ராங்கால் டெல்லியின் ஆதிக்கம்? அதிருப்தியில் ஸ்டாலின்! இ.பி.எஸ்.ஸுக்கு ஓ.பி.எஸ். குடைச்சல்!

dd

"ஹலோ தலைவரே, முதல்வர் ஸ்டாலின், அரசு அதிகாரிகள் சிலர் மீது கடும் அதிருப்தியில் இருக்கார்னு கோட்டை வட்டாரத்தில் பலமாக பேச்சு அடிபடுது.''”

"ஆமாம்பா, தனது விருப்பத்துக்கு மாறாக அவர்கள் செயல்படுவதாக முதல்வர் நினைக்கிறாராமே?''”

"உண்மைதாங்க தலைவரே, அதிகாரிகள் சிலர் அரசு நிர்வாகத்தை தன் விருப்பத்துக்கு மாறாக செயல்பட வைக்க முனைவதாக முதல்வர் வருத்தப்படு கிறாராம். குறிப்பாக, காவல்துறையே கூட தனது உத்தரவை மீறி, டெல்லி விரும்பியபடி செயல்படுகிறது என்று முதல்வர் எரிச்சலாகி இருக்கிறாராம். உதாரணத் துக்குச் சொல்லணும்னா, கடந்த மாதம் அறநிலையத்துறை அலுவலகத்தை பா.ஜ.க. அண்ணாமலை, முற்றுகையிடப் போவதாக அறிவித்தபோது, அவர் போராட்டத்தைத் தொடங்கும் முன்பாகவே அவரைக் கைது செய்து, பரபரப்பு ஏற்படாதவாறு நிலைமையை மேனேஜ் செய்யுங்கள்னு, டி.ஜி.பி. சங்கர் ஜிவாலுக்கு முதல்வர் உத்தரவிட்டிருந்தாராம்.''”

stalin

"ம்''”

"ஆனால் காவல்துறையோ, அண்ணாமலை சாலை மறியலில் குதித்து பரபரப்பை ஏற்படுத்தும் வரை கைகட்டி வேடிக்கை பார்த்தது. இதற்காக அப்போதே காவல்துறை அதிகாரிகளை முதல்வர் ஸ்டாலின் கடிந்துகொண்டாராம். அதேபோல் அண்மையில், குட்கா விவகாரத்தில் சி.பி.ஐ.யின் அழுத்தமான குற்றச்சாட்டுக்கு ஆளான ஐ.ஜி. தினகரனுக்கு, பதவி உயர்வு கொடுக்கக்கூடாது என்று அவர் ஆர்டர் போட்டிருக்க, இந்த விவகாரத்தில் டெல்லி மூக்கை நுழைத்த தாம். உடனே, ஐ.ஜி. தினகரனுக்கு புரமோசனை கட் செய்யும் அளவுக்கு தண்டனை தேவையில்லை என்று முதல்வருக்கும், உள்துறைக்கும் தனி ஃபைலை அனுப்பியிருக்கிறாராம் டி.ஜி.பி..''”

"டாஸ்மாக் விவகாரத்திலும் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்த அதிகாரிகள் முனைகிறார் களாமே?''”

"ஆமாங்க தலைவரே, தாய்லாந்தில் உள்ள ஓட்டல்களில் 24 மணி நேரமும் மதுபானம் விற்கப்படுவது போல், தமிழகத்தில் இருக்கும் உணவகங்களிலும் டாஸ்மாக் சரக்கை விற்பதற் கான திட்டம் ஒன்று அதி காரிகளால் உருவாக்கப்பட்டு வருகிறது. எக2 எனப்படும் ûலைசன்ஸ் இதன்படி, மாநகராட்சிப் பகுதியில் உள்ள ஓட்டல்களில் டாஸ் மாக் சரக்குகளை விற்பதற்கான அனுமதியைப் பெ

"ஹலோ தலைவரே, முதல்வர் ஸ்டாலின், அரசு அதிகாரிகள் சிலர் மீது கடும் அதிருப்தியில் இருக்கார்னு கோட்டை வட்டாரத்தில் பலமாக பேச்சு அடிபடுது.''”

"ஆமாம்பா, தனது விருப்பத்துக்கு மாறாக அவர்கள் செயல்படுவதாக முதல்வர் நினைக்கிறாராமே?''”

"உண்மைதாங்க தலைவரே, அதிகாரிகள் சிலர் அரசு நிர்வாகத்தை தன் விருப்பத்துக்கு மாறாக செயல்பட வைக்க முனைவதாக முதல்வர் வருத்தப்படு கிறாராம். குறிப்பாக, காவல்துறையே கூட தனது உத்தரவை மீறி, டெல்லி விரும்பியபடி செயல்படுகிறது என்று முதல்வர் எரிச்சலாகி இருக்கிறாராம். உதாரணத் துக்குச் சொல்லணும்னா, கடந்த மாதம் அறநிலையத்துறை அலுவலகத்தை பா.ஜ.க. அண்ணாமலை, முற்றுகையிடப் போவதாக அறிவித்தபோது, அவர் போராட்டத்தைத் தொடங்கும் முன்பாகவே அவரைக் கைது செய்து, பரபரப்பு ஏற்படாதவாறு நிலைமையை மேனேஜ் செய்யுங்கள்னு, டி.ஜி.பி. சங்கர் ஜிவாலுக்கு முதல்வர் உத்தரவிட்டிருந்தாராம்.''”

stalin

"ம்''”

"ஆனால் காவல்துறையோ, அண்ணாமலை சாலை மறியலில் குதித்து பரபரப்பை ஏற்படுத்தும் வரை கைகட்டி வேடிக்கை பார்த்தது. இதற்காக அப்போதே காவல்துறை அதிகாரிகளை முதல்வர் ஸ்டாலின் கடிந்துகொண்டாராம். அதேபோல் அண்மையில், குட்கா விவகாரத்தில் சி.பி.ஐ.யின் அழுத்தமான குற்றச்சாட்டுக்கு ஆளான ஐ.ஜி. தினகரனுக்கு, பதவி உயர்வு கொடுக்கக்கூடாது என்று அவர் ஆர்டர் போட்டிருக்க, இந்த விவகாரத்தில் டெல்லி மூக்கை நுழைத்த தாம். உடனே, ஐ.ஜி. தினகரனுக்கு புரமோசனை கட் செய்யும் அளவுக்கு தண்டனை தேவையில்லை என்று முதல்வருக்கும், உள்துறைக்கும் தனி ஃபைலை அனுப்பியிருக்கிறாராம் டி.ஜி.பி..''”

"டாஸ்மாக் விவகாரத்திலும் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்த அதிகாரிகள் முனைகிறார் களாமே?''”

"ஆமாங்க தலைவரே, தாய்லாந்தில் உள்ள ஓட்டல்களில் 24 மணி நேரமும் மதுபானம் விற்கப்படுவது போல், தமிழகத்தில் இருக்கும் உணவகங்களிலும் டாஸ்மாக் சரக்கை விற்பதற் கான திட்டம் ஒன்று அதி காரிகளால் உருவாக்கப்பட்டு வருகிறது. எக2 எனப்படும் ûலைசன்ஸ் இதன்படி, மாநகராட்சிப் பகுதியில் உள்ள ஓட்டல்களில் டாஸ் மாக் சரக்குகளை விற்பதற்கான அனுமதியைப் பெற வரு டத்திற்கு 15 லட்ச ரூபாயும், நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் சரக்கை விற்க, வருடத்திற்கு 12 லட்ச ரூபா யும் அரசுக்கு கட்ட வேண்டு மாம். கடந்த அ.தி.மு.க. ஆட்சியிலேயே அப்போது மதுவிலக்குத் துறை அமைச்ச ராக இருந்த தங்கமணி, இந்த திட்டத்தை அமல்படுத்த நினைத்தாராம். இதனால் மக்களிடம் கெட்ட பெயர் உண்டாகும் என்று, அதை அப்போது முதல்வராக இருந்த எடப் பாடிதான் நிராகரித்துவிட்டாராம். இப்போது அதே அதிகாரிகள் டீம்தான், இந்த தி.மு.க. ஆட்சியில் அந்தத் திட்டத்தை நடைமுறைப் படுத்தத் துடிக்கிறது. அரசுக்கு வருமானம் என்று முதல்வரை பிரைன்வாஷ் செய்யவும் அவர்கள் திட்டமிடுகிறார்களாம். இப்படியொரு அனுமதியைக் கொடுத்தால், தி.மு.க. அரசுக்கு பெரும் கெட்ட பெயர் வருவதோடு, சட்டம் ஒழுங்கும் சீர்குலைந்துவிடும் என்கிறார்கள் கோட்டையில் உள்ள சில நேர்மையான அதிகாரிகள்.''”

ss

"சரிப்பா, ஓ.பி.எஸ்.ஸும் த.மா.கா. வாசனும் துக்க வீட்டில் சந்தித்து அளவளாவி இருக்கிறார்களே?''”

"ஆமாங்க தலைவரே, அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வும் ஓ.பி.எஸ். ஆதரவாளருமான ஜே.சி.டி. பிரபாகரனின் மனைவி ஜெயந்திராணி அண்மையில் சென்னையில் மரணமடைந்தார். அந்தத் துக்க நிகழ்வில் கலந்துகொள்வதற்காக தேனியில் இருந்து ஓ.பி.எஸ். புறப்பட்டு சென்னைக்கு வந்தார். அதேபோல ஆற்காட்டில் இருந்த த.மா.கா. வாசனும், அங்கிருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்துசேர்ந்தார். இருவரும் ஜே.சி.டி. பிரபாகரன் வீட்டிற்குச் சென்று துக்கம் விசாரித்து அவருக்கு ஆறுதல் சொன்னார்கள். பின்னர் அங்கேயே ஓ.பி.எஸ்.ஸும், வாசனும் சந்தித்து, தனியே தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தனர். ஓ.பி.எஸ். அங்கே வரும் நேரத்தை உறுதி செய்துகொண்டுதான் வாசன் அங்கே வந்தாராம். துக்க வீட்டில் வாசனை பார்த்த அ.தி.மு.க.வினர், இவர் எடப்பாடி ஆளாச்சே, அப்படிப்பட்டவர் இங்கே எதற்கு வந்தார்? என்று வெளிப்படையாகவே பேசிக் கொண்டனர். பா.ஜ.க.வுடனான உரசல் போக்கால், எடப்பாடி மீது மோடி, அமித்சா இருவரும் செம காட்டத்தில் இருக்கிறார்கள் என்றும், ஓ.பி.எஸ்.ஸை அவர் கள் கைவிடவில்லை என்றும், பா.ஜ.க. தேர்தல் கூட்டணி அமைக்கும்போது அதில் ஓ.பி.எஸ். முக்கிய பங்களிப்பார் என்றும், வாசனுக்கு டெல்லி சைடில் இருந்தே சொல்லப் பட்டதாம். அதனால்தான் அவர் ஓ.பி.எஸ்.ஸை விடாப்பிடியாக துக்கவீட்டிலேயே சந்தித்து, புதிதாக ஒரு அரசியல் சடுகுடு ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார் என்கிறது ஓ.பி.எஸ். தரப்பு.''”

"உயர்நீதிமன்றம் ஓ.பி.எஸ்.ஸுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறதே?''”

"அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பி.எஸ்., அ.தி.மு.க.வின் பெயரையும் கொடி-சின்னத்தையும் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி வழக்கைத் தொடர்ந் திருந்தார். அது தொடர்பாக பதிலளிக்குமாறு ஓ.பி.எஸ்.சுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக் கிறது சென்னை உயர் நீதிமன்றம். இந்த வழக்கு அக்டோபர் முதல் வாரத்தில் விசாரணைக்கு வரவிருக்கிறது. இந்த நிலையில், நோட்டீஸ் பற்றி பண்ருட்டி ராமச்சந்திரனிடம் விவா தித்திருக்கிறார் ஓ.பி.எஸ். அப்போது, அ.தி.மு.க.வை எதன் அடிப்படையில் நாம் உரிமை கோரு கிறோம் என்பதை நீதிமன்றத்தில் எடுத்துச் சொல்ல மீண்டும் ஒரு வாய்ப்பு நமக்கு கிடைத் திருக்கிறது. எனவே அந்த வாய்ப்பை நாம் முழுமையாகப் பயன் படுத்த வேண்டும். அதற்காக சட்டரீதியாக நமக்குள்ள பாயிண்டுகளை ஆராய்ந்து பதில் மனு தாக்கல் செய்வது அவசியம்’ என்று சொல்லியிருக்கிறாராம் பண்ருட்டி. எனவே ஓ.பி.எஸ்.சின் வழக்கறிஞர்கள், எடப்பாடிக்கு ஏதாவது நெருக்கடி கொடுக்க முடியுமா? என்று சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து வருகிறார்கள். இந்த நிலையில், திருப்பதி காளஹஸ்தி கோயிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடு நடத்தியிருக்கிறார் ஓ.பி.எஸ்.''”

"நாம் தமிழர் கட்சி சீமானின் மனைவி கயல்விழியும் அரசியலுக்கு வருவார் போலிருக்கே?”

fdf

’"நாம் தமிழர் கட்சியின் பொதுச்செய லாளராக இருந்த மூத்த வழக்கறிஞர் தடா சந்திரசேகரன் இரு வாரங்களுக்கு முன்பு காலமானார். இதனால் நாம் தமிழரில் அவர் இருந்த பதவி காலியாக இருக்கிறது. இன்னும் அதை நிரப்பாமல் விட்டு வைத்தி ருக்கிறார் சீமான். இந்த நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளராக சீமானின் மனைவி கயல்விழியை நியமிக்கவேண்டும் என்ற கருத்து அங்கே உருவாகியிருக்கிறது. இது குறித்து கட்சியின் முக்கிய நிர்வாகி கள் சீமானிடம் வலியுறுத்தி வருகிறார்களாம். கயல்விழிக்கும், தன் அப்பாவான மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவைப் போல, நேரடி அரசியலுக்கு வரும் ஆசை இருப்ப தாகச் சொல்கிறார்கள். ஆனால், இதுவரை கட்சிக்காக நேரடியாக எந்த உழைப்பையும் கொடுக்காத தனது மனைவியை, திடீரென பொதுச்செயலாளராக அமரவைத்தால், எதிர்மறை விமர் சனங்கள் கிளம்பலாம் என்று சீமான் தயங்கு கிறாராம். எனினும் சீனியர்களின் வற்புறுத்தல் தொடர்கிறதாம்.''”

"மின்வாரியத் தொழிலாளர்கள் மத்தியில் ஏக்கக் குரல் ஒலிக்கிறதே?''”

"தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 56 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவே இருக்கின்றனவாம். அதனால் இப்போது இருக்கும் குறைந்த அளவிலான ஊழியர்கள் பணிச்சுமையால் திணறி வருகிறார்கள். குறிப்பாக ஒரு பிரிவு அலுவலகத்துக்கு குறைந்தபட்சம் 7 உதவியாளர், 7 கம்பியாளர், 2 மின்பாதை ஆய்வாளர், 15 களப்பணியாளர்கள் இருந்தால்தான் மின் விநியோகப் பணிகள் சீராக நடக்கும். ஆனால் இப்போது இந்தப் பணிகளில் பெரும்பாலும் பற்றாக்குறையான நபர்களே இருப்பதால் அவர்கள் போராடி வருகிறார்களாம். இந்த நிலையில் கேங்க் மேன்களை வேலைக்கு எடுக்க முடிவெடுத்த மின்வாரியம், அதற்கான எழுத்துத் தேர்வையும், உடல்தகுதித் தேர்வையும் நடத்தியது. 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட நிலையில், இதில் வெற்றிபெற்ற பலருக்கு பணி நியமனம் வழங்கப்படவில்லை என்கிறார்கள். இந்தநிலையில், இவர்களின் பரிதவிப்பை உணர்ந்து, தமிழக முதல்வர் இவர்களிடம் கருணை காட்டவேண்டும் என்று ’தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேசன்’ அண்மையில் அவருக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறது. மேலும், மின்வாரியத்தில் உள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யவும் அரசு முன்வரவேண்டும் என்ற கோரிக்கையையும் இவர்கள் வைத்திருக்கிறார்கள்.''”

"நானும் ஒரு தகவலை உன் வழியாக பகிர்ந்துக்கறேன். மணல் பிசினஸில் கொடிகட்டிப்பறக்கும் திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன், புதுக்கோட்டை ராமச்சந்திரன் உள்ளிட்டோர் தொடர்புடைய 40லிக்கும் மேற்பட்ட இடங்களில் அண்மையில் அம லாக்கத்துறை அதிரடி ரெய்டுகளை நடத்தியது. இந்த ரெய்டின் போது, முக்கிய ஆவணங்கள், டைரிகள் ஆகியவற்றை அவர்கள் கைப்பற்றி எடுத்துச் சென்றிருக்கிறார்கள். அவற்றில் இருக்கும் சில வில்லங்க விவகாரங்கள் கிளறப்பட்டால், அவை ஆளுங்கட்சியான தி.மு.க.வில் பூகம்பத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள். இந்த நிலையில் மணல் புள்ளிகள் மூவரும் தலைமறைவாகிவிட்டார்கள். அவர்களை ஸ்கெட்ச் போட்டு துரத்திக் கொண்டிருக்கும் அமலாக்கத்துறை, அடுத்த கட்டமாக அவர்களுக்கு முறைப்படி சம்மனை அனுப்ப முடிவெடுத்திருக்கிறது. இந்த நிலையில், தலைமறைவாக இருக்கும் மணல் புள்ளிகள் டெல்லியிடம் சரணாகதி அடைய, தூது விட்டுக்கொண்டிருக் கிறார்களாம்.''”

_________

இறுதிச் சுற்று!

ff

வருகிற நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள கொங்கு மண்டலத்தில் 24-ஆம் தேதி காங்கேயத்தில் வாக்குச்சாவடி முகவர் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த தி.மு.க.வின் அமைப்புரீதி யான 14 மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி பொறுப் பாளர்கள் கலந்துகொண்டனர்.

மதியம் அங்கிருந்த வாக் குச்சாவடி முகவர்களிடம் சிறப் புரையாற்றவந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "நமது அரசின் திட்டத்தில் ஒவ்வொரு குடும்பமும் பயனடைந்திருக்கும். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங் கியதற்கு பிறகு மக்களிடம் நமக்கு அமோக வரவேற்பு உள்ளது. காலை உணவுத் திட்டத்தின் மூல மாகவும் லட்சக்கணக்கான பிள் ளைகள் பசியில்லாமல் படிக்கிறார் கள். நாம் கொடுத்த வாக்குறுதி களை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறோம். வருகிற தேர்தலில் தமிழ்நாடு புதுவையிலுள்ள 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் படுதோல்வி அடைய ஒவ்வொரு தொண்டர்களும் கண் துஞ்சாது உழைக்க வேண்டும். கழக நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு மணிநேரம் கழகத்திற்காக செல விடுங்கள். நிச்சயம் உங்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. உங்க ளது தேவைகள் நிறைவேற்றப்படும் என கூறியது தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

-ஜீவாதங்கவேல்

nkn270923
இதையும் படியுங்கள்
Subscribe