தீக்குளித்த தி.மு.க. தொண்டர் மரணம்! சர்ச்சையில் மதுரை மா.செ.!

aa

துரை மாநகர தி.மு.க. செயலாளர் கோ. தளபதி வீட்டின் முன், தி.மு.க. தொண்டரான மானகிரி கணேசன் தீக்குளித்து இறந்தது மதுரையையே பரபரபக்க வைத்துள்ளது.

கணேசன் தீக்குளித்த அடுத்த சில நிமிடங்களில் செய்தி தீயாய்ப் பரவி அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் போலீசார் யாரையும் பார்க்கவிடவில்லை. கணேசனின் மகன் அண்ணாதுரையிடம் பேசினோம்.

mm

"தி.மு.க.வின் உண்மைத் தொண்டனின் நிலைமை இதுதான் சார். பாட்டன், முப்பாட்டன், அப்பன் என தி.மு.க. ரத்தம் மட்டுமே ஓடிய குடும்பம் எங்கள் குடும்பம். என் பெயர் அண்ணாதுரை. என் அண்ணன் பெயர் பெரியார். தங்கை பெயர் மணியம்மை. மதுரை மானகிரி என்றாலே எங்கப்பா கணேசன்தான் நினைவுக்கு வரும். தேர்தல் நேரத்துல இரவு பகலா வேலை பார்ப்பார். வீட்டை யே கவனிக்கமாட் டார். யாராவது கலைஞரையோ, தி.மு.க. கட்சியையோ தப்பா பேசினால் சண்டைக்கு போய் ஜெயிலுக்கெல்லாம் போயிருக்கார்.

சட்டசபையில் ஆளுனர் ரவி, தலைவர்கள் பெயரைப் படிக்காமல் புறக்கணித்ததைக் கண்டித்தும், தமிழக அரசின் திட்டங்களுக்கு

துரை மாநகர தி.மு.க. செயலாளர் கோ. தளபதி வீட்டின் முன், தி.மு.க. தொண்டரான மானகிரி கணேசன் தீக்குளித்து இறந்தது மதுரையையே பரபரபக்க வைத்துள்ளது.

கணேசன் தீக்குளித்த அடுத்த சில நிமிடங்களில் செய்தி தீயாய்ப் பரவி அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் போலீசார் யாரையும் பார்க்கவிடவில்லை. கணேசனின் மகன் அண்ணாதுரையிடம் பேசினோம்.

mm

"தி.மு.க.வின் உண்மைத் தொண்டனின் நிலைமை இதுதான் சார். பாட்டன், முப்பாட்டன், அப்பன் என தி.மு.க. ரத்தம் மட்டுமே ஓடிய குடும்பம் எங்கள் குடும்பம். என் பெயர் அண்ணாதுரை. என் அண்ணன் பெயர் பெரியார். தங்கை பெயர் மணியம்மை. மதுரை மானகிரி என்றாலே எங்கப்பா கணேசன்தான் நினைவுக்கு வரும். தேர்தல் நேரத்துல இரவு பகலா வேலை பார்ப்பார். வீட்டை யே கவனிக்கமாட் டார். யாராவது கலைஞரையோ, தி.மு.க. கட்சியையோ தப்பா பேசினால் சண்டைக்கு போய் ஜெயிலுக்கெல்லாம் போயிருக்கார்.

சட்டசபையில் ஆளுனர் ரவி, தலைவர்கள் பெயரைப் படிக்காமல் புறக்கணித்ததைக் கண்டித்தும், தமிழக அரசின் திட்டங்களுக்கு ஒப்புதல் கையெழுத்துப்போடாமல் இருந்ததற்கு எதிர்ப்பாகவும், ஆளுநரை மாற்றவேண்டும், இல்லையென்றால் கலைஞர் சிலைமுன் தீக்குளிப்பேன் என்று தேதி குறித்து போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினார். சும்மா பரபரப்புக்குத்தான் போஸ்டர் என நினைக்கை யில், குறிப்பிட்ட நாளில் கலைஞர் சிலைமுன் மண்ணெண்ணை ஊற்றி தீவைத்துக்கொள்ள, அங்கிருந்தவர்கள் காப்பாற்றி மருத்துவ மனையில் சேர்த்தனர்.

அப்போது அவரை நலம் விசாரிக்க கட்சிக்காரர்கள் ஒருவர்கூட வரவில்லை. புண்ணால் மிகவும் கஷ்டப்பட்டார். தீக்காயத்தின் எரிச்சலைத் தாங்கிக்கொண்டு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளில் மாவட்டச் செயலாளரின் உத்தரவுப்படி நலத்திட்ட உதவிகள் செய்தார். அன்றே தளபதியிடம் "என்னை நலம் விசாரிக்கக்கூட கட்சிக்காரர்கள் வராதது ஏண்ணே?' என்று கேட்டிருக்கிறார். மானகிரி வார்டில் தற்போதைய கவுன்சிலர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுகிறார். அதுவும் மக்களுக்குத் தெரியும்படி செய்கிறார் என்று சொல்ல, இருவருக்கும் வாக்குவாதம் வந்திருக்கு.

திடீரென ஆகஸ்ட்-29 அன்று தனது கட்சி உறுப்பினர் அட்டை, கட்சிப் போராட் டங்களில் கலந்துகொண்ட பேப்பர் செய்திகள், கலைஞர், ஸ்டாலினோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை எடுத்துக்கொண்டு தளபதியைப் பார்க்க அவரது வீட்டிற்குச் சென்றார். "இதையெல்லாம் ஏன் எடுத்துவந்து என்கிட்ட காண்பிக்கிற?' என்று கிண்டல் பண்ணி திட்டியிருக்கிறார்.

mm

இதில் மனமுடைந்த அப்பா, வேகவேகமாக வெளியில் போய், கேனோடு தளபதி வீட்டு வாசல்முன் தன் தலைமீது மண்ணெண்ணெய் ஊற்றி தீயைப் பற்றவைத்து, "தளபதி ஸ்டாலின், கலைஞரின் உண்மைத் தொண்டன்' என்று கத்திக்கொண்டே கீழே விழுந்து கிடந்திருக்கிறார்.

நான் டிரைவரா இருக்கிறேன். என் அண்ணன் கூலிவேலை பார்க்கிறார். வீடு முழுக்க கலைஞர், ஸ்டாலின் படங்கள்தான். இரண்டு முறை கவுன்சிலருக்கு நிற்க முயன்றார். தளபதி சீட் கொடுக்கலை. சமீபத்தில் தீக் குளித்தபோது ஒருவரும் வந்து பார்க்க வில்லையே, மாவட்டச் செயலாளர்கூட கேட்கவில்லையே என்ற வருத்தம்தான்''’என்றார் பரிதாபமாக.

இந்த சம்பவம் குறித்து தி.மு.க. மாவட்டச் செயலாளர் கோ.தளபதியிடம் கேட்டபோது “"மானகிரி கணேசன் கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லை. கோரிக்கை மனுவுடன் வந்து என்னைச் சந்தித்தார். செய்து தருகிறேன் என கூறி அனுப்பி வைத்தேன். இருந்தும் வெளியே சென்று தீக்குளித்தது அதிர்ச்சியாக உள்ளது. ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம்''’என்றார்

இந்த தீக்குளிப்பு சம்பவம் தொடர்பாக திருப்பரங்குன்றம் காவல்துறையினர், "வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறோம். மேற்கொண்டு எதுவும் கேட்காதீர் கள்''’என்று முடித்துக்கொண்டனர். நீதித்துறை நடுவர், மானகிரி கணேசனிடம் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளார். மதுரை அரசு மருத்துவமனை தீக்காய தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு சென்றோம். பத்திரிகையாளர் உட்பட யாரையும் அனுமதிக்கவில்லை.

ss

கணேசனின் உறவினர் ஒருவரிடம் "நீங்கள் போய் பார்த்தீர்களா?' என்றதும் “"யாரையுமே பார்க்க விடலை. அந்த வார்டி லுள்ள மற்ற நோயாளிகளையும் வெளியேற்றி விட்டனர். சொந்த மகனையே செல்போனை பிடுங்கி வைத்துவிட்டுதான் உள்ளே அனுப்பி னார்கள்'’என்றார்.

சற்றுநேரத்தில் வந்த அண்ணாதுரை, "5 நிமிடம் அப்பாவைப் பார்த்துப் பேசினேன். பேரனை பார்த்துக்கொள். கட்சி நம்மைக் கை விடாது. சென்னைல தலைவரைப் போய் பாருடா” என்றார். “நான் செத்தா தி.மு.க. கொடி யை போர்த்துங்க. அதுபோதும்’ என்றார். இப்ப வரைக்கும் கட்சிக்காரர் ஒருத்தர்கூட பார்க்க வரலை. யாரையும் பார்க்க போகக்கூடாது என்று தளபதி கட்டளையாம்''’என்று கண் ணீருடன் பேசினார். உள்ளுக்குள் கணேசனுக்கு தன் முடிவு தெரிந்திருக்கிறதுபோல! சொன்னது போலவே அண்ணாதுரை பார்த்துவந்த சற்றுநேரத்துக்கெல்லாம் இறந்துவிட்டார்.

தளபதி, அண்ணாதுரை கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லையென்கிறார். ஆனால் மதுரை ஆவின் தொழிற்சங்க கௌரவத் தலை வர் பொறுப்பில் இருப்பதாக உடன்பிறப்புகள் சொல்கின்றனர். மானகிரி கணேசன் சமீபத்தில் முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் மேலூர் தொகுதி வேட்பாளராக நிற்க விரும்பியதையும், ஆளுநருக்கு எதிரான போராட்டத்தில் தளபதி சொல்லியிருந்தால் தீக்குளித் திருக்கமாட்டேன் என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

மானகிரி கணேசன் மரணம், தளபதியைக் குறித்து சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

nkn040924
இதையும் படியுங்கள்
Subscribe