சில நேரங்களில் காவல்துறைக்கு வரும் புகார்களும், முதல் தகவல் அறிக்கைகளும் புனையப் பட்டதாக இருந்தாலும், படிக்கும்போதே உண்மையை உணர்த்திவிடும்.

சட்டக்கல்லூரி மாணவியான திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மதுரையைச் சேர்ந்தவர். எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை சம்பந்தமான மருத்துவப் படிப்பில் முதுநிலை பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்து வருபவர் டாக்டர் மேத்யூ ஜாக்சன். முகநூலில் அறிமுகமான மூன்றே மாதங்களில் ’எல்லாம்’ நடந்துவிட்டது. கடந்த மே 25-ஆம் தேதி சென்னை அண்ணா சாலையிலுள்ள பப்புக்குப் போயிருக்கின்றனர். அதன் பிறகு, தன் செல்போனிலுள்ள ஓயோ ஆப் மூலம் ஆயிரம் விளக்குப் பகுதியிலுள்ள ஒரு கெஸ்ட் ஹவுஸில் அறையை முன்பதிவு செய்து அழைத்துச் சென்ற மேத்யூவிடம் முழுவதுமாக தன்னை இழந்திருக்கிறார் திவ்யா. மேலும், சென்னையில் வீடு பிடித்து கணவன் மனைவிபோல் வாழ்ந்திருக்கின்றனர். இதே உறவு, திருநெல்வேலியில் உள்ள மேத்யூ வீட்டிலும், அங்குள்ள விடுதி ஒன்றிலும் தொடர்ந்திருக்கிறது.

doctor

எதிர்கால வாழ்க்கை குறித்த திடீர் பயத்தில் “"என்னைத் திருமணம் செய்துகொள்ளுங்கள்...'’’ என்று கெஞ்சியிருக்கிறார் திவ்யா. அப்போது, இன் னொரு முகம் காட்டியிருக்கிறார் மேத்யூ. “"நீ தாழ்ந்த ஜாதி. என் அம்மா உன்னை ஏற்றுக்கொள்ள மாட் டார்'’என்று நிராகரித்திருக்கிறார். இதனைத் தாங்கிக் கொள்ள முடியாத திவ்யாவை மேத்யூ அடிக்கவும் செய்தார். இந்த விவகாரத்தில் திவ்யாவுக்கு உதவ வழக்கறிஞர் ஒருவர் முன்வந்திருக்கிறார். ஆனாலும் மேத்யூ, “"நகை, பணம், கார் என சகல வசதிகளோடு எனக்கு வேறு இடத்தில் பெண் பார்த்துவிட்டார் கள்'’என்று கூலாகச் சொல்லியிருக்கிறார். மேத்யூவின் அம்மா ரெபேக்கா “"என் மகனோடு படுத்ததற்கு எவ்வளவு பணம் வேண்டும்? கீழ்சாதியில் பிறந்த நீ என் மருமகளாக முடியாது. ரவுடிகளை வைத்து உன்னைக் கொலை செய்துவிடுவேன்'’என்று மிரட்டியிருக்கிறார். மேத்யூவும் "உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. என்னோடு பழகிய பெண்களுக்கெல்லாம் வாழ்க்கை கொடுக்க வேண்டுமென்றால், எத்தனை பெண்களை நான் திருமணம் செய்வது?'’என்று திவ்யாவை அவ மானப்படுத்தி விரட்டியிருக்கிறார். மனம் நொந்துபோன திவ்யா, கடந்த 28-ஆம் தேதி "மேத்யூ மீதும் அவருடைய அம்மா ரெபேக்கா மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று, ஆதாரங்களோடு திருநெல்வேலி காவல் ஆணையாளரிடம் புகார் அளித்தார்.

திவ்யா மீது மேத்யூ சுமத்தும் குற்றச்சாட்டு இது-

""இருவரும் முகநூல் மூலம் கருத்துப் பரிமாற்றம் செய்தும், செல்போனில் பேசியும் வந்தோம். கடந்த 25-5-2019 அன்று அறுவை சிகிச்சை உபகரணங்கள் வாங்குவதற்காக நான் சென்னைக்குச் செல்வதை எனது முகநூல் வாயிலாகத் தெரிந்துகொண்ட திவ்யா சென்னையில் எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நேரில் சந்தித்தார். பேசிவிட்டுப் போய்விடலாம் என்று நினைத்த நான், அவர் என்னைத் தொடர்வதை தவிர்க்க நினைத்தேன். அவரோ, தொடர்ந்து என்னிடம் பேசி, நான் தங்குமிடத்தை அறிந்துகொண்டார். நான் எக்ஸ்பிரஸ் அவென்யூவில் இருந்து தங்குமிடத்துக்கு வந்தேன். அங்கும் என்னைப் பின்தொடர்ந்து வந்தார். "ஏன் இங்கு வந்தாய்?'’என்று கேட்டேன். அதற்கு, "நேரமாகிவிட்டதால் தனியாக நான் வீட்டிற்குச் செல்ல முடியாது. என் தோழி வீட்டிற்குத்தான் செல்லவேண்டும். அவளே வந்து என்னைக் கூட்டிச்செல்வாள்'’என்றாள். அதனால், என் அறைக்குள் திவ்யாவை அனுமதித்தேன். பிறகு, கட்டிலில் படுத்துவிட்டார். நான் சுமார் 10 மணிக்கு எழுப்பினேன். அப்போது, போதை உட்கொண்டு மயக்க நிலையில் இருந்தாள். அன்றிரவு முழுவதும் தூங்க முடியாமல் நான் விழித்திருந்தேன். எனக்கும் திவ்யாவுக்கும் உடல் ரீதியான உறவு எதுவும் அங்கு நடக்கவில்லை.

அடுத்து, செல்போனில் அவள் என்னைத் தொடர்பு கொண்டபோதெல்லாம் துண்டித்தேன். மே 26-ஆம் தேதிக்குப் பிறகு ஒருநாள், திருநெல்வேலியில் நான் குடியிருக்கும் வீட்டிற்கு வந்தாள். முகம் கழுவி ஒப்பனை செய்துவிட்டுக் கிளம்பினாள். ஜூன் 20-ஆம் தேதி, திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை, தெற்கு பைபாஸ் ரோட்டிலுள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்தவள், "நான் கனடா நாட்டிற்குச் சென்று குடியேறிவிடுவேன். உடனே என்னைப் பார்க்க வா...'’என்றாள். வேலைப் பளுவின் காரணமாக நான் செல்ல மறுத்தேன். அதற்கு அவள், "நீ இங்கு வரவில்லையென்றால், தற்கொலைக் குறிப்பு எழுதிவைத்துவிட்டு, இந்த அறையிலேயே உயிரை விடுவேன்'’என்று மிரட்டி னாள். பயந்துபோய் நான் அவளைச் சந்தித்தேன். "என்னோடு ஒரு செல்பி எடுத்துக்கொள்ளவேண்டும்' என்றாள். வேறுவழியின்றி சம்மதித்தேன்.

ஜூலை 30-ஆம் தேதி, சுமார் 7 பேருடன் திருநெல்வேலி வந்தாள் திவ்யா. அவர்களில் ஒருவன், "திவ்யாவுடன் நீ நெருங்கிப் பழகியதால் கர்ப்பம் அடைந்துவிட்டாள். திருமணம் செய்துகொள்ள மறுக் கிறாய். அதனால், நஷ்ட ஈடாக ரூ.3 லட்சம் கொடு' என்று மிரட்டினான். அச்சத்தின் காரணமாக, என் அம்மாவும் நண்பர் மதுவும் அவர்களிடம் ரூ.3 லட்சம் பணம் தந்தனர். அதன்பிறகும் என்னை விடவில்லை. மதினா என்ற பெண் என்னைத் தொடர்புகொண்டு, “"திவ்யா மீது நடவடிக்கை எதுவும் எடுத்தால் நீங்கள் உயிருடன் இருக்கமாட்டீர்கள்'’என்று கடுமையாகப் பேசினாள். திவ்யாவின் நடத்தை எனக்கும் என் அம்மாவுக்கும் உயிர் பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மிரட்டி வாங்கிய பணத்தை மீட்டுத் தரவேண்டும்' என்பதுதான் மேத்யூ அளித்திருக்கும் புகார்.

"என் ஒரிஜினல் பெயரைப் போட்டுவிடாதீர் கள்...'’என்ற நிபந்தனையுடன் நம்மிடம் பேசிய திவ்யா, ""மேத்யூ கொடுத்த புகாரைப் படித்துப்பார்த்த போலீஸ் அதிகாரி சிரித்தேவிட்டார். அந்த அளவுக்கு அந்தப் புகாரில் பொய் மட்டுமே இருந்தது. அவன் ஒரு டாக்டர் என்பதால், பல பெண்களின் வாழ்க் கையில் விளையாடிவிட்டான். அவனுக்கு என் மூலமாவது தண்டனை கிடைக்கவேண்டும் என்பதற்காகத்தான், ஒரு பெண்ணாக இருந்தும் அலைச்சலைப் பொருட்படுத்தாமல் நீதி கேட்டுப் போராடுகிறேன்''’என்றார்.

பப் வரை போகவைத்திருக்கிறது இவர்களின் முகநூல் பழக்கம். விடுதியில் ஒரே அறையில் தங்கி யிருக்கிறார்கள். பிளாட்டில் ஒன்றாக வாழ்ந்திருக் கிறார்கள். உண்மைக் காதல் இல்லையென்பதால், கசந்துபோனது அந்தப் போலி வாழ்க்கை. தற்போது, ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்துள்ளனர். இதெல் லாம் என்ன கலாச்சாரமோ?

-ராம்கி