ராங்கால் ஆதிக்க கவர்னர்கள்! கை கோர்க்கும் முதல்வர்கள்! -மோடி அரசுக்கு செக்! நான் வாய் திறந்தால்.. -ஓ.பி.எஸ். காட்டம்!

ss

"ஹலோ தலைவரே, தமிழக கவர்னரைத் திரும்பப் பெறணும்னு வலியுறுத்தும் கடிதம் டெல்லியில் உள்ள ராஷ்ட்ரபதி பவனில் ஒருவழியாக ஒப்படைக்கப் பட்டிருக்கு.''’

"தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் எழுதிய அந்தக் கடிதத்தை குடியரசுத் தலைவர் நேரில் வாங்கலையே?''”

"உண்மைதாங்க தலைவரே, அரசியலமைப்பு சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்படும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, குடி யரசுத் தலைவர் திரும்ப அழைத்துக்கொள்ளணும் என வலியுறுத்தும் வகையில், ஆளுங்கட்சி யான தி.மு.க. ஒரு கோரிக்கைக் கடிதத்தைத் தயாரித்திருந்தது. இதில் தி.மு.க.வின் தோழமைக் கட்சிகளின் தலைவர்களும், 40-க்கும் மேற்பட்ட லோக்சபா, ராஜ்யசபா எம்.பி.க்களும் கையெழுத்து போட்டிருந்தாங்க. இந்தக் கடிதத்தை டி.ஆர்.பாலு தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் நேரில் சென்று ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் கொடுப்பதுன்னு தீர்மானிக்கப் பட்டு இருந்தது. அதன்படி ஜனாதிபதி மாளிகையிடம் நேரமும் கேட்டப்பட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியின் கருத்தைத் தெரிந்து கொள்ளாமல், எதையும் செய்யக்கூடாதுன்னு ஜனாதிபதி மாளிகை தயங்குச்சு.''”

cmsgg

"பிறகு?''”

"அடுத்ததா என்ன செய்ய லாம்னு தி.மு.க. தலைமை அவசரமாக ஆலோசித்தது. பிறகு, குடியரசுத் தலைவரை சந்திப்பதற் காகக் காத்திருக்கத் தேவை யில்லை. கடிதத்தை நேரில்தான் கொடுக்கவேண்டும் என்பதில்லை. ராஷ்ட்ரபதி பவன்ல கொடுத்தாலே, அது குடியரசுத் தலைவரிடம் கொடுத்த மாதிரிதான்னு தி.மு.க. முடிவெடுத்து, அதைத் தொடர்ந்து அந்தக் கடிதம், ராஷ்ட்ரபதி பவனில் ஒப்படைக்கப்பட்டது. இதில் குறிப்பாக கவனிக்க வேண்

"ஹலோ தலைவரே, தமிழக கவர்னரைத் திரும்பப் பெறணும்னு வலியுறுத்தும் கடிதம் டெல்லியில் உள்ள ராஷ்ட்ரபதி பவனில் ஒருவழியாக ஒப்படைக்கப் பட்டிருக்கு.''’

"தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் எழுதிய அந்தக் கடிதத்தை குடியரசுத் தலைவர் நேரில் வாங்கலையே?''”

"உண்மைதாங்க தலைவரே, அரசியலமைப்பு சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்படும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, குடி யரசுத் தலைவர் திரும்ப அழைத்துக்கொள்ளணும் என வலியுறுத்தும் வகையில், ஆளுங்கட்சி யான தி.மு.க. ஒரு கோரிக்கைக் கடிதத்தைத் தயாரித்திருந்தது. இதில் தி.மு.க.வின் தோழமைக் கட்சிகளின் தலைவர்களும், 40-க்கும் மேற்பட்ட லோக்சபா, ராஜ்யசபா எம்.பி.க்களும் கையெழுத்து போட்டிருந்தாங்க. இந்தக் கடிதத்தை டி.ஆர்.பாலு தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் நேரில் சென்று ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் கொடுப்பதுன்னு தீர்மானிக்கப் பட்டு இருந்தது. அதன்படி ஜனாதிபதி மாளிகையிடம் நேரமும் கேட்டப்பட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியின் கருத்தைத் தெரிந்து கொள்ளாமல், எதையும் செய்யக்கூடாதுன்னு ஜனாதிபதி மாளிகை தயங்குச்சு.''”

cmsgg

"பிறகு?''”

"அடுத்ததா என்ன செய்ய லாம்னு தி.மு.க. தலைமை அவசரமாக ஆலோசித்தது. பிறகு, குடியரசுத் தலைவரை சந்திப்பதற் காகக் காத்திருக்கத் தேவை யில்லை. கடிதத்தை நேரில்தான் கொடுக்கவேண்டும் என்பதில்லை. ராஷ்ட்ரபதி பவன்ல கொடுத்தாலே, அது குடியரசுத் தலைவரிடம் கொடுத்த மாதிரிதான்னு தி.மு.க. முடிவெடுத்து, அதைத் தொடர்ந்து அந்தக் கடிதம், ராஷ்ட்ரபதி பவனில் ஒப்படைக்கப்பட்டது. இதில் குறிப்பாக கவனிக்க வேண்டியது என்னன்னா, அந்தக் கடிதத்திற்கு ’"சீர்கேட்டின் சிறந்த எடுத்துக்காட்டு ஆளுநர் ஆர்.என். ரவி'’ என்று தலைப்பை வைத் திருந்ததுதான். இந்தக் கடிதம் இப்போது டெல்லியில் சார்ச்சைச் சூறாவளியை ஏற்படுத்த ஆரம்பிச் சிருக்கு.''”

"ஆமாம்பா, தமிழகத்தைப் போலவே முட்டுக்கட்டை கவர்னர்களால் திணறும் மற்ற மாநிலங்களும், கச்சேரியை ஆரம்பிச்சா என்ன பண்றதுன்னு டெல்லி பதட்டமாகி இருக்குமே?''”

"ஆமாங்க தலைவரே, பா.ஜ.க. ஆளும்கட்சியாக இல்லாத மாநிலங்களில், அங்குள்ள முதல்வர்களுக்கும் ஆளுநர்களுக்கும் ஏழாம் பொருத்தமாகத்தான் இருக்கிறது. அதனால், தமிழகத்தைப் பின்பற்றி அந்த மாநிலங்களும் கவர்னர்களைத் திரும்பப் பெற ணும்னு களமிறங்கினால் என்ன ஆகறதுன்னு டெல்லி கவலைப் படுது. மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கும், ஆளுநர் ஜன்தீப் தன்கருக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தில் இருந்ததால், ஜன்தீப் தன்கரை துணை ஜனாதிபதியாக ஒன்றிய அரசு தேர்வு செய்துவிட்டது. அதனால், மணிப்பூர் கவர்னர் இல.கணேசனே மேற்குவங்க பொறுப்பு கவர்ன ராகவும் நியமிக்கப்பட்டார். மம்தாவுக்கும் இல.கணேசனுக்கும் ஏதோ ஒருவகையில் அலைவரிசை ஒத்துப்போவதால் கடந்த சில மாதங்களாக அங்கே நிலைமை ஸ்மூத்தா போகுது.''”

"மேற்குவங்கத்தை சமாளிச்சாலும் பா.ஜ.க. ஆளாத மத்த மாநிலங்களின் நிலைமை ஸ்மூத்தா இல்லையே?''”

"உண்மைதாங்க தலைவரே, கேரளாவின் முதல்வர் பினராயி விஜயனுக்கும் ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் தினமும் நேரடி மோதல்கள், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் தன்னை மதிக்கவேயில்லைன்னு ஆளுநர் தமிழிசை புகார் சொல்றாங்க. எங்க கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் பேரத்தில் ராஜ் பவனுக்கு தொடர்பு இருக்குன்னு முதல்வர் சொல்றாரு. இதுபோல பீகார், பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் கவர்னர்களாலும் அங்குள்ள அரசுகளோட மோதல்தான். கேரள முதல்வர் பினராயி விஜயன், தங்கள் மாநில கவர்னருக்கு எதிராக 15ஆம் தேதி பெரிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறார். இதற்கு ஆதரவு தெரிவித்த தி.மு.க., அதில் கலந்துகொள்ளவும் திட்ட மிட்டிருக்கு. எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களை கவர்னரை வைத்து மிரட்டிப் பார்க்கும் மோடி அரசுக்கு, இப்போது பதிலடி தர, சம்மந்தப்பட்ட மாநிலங்கள் வரிஞ்சி கட்டி நிக்கிது.''”

"பின்தங்கிய உயர்சாதி யினருக்கு 10 சத இடஒதுக்கீடு செல்லும்னு உச்சநீதிமன்றம் அறிவித்த தீர்ப்பு, காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பத்தை உண்டாக்கி இருக்குதே?''”

"உண்மைதாங்க தலைவரே, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு மோடி அரசு கொண்டுவந்த 10 சத இட ஒதுக்கீடு செல்லும்னு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, கொண் டாட்டத்தோடு வர வேற்குது பா.ஜ.க. அதேபோல், அகில இந்திய காங்கிரஸ் கட்சியும், அங்கே உள்ள உயர்வகுப்புத் தலைவர்கள் விரும்பியபடி, அந்தத் தீர்ப்பை வரவேற்றிருக்கிறது. அதனால் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் அந்தத் தீர்ப்பை வரவேற்றதோடு, சமூக நீதிக்கு இது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத் தாதுன்னு அறிவித்தார். ஆனால், இந்தத் தீர்ப்பை, காங்கிரஸிலேயே இருக்கும் பிரபலங்கள் சிலர் எதிர்க்குறாங்க.''”

"ம்ம்..''”

"காங்கிரஸ் கட்சியின் தலைமை வரவேற்கும் அந்தத் தீர்ப்பை காங்கிரஸ் எம்.பி.க்களான கார்த்தி சிதம்பரமும், ஜோதி மணியும், எதிர்த்து விமர்சிக்கிறாங்க. கட்சித் தலைமையின் நிலைப் பாட்டுக்கு எதிராக, அக்கட்சியின் எம்.பி.க்கள் தீர்ப்பினை எதிர்த்திருப்பது கட்சிக்குள் பரபரப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கு. இவர்கள் இருவரும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில், அந்தத் தீர்ப்பினை விமர்சித்ததை ஸ்கிரீன் ஷாட்டோடு, கட்சித் தலைமைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள் காங்கிரஸிலேயே இருக்கும் கோஷ்டித் தலைவர்கள். இதனால் காங்கிரஸுக்குள் ஒருவித குழப்பநிலை ஏற்பட்டிருக்கு. அதே நேரம் தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் கடுமையாக எதிர்க் கின்றன.''”

"சசிகலா குடும்பத்தில் பதட்டப் பரபரப்பு தெரியுதே?''”

"உண்மைதாங்க தலைவரே, சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தற்கொலை முயற்சியில் இறங்கி, மருத்துவமனையில் அட் மிட்டாகி இருப்பதாக 9ஆம் தேதி இரவு, ஒரு தகவல் நம் காதுக்கு வந்தது. உடனடியாக விசாரணையில் இறங்கினோம். இளவரசியின் மருமகளும் விவேக்கின் மனைவியுமான கீர்த்தனாதான் தற்கொலை முயற்சியில் இறங்கி, ஆபத்தான நிலையில் அடையாறு மலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதன் பின்னணி குறித்துத் துருவியபோது, தன் கணவரின் மோசமான நடத்தையாலும், சொத்துப் பிரச்சினையாலும், மன ரீதியிலான சித்திரவதைகளாலும் பாதிக்கப்பட்டிருந்த கீர்த்தனா, இவற்றைப் பொறுக்க முடியாமல் தற்கொலை முயற்சியில் இறங்கியிருக்கிறார் என மன்னார்குடி தரப்பே சொல்லுது.''”

"குடும்ப விவகாரம் நமக்கு எதுக்குப்பா? அதைவிடு. எந்த நிலையிலும் ஓ.பி.எஸ்.ஸை அ.தி.மு.க.வில் சேர்த்துக்கொள்ள மாட்டோம்னு திட்டவட்டமாக எடப்பாடி சொல்லி இருக்காரே?''”

ops

"அ.தி.மு.க.வின் பொன்விழா நிறைவுப் பொதுக் கூட்டம் நாமக்கலில் சமீபத்தில் நடந்தது. இதில் பேசிய எடப் பாடி, நாடாளுமன்றத் தேர்த லில் அ.தி.மு.க. தலைமையில் ஒரு மெகா கூட்டணி அமையும். அதுதான் வெற்றிபெறும்னு சொன்னதோட, ஓ.பி.எஸ்.ஸை துரோகி என்று வர்ணித்தார். மேலும், அவரை எந்த சூழலிலும் அ.தி.மு.க.வில் மீண்டும் சேர்த்துக்கொள்ள மாட்டோம் என்றும் அறிவித்தார். அப்போது அவர் காட்டிய ஆவேசமும் உறுதியும், ஓ.பி.எஸ். தரப்பினரைத் திகைக்க வைத்ததாம். அதேபோல், எடப்பாடி ஆதரவாளர்கள், தன்னைச் சுற்றி நெருப்பு எரியும்போதும், நம்ம ஆளு எந்த தைரியத்தில் இந்தப் போடு போடறார்னு தங்களுக்குள் கிசுகிசுக்கிறார் களாம்.''”

eps

"இது தொடர்பா நானும் எனக்குக் கிடைச்ச தகவலைப் பகிர்ந்துக்கறேன். எடப்பாடி யின் அந்தப் பேச்சு பற்றி, தனது ஆதரவாளர்களிடம் விவாதித்த ஓ.பி.எஸ்., ’"என்னைக் கட்சியில் சேர்க்க மாட்டேன்னு மீண்டும் மீண்டும் ஒரே பல்லவியை எடப்பாடி பாடறார். தர்ம யுத்தத்தை யார் சொல்லி நடத்தினேன் என்பதையும், அதை நடத்தச் சொன்னவர் என்ன அடிப்படையில் என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பதையும் அம்பலப்படுத்தினால்தான் அவர் அடங்குவார். நான் வாய் திறந்தால், எடப்பாடி தாங்க மாட்டார். நாகரிகம் கருதி பல ரகசியங்களை அம்பலப் படுத்தாமல் பொறுமையாக இருக்கிறேன்'னு சொல்லியிருக்கார். இந்தத் தகவல் எடப்பாடி காதுக்குப் போக, அவர் தரப்பு அதிர்ச்சியில் இருக் கிறதாம்.''”

nkn121122
இதையும் படியுங்கள்
Subscribe