திருவண்ணாமலை மாவட்டம், ஜம்னாமத்தூர் ஒன்றியம் ஊர்கவுண்டன் ஊராட்சிக்கு உட்பட்டது குட்டூர் கிராமம். இங்கு 50-க்கும் அதிக மான பழங்குடியினக் குடும்பங்கள் வசிக்கின்றன. குட்டூர் கிராமத்தி லிருந்து ஊர்கவுண்டனூர் கிராமத்துக் குச் செல்லும் 1.5 கி.மீ ரோடு வழியாகவே பள்ளி, மருத்துவமனை, பேருந்துநிறுத்தம் போன்றவற்றுக்கு மக்கள் செல்லமுடியும். இது குண்டும்குழியுமாக இருந்ததால் பலகட்டப் போராட்டத்துக்குப் பிறகு, தமிழ்நாடு கிராமசாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ், புதிய சாலை அமைக்க 34 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தை செங்கம் நகர தி.மு.க. செயலாளர் அன்புவின் ஆதி கன்ஸ்ட்ரக் சன் நிறுவனம் எடுத்துள்ளது. இந்நிலையில், தரமில் லாமல் சாலை அமைக்கிறீர்களே நியாயமா என கேள்வி கேட்ட மக்களை மிரட்டியதாக அந்நிறுவனத்தின் மீது புகார் எழ, இதுதொடர்பாகவே இரண்டு கட்சிகளும் புகார் தந்துள்ளன.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கம் வட்டாரச் செயலாளர் சர்தார் நம்மிடம், “"அரசு விதிப்படி ரோடு போடவில்லை. கைகளால் நோண்டினாலே மண்மண்ணாக வருகிறது என, கிராம மக்கள் ரோடுபோட்ட கல்லாத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் சிவானந்தத்திடம் கேள்விகேட்டுள்ளனர். "என்னையே கேள்வி கேட்கறீங்களா? எங்க ஊர் வழியாத்தான் நீங்க வரணும், போகணும் மனசுல வச்சிக்குங்க'ன்னு மிரட்டியதும், அவங்க பயந்துட்டாங்க. கிராமத்தில் பெரும்பாலானவர்கள் இடதுசாரிகள். அவர்கள் எங்களிடம் தகவல் சொல்ல, நேரில் சென்று பார்த்தபோது இரண்டு நாள் மழைக்கே ரோடு தாங்காது என்பது தெரிந்தது. மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து புகார் தந்தோம். 10 ஆண்டுகளுக்கு முன்பு சாலையே இல்லாத இக்கிராம மக்கள் ஒற்றையடிப் பாதையில் போய்வந்தனர். ரோடு போட வேண்டுமென எங்கள் கட்சி போராட்டங்கள் நடத்தியது. 8 ஆண்டுகளுக்கு முன்பு ரோடு போட இடம் அளவீடு செய்தனர். ரோடு போடும் பாதையிலிருந்த பொறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்திருந்த சிலர் சாலை போடுவதைத் தடுத்ததால் கிடப்பில் போடப்பட்டது. சாலை அமைக்கக் கோரி போராட்டம் செய்தோம்.
காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை அதி காரிகள் சமாதானம் செய்து, ஆக்ரமிப்பாளர்களை விரட்டிவிட்டதும், 7 ஆண்டுகளுக்கு முன்பு அ.தி. மு.க. ஆட்சியின்போது ஒப்பந்ததாரர் அ.தி.மு.க. பிரமுகர் ராஜு டெண்டர் எடுத்து ரோடு போட் டார். அந்த ரோடு மூன்றே மாதத்தில் குண்டும் குழியுமானது. ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுங்கள், சாலையை மீண்டும் போடுங்கள் என போராட்டம் நடத்தியபோது, "சாலை போடும் போதே பிரச்சினை செய்திருக்கவேண்டும், இப்போது ஒன்றும் செய்யமுடியாது' என்றார்கள் அதிகாரிகள். குண்டும் குழியுமான அந்த ரோட்டில் தான் கடந்த 7 ஆண்டுகளாக மக்கள் போய்வந்தார் கள். அந்த ரோட்டைத்தான் இப்போது போட் டுள்ளார்கள். இதுவும் தரமற்றதாக இருந்ததால் கேள்வி கேட்கிறோம். நாங்கள் கட்சிக்கு நிதி கேட்டோம், தரவில்லை என்பதால் மிரட்டுகிறார்கள் என புகார் தந்துள்ளார் தி.மு.க. பேரூர் செயலாளர் அன்பழகன்.
கம்யூனிஸ்ட்கள் மக்களிடம் நிதிவாங்கியே கட்சிக்கான செலவுகளைச் செய்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஜூன் மாதம் 20-ஆம் தேதி மாநிலச் செயலாளர் செங்கம் வந்தார். 16-ஆம் தேதி அன்பழகனைத் தொடர்பு கொண்டோம். அப்போது அவர் தி.மு.க.வில் பேரூர் செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருந்தார். கூட்டணிக் கட்சியை சேர்ந்தவர் என்பதால் வாழ்த்துத் தெரிவிக்க தொடர்புகொண்டு பேசும்போது "மாநிலச் செயலாளர் வருகிறார், ஏதாவது நிதி தரமுடியுமா?' எனக் கேட்டோம். நான் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நிறைய செய்துட்டனு தரமுடியாதுன்னு சொன்னார். அதன்பின் அவரிடம் நிதி பற்றி பேசவில்லை. நாங்கள் 50 ஆயிரம் கேட்டதாக அவர் நிரூபித்தால் நடவடிக்கைக்கு தயார். அவர் பொய்யான புகாரைத் தந்ததால் என்ன நடந்தது என்பதற்கான புகாரை நாங்களும் தந்துள்ளோம்''’என்றார்.
குற்றச்சாட்டு குறித்து செங்கம் தி.மு.க. பேரூர் செயலாளரான ஒப்பந்ததாரர் அன்பழகன், “"தரமான முறையில்தான் சாலை அமைத்திருக் கிறோம். கடப்பாரை வைத்து இடித்து அதைக் காட்டி டேமேஜ் எனச் சொல்கிறார்கள். செங்கத் துக்கு சி.பி.ஐ. மாநில செயலாளர் முத்தரசன் வந்த போது என்னிடம் 50 ஆயிரம் ரூபாய் நிதி கேட்டார் கள், நான் தரமுடியாது என சொல்லிவிட்டேன். அதனால் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்துகிறார் கள். மூன்றாவது முறையாக அதிகாரிகள் ஆய்வு செய்கிறார்கள், ரோடு அங்கேதான் உள்ளது. யார் வேண்டுமானாலும் வந்து ஆய்வு செய்யட்டும், அப்போது உண்மை தெரியவரும்''’என்றார்.
ஆய்வில் தரமற்ற ரோடு என்பது உறுதி யானால் ஒப்பந்ததாரரை பிளாக் பட்டியலில் வைக்க வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் சிக்குவார்கள். அதனால் அனைவரும் இணைந்து இந்தப் பிரச்சினையை முடிக்க திட்டமிட்டு பல வேலைகளைச் செய்கிறார்கள் என்கிறார்கள்.
இந்த விவகாரம், தி.மு.க. மீது கூட்டணிக் கட்சியான சி.பி.ஐ.க்கு கசப்பை ஏற்படுத்தியுள்ளது.
___________
விளக்கம்!
நக்கீரன் 2022, ஆகஸ்ட் 10-12 இதழில் வெளி யாகியுள்ள, “"பள்ளிக்குள் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவல்! கலைஞர் ஊரில் சர்ச்சை!'’என்ற தலைப்பில் வெளியாகியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதுபோல், வ.சோ. ஆண்கள் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்போ, மத, சாதி. அரசியல் இயக்கங்களோ ஊடுருவவில்லை. தலைமை ஆசிரியர் (பொறுப்பு) கருத்து தெரிவித்தபோது, எந்த விவகாரமாக இருந்தாலும் ஆடிட்டர்களிடம் கேட்க வேண்டும் என்று அவர் சொல்லவில்லை என்பதனை யும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நிதி நிர்வாகம் தவிர, வேறு எதிலும் ஆடிட்டர்கள் தலையிடுவதில்லை. பள்ளி நிர்வாகம் மாணவர்கள் நலனில் முழுமையான அக்கறையுடன் செயல்படுகிறது.
-செயலர்,
வ.சோ. ஆண்கள் அரசு உதவிபெறும் மேனிலைப்பள்ளி