"ஹலோ தலைவரே, வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நூற்றாண்டு விழாவிலும் சென்னைப் பல்கலைக்கழக 160-ஆவது பட்டமளிப்பு விழாவிலும் கலந்துக்குறதுக்காக தமிழகம் வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சர்ச்சைக்குரிய ஸ்பாட் ஆகிவிட்ட ராஜ்பவன்ல தங்கிட்டுப் போயிருக்காரே?''’
""சர்ச்சையில் சிக்கியுள்ள கவர்னர்கிட்டேயும் சகஜமா பேசிட்டுப் போயிருக்காரே ஜனாதிபதி.''
""பொது நிகழ்ச்சியில் கவர்னருடன் புன்னகை முகத்தோடு பேசி, அவருடன் சகஜமாக இருப்பதுபோல் காட்டிக்கிட்ட ஜனாதிபதி, கவர்னர் மாளிகையில் கவர்னரிடம் இறுக்கமாகவே நடந்துக்கிட்டாராம். கவர்னர் பன்வாரிலால் பத்தி வெளியான சர்ச்சைகளும் அவரைப்பற்றி போன புகார்களும்தான் இதுக்குக் காரணம்னு ராஜ்பவன் தரப்பிலேயே டாக் இருக்கு.''’
""இவ்வளவு சர்ச்சைகள் கிளம்பியும்கூட, கவர்னர் பன்வாரிலால் அந்த சர்ச்சைகளுக்கு விதைபோட்ட விருதுநகர் மாவட்டத்துக்குப் போகப் போறாராமே?''’
""உண்மைதாங்க தலைவரே, நிர்மலாதேவி விவகாரம் வெடித்த தேவாங்கர் கல்லூரி விருதுநகர் மாவட்ட அருப்புக்கோட்டையில்தான் இருக்கு. மாணவிகளுக்கு வலைவீசப்பட்டதால் அந்தப் பகுதி மக்கள் ராஜ்பவன் மீதும் கடும் கோபத்தில் இருக்காங்க. இது தொடர்பான விசாரணைகள் நடந்துகொண்டிருக்கும் நேரத்தில், வர்ற 9, 10 தேதிகள்ல "தூய்மை இந்தியா' திட்ட செயல்பாடுகளுக்காக விருதுநகர் மாவட்ட சுற்றுப் பயணத்துக்குத் தயாராகிக்கிட்டு இருக்கார் கவர்னர். ராஜ்பவன் அதிகாரிகள் பலரும், "இப்போதைக்கு விருதுநகர் மாவட்டத்துக்கு நீங்க போறது சரியில்லைன்னு எடுத்துச் சொல்லியிருக்காங்க. ஆனால் கவர்னரின் செயலாளரான ராஜகோபாலோ, "மத்தவங்க கோபத்துக்கும் விமர்சனத்த
"ஹலோ தலைவரே, வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நூற்றாண்டு விழாவிலும் சென்னைப் பல்கலைக்கழக 160-ஆவது பட்டமளிப்பு விழாவிலும் கலந்துக்குறதுக்காக தமிழகம் வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சர்ச்சைக்குரிய ஸ்பாட் ஆகிவிட்ட ராஜ்பவன்ல தங்கிட்டுப் போயிருக்காரே?''’
""சர்ச்சையில் சிக்கியுள்ள கவர்னர்கிட்டேயும் சகஜமா பேசிட்டுப் போயிருக்காரே ஜனாதிபதி.''
""பொது நிகழ்ச்சியில் கவர்னருடன் புன்னகை முகத்தோடு பேசி, அவருடன் சகஜமாக இருப்பதுபோல் காட்டிக்கிட்ட ஜனாதிபதி, கவர்னர் மாளிகையில் கவர்னரிடம் இறுக்கமாகவே நடந்துக்கிட்டாராம். கவர்னர் பன்வாரிலால் பத்தி வெளியான சர்ச்சைகளும் அவரைப்பற்றி போன புகார்களும்தான் இதுக்குக் காரணம்னு ராஜ்பவன் தரப்பிலேயே டாக் இருக்கு.''’
""இவ்வளவு சர்ச்சைகள் கிளம்பியும்கூட, கவர்னர் பன்வாரிலால் அந்த சர்ச்சைகளுக்கு விதைபோட்ட விருதுநகர் மாவட்டத்துக்குப் போகப் போறாராமே?''’
""உண்மைதாங்க தலைவரே, நிர்மலாதேவி விவகாரம் வெடித்த தேவாங்கர் கல்லூரி விருதுநகர் மாவட்ட அருப்புக்கோட்டையில்தான் இருக்கு. மாணவிகளுக்கு வலைவீசப்பட்டதால் அந்தப் பகுதி மக்கள் ராஜ்பவன் மீதும் கடும் கோபத்தில் இருக்காங்க. இது தொடர்பான விசாரணைகள் நடந்துகொண்டிருக்கும் நேரத்தில், வர்ற 9, 10 தேதிகள்ல "தூய்மை இந்தியா' திட்ட செயல்பாடுகளுக்காக விருதுநகர் மாவட்ட சுற்றுப் பயணத்துக்குத் தயாராகிக்கிட்டு இருக்கார் கவர்னர். ராஜ்பவன் அதிகாரிகள் பலரும், "இப்போதைக்கு விருதுநகர் மாவட்டத்துக்கு நீங்க போறது சரியில்லைன்னு எடுத்துச் சொல்லியிருக்காங்க. ஆனால் கவர்னரின் செயலாளரான ராஜகோபாலோ, "மத்தவங்க கோபத்துக்கும் விமர்சனத்துக்கும் பயந்தா நிர்வாகம் பண்ணமுடியுமா'ன்னு கவர்னரை பயணத்துக்கு சம்மதிக்க வச்சிருக்காராம்.''’
""ராஜ்பவன் மட்டுமல்ல. கோட்டை, காவல்துறைன்னு பல இடங்களிலும் ஒருசில அதிகாரிகளின் அதிகாரம் கொடிகட்டிப் பறக்குது போலிருக்கு''’
""சரியா சொன்னீங்க தலைவரே, உளவுத்துறைத் தலைவர் சத்யமூர்த்தி, சீக்ரெட் பயணமா 10 நாட்கள் ஐரோப்பிய நாடுகளுக்குப் போனதையும் அது தொடர்பாகக் காவல்துறை தரப்பிலேயே சர்சைகள் கிளம்புவதையும் நக்கீரன்தான் வெளியிட்டிருந்தது. "சீக்ரெட்டா சத்தியமூர்த்தி போன தகவல், எப்படி வெளியில் போச்சு'ன்னு கோட்டைக்குள்ளேயே விசாரணைகள் தொடங்கியிருக்கு. அவர் பயணம் பத்தி மேலும் நாம் விசாரிச்சப்ப, அவரது 10 நாள் பயணம், இப்ப ஒருமாத காலத்துக்கு நீட்டிக்கப்பட்டிருக்குன்னும், அங்கே முதல்வர் எடப்பாடி, சசிகலா தம்பி திவாகரன் தொடர்பான சில டீலிங்குகளும் சுவிஸ் வங்கி தொடர்பான சில வேலைகளும் நடக்குதுன்னும் உளவுத்துறையிலேயே பேச்சு அடிபடுது. சம்பந்தப்பட்ட தரப்புகள் வாய் திறக்காதவரை மர்மங்கள் விலகாது.''’
""தேசிய அளவில் 3-வது அணி அமைக்க முயற்சிக்கும் மம்தா, சந்திரசேகர ராவ் போன்றவர்களுடன் தி.மு.க. நெருங்குவதால் தனது கூட்டணியில் இருந்து காங்கிரஸையும் சிறுத்தைகள் கட்சியையும் நீக்குவதற்கான முயற்சியில் இருக்குதுனும் அது தெரிஞ்சதால்தான் சிறுத்தைகள் திருமா, டெல்லிக்கு ஓடிப்போய் ராகுலைப் பார்த்தாருன்னும் அரசியல் வட்டாரத்தில் விவாதங்கள் ஓடிய நிலையில், மூன்றாவது அணிங்கிறது பா.ஜ.க.வின் "பி' டீம்னும் விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில், பா.ஜ.க.விலிருந்து வெளியேறிய மோடி எதிர்ப்பாளர்கள் யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா இருவரும் சென்னைக்கு வந்து கலைஞரையும் மு.க.ஸ்டாலினையும் சந்திருச்சிருக்காங்களே...?''’
""ஆமாங்க தலைவரே, தன் கூட்டணியில் இருக்கும் எந்தக் கட்சியையும் தி.மு.க. இழக்கத் தயாரா இல்லை. கூடுதலா கட்சிகளை சேர்க்கணும். அதே நேரத்தில் சீட் ஷேரிங்கில் கவனமா இருக்கணும்ங்கிறதுதான் தி.மு.க. கணக்கு. சந்திரசேகரராவ் அண்மையில் சென்னை வந்து ஸ்டாலினை சந்திச்சதுபோல், அடுத்த வாரம் மம்தா சென்னைக்கு வந்து ஸ்டாலினை சந்திக்க இருக்கார். தேர்தல் நெருக்கத்தில் இந்த அணியில் காங்கிரஸும் இருக்கும்னு எதிர்பார்க்கப்படுது. அதேபோல் திருமா, ராகுலை சந்திச்சது, ’"தேசம் காப்போம்'ங்கிற தனது மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கத்தான்...''’
""ஆமாம்பா அதுபத்தி நாம போனமுறையே பேசிக்கிட்டோமே. அதேசமயம் விடுதலைச் சிறுத்தைகளை முன்னிறுத்தி தமிழகத்தில் ஒரு மூன்றாவது அணியை அமைக்க கம்யூனிஸ்ட் கட்சிகள் திட்டமிட்டிருப்பதாவும் செய்தி வருது. அதனால்தான் அந்தக் கட்சியின் இவ்வாண்டுக்கான விருதுப் பட்டியலில் தி.மு.க.வினர் பெயரையே சேர்க்கலைன்னும் சொல்றாங்களே...''’’
""தலைவரே, ஒவ்வொரு ஆண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, அரசியல் மற்றும் சமூக-கலைத்துறைகளில் சிறந்துவிளங்கும் முக்கியப் புள்ளிகளுக்கு விருது வழங்கி கௌரவிப்பது வழக்கம். இதுக்கு முன்பு கலைஞர், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, புதுவை முதல்வர் நாராயணசாமி போன்றவர்களுக்கு சிறுத்தைகள் கட்சியால் விருது கொடுக்கப்பட்டிருக்கு. அந்த வகையில் இந்த வருடம் "அம்பேத்கர் சுடர்' விருதை கேரள முதல்வர் சி.பி.எம். பினராய் விஜயனுக்கும், "காமராஜர் கதிர்' விருதை காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசருக்கும் கொடுக்குது. பெரியார் ஒளி விருது ஆந்திராவின் இடதுசாரி புரட்சிப் பாடகர் கத்தாருக்கு தரப்படுது. கம்யூனிஸ்ட், காங்கிரஸ் தலைவர்களுக்கு விருது அறிவிக்கப்பட்ட நிலையில், தி.மு.க.வில் ஸ்டாலின் போன்ற முன்னணியினருக்கு எந்த விருதும் இல்லையேங்கிற அரசியல் கண்ணோட்டமும் இருக்குது. அதேசமயம் சிறுத்தைகளின் விருதுப் பட்டியலில், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் இருக்காரு. இவர் கலைஞருக்கு நெருக்கமானவர். தி.மு.க.வின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் போராட்டங்களிலும் பங்கேற்கும் திராவிடக் கலைஞர். அதே நேரத்தில் காங்கிரஸ் தலைமையில் தேசிய அளவில் அமையும் அணிதான் பா.ஜ.க.வை எதிர்கொள்ளக்கூடியதாகத்தான் இருக்கும்னும், அதற்கேற்ப மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்க இடதுசாரிகளால்தான் முடியும்னு திருமாவளவனும் அவரது கட்சி நிர்வாகிகளும் உறுதியா இருக்காங்க.''’
""தி.மு.க. கூட்டணியில் வி.சி.க.வுக்கு இடமில்லாமல் போனால் பா.ம.க. வரப்போகுதுன்னு ஒரு தகவல் வர, அதன் பின்னாலேயே அதை மறுத்து பா.ம.க. தரப்பின் அறிக்கையும் வந்துச்சே?''’
""காங்கிரஸ், வி.சி.க.வுக்குப் பதிலாக பா.ம.க.வும், த.மா.கா.வும் தி.மு.க. கூட்டணியில் சேரப்போகுதுங்கிற தகவலும் பரவுச்சி. இது தைலாபுரம்வரை போக, அதிர்ந்துபோன டாக்டர் ராமதாஸ், "நாம்தான் தி.மு.க., அதி.மு.க. இந்த ரெண்டு திராவிடக் கட்சிகள் கூடவும் கூட்டணி இல்லைன்னு பகிரங்கமாவே அறிவிச்சிட்டோமே. பிறகு எப்படி இப்படி ஒரு செய்தி கிளம்புது? தி.மு.க. தரப்பே இதைக் கிளப்புதா?'ன்னு கட்சிப் புள்ளிகளிடம் கேட்டிருக்கார். பின்னர் அதுக்கு மறுப்பு அறிக்கையைக் கட்சியின் து.பொ. செயலாளர் பொங்கலூர் மணிகண்டன் மூலம் கொடுக்க வச்சிருக்காரு.''’
""சரிப்பா, தி.மு.க.வை மையமா வச்சி சர்ச்சை புயல் வீசும் நிலையில், தி.மு.க.வுக்குள்ளும் சலசலப்பு கேட்குதே?''’’
""தலைவரே, கட்சியின் பலவீனத்தைக் கண்டுபிடிக்க, தி.மு.க. தலைமை, மாவட்ட வாரியாக களஆய்வுக் கூட்டத்தை நடத்தியது பற்றி அவ்வப்போது விரிவாகவே நக்கீரன் எழுதியிருக்கு. நாமும் இதுபத்தி நிறையவே பேசியிருக்கோம். இந்த கூட்டத்தில் பேச வாய்ப்பில்லாதவர்களும், பகிரங்கமாக மனம் திறக்க தயங்குபவர்களும் பயன்படுத்திக்கொள்ள புகார்ப்பெட்டியும் கூட வைக்கப்பட்டிருந்தது. அப்படி இருந்தும் எங்கள் புகார், தலைமையின் கவனத்துக்குப் போனதா? பெரிய நடவடிக்கைகள் இல்லையே என்கிற வகையான முணுமுணுப்புகள் இன்னும் கேட்டபடிதான் இருக்கு. கள ஆய்வில் மாவட்ட நிர்வாகத்தை விமர்சனம் பண்ணி பேச நினைச்ச பலபேருக்கு வாய்ப்பளிக்கப்படலையேங்கிற குமுறலும் இருக்கு. இந்த நிலையில் 11-ந் தேதி முதல் இளைஞர் அணி, மகளிர் அணி, தொண்டர் அணி, தொழிலாளர் அணி உட்பட தி.மு.க.வில் இருக்கும் அணிகளுக்கான ஆய்வுக் கூட்டங்களை நடத்த இருக்கிறது. இதில் பேச்சாளர்களின் மனநிலையை அறிய, அவர்களுக்கும் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. தி.மு.க.ன்னாலே பேச்சாளர்கள் பலம் முக்கியமாச்சே.''’
""நானும் ஒரு தகவலைச் சொல்றேம்ப்பா... கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது ஜெயிச்சாகணும்னு பா.ஜ.க. கங்கணம் கட்டிக் களத்தில் நிக்கிது. முடிஞ்சவரை சகல அத்துமீறல்களையும் அங்கே அது அரங்கேற்றிக்கிட்டிருக்கு. இந்த நிலையில் மத்திய உளவுத்துறை, அங்கே "பா.ஜ.க.வின் சக்ஸஸ் ரேட் சரியில்லை'ன்னு ரிப்போர்ட் கொடுத்து, பா.ஜ.க. தரப்பின் பல்ஸ் ரேட்டை எகிற வச்சிருக்கு.''