தேர்தல் வந்துவிட்டால் அரசியல்வாதிகள் தும்மலைக்கூட ஆதாயத்தோடுதான் வெளிப்படுத்துவார்கள். மாவட்டந்தோறும் கொரோனா ஆய்வுக்கூட்டம் எனும் பெயரில், சட்டமன்றத் தேர்தலுக்கான வேலையைத் துவங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சிவகங்கை மாவட்டத்தில் ""7 உட்பிரிவுகளையும் உள்ளடக்கியவர்கள் “"தேவேந்திரகுல வேளாளர்'’’என்று அழைத்திட மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யப்படும்'' என்று அறிவித்துள்ளார்.

cm

பள்ளர், குடும்பர், வாதிரியார், தேவேந்திர குலத்தான், காலடி, பண்ணாடி, மூப்பன் என்றழைக்கப்படும் 7 சாதிகளை ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிடவேண்டும் என்பது, இச்சமூக மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் "தேவேந்திர குலவேளாளர்' என்ற அரசாணை வெளியிட ஊராட்சித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்ட அதேவேளையில்... "இக்குழுவின் அறிக்கை கிடைக்கப் பெற்றதும், அரசு தக்க நடவடிக்கை எடுக்கும்'’என்று கடந்த வருடம் பிப்ரவரி 27-ந் தேதி அறிவிப்பு அரசு சார்பில் வெளியிடப்பட்டது. ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையிலான குழு இருமுறை கூடியது. 2-வது முறையாக கருத்து கேட்டது. அதன்பிறகு சட்டமன்றத் தேர்தல் வரும் காலத்தில் சிவகங்கையில் இந்த அறிக்கையை வாசித்துள்ளார். ஆனால், "இது எங்களை ஏமாற்றும் வேலை' என்கின்றனர் அந்த சமூகத்து மக்கள்.

"புதிய தமிழகம்' கட்சியின் முகநூல் பிரிவு பொறுப் பாளர் முனியசாமியோ, “""முதல்வருடைய அறிவிப்பில், 7 உட் பிரிவுகளைச் சார்ந்த வர்கள் இனி "தேவேந் திரகுல வேளாளர்' என்று பெயரிடப்பட்டா லும், தற்போதைய சமூக, பொருளாதார நிலையைக் கணக்கில் கொண்டு பட்டியல் வகுப்பிலேயே தொடரவும் ஹன்ஸ்ராஜ் வர்மா குழு பரிந்துரைத்திருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். தற்போதைய சமூக, பொரு ளாதார நிலையைக் காரணம்காட்டி பட்டியல் வகுப்பில் தொடர பரிந்துரை செய்திருப்பது எந்த விதத்திலும் ஏற்புடைய தல்ல. இப்போதும்கூட இதை தேர்தலுக்காகத்தான் முதல்வர் சொல்லியிருக்கிறார். பி.ஜே.பி. மாநில தலைவர் எல்.முருகன் முன்பு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவராக இருந்தபோது, இந்த கோரிக்கையை முன்வைத்த போது, தமிழக அரசிட மிருந்து பரிந்துரை வந்தாலே, அதனை நிறைவேற்றித் தர நான் உறுதியளிக்கிறேன் என்றார். ஆனால், தமிழக அரசு ஒரு ஸ்டெப்பும் எடுக்கவில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் புதிய தமிழகத்தை கூட்டணியில் சேர்க்கவேண்டும் என்பதற்காக, உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுகிறோம் என்று சொல்லி, அ.தி.மு.க. கூட்டணியில் சேர்த்தார்கள். ஆனால், சொன்னபடி செய்யவில்லை. இப்போது சட்டமன்றத் தேர்தல் வருகிறது என்பதால் எங்களை ஏமாற்றவே முதல்வர் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்''’என்கிறார் அவர்.

Advertisment

cm

விருதுநகர் தொகுதி எம்.பி.மாணிக்கம் தாகூர், ""தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றவேண்டும். மத்திய சமூக நீதித்துறை இதில் தலையிடவேண்டுமென கோரிக்கை வைத்தார். அப்போது "தமிழக அரசிடமிருந்து இது வரை எந்த கோரிக்கையும் வரவில்லை' என மத்திய அரசு தெரிவித்தது. இப்போது தேர்தல் வருகிறது. தென்மாவட்டங்களில் எங்கள் சமூகத்தினருக்கு கணிசமான வாக்கு வங்கி இருப்பதால், எடப்பாடி அரசாங்கம் தேவேந்திரகுல வேளாளர் என பெயர் மாற்றத்திற்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இன்னும் எங்களை எஸ்.சி. பட்டியலில் வைத்திருப்பதாக சொல்வது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. பட்டியல் இன வெளியேற்றமே எங்களது கோரிக்கை'' என்கின்றனர் விளாத்திக்குளம் புதூர் சிவசெல்வமும், கரிமூட்டம் தொழிலாளியான வெம்பூரை சேர்ந்த சிங்கராஜும்.

அ.தி.மு.க.வுடன் இணக்கம் காட்டிவரும் "புதிய தமிழகம்' கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, ""தேவேந்திரகுல மக்களுடைய தற்போதைய மோசமான சமூக, பொருளாதார நிலையே அவர்களை பட்டியல் வகுப்பில் சேர்த்ததால் தான். இந்தச் சமூகத்தில் பிறந்து, உலகெங்கும் இம்மக்கள் வாழக்கூடிய இடங்களுக்கெல்லாம் கடந்த 40 ஆண்டுகாலமாக பயணம் செய்து, அவர்களுடைய வாழ்க்கை நிலையைத் துல்லியமாகத் தெரிந்து வைத்திருக்கிற காரணத்தினால் தமிழக முதல்வரை மீண்டும் கேட்டுக்கொள் கிறேன், பட்டியல் மாற்றமில்லாத பெயர் மாற்றம் தேவேந்திரகுல வேளாளர் மக்களுக்கு முழு பலனைத் தராது. பெயர் மாற்றத்தோடு நிறுத்திக்கொண்டு பட்டியலில் நாங்கள் தொடரும் நிலை ஏற்படின், எங்கள் போராட்டத்தையும் தொடரத்தான் வேண்டும் என்றே கருதுகிறேன்''’என அறிவித்தார்.

Advertisment

இதேவேளையில், எப்படி அவர்களுக்கு "தேவேந்திரகுல வேளாளர்' என அழைக்க மத் திய அரசுக்கு பரிந்துரை செய்தார் முதலமைச்சர்? அவர் இந்த முடிவை பரிசீலனை செய்ய வேண்டுமென மதுரையில் சனிக்கிழமையன்று வேளாளர், வெள்ளாளர் சமூகத்தினர் ஆர்ப்பாட் டம் நடத்தினார்கள். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை தீயிட்டு எரித்த அவர்கள், "எங்களது குலப் பெயரை மற்றவர்களுக்கு தாரை வார்க்காதே' என முழக்கமிட்டனர். "வெள்ளாளர் முன்னேற் றக் கழகம்' என்ற அமைப்பின் சார்பில் திருச்சியில் ரயில் மறியல் போராட்டமும் நடந்தது.

"பெயர் மாற்ற அறிவிப்பு அ.தி.மு.க.வுக்கு ஆதாயம் தரப்போகிறதா… இல்லை பூமராங் காக மாறி அவர்களையே தாக்கப்போகிறதா' என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

-நாகேந்திரன்

படங்கள்: விவேக்