கொடநாடு வழக்கு திடீரென்று கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதற்கு என்ன காரணம் எனக் கேட்டபோது, தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர், தி.மு.க.வின், சென்னை உயர்நீதிமன்ற சீனியர் வழக்கறிஞர் மற்றும் மாநில உளவுப் பிரிவைச் சேர்ந்த சீனியர் அதிகாரி ஆகியோரை கைகாட்டுகிறார்கள் கொடநாடு வழக்கைப் பற்றி நன்கு அறிந்தவர்கள்.
"கொடநாடு வழக்கில் பிரிக்க முடியாத அங்கம் சஜீவன். கொடநாடு கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் கொள்ளையடித்த பொருட்களோடு கூடலூருக்குப் பக்கத்தில் உள்ள நாலுகாணி செக்போஸ்டில் போலீசார் கையில் சிக்கியபோது, சஜீவனின் தம்பி சுனில்தான் அவர்களை போலீஸின் பிடியிலிருந்து மீட்டு கேரளாவுக்கு அனுப்பி வைத்தான். கொடநாட்டில் சசிகலாவுக்கு நெருக்கமாக இருந்து ஜெ.வின் டிரைவர் கனகராஜ் மூலம் கொட நாட்டில் கொள்ளை யடிக்க இருமுறை திட்டம் தீட்டி யவன் சஜீவன். இவனை இது வரை கொட நாடு வழக்கை விசாரிக்கும் போலீசார் விசாரணைக்கு கூப்பிடவே யில்லை. எடப்பாடி ஆட்சியிலும் சரி, தி.மு.க. ஆட்சியிலும் சரி, சஜீவனைத் தொட போலீசார் துணியமாட்டேன் என்கிறார்கள்.
இது ஏன் என கொடநாடு வழக்கை விசாரிக் கும் அதிகாரிகளைக் கேட்டால், "நாங்கள் சஜீவனை விசாரிக்க அனுமதி வேண்டும் என மாநிலத் தலைமையகத்திற்கு, அவருக்கு எதிரான குற்றங் களை வகைப்படுத்தி, ஆவணங்களை அனுப்பி விட்டோம். சஜீவனை விசாரிக்க இன்னமும் அனுமதி கிடைக்கவில்லை' என்கிறார்கள். காவல்துறைதான் இப்படியென்றால், அரசின் வனத்துறையும் சஜீவன்மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை'' என்கிறார்கள் கூடலூர் பகுதி வனத்துறை ஊழியர்கள்.
"சஜீவன் கூடலூர் பகுதிக்குப் பக்கத்தில் சாமியார்தோப்பு என்கிற தனியார் தோப்பை விலைக்கு வாங்கினான். அந்த இடத்தைச் சுற்றிலும் வனத்துறைக்குச் சொந்தமான நிலங்களில் தேக்கு, ஈட்டி போன்ற மரங்கள் அடங்கிய காடு இருந்தது. அங்கு ஓடிக்கொண்டிருந்த ஆற்றின் நடுவே தற்காலிகமாக பாலம் அமைத்து மரங்களைக் கடத்தினான் சஜீவன்.
எடப்பாடி ஆட்சியில் சசிகலா, எடப் பாடி, வேலுமணி ஆகியோரின் நண்பர்களு டன் இருந்த சஜீவனின் இந்த அடாத செய லைக் கண்டித்து வழக்கு தொடரப்பட்டது. அந்த நிலம் அமைந்துள்ள நடுவட்டம் என்கிற காட்டுப்பகுதி ரேஞ்சராக பதவி வகித்தவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் மரத்தை வெட்டிய சஜீவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த மரங்களை கோவை மாநகராட்சிக்குச் சொந்தமான ஆர்.எஸ்.புரத்தில் சஜீவன் நடத்தும் இரண்டு கடைகள் மூலமாக விற்றுவிட்டார். இன்றுவரை கோவை ஆர்.எஸ்.புரத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கடை நடத்திவரும் சஜீவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதை, நீலகிரி மாவட்ட தி.மு.க. எம்.பி. யான ஆ.ராசா, வனத்துறை அமைச்சர் ராமச் சந்திரனின் கவனத்திற்கு கொண்டுவந்தார். அதன்பிறகும் நடவடிக்கை இல்லை. இதனால் டென்ஷனான ஆ.ராசா, வனத்துறை அமைச்சரைக் கண்டித்தார். அதன்பிறகும் நடவடிக்கை எதுவும் சஜீவன் மீது பாயவில்லை'' என்கிறார்கள் வனத்துறையைச் சேர்ந்தவர்கள்.
"அதற்குக் காரணம் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், சஜீவனுக்கு நெருக்கமாக இருக்கிறார். அவர் மட்டுமல்ல... நீலகிரி மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், கூடலூர் வரை தி.மு.க. நிர்வாகிகள் எல்லோரும் சஜீவனின் பணத்திற்குப் பலியாகிவிட்டார்கள்.
சமீபத்தில் கூடலூர் நகர தி.மு.க. பிரமுகர் ஒருவர் சஜீவனுடன் சேர்ந்து உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.வுக்கு எதிராகச் செயல்பட, அவர்மீது மாவட்ட தேர்தல் பொறுப்பாளரான ஆ.ராசாவின் பரிந்துரையின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது'' என்கிறார்கள் தி.மு.க.வினர். வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் சர்ச்சைக்குப் பஞ்சமில்லாதவர். ஜக்கி வாசுதேவ் மீது வனத்துறை அனுமதி இல் லாமல் ரிசர்வ் வனப்பகுதிக்கு பக்கத்தில் கட்டிடம் கட்டியிருப்பதற்கு எதிராக நடவடிக்கை எடுக்காதவர். ஜக்கிக்கு நெருக்கமாகச் செயல்படுகிறார் என்கிற குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்.
நாம் அவரிடமே இந்தக் குற்றச்சாட்டு பற்றிக் கேட்டோம்.
"ஏன் சஜீவன் மீது வனத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை'' என்கிற கேள்விக்கு, "அவன் மரங்களை வெட்டிக் கடத்தியது அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த விஷயம்'' என்றார்.
"தி.மு.க. ஆட்சியில் வனத்துறை அதிகாரிகள் மீது சஜீவனுக்கு உடந்தையாக இருந்தததற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டதா?'' என்கிற கேள்விக்கு, "அப்படி எதுவும் இல்லை'' என பதிலளித்தார்.
"சஜீவன் மேல் நடவடிக்கை எடுங்கள் என நீலகிரி எம்.பி. ஆ.ராசா, பலமுறை சொன்ன பிறகும் நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லையே ஏன்?'' என்கிற கேள்விக்கு, "அது தவறான தகவல். ஆ.ராசா அப்படி எதையும் என்னிடம் கூறவில்லை'' என்றார்.
"ஜக்கி வாசுதேவ், சஜீவன் என பிரச்சினைக்குரிய பெருந் தலைகளை காப்பாற்றுவதாக உங்கள் மீது புகார்கள் ஏன் வருகிறது?'' என்ற கேள்விக்கு...
"ஜக்கி தவறு செய்கிறார்'' என்றவர், "தி.மு.க. அரசு அவர் மேல் நடவடிக்கை எடுக்கலாமே'' என நம்மை திருப்பிக் கேட்டார்.
"ஜக்கி, வனத்துறை அனுமதி பெறாமல் கட்டிடம் கட்டியிருக் கிறார் என மத்திய தணிக்கை குழு அறிக்கை கூறுவதாக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனி வேல் தியாகராஜன் சொல்கிறாரே?'' எனக் கேட்டபோது, ராமச்சந்திரன் டென்ஷ னானார்.
ஒருமையில் பேச ஆரம்பித்தார். "ஜக்கி விஷயத்திலும், சஜீவன் விஷயத்திலும் நான் தவறு செய்துள்ளதாக நிரூபித்தால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன். என் சொத்து முழுவதையும் உங்களுக்கே எழுதித் தருகிறேன்'' என ஆவேசப்பட்டார் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்.
கொடநாடு வழக்கில் மிகவும் முக்கியமான வர்கள் தி.மு.க. வழக்கறிஞர் ஆனந்தும் சயானும். இப்பொழுது அரசு பி.பி.யாக உள்ள ஆனந்த், கொடநாடு வழக்கை அ.தி.மு.க. ஆட்சியிலேயே முடித்துவிட முயன்றார். கொரோனா காலத்திலும் விடாமல் கோர்ட்டை இயங்க வைத்த எடப்பாடி யின் முயற்சியை முறியடிக்க தி.மு.க. தலைமை, சென்னை உயர்நீதிமன்றத்தில் சீனியர் வழக்கறிஞ ரையும் ஊட்டி நீதிமன் றத்தில் வழக்கறிஞர் ஆனந்த்தையும் பயன்படுத்தி, எடப்பாடியின் முயற்சிகளை முறியடித்தது.
ஆனந்த், கொடநாடு வழக்கின் முக்கிய குற்ற வாளியான சயான் மூலம் மனுத் தாக்கல் செய்து கொடநாடு வழக்கில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மறு விசாரணைக்கான உத்தரவைப் பெற்றார். அந்த வழக்கறிஞர் ஆனந்த், எடப்பாடிக்கு நெருக்க மான சேலம் இளங்கோவனை, கொடநாடு வழக்கு குற்றவாளிகள் நேரடியாக சந்தித்த போது உடனிருந்தார் என சீனியர் குற்றம் சாட்டினார்.
"நான் கேரளாவிற்கே சமீப காலத்தில் சென்றதில்லை. குருவாயூர் கோயிலுக்குக் கூட நான் போனதில்லை'' என ஆதாரத் துடன் ஆனந்த் விளக்கினார். அதே போல், சயானை விசாரித்த நீலகிரி போலீசார், "நீ எடப்பாடிக்கு எதிராக பொய் சொல்கிறாய்'' என மூன்று நாட்கள் சித்ரவதை செய்தார்கள்.
"இது என்ன தி.மு.க. அரசா? அல்லது எடப்பாடி அரசா?' என சயான் வெறுத்துப் போகும் அளவுக்கு விசாரணை கடுமையாக இருந்தது. "இந்த விசாரணை பற்றி வெளியே சொன்னால் உன்மீது பொய் வழக்கு போடு வோம்' என போலீஸ் உயரதிகாரி களே மிரட்டியதால், சயான் இந்த விசாரணை பற்றி மூச்சுவிட வில்லை.
"இந்த சம்பவங்களுக்குப் பிறகு ஆனந்த்தும் சயானும் கொடநாடு கொலை வழக்கு பற்றி பேசுவதே யில்லை. அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஆர்வத் துடன் நியாயம் கேட்டு எடப்பாடிக்கு எதிராக குரல் கொடுத்து வந்த இருவரும் இப்பொழுது அதைப்பற்றி பேசவே மறுக்கிறார்கள்' என்கிறார் கள் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
"இதற்கெல்லாம் காரணம் மாநில உளவுப்பிரிவில் தலைமைப் பொறுப்பை வகிக்கும் அதிகாரியும் சீனியர் வழக்கறிஞரும்தான். இருவரும் சேர்ந்து ஆனந்த் மீது தவறான குற்றச்சாட்டை சுமத்தினார்கள்' என்கிறது வழக்கறிஞர் வட்டாரம்.
"நீலகிரி மாவட்டத்தில் உள்ள போலீசார் விசாரிக்காமல், சி.பி.சி.ஐ.டி. போன்ற தனிப்பிரிவு விசாரித்தால்தான் கொடநாடு வழக்கில் உண்மை தெளிவாகும். ஏனென்றால் நீலகிரியில் உள்ள போலீ சார் எல்லாரும் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பதவிக்கு வந்தவர்கள். கொடநாடு வழக்கை விசாரிக்கும் குன்னூர் டி.எஸ்.பி. சுரேஷ், கொடநாடு பகுதி ஆய் வாளர் வெங்கட்ராமன், நீலகிரி மாவட்ட உளவுப் பிரிவு தலைவர் சுபாஷினி ஆகியோர், கொடநாடு கொள்ளை நடந்தபோது நீலகிரியில் பதவி வகித்தவர்கள். இந்த போலீஸ் டீமின் உறவினர்கள், அ.தி.மு.க.வில் நிர்வாகிகளாக உள்ளனர். அவர் களது சொத்துக்கள், நீலகிரி மாவட்டத்திலேயே இருக்கிறது.
இப்படிச் சுற்றிச் சுற்றி அனைவரும் சேர்ந்து எடப் பாடியின் பண விளை யாட்டிற்கு பலியாகி, கோடிகளில் சுழலும் எடப்பாடியின் பணம், இந்த வழக்கை நீர்த்துப் போக வைத்துள்ளது'' என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.