"ஹலோ தலைவரே, பிரதமர் மோடியின் தமிழக விசிட் சர்ச்சைக்குரியதா மாறி இருக்கிறது”
"ஆமாம்பா. அவருடைய தமிழக வருகைக்காக சொல்லப்பட்ட காரணம் ஹம்பக்குன்னு சொல்லப்படுதே?''
"உண்மைதாங்க தலைவரே, பிரதமர் மோடி 27ஆம் தேதி தமிழகத்துக்கு வரப்போகிறார். சென்னை விமான நிலையத்தில் அறிஞர் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தை ஒட்டி, புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஐந்தடுக்கு முனையத்தைத் திறக்கத்தான் அவர் இங்கே வர்றாருன்னு செய்தி பரப்பப்பட்டது. ஆனால் உண்மையில் அப்படி எந்த அரசு தொடர்பான நிகழ்ச்சியும் மோடிக்கு இல்லையாம். அவர் தமிழகம் வரப்போவது எதுக்குன்னா, அண்மையில் மரணமடைந்த தன்னுடைய அம்மாவின் அஸ்தியை, ராமேஸ்வரம் கடலில் கரைப்பதற்காகத்தான் வருகிறாராம். அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு, மதுரை திரும்பும் மோடி, அங்கிருந்தபடியே டெல்லி செல்வதுதான் திட்டமாம்.'' ”
"பிறகு எதுக்காக மோடி விமான நிலையக் கட்டிடத்தைத் திறக்கறதா செய்தி கிளம்புச்சு?”
"எல்லாமே வசூலுக் காகத்தாங்க தலைவரே, பிரதமர் மோடியின் தமிழக வருகை பற்றி முன்ன தாகவே தெரிஞ்சிக் கிட்ட, ஏர் போர்ட் அதிகாரிகள், கடந்த 13ஆம் தேதி இரவு ஒரு மீட்டிங்கை நடத்தி இருக்காங்க. அதில் விமான நிலையத்தில் வணிக கடைகள் வைத்திருக்கும் உரிமையாளர்கள், அங்குள்ள ட்ராவல் ஏஜென்சிக்காரர்கள், கார்கோ ஏஜென்சி நிர்வாகிகள், அங்கே இருக்கும் பல்வேறு கான்ட்ராக்ட் நிறுவனத்தினர்னு பலரையும் இந்தக் கூட்டத்திற்கு அழைத்திருந்தனர். அதில், பிரதமர் ஏர்போர்ட் கட்டிடத் திறப்பு விழாவுக்கு வருவதால், விழா மேடை அமைப்பு, அலங்காரம், வரவேற்புக்கான விளம்பர ஏற்பாடுகள், சிற்றுண்டின்னு நிறைய ஏற்பாடுகளைச் செய்யவேண்டி இருக்கிறது. எனவே அனைவரும் அதற்கு ஒரு குறிப்பிட்ட அமௌண்ட்டைக் கொடுக்க வேண்டும்னு சொல்லி, கணிசமா வசூலையும் ஆரம்பிச்சிட்டாங்க. மோடி வருகையைக் காரணமாக வைத்து, இப்படி லட்சக்கணக்கில் கலெக்ஷன் நடத்தத்தான், ஏர்போர்ட் நிகழ்ச்சின்னு தகவலைப் பரப்பி இருக்காங்க.''”
"அடக்கொடுமையே! மோடி பெயரைச் சொல்லி, ஏர்போர்ட் மானத்தையே பறக்க விட்டுட்டுட்டாங்களா?''”
"ஆமாங்க தலைவரே, இந்தத் தில்லாலங்கடி வேலைகளைப் பற்றி தெரிந்ததும், டெல்லியில் உள்ள விமானப் போக்குவரத்து அமைச்சகம், சென்னை விமான நிலைய அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடத்திக்கிட்டு இருக்குதாம். சென்னை ஏர்போர்ட் அதிகாரிகளின் இந்த செயல் வெளியே பகிரங்கமானால் தங்கள் அமைச்சகத்துக்கே அவமானம்னு இப்ப அவங்க தரப்பும் கை பிசையுதாம். முறையாக பிரதமர் ஒரு கட்டிடத் திறப்பு விழாவில் கலந்துக்கறார்னா, 15 நாட்களுக்கு முன்பாகவே மத்திய அரசின் கட்டிட பொறியாளர்கள் அதைப் பார்வையிட்டு, அதன் உறுதித்தன்மை பற்றி சர்டிபிகேட் கொடுத்தாகனும். அதேபோல் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் விமான நிலையத்தைச் சுற்றி 10 கிலோமீட்டர் அளவுக்கு, முன்னதாகவே பாதுகாப்பு நிலவரத்தைப் பரிசோதனை செய்து, பலப்படுத்துவார்கள். அதனால், பிரதமரை விமான நிலைய விழாவுக்கு உடனடியாக அழைப் பதிலும் சிக்கல் இருக்கிறதாம். அதனால் விமானப் போக்கு வரத்துத் துறையில் குழப்ப மேகம் சூழ்ந்திருக்கு.''”
"அதை விடப்பா, அ.தி. மு.க.வுடனான தமிழக பா.ஜ.க.வின் மோதலை, அதன் டெல்லித் தலைமை பெரிதாக எடுத்துக் கலையே?''
"ஆமாங்க தலைவரே, அ.தி.மு.க.-பா.ஜ.க. மோதல்கள் கடந்த வாரம் இங்கே உச்சத்தில் இருந்த போது, பா.ஜ.க.வின் தேசியத் தலைவரான ஜே.பி. நட்டாவுக்கு ரிப்போர்ட் அனுப் பிய மாநில பா.ஜ.க. தலைவரான அண்ணாமலை, தமிழ்நாட்டில் நம் கட்சியை அழிக்க எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க.வினர் களமிறங்கிட்டாங்க. நம் கட்சியினரை அவங்க பக்கம் இழுக்கறாங்க. இப்படி இருந்தா நாம் எப்படி கட்சியை வளர்க்க முடியும்னு அதில் அவர் புலம்பி இருந்தாராம். அதை, நட்டா அப்படியே மோடிக்கும் அமித்ஷாவுக்கும் அனுப்பி வச்சிருக்கார். இதையொட்டி, தமிழக அரசியலை கண்காணிக்கும் பிரதமர் அலுவலக அதிகாரி ஒருவர், நட்டாவைத் தொடர்பு கொண்டு, சில செய்திகளை அனுப்பி இருக்கார். இதைத் தொடர்ந்து, பா.ஜ.க. அலுவலகத்தைத் திறந்துவைக்க அண்மையில் கிருஷ்ணகிரிக்கு வந்த நட்டா, கட்சி நிர்வாகிகளிடம், எப்போதும் போல் தமிழகத்தில் பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி தொடரும். அதனால் எடப்பாடி பேசுறதை எல்லாம் ஒரு பொருட்டா எடுத்துக்கொள்ள வேண்டாம். அவர் விரும்பினாலும், விரும்பா விட்டாலும் அவர் கட்சியுடனான நம் கூட்டணி தொடரும். எனவே அதுகுறித்துக் குழப்பிக்கொள்ளாமல் ஒழுங்காகக் கட்சிப் பணியைப் பாருங்கள்னு அழுத்தமாகச் சொல்லி இருக்கிறார்.''”
"ஓஹோ''”
"தமிழகத்தில் கூட்டணி இல்லாமல் தேர்தல் களத்திலேயே இறங்க முடியாது. எடப்பாடி நம் கட்சியினர் 4 பேரை தங்கள் கட்சியில் இணைத்துக் கொள்வதால் பெரிய இழப்பு ஒன்றும் இல்லை. அதனால் அ.தி. மு.க.வுடனான கூட்டணியை கட் பண்ணிடக் கூடாதுன்னு தமிழ்நாட்டுக்குப் போய் நம்ம ஆளுங்களுக்கு அட்வைஸ் பண்ணிட்டு வாங்கன்னு, மோடியும் அமித்ஷாவும் சொன்னதால்தான் நட்டா இப்படி இங்கே வந்து அறிவிச்சாராம். அதுமட்டுமல்லாமல், தங்கமணி மூலமாக எடப்பாடிக்கும் நட்டா, டெல்லியின் உத்தரவுன்னு ஒரு தகவலைத் தந்தாராம். அதாவது, பா.ஜ.க.வுடன் கூட்டணி தொடரும் என்று அ.தி.மு.க. அறிவிக்க வேண்டும். இல்லையெனில், அ.தி.மு.க. மீண்டும் பிளவுபடும். அங்குள்ள எம்.எல்.ஏ.க்களில் 30 பேரைத் தூக்க முடியும். அதனால் அந்தச் சூழலை ஏற்படுத்தாதீர்கள் என்பதுதான் நட்டா மூலம் எடப்பாடிக்குத் தரப்பட்டிருக்கிற எச்சரிக்கைச் செய்தியாம். இதனால் முகம் வியர்த்துப் போன எடப் பாடி, பா.ஜ.க.வுடன் எங்கள் கூட்டணி தொடரும் என்று கே.பி. முனுசாமியை விட்டு அறிவிக்கச் செய்திருக்கிறார்.''
"ஆமாங்க தலைவரே... திருச்சி சிவா வீட்டருகிலுள்ள அமைச்சர் கே.என்.நேரு ஆதரவாளர்களுக்கும், எம்.பி.யான திருச்சி சிவா ஆதரவாளர்களுக்கும் மோதல் வெடிச்சிருக் குதே?.
"எஸ்.பி.ஐ. காலனியில் உருவாக்கப்பட்ட இறகுப் பந்து மைதானத்தை, 15ஆம் தேதி அமைச்சர் கே.என். நேருவைக் கொண்டு திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தது. அதற்கான அழைப்பிதழில் திருச்சி சிவாவின் பெயரை அமைச்சர் தரப்பு தவிர்த்திருக்கு. திறப்புவிழா கல்வெட்டிலும் சிவா பெயர் இல்லை. இதையறிந்த அவரது ஆதரவாளர்கள், மைதானத்தைத் திறக்க வந்த அமைச்சர் நேருவுக்கு திடீரெனக் கருப்புக் கொடி காட்டித் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்காங்க. இதைக் கண்ட அமைச்சரின் ஆதரவாளர்கள், நேராக சிவா வீட்டிற்குச் சென்று, அவர் காரின் கண்ணாடிகளையும், வீட்டின் ஜன்னல்களையும் அடித்து நொறுக்கி பதட்டத்தை ஏற்படுத்தி யிருக்காங்க.
இந்த மோதலை அறிந்த முதல்வர் ஸ்டாலின், பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு அதிரடி உத்தரவைப் பிறப்பித்தார். அதேபோல், சம்பந்தப்பட்டவர்களைக் கட்சியில் இருந்து நீக்கும்படியும், கட்சியின் பொதுச் செய லாளரான அமைச்சர் துரைமுருகனிடமும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பேராசிரியர் ராஜா, கார் ஓட்டுநர் முத்து, சூர்யகுமார், ராஜ லிங்கம் உள்ளிட்டவர்களைக் கைது செய்தனர்.
"போலீஸ் ஸ்டேசன்லயும் ரகளை நடந்திருக்காமே?''
"ஆமாங்க தலைவரே... அமைச்சர் சிவா வீட்டைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சிவா ஆதர வாளர்கள், செசன்ஸ் நீதிமன்ற காவல் நிலையத்தின் முன் போராட்டம் நடத்தினர்.கடுப்பான அமைச்சர் தரப்பினர், நீதிமன்ற வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அவர்களைத் தாக்கப் பார்த்திருக்கிறார்கள். அங்கிருந்த நாற்காலிகளை அடித்து உடைத்ததோடு, போலீசார் மீதும் தாக்குதல் நடத்தினர். இதில் பெண் காவலர் ஒருவரின் கையில் முறிவு ஏற்பட்டிருக்கு. உடனே கொஞ்சமும் நிதானிக்காத காவல்துறை, தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜி, மாவட்ட துணைச் செயலாளர் முத்து செல்வம், மாவட்ட பொருளாளர் துரைராஜ், 55வது வட்டச் செயலாளர் ராமதாஸ் ஆகியோர் உள்ளிட்ட 5 பேர் மீதும் 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவர்களை அதிரடியாகக் கைதும் செய்து நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவர்களை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தர விட்டார். இதற்கிடையே தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன், தாக்குதலில் ஈடுபட்ட காஜாமலை விஜி உள்ளிட்ட தி.மு.க. பிரமுகர்களை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கியிருப்பதாக அறிவித்திருக்கிறார். சொந்தக் கட்சியினர் என்றுகூட பார்க்காமல் அதிரடி நடவடிக்கையில் இறங்கிய முதல்வரை, பலரும் பாராட்டுகின்றனர்.''
"மாநில தகவல் ஆணையத் தேர்வு விவகாரத்திலும், கவர்னர் தன் வேலையைக் காட்ட ஆரம்பிச்சிட்டாரே?''
’"ஆமாங்க தலைவரே, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மாநில தகவல் ஆணையத்தால் தீர்க்கப்படாத வழக்குகள் அதிகம் இருப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. காரணம், இந்த ஆணையத்தின் தலைமை ஆணையர் மற்றும் 4 ஆணையர்களின் பதவிகள் நீண்ட மாதங்களாக நிரப்பப்படாமல் காலியாகவே இருக்கின்றன. அதனால், முதல் கட்டமாக 4 ஆணையர்களின் பதவியை மட்டும் நிரப்பிவிடலாம் என்று நினைத்த தமிழக அரசு, அதற்குத் தகுதியானவர்களைத் தேர்வு செய்து, முறைப்படி ஒப்புதலுக்காக கவர்னர் ரவிக்கு அனுப்பி வைத்தது. ஒப்புதல் தரவேண்டிய கவர்னரோ, வழக்கம்போல இதற்கும் ஒப்புதல் தராமல், இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பித்தவர்கள் எத்தனை பேர்? தகுதியானவர்களைத் தேர்வு செய்ய என்ன மாதிரியான அளவுகோல் வைக்கப்பட்டது? நிராகரிக்கப்பட்டவர்கள் எதன் அடிப்படையில் தகுதியற்றவர்கள் என்று நிராகரிக்கப்பட் டார்கள்? என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டு, அரசோடு ஒத்துழையாமை இயக்கத்தை மீண்டும் நடத்துகிறார். இதனால் தகவல் ஆணையப் பணிகள் முடங்குவதால், கவர்னர் மீது அதிகாரிகள் தரப்பும் எரிச்சலில் இருக்கிறது.''”
"அமைச்சரை மீறி முடிவெடுப்பதாக ஒரு உதவியாளர் மேல கோட்டையில புகைச்ச லாமே...?
"ஆமாங்க தலைவரே...!''
’"தென் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த அமைச்சரின் துறையில், அத்தனை டெண்டர் விவகாரங்களையும் அமைச்சரையும் மீறி, அவர் உதவியாளர் ஒருவர்தான் முடிவு செய்கிறார். அதற்குக் காரணம், ஆட்சி மேலிடத்துக்கு நெருக்கமான சென்னை தி.நகரைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரோடு அவர் கைகோத்துச் செயல்படுவதால், வருமானம் தவிர அவர் வேறு எதைப் பற்றியும் கவலைப்படுவது இல்லையாம். இது கோட்டை வரை புகைந்துகொண்டு இருக்கிறது.''
"நானும் ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடக்கும் ஊராட்சி மன்றப் பிரதிநிதிகளின் கூட்டத்தில், உள்ளாட்சி பிரதிநிதிகளின் உறவினர்களும், பெண் பிரதிநிதிகளின் கணவரோ, சகோ தரரோ கலந்துகொண்டு அவர்கள் சார்பாக மனு கொடுப்பதையும் அமைச்சர் தரப்பில் மறுத்திருக்காங்க. ஊராட்சிமன்றப் பிரதிநிதிகள்தான் அந்தக் கூட்டங்களில் கலந்து கொண்டு, அமைச்சரிடமும், ஆட்சியரிடமும் தங்கள் பகுதி பிரச்சினைகள் குறித்த மனுக்களை கொடுக்கிறார்களாம். அதேபோல், இவர்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை பார பட்சம் பார்க்காமல், கோரிக் கைகளை அமைச்சர் பரிசீலித்து நிறைவேற்றுவதாகவும் கூறுகிறார்கள்.''”
____________________
இறுதிச் சுற்று!
ஆளுநருக்கு அஸ்தி அனுப்பிய த.பெ.தி.க.வினர்!
ஆன் லைன் ரம்மியை தடை செய்யாமல் தற்கொலைக்குத் தூண்டி வரும் தமிழ்நாடு ஆளுநரை எதிர்த்து, ஆன்லைன் ரம்மி'யால் தற்கொலை செய்து கொண்ட தமிழர்களின் சாம்பலை ஆளுநருக்கு அனுப்பும் போராட்டத் தினை துவக்கியுள்ளனர் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர்.
16-ந் தேதி வியாழக்கிழமை காலை 11 மணிக்கு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தபால் நிலையம் அருகில் ஒன்று திரண்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆளுநரின் அராஜகப் போக்கைக் கண்டித்து ஆன்லைன் ரம்மியால் இறந்தவர்களின் அஸ்தியை ஆளுநருக்கு அனுப்பி வைக்கும் போராட்டத் தினை நடத்தினர். இது தமிழ்நாடு முழுவதும் நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.
-நாகேந்திரன்