத்தமாவே சொல்லியிருக்கார். அங்கிருந்து அவர் சென்னை திரும்பிய பிளைட்டில் ப.சி. வந்தும் கூட ரெண்டு பேரும் பேசிக்கலை. அதேசமயம் இளங்கோவன் தரப்போ, எல்லாம் கர்நாடகத் தேர்தல் முடியிற வரைதான். அதன்பிறகு தமிழகம், கேரளா, ஆந் திரா உட்பட 5 மாநிலங்களின் மாநிலத் தலைவர் களை மாற்ற ராகுல் முடிவெடுத்திருக்கார். அது தொடர்பான அறிக்கையை அவர், ப.சி.யிடம் தான் கேட்டிருக்கார். அதனால் பொறுத்திருந்து பாருங்கள் என்கிறது கெத்தாய்.''’
""ராகுல், தி.மு.க. கூட்டணியை உறுதிசெய்து திருநாவுக்கரசரிடம் பேசியிருக்கார். இந்த நேரத் தில் ஸ்டாலின் மம்தா உருவாக்கும் பா.ஜ.க. எதிர்ப்பு அணிக்கு ஆதரவு தெரிவிச்சிருக்கார். இத னால் தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கழற்றிவிடப்படலாம்ங்கிற டாக் இருக்கே?''’
""தலைவரே, கலைஞரை விசாரிக்க பிரதமர் மோடி கோபாலபுரம் வந்தப்பவே, அதன் மீது பா.ஜ.க.வின் நிழல் விழுதோங்கிற சந்தேகம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு வந்தது. இந்த நிலையில்தான், பா.ஜ.க.வுக்கு எதிராக அகில இந்திய அளவில் ஒரு அணியை அமைக்க மம்தா எடுக்கும் முயற்சியை ஸ்டாலின் ஆதரிச்சிருக் கார். இதன்படி, ஒவ்வொரு மாநிலத்திலும் பா.ஜ. க.வை எதிர்க்கக் கூடிய கட்சிகளில் வலிமையுள்ள ஒரு மாநிலக் கட்சியை முன்னிறுத்துவதன் மூலம், 2019-ல் மீண்டும் மோடி ஆட்சிக்கு வர்றதைத் தடுக்கமுடியும் என்பதுதான் மம்தாவின் வியூகம். பா.ஜ.க.வின் எதிர்ப்பு வாக்குகள் சிதறாதபடி தடுக்க, அந்தந்த மாநிலத்திலும் வலிமையுள்ள கட்சி, கூடுதல் இடங் களில் போட்டியிட ணும்ங்கிற ஆலோச னையும் வைக்கப்படுது. அப்படிப் பார்த்தால், தமிழகத்தில் பா.ஜ.க.வை எதிர்க்கும் வலிமையான கட்சி தி.மு.க.தான். அதனால், பா.ஜ.க. எதிர்ப் பை சிந்தாமல் சிதறாமல் அறுவடை செய்ய, அது அதிக இடங்களில் போட் டியிட நினைக்கிது. பழைய நினைப்பில், காங் கிரஸ் அதிக சீட்டுகளை எதிர்பார்க்கக்கூடாதுன் னுதான், மம்தா பாலிஸியை தி.மு.க. முன்னிறுத்துது.''’
""கலைஞரை மு.க. அழகிரி சந்திச்சதை வச்சும் தி.மு.க.வில் சில யூகங்கள் போகுதே?''’
""அதைப்பற்றி நான் சொல்றேன்... அழ கிரியின் பேரனும் துரை தயாநிதியின் மகனுமான ருத்ரனின் முதலாம் பிறந்தநாளை, அவர் குடும் பம் சென்னையில் கொண்டாடுச்சு. சென்னை வந்த மு.க.அழகிரி, கோபாலபுரத்துக்குப் பேரனோடு போய், கலைஞரிடம் ஆசி வாங்கி னார். கலைஞரும் நெகிழ்ச்சியா, தன் கொள்ளுப் பேரனை முத்தமிட்டுக் கொஞ்சினார். சென்னை நிகழ்ச்சிகளை முடிச்சிக்கிட்டு மதுரை புறப் பட்ட அழகிரி, நிருபர்களை சந்திச்சப்ப, வழக் கத்துக்கு மாறாக, ஸ்டாலின் பற்றிய விமர்சனங் களைத் தவிர்த்ததோடு, கலைஞர் அழைத்தால் தி.மு.க.வில் சேர்ந்து பணியாற்றத் தயார்ன்னு சொல்லிட்டுப் போனார். இது தொடர் பா விசாரிச்சப்ப, கலைஞர் குடும்ப உறுப் பினர்கள் சிலர், தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில், தென் மாவட்டத்தில் கட்சிக்கு பாதகமாக எதுவும் நடக்காமல் இருக்க அழகிரியை மறுபடியும் கட்சிக்குள் அழைச்சிக்கணுங்கிற வியூகத்தில் இருக் காங்க. ஆனால் ஸ்டாலின் தரப்போ, குட்டையைக் குழப்பாமல் இருக்க ணும்னா இப்ப இருப்பது போலவே அவர் எட்டியே இருக்கட்டும்னு சொல்லுதாம்.''’
-----------------------------
தார்மீக தவறு !
சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப் படத்தை அகற்ற கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் ""உச்சநீதி மன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நபரின் புகைப்படத்தை சட்டப்பேரவைக்குள் வைத்தது தார்மீக தவறு. இருப்பினும் இதனை தடுப்பதற்கு எந்தவித சட்டமும் இல்லை. சட்ட மன்ற வளாகத்தில் புகைப்படம் வைப்பதில் நீதிமன்றம் தலை யிட முடியாது. அது சபாநாயகரின் நிர்வாக எல்லைக்குள் வரும்'' என்று நீதிபதிகள் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
-சி.ஜீவாபாரதி