"ஹலோ தலைவரே, ராஜ்யசபா தேர்தலுக்கான தேதி திடீர்ன்னு அறிவிக்கப்பட்டு, அதே வேகத்தில் வேட்பாளர் பெயர்களும் வெளியாகியிருக்கு.''”
"ஆமாம்பா. இதன்மூலம் தமிழகத்தில் இருந்து 6 புதிய ராஜ்யசபா எம்.பி.க்கள் தேர்வு செய்யப்பட இருக்காங்களே?''”
"உண்மைதாங்க தலைவரே, தி.மு.க.வை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.க்களான டி.கே.எஸ். இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, ராஜேஷ்குமார் மற்றும் அ.தி.மு.க. ராஜ்யசபா எம்.பி.க்களான எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், விஜயகுமார், நவநீத கிருஷ் ணன் ஆகிய 6 பேரின் பதவிக் காலமும் ஜூன் 29-ந் தேதி யோடு முடியுது. காலியாவதால், இவர்களின் இடங்களுக்கு ஜூன் 10-ஆம் தேதி தேர்தல் நடக்கும்னு அறிவிக்கப்பட்டிருக்கு. இந்த சீட்டைப் பெற ஏற்கனவே இந்த இரு கட்சிகளிலும் பலத்த போட்டி இருந்துவந்தது. ஜூன் 25 வாக்கில், இதற்கான தேர்தல் நடக்கும்ன்னு சொல்லப்பட்டு வந்த நிலையில், ஜூன் 10-ஆம் தேதியே தேர்தல் வருது.''”
"தேர்தல் தேதி அறிவிக்கப் பட்ட அதே வேகத்தில் தி.மு.க. தனது வேட்பாளர்களை அறி வித்திருக்குதே?''”
"ஆமாங்க தலைவரே, தஞ்சை கல்யாணசுந்தரம், நாமக்கல் ராஜேஸ்குமார், சென்னை வழக்கறிஞர் கிரிராஜன் ஆகியோரை ராஜ்யசபா வேட்பாளராக அறிவித்திருக்கிறது தி.மு.க. தலைமை. சீட் எதிர்பார்ப்பில் தேனி மாவட்டத்தின் தங்க தமிழ்ச்செல்வன் இருந்தார். கலைஞரின் ஆரம்பகால அரசியல் வாழ்வில் துணை நின்ற திருவாரூர் திராவிட இயக்க பிரமுகர் தண்ட வாளம் அரங்கராசு மகன் அர.திருவிடம் போன்ற சீனியர்களும் நம்பிக்கை யோடு இருந்தாங்க. எதிர் பார்ப்புகளுக்கு மாறாக, எம்.பி. வேட்பாளர் லிஸ்ட் வெளியாகியிருக்கு. இதில் ஆச்சரியமும் உண்டு. அதிருப்தியும் உண்டு.''”
"எம்.பி. வேட்பாளரா அறிவிக்கப்பட்டிருக்கிற தஞ்சை கல்யாணசுந்தரம் ரொம்ப சீனியராச்சே?''“
"ஆமாங்க தலைவரே, 1989ல் பாபநாசம் தொகுதி யில் மூப்பனாரை எதிர்த்து நின்றவர். கடைசி ரவுண்டு வரை லீடிங்கில் இருந்த கல்யாணசுந்தரம், இறுதியில் குறைஞ்ச ஓட்டுக்களில் வெற்றி வாய்ப்பை இழந்தவர். இந்த முறை பாப நாசம் தொகுதியில் ம.ம.க. போட்டி யிட, அதன் வெற்றிக்காக தீவிரமா உழைத்து, பேராசிரியர் ஜவாஹிருல்லாவை ஜெயிக்க வைத்தார் கல்யாணசுந்தரம். அதற்குப் பரிசுதான் ராஜ்ய சபா எம்.பி. சீட். அதுபோல, முதல்வர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியின் பொறுப்பாளர்களில் ஒருவர். தேர்தல் வேலைகளை ஒருங் கிணைத்தவர். அவரும் எம்.பி. யாகிறார். திமுகவுக்கு 10 ராஜ்ய சபா எம்.பி.க்கள் இருக்காங்க. இதில், வழக்கறிஞர்கள் ஆர்.எஸ். பாரதி, என்.ஆர்.இளங்கோ, டாக்டர் கனிமொழி, தொ.மு.ச. சண்முகம் ஆகிய 4 பேரும் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். திருச்சி சிவா, டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் முக்குலத் தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ராஜேஸ்குமார் கொங்கு வேளாள கவுண்டர். அந்தியூர் செல்வராஜ் அருந்ததியர். எம்.எம்.அப்துல்லா முஸ்லீம். வழக்கறிஞர் வில்சன் கிருஸ்துவர்.''”
"இந்த இடஒதுக்கீட்டில் இடம்பெறாத சமூகங்களுக்கும் இருக்குமே?''”
"வன்னியர், நாடார், முத்தரையர், பிள்ளைமார் சமூகங்களில் சீட் எதிர்பார்ப்பு இருந்தது. ஆர்.எஸ்.பாரதியின் பதவி முடிவடைவ தால் அவரது இடத்தில், நாயுடு இனத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கிரிராஜனுக்கு தற்போது வாய்ப்பு தரப்படுகிறது. அ.தி.மு.க.வில் வைத்திலிங்கத்தின் ராஜினாமாவால், இடைத் தேர்தலில் ஜெயித்த தி.மு.க. ராஜேஸ்குமாருக்கு, மறுபடியும் வாய்ப்பு தரப்பட்டிருக்கு. காரணம், அவர் கடந்த முறை வெறும் 8 மாத காலங்கள் தான் பதவியில் இருந்தார். அதேபோல, முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த டி.கே.எஸ். இளங்கோவனின் பதவிக் காலம் முடிவடைவதால், அவர் இடத்துக்கு முக்குலத் தோர் சமூகத்தைச் சேர்ந்தவராக தஞ்சை கல்யாணசுந்தரத்துக்கு சீட் கொடுக்கப்பட்டிருக்கு.''”
"அ.தி.மு.க. தனது ராஜ்யசபா வேட்பாளர்களை 15 ஆம் தேதி இரவு வரை அறிவிக்கலையே?''”
"ஆமாங்க தலைவரே, இரண்டு ராஜ்யசபா இடங்கள் அ.தி.மு.க.வுக்கு உறுதி. இந்த சீட்டுகளைப் பெற அக்கட்சியைச் சேர்ந்த மாஜி மந்திரிகளான சி.வி.சண்முகம், ஜெயக்குமார், கோகுல இந்திரா, மணிகண்டன் மற்றும் ஜெ.சி.டி. பிரபாகரன் உள்ளிட்டோர் முட்டிமோதி வருகின்றனர். சீட்டுக்கு ரேட்டு 50 கோடின்னு இடையில் எடப்பாடி கூவிக்கொண்டு இருந்தார். இந்த நிலையில், தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க.வுக் காகக் கடுமையாகப் பிரச்சாரம் செய்த நடிகை விந்தியாவும் சீட்டு கேட்கிறார். இந்த முறை பெண் ஒருவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற குரலும் அவருக்கு அனுசரணையாக அங்கே ஒலிக்குது. அதேபோல், அக்கட்சியின் மருத்துவ அணியைச் சேர்ந்த டாக்டர் சுனந்தனியும் சீட்டுப் போரில் குதித்திருக்கிறார்.''”
"தி.மு.க. தான் தனக்கு வெற்றிவாய்ப்பு உள்ள 4 இடங்களில் ஒன்றை, காங்கிரஸுக்கு ஒதுக்கிவிட்டதே?''”
"ஆமாங்க தலைவரே, சோனியாவும் ராகுலும் கேட்டுக்கொண்டதால், தி.மு.க.வினர் போட்ட தடையையும் மீறி காங்கிரஸுக்கு ஒரு சீட்டை ஒதுக்கி இருக்கிறார் ஸ்டாலின். அந்த ஒரு சீட்டுக்கு, ப.சிதம்பரம் உட்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் மல்லுக்கட்டறாங்க. தனக்காகத்தான் ஸ்டாலின் காங்கிரஸுக்கு சீட்டை ஒதுக்கி இருக்கிறார் என்று கட்சியின் டெல்லித் தலைமையிடம் ப.சி., சொல்லி இருக்கிறார். ஆனால், ப.சி.க்கு சீட் கொடுப்பதில் ராகுலுக்கு விருப்பமில்லையாம். இதற் கிடையே, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியும், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் கூட ராஜ்யசபாவுக்கு வரிந்து கட்ட, பழைய முகங்களுக்கே இப்படி பதவிகளைக் கொடுத் துக்கொண்டே இருந்தால், இளைஞர்களுக்கு எப்போது தான் வாய்ப்பு தருவீர்கள் என்று தமிழக இளைஞர் காங்கிரஸார் குரல் எழுப்புகிறார்கள். ராகுலுக்கு நெருக்கமான இளைஞர் சசிகாந்த் செந்தில் பெயரும் ராஜ்யசபாவுக்கு அடிபடுது.''”
"தமிழக அரசோடு மோதிவரும் கவர்னர் ரவி, டெல்லிக்குப் பறந்தாரே?''”
"ஆமாங்க தலைவரே, தமிழக கவர்னர் ஆர்.என். ரவி இரண்டு நாள் பயணமாக டெல்லிக்கு 14-ந் தேதி சென்றார். இது தனிப்பட்ட பயணம்னு சொல்லப் பட்டாலும், அங்கே உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் அத்துறை அதிகாரிகளை ரவி சந்தித்திருக்கிறார். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு தனது ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள சட்ட மசோதாக்கள் மற்றும் தென் தமிழகத்தில் மதமாற்றம் நடப்பதாக தனக்கு வந்த ரிப்போர்ட் உள்ளிட்டவை பற்றி ரவி அங்கே விவாதித்தாராம். இந்த நிலையில், 16-ந் தேதி சென்னை பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலினுடன் கவர்னர் ரவி சேர்ந்து கலந்துக்கிட்டார். அதற்கு முதல்நாள் வரை அவர் நெர்வ சாகவே இருந்தாராம்.''”
"பா.ஜ.க. அண்ணாமலைக்கும் ஒரு யூ டியூபருக்கும் இடையே உரசல் அதிகரிக்குதே?''”
"ஆமாங்க தலைவரே, இந்துத்துவா ஆதரவு யூ டியூபரான மாரிதாஸ், தி.மு.க.வை கடுமையாகத் தாக்கி வந்ததால், அவருக்கு பா.ஜ.க. தரப்பினர் பலரும் ஏகப்பட்ட பணத்தை வாரிக் கொடுத்து வந்தனர். இந்த நிலையில் அவர், பா.ஜ.க.வில் இணைய வேண்டும் என்று விரும்பிய போது, அவரைக் கட்சியில் சேர்க்க மறுத்து, பிரேக் பிடித்துக்கொண்டே இருக்கிறார் பா.ஜ.க. அண்ணாமலை. அதோடு, மாரிதாஸுக்கு யாரும் பணம் கொடுக்க வேண்டாம். அவரை விடவும் நான் தி.மு.க.வை அட்டாக் பண்றேன் பாருங்க என்றபடி, அண்ணாமலை கலெக்சனையும் பார்த்து வருகிறாராம். இதனால் கடுப்பான மாரிதாஸ், தமிழகத்தில் பா.ஜ.க. நிலைமை மோசமாக இருக்கிறது, பலவீனமாக இருக்கிறது என்று பதிவு போட்டு, அண்ணாமலையின் இமேஜைப் பஞ்சராக்கத் தொடங்கிவிட்டார்.''”
"சாமியார் நித்தியானந்தா பற்றி பரபர செய்திகள் அடிபடுதே?''”
"ஆமாங்க தலைவரே, கைலாசா தீவில் இருப்பதாகச் சொல்லிக் கொண்டு, கப்பலொன்றில் தனது கூட்டத்தோடு நடுக்கடலில் வசித்து வரும் நித்திக்கு உடல்நிலை சரியில்லை என்கிற தகவல் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. பாலியல் சார்ந்த உணர்வுகளைத் தூண்டும் வயாக்ரா மாத்திரையை எடுத்துக்கொண்டதால், அவர் மோசமான உடல்நிலைப் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறாராம். அவர் உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொண்டால்தான், உடல்நிலை தேறமுடியும் என்பதால், சிகிச்சைக்காக அவரை இந்தியாவில் கரை ஏற அனுமதிக்கும் படி அவரது சிஷ்யர்கள் இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், இந்தியா விற்கு வந்தால், அவரைக் கைது செய்ய புலனாய்வு அமைப்புகள் காத்திருக்கின்றன. அதனால் அவர் இந்தியா வந்தாலும். ஒரு கைதி யாகத்தான் சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியும் என்கிறார்கள். இதற்கிடையே, அவர் குறித்த இந்த செய்தியே, தன்னைப் பற்றிய பரபரப்புக்காக அவரே போடும் டிராமா என்று சொல்கிறவர்களும் இருக்கிறார்கள்.''”
"திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் அ.தி.மு.க. மாஜி மந்திரி ஒருவரும் விசாரணை வளையத் தில் வருவாருன்னு பேச்சு அடிபடுதே?''”
"நம்ம நக்கீரனில் தனி ஸ்டோரி வந்திருக்குங்க தலைவரே.. என்னிடம் உள்ள தகவலையும் சொல்றேன். அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு விசாரணையில் அ.தி.மு.க. மாஜி திருச்சி பரஞ்ஜோதி தரப்புக்கு தொடர்பு இருப்பதாக விசாரணை டீம் கண்டு பிடித்திருக்கிறதாம். இது குறித்த தகவல்களை அவ்வப்போது பரஞ்ஜோதிக்கும், அ.தி.மு.க. தரப்புக்கும், அதே டீமில் இருக்கும் ஒரு இன்ஸ்பெக்டர் லைவ் ரிலே பண்ணி வருகிறாராம். இதைக் கண்டுபிடித்துவிட்ட விசாரணை அதிகாரிகள், அந்த இன்ஸ்பெக் டரைக் கண்காணிப்பு வளையத்தில் வைத்திருக்கிறார்களாம். விரைவில், இந்த விவகாரத்தில் மாஜி பரஞ்சோதி, விசாரணை டீமால் மடக்கப்பட இருக்கிறாராம்.''”
"சின்னத்திரை சித்ரா விவகாரத்தில் அ.தி.மு.க. வி.ஐ.பி.க்கள் பலரின் பெயர்களும் அடிபடுதே?''”
"ஆமாங்க தலைவரே, எங்கள் மகள் சித்ரா தற்கொலை செய்துகொள்ளவில்லை. கொலை செய்யப்பட்டிருக்கிறார். இது குறித்து மறு விசாரணை தேவைன்னு அவரின் பெற்றோர் பேட்டி கொடுத்ததோடு, இந்த விவகாரத்தில் சென்னையைச் சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பெயரையும் சத்தியம் அடித்துச் சொல்றாங்க. இதுகுறித்து விசாரித்த போது, சின்னத்திரை சித்ராவும், அவர் கணவர் ஹேமந்தும், அந்த எக்ஸ் எம்.எல்.ஏ.வும் நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்களாம். எக்ஸ் எம்.எல்.ஏ.வுக்கு நடிகைகள் நட்பு அதிகமாம். ஒரு காலத்தில் சர்ச்சையில் அடிபட்ட பூனைக் கண் நடிகையின் மெய்க்காவலர் போலவே இருந்திருக்காரு. அதைத் தொடர்ந்துதான் அரசியலிலேயே பிரவேசித்தாராம். இவர்தான் சித்ராவை, மாஜி மந்திரிகளுக்கு அறிமுகம் செய்து வைத்தாராம். அதில் ஒரு மந்திரியின் மகனும் உண்டு. சித்ரா இறந்த நேரத்தில் இவர்களுடனும் ஒரு தலித் பிரமுகருடனும் அடிக்கடி ஹேமந்த் போனில் பேசிய தாகவும் சொல்கிறார்கள். வில்லங்கம் இங்கே விசுவரூபம் எடுத்துவருகிறது.''”
"நானும் இது தொடர்பான தகவலைச் சொல்றேன். அந்த எக்ஸ் எம்.எல்.ஏ. மூலமாக அறிமுக மான அ.தி.மு.க. பிரமுகர்கள் பலரும் சித்ராவிற்கு டார்ச்சர் கொடுத்து வந்தார்கள் என்றும், ஒரு கட்டத்தில் இவர்களின் தொல்லை தாங்கமுடியாத நிலையில் சித்ரா தவித்தார் என்றும், அவர்கள்தான் சித்ராவைத் தற்கொலை முடிவை நோக்கித் தள்ளினார்கள் என்றும் சொல்லும் விசாரணை டீ ம் போலீஸார், இந்த விவகாரத்தில் தொடர்புடைய அ.தி.மு.க. பிர முகர்களை நாங்கள் விசாரிக்க இருக் கிறோம் என்றும் சொல்கிறார்கள்.''”