நாட்டு மாடுகளின் இனத்தில் புகழ் பெற்றது உம்பளச் சேரி நாட்டுமாடுகள். அவற்றை அழிவிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையோடு போராட்டக் குரலை எழுப்பி வருகிறார்கள் டெல்டா விவசாயிகள்.
திருவாரூர், நாகை ஆகிய இரு மாவட்ட எல்லைகளிலும் இருக்கிறது உம்பளச்சேரி. இந்த கிராமத்தைச் சுற்றிலும் இருக்கும் கொருக்கை, ஓரடி அம்பலம், பாமனி உள்ளிட்ட விவசாய கிராமங்களில் வளர்க்கப் படும் நாட்டு மாடுகள்தான் இந்த உம்பளச்சேரி இன மாடுகள். பரவலாக மாநிலங்கள் கடந்தும் புகழ்பெற்றிருக்கும் இந்த உம்பளச்சேரி மாடுகள், விவசாயிகளின் தோழனாகவே இருந்துவருகின்றன. விவசாயத்திற்கு டெல்டா பகுதிகள் எப்படி சிறப்பானதோ, அதேபோல உம்பளச்சேரி மாடுகளாலும் டெல்டா சிறப்பு பெற்றிருக்கிறது. இந்த உம்பளச்சேரி நாட்டு மாடுகள், கடின உழைப்பும், துணிவும், அறி வாற்றலும், உடல் வலிமையும், நோய் எதிர்ப்பு சக்தியும் கொண்டவை என்கிறார்கள். அதே போல், மனிதர்களிடமும் அதிக பாசமும் கொண்டதாம். இந்த இன மாடுகள் தரும் பால், அளவில் குறைவாக இருந்தாலும் அவ்வளவு சத்துமிக்கதாக இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர் கள். இவற்றின் கழிவுகள் விவசாய நிலத்தை வளப் படுத்தும் தன்மை கொண்டதாக இருக்குமாம். இப்படி இந்தியாவில் எந்த மாட்டு இனத்திற் கும் இல்லாத பல தனித்துவமான குணம் கொண்டிருப்பதால்தான் உம்பளச்சேரி மாடுகள் பரவலான கவனத்தைப் பெற்றிருக்கின
நாட்டு மாடுகளின் இனத்தில் புகழ் பெற்றது உம்பளச் சேரி நாட்டுமாடுகள். அவற்றை அழிவிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையோடு போராட்டக் குரலை எழுப்பி வருகிறார்கள் டெல்டா விவசாயிகள்.
திருவாரூர், நாகை ஆகிய இரு மாவட்ட எல்லைகளிலும் இருக்கிறது உம்பளச்சேரி. இந்த கிராமத்தைச் சுற்றிலும் இருக்கும் கொருக்கை, ஓரடி அம்பலம், பாமனி உள்ளிட்ட விவசாய கிராமங்களில் வளர்க்கப் படும் நாட்டு மாடுகள்தான் இந்த உம்பளச்சேரி இன மாடுகள். பரவலாக மாநிலங்கள் கடந்தும் புகழ்பெற்றிருக்கும் இந்த உம்பளச்சேரி மாடுகள், விவசாயிகளின் தோழனாகவே இருந்துவருகின்றன. விவசாயத்திற்கு டெல்டா பகுதிகள் எப்படி சிறப்பானதோ, அதேபோல உம்பளச்சேரி மாடுகளாலும் டெல்டா சிறப்பு பெற்றிருக்கிறது. இந்த உம்பளச்சேரி நாட்டு மாடுகள், கடின உழைப்பும், துணிவும், அறி வாற்றலும், உடல் வலிமையும், நோய் எதிர்ப்பு சக்தியும் கொண்டவை என்கிறார்கள். அதே போல், மனிதர்களிடமும் அதிக பாசமும் கொண்டதாம். இந்த இன மாடுகள் தரும் பால், அளவில் குறைவாக இருந்தாலும் அவ்வளவு சத்துமிக்கதாக இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர் கள். இவற்றின் கழிவுகள் விவசாய நிலத்தை வளப் படுத்தும் தன்மை கொண்டதாக இருக்குமாம். இப்படி இந்தியாவில் எந்த மாட்டு இனத்திற் கும் இல்லாத பல தனித்துவமான குணம் கொண்டிருப்பதால்தான் உம்பளச்சேரி மாடுகள் பரவலான கவனத்தைப் பெற்றிருக்கின்றன.
இப்படிப்பட்ட மாட்டினத்தை பெருக்கும் விதமாக கலைஞரின் பிறந்த ஊரான திருக்குவ ளைப் பகுதியில் இருக்கும் கொருக்கை கிராமத்தில், 1968 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் அண்ணா, தனது ஆட்சிக் காலத்தில், உம்பளச்சேரி இன மாடுகள் 2000-ஐக் கொண்ட அரசு கால்நடைப் பண் ணையை உருவாக்கினார். 495 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பண்ணையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்த்தனர்.
அப்படிப்பட்ட பண்ணை இருந்த இடத் தில்தான் இப்போது சிப்காட் தொழிற்பேட்டை யும், வட்டாரப் போக்குவரத்து அலுவலகமும், இன்னும் பல அரசு அலுவலகங்களும் வரப் போகிறது என்று அறிவிப்பு வர, அவற்றை விவ சாயிகளும் சமூக ஆர்வலர்களும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய, சமுக ஆர்வலரும், பசுமைச் சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளருமான பருத்திச்சேரி ராஜா, "நம் முன்னோர்கள் நமக்காக விட்டுச்சென்ற பாரம்பரியம் மிக்க பொக்கிசங்களைப் பாதுகாத்து, அடுத்த தலைமுறைக் குக் கொடுக்க வேண்டிய பொறுப் பும் கடமையும் நமக்கு இருக்கிறது. அந்த வகையில் இங்கே 90-க்கும் அதிகமான இன மாடுகள் இருந்தாலும், தமிழகத்திலேயே ஆறு வகை நாட்டு இன மாடுகள்தான் அங்கீகரிக்கப்பட்டவை. அதில் முதல் இனம் காங்கேயம். இரண் டாவது இனம் உம்பளச்சேரி மாடுகள். அந்த உம்பளச்சேரி மாட்டுப் பண்ணைக்கான இடத் தில், பெரும்பகுதியை அந்த பகுதியில் இருந்த வேலாயுதம் என்பவர்தான் தானமாக கொடுத் தார். ஆரம்பித்த புதிதில் ஒரத்தநாடு பண்ணை யோடு அது இணைந்திருந்தது. பிறகு தனியாக செயல்படத் தொடங்கியது. இந்த பண்ணையின் மொத்த நிலப்பரப்பு 495 ஏக்கர். ஆரம்பத்தில் 2000 மாடுகள் இருந்த இந்த பண்ணையில் இப்போது வெறும் 600 மாடுகள்தான் இருக் கின்றன. எல்லா நாட்டு இன மாடுகளுக்கும் ஆராய்ச்சி மையம் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. ஆனால் தமிழக அளவில் இரண்டாவது இடத் தில் இருக்கும் இந்த உம்பளச்சேரி மாட்டினத் திற்கு ஆராய்ச்சி மையம் இன்னும் ஆரம்பிக்கப் படவில்லை. "அந்த இனம் அழிவின் விளிம்பிற் குப் போய்க்கொண்டிருக்கிறது. அதோடு, உம்பளச்சேரி பண்ணை இருந்த இடத்தில் கால்நடை மருத்துவக் கல்லூரியும், ஆராய்ச்சி மையமும் தொடங்கப்படும்' என தி.மு.க.வினர் தேர்தல் நேரத்தில் பிரச்சாரம் செய்தனர். அந்த வாக்குறுதி இன்னும் உயிர்பெறவில்லை. "விவசாயிகளைக் கண்ணின் இமைபோலக் காப்பேன்' எனக் கூறிய முதல்வர், டெல்டா மாவட்ட மக்களின் அடையாளமான உம்பளச் சேரி மாட்டுப் பண்ணையைக் காப்பாற்றவேண் டும். பண்ணைக் கான இடத்தில் சிப்காட் வருவதை யும் தடுத்து நிறுத்த வேண்டும். இது ஒட்டுமொத்த விவ சாயிகளின் கோரிக் கையாகும்''’ என் றார் அழுத்தமாக.
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டி யன் கூறுகையில், "வளர்ப் பதற்கும், பராமரிப்பதற்கும் ரொம்பவும் எளிமையானது உம்பளச்சேரி இனம். நிலம் இல்லாத கூலித் தொழிலாளிகள் கூட இந்த மாட்டை வைத்து, தன்னுடைய குடும்பத்தை நடத்திட முடியும். வட இந்திய நம்மாழ்வாராக இருக்கும் சுபாஷ் பாலேக்கர் இங்கு வந்து பார்த்துட்டு, "இந்தியாவிலேயே நல்ல நாட்டு இனம் இதுதான்' என பாராட்டி விட்டுப் போனார். இப்படி பிரபலமான இந்த இன மாடுகளை அழிவுகளில் இருந்து காப்பாற்றிவருகிறது இந்த பண்ணை. இப்போது இந்த பண்ணை இருக்கும் இடத்தில் சிப்காட் வரப்போகுதுன்னு சொல்றாங்க. அப்படி வந்தால் அதுல என்னவிதமான தொழிலைச் செய்யப்போறாங்கன்னு தெரியவில்லை. ஏற்கனவே இந்த பூமியில் குடிநீர் இல்லை. எங்கள் பகுதி பூராவும் உப்புத் தண்ணீராகி விட்டது. எஞ்சியுள்ள விவசாயமும், அதனை நம்பியுள்ள மனித இனமும் அழிந்துபோகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதில், தற்போது இருக்கும் நிலங்களில் 85 ஏக்கர் நிலத்தை சிப்காட் தொழிற் பேட்டைக்கும், ஐந்து ஏக்கர் நிலத்தை வட்டாரப் போக்கு வரத்து அலுவலகத்துக்கும் ஒதுக்கியிருப்பதாக கூறுகிறார் கள். எனவே சிப்காட் அமைப்பதைக் கைவிட்டு அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியும் ஆராய்ச்சி மையமும் இங்கு உருவாக்கி உலகளாவிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்''’என்கிறார் எதிர்பார்ப்போடு.
முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் குப்புசாமியோ, "உம்பளச்சேரி மாடுகளை இன்னும் பல தலைமுறைகளுக்கு பாதுகாத்தாக வேண்டும். கொஞ்ச நாளில் இந்தக் கால் நடைப் பண்ணையே காணாமல் போய்விடும் சூழல் ஏற் பட்டிருக்கிறது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதியில் தொழிற்பேட்டை அமைப்பது சட்டவிரோதம் என்பதை ஆளும் அரசு உணர மறுக்கிறது'' என்கிறார் ஆதங்கமாய். மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்துறைப்பூண்டி ஒன்றியச் செயலாளர் காரல்மார்க்ஸ் கூறுகையில், "பாரம்பரியமிக்க மாட்டு இனமான உம்பளச் சேரி இனம் அழியாமலிருக்க இங்கிருக்கும் பண்ணையும் ஒரு காரணம், இங்கு சிப்காட் வந்தால் மொத்தமும் அழிந்து போகும்''’என்கிறார்.
திருவாரூர் மாவட்ட தி.மு.க. விவசாய அணி துணை அமைப்பாளரும் கொருக்கை ஊராட்சி மன்றத் தலைவருமான ஜானகிராமனிடம் இது குறித்துக் கேட்டபோது,’"தமிழக முதல்வர் விவசாயிகளின் மனம் நோகாமல் இதுவரை நடந்துவருகிறார். எங்கள் கிராமத்தினர், பண்ணையைக் காக்கவேண்டும் என்று தங்கள் உணர்வுகளை எழுத்துப்பூர்வமாக ஊராட்சி மன்றத்திற்கு கொடுத்திருக்கின்றனர். நாங்கள் இதுதொடர்பாக தமிழக முதல்வரைச் சந்தித்துக் கோரிக்கை வைக்கவிருக்கிறோம். இது எங்க பகுதி மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனை. நிச்சயம் தமிழக முதல்வர் ஒரு நல்ல முடிவை எடுப்பார் என உறுதியாக நம்புகிறேன்''’என்கிறார்.
இதுகுறித்து விளக்கம் கேட்க திருவாரூர் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டோம், பிறகு பேசுவதாகக் கூறி தவிர்த்துவிட்டார். டெல்டா விவசாயிகளின் குரல், தமிழக அரசின் காதுகளில் விழுமா?