"ஹலோ தலைவரே,… சுதந்திர தின டீ பார்ட்டியில் இந்த முறை முதல்வர் கலந்துக்குவாரா? மாட்டாரா?ன்னு கோட்டையில் பட்டிமன்றம் நடக்குதே.''”
"நானும் கேள்விப்பட்டேன். சுதந்திர தினத்தன்னைக்கு ராஜ்பவன்ல கவர்னர் டீ பார்ட்டி கொடுப்பது வழக்கம். இதுல கலந்துக்கச் சொல்லி முதல்வர், அமைச்சர்கள், உயரதிகாரிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகை உரிமையாளர்கள், தொழிலதிபர்கள் எனப் பலரையும் கவர்னர் ரவி அழைச்சிருக்காருப்பா.''”
"ஆமாங்க தலைவரே... தமிழக அரசோடு பல்வேறு விசயங்களில் முரண்பட்டதோட மோதல் போக்கைக் கடைப்பிடிச்சாரு கவர்னர் ரவி. அதைச் சுட்டிக்காட்டி போன வருசம் டீ பார்ட்டியை புறக்கணிச்சாரு முதல்வர் ஸ்டாலின். முதல்வர் புறக்கணிச்சதால தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகளும் புறக்கணிச்சிடுச்சி. ஆனா, கடந்த ரெண்டு மூணு மாசமா தமிழக அரசோட எந்த மோதல் போக்கையும் கவர்னர் வச்சிக்கலை. ஸ்மூத்தா போற மாதிரி ராஜ்பவன் நடந்துக்கிட்டிருக்கு. அதனால், இந்த வருசம் கவர்னரின் டீ பார்ட்டியில முதல்வர் கலந்துக்குவாரா? புறக்கணிப்பாரா?ன்னு தி.மு.க. அமைச்சர்களிடமும் கோட்டை அதிகாரிகளிடமும் பட்டிமன்றம் நடக்குது.''”
"தமிழக கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரிய மத்திய அமைச்சரவைச் செயலாளராக நியமிச்சிருக் காங்களே?''
"ஆமாங்க தலைவரே... பிரதமர் மோடியின் குட் புக்கில் இருக்கும் மத்திய நிதித்துறை செயலாளராக இருந்த தமிழக கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.வி.சோமநாதனை மத்திய அமைச்ச ரவையின் செயலாளராக நியமிச்சிருக்காங்க. கேபினெட் செக்ரட்டரியாக சோமநாதன் நியமிக்கப்பட்டதை புருவம் உயர்த்தி பார்க்கிறாங்க கோட்டை அதிகாரிகள். சோமநாதன் நிறைய படிச்சிருக்காரு. இந்திய மொழிகள், வெளிநாட்டு மொழிகள்னு ஏழெட்டு மொழிகளில் சரளமாக பேசக்கூடிய சோமநாதன், ஒரு தமிழர். இவருடைய இல்லத் திருமணத்துக்குத் தான் ரெண்டு வருசத்துக்கு முன்னால சென்னைக்கு வந்து போனார் மோடி. கலைஞர் ஆட்சியில அவருக்கு செக்ரட்டரியாகவும் இருந்தவர் சோமநாதன். திராவிட அரசியல், பெரியாரிய அரசியல் எல்லாம் தெரிந்தவர். அவரை தனது அமைச்சரவையின் செயலாளராக மோடி நியமிச்சிருக்காருன்னா ஏதோ திட்டம் இருக்கு. அதுக்கேத்த மாதிரி, சில அசைன்மெண்ட்டுகள் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறதா டெல்லி தகவல்கள் சொல்லுது.
"ஹலோ தலைவரே,… சுதந்திர தின டீ பார்ட்டியில் இந்த முறை முதல்வர் கலந்துக்குவாரா? மாட்டாரா?ன்னு கோட்டையில் பட்டிமன்றம் நடக்குதே.''”
"நானும் கேள்விப்பட்டேன். சுதந்திர தினத்தன்னைக்கு ராஜ்பவன்ல கவர்னர் டீ பார்ட்டி கொடுப்பது வழக்கம். இதுல கலந்துக்கச் சொல்லி முதல்வர், அமைச்சர்கள், உயரதிகாரிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகை உரிமையாளர்கள், தொழிலதிபர்கள் எனப் பலரையும் கவர்னர் ரவி அழைச்சிருக்காருப்பா.''”
"ஆமாங்க தலைவரே... தமிழக அரசோடு பல்வேறு விசயங்களில் முரண்பட்டதோட மோதல் போக்கைக் கடைப்பிடிச்சாரு கவர்னர் ரவி. அதைச் சுட்டிக்காட்டி போன வருசம் டீ பார்ட்டியை புறக்கணிச்சாரு முதல்வர் ஸ்டாலின். முதல்வர் புறக்கணிச்சதால தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகளும் புறக்கணிச்சிடுச்சி. ஆனா, கடந்த ரெண்டு மூணு மாசமா தமிழக அரசோட எந்த மோதல் போக்கையும் கவர்னர் வச்சிக்கலை. ஸ்மூத்தா போற மாதிரி ராஜ்பவன் நடந்துக்கிட்டிருக்கு. அதனால், இந்த வருசம் கவர்னரின் டீ பார்ட்டியில முதல்வர் கலந்துக்குவாரா? புறக்கணிப்பாரா?ன்னு தி.மு.க. அமைச்சர்களிடமும் கோட்டை அதிகாரிகளிடமும் பட்டிமன்றம் நடக்குது.''”
"தமிழக கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரிய மத்திய அமைச்சரவைச் செயலாளராக நியமிச்சிருக் காங்களே?''
"ஆமாங்க தலைவரே... பிரதமர் மோடியின் குட் புக்கில் இருக்கும் மத்திய நிதித்துறை செயலாளராக இருந்த தமிழக கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.வி.சோமநாதனை மத்திய அமைச்ச ரவையின் செயலாளராக நியமிச்சிருக்காங்க. கேபினெட் செக்ரட்டரியாக சோமநாதன் நியமிக்கப்பட்டதை புருவம் உயர்த்தி பார்க்கிறாங்க கோட்டை அதிகாரிகள். சோமநாதன் நிறைய படிச்சிருக்காரு. இந்திய மொழிகள், வெளிநாட்டு மொழிகள்னு ஏழெட்டு மொழிகளில் சரளமாக பேசக்கூடிய சோமநாதன், ஒரு தமிழர். இவருடைய இல்லத் திருமணத்துக்குத் தான் ரெண்டு வருசத்துக்கு முன்னால சென்னைக்கு வந்து போனார் மோடி. கலைஞர் ஆட்சியில அவருக்கு செக்ரட்டரியாகவும் இருந்தவர் சோமநாதன். திராவிட அரசியல், பெரியாரிய அரசியல் எல்லாம் தெரிந்தவர். அவரை தனது அமைச்சரவையின் செயலாளராக மோடி நியமிச்சிருக்காருன்னா ஏதோ திட்டம் இருக்கு. அதுக்கேத்த மாதிரி, சில அசைன்மெண்ட்டுகள் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறதா டெல்லி தகவல்கள் சொல்லுது.''”
"கள்ளக்குறிச்சி மாவட்டத்துல தி.மு.க. எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் ஆதரவாளர் களும், தி.மு.க. எம்.பி. மலையரசனின் ஆதர வாளர்களும் உறுமிக் கொண்டிருக்கிறார்களே.'' ’
"ஆமாங்க தலைவரே.. கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக இருக்கும் வசந்தம் கார்த்திகேயன், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதினால டிஜிட்டல் பேனர்கள் யாரும் வைக்கக்கூடாதுன்னு சமீபத்துல அறிக்கை கொடுத்தாரு. அதனால் தி.மு.க.காரங்க தங்கள் வீட்டு சுபகாரியங்களுக்கோ, கட்சி நிகழ்ச்சி களுக்கோ பேனர்கள் வைப்பதை விட்டுட்டாங்க. இந்த நிலையில, கடந்த 29-ந் தேதி மலையரசனுக்கு பிறந்த நாள். அதை கொண்டாடும் வகையில் அவரது ஆதரவாளர்கள் பேனர்கள் வெச்சி அசத்தி யிருக்காங்க. அந்த பேனர்ல வசந்தம் கார்த்திகேயன் படம் சின்னதா இருந்திருக்கு. அதைக்கண்டு கொதித்துப் போன வசந்தம் கார்த்திகேயனின் ஆதரவாளர்கள் அந்த பேனர்களையெல்லாம் கிழிச்சி எறிஞ்சிருக்காங்க. இத்தனைக்கும், மலையரசனும் அவரது மனைவியும் கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டு வெளியே வந்தபோது அந்த சம்பவம் நடந்திருக்கு. பேனர்கள் கிழிக்கப்படுவதைப் பார்த்து மலையரசனின் மனைவி கண்ணீர் சிந்தியிருக்காங்க. வசந்தம் கார்த்திகேயனின் ஆதரவாளர்தான் மலையரசன். அவரது சிபாரிசில்தான் மலையரசனுக்கு எம்.பி. சீட் கிடைச்சது. எம்.பி. ஆனதும் அவருக்கென ஒரு கூட்டம் உருவாகிடுச்சி. இப்போ பேனர் சம்பவத்தில் இரண்டு பெரும் தலைகளின் ஆதரவாளர்களும் எதிரிகளாக மாறியதால் கள்ளக்குறிச்சி தெற்கு தி.மு.க.வில் உறுமல்கள் அதிகமாகக் கேட்கிறது. இது, எப்போது வேண்டு மானாலும் மோதலாக வெடிக்கலாம் என்கிறார்கள் கள்ளக்குறிச்சி தி.மு.க.வினர்.''”
"காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருத்தர் ரகசியமா அமெரிக்காவுக்கு பறந்திருக் கிறாராமே!''”
"ஆமாங்க தலை வரே... நாங்குநேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. வாகவும் கட்சியின் மாநில பொருளாள ராகவும் இருக்கிறார் ரூபிமனோகரன். சில மாதங்களுக்கு முன்பு படுகொலை செய்யப் பட்ட நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், அவர் எழுதி வெச்சிருந்த கடிதத்தில் ரூபி மனோகரன் பெயரையும் அழுத்தமா பதிவு செஞ்சிருந்தாரு. வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் சந்தேகப் பார்வை ரூபி மனோகரன் மீது இருந்து வருகிறது. இருப்பினும் அவரை அழைத்து இதுவரை விசாரிக்கவில்லை போலீஸ். இந்த கொலை வழக்கும் அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை. இந்த நிலையில், கடந்த வாரம் அமெரிக்காவுக்கு பறந்துள்ளார் ரூபிமனோகரன். போலீஸின் சந்தேக வலையில் இருக்கும் எம்.எல்.ஏ.வை எப்படி வெளிநாடு செல்ல சி.பி.சி.ஐ.டி. அனுமதிக்கலாம்னு நெல்லை காங் கிரஸ்காரர்களும், ஜெயக்குமார் குடும்பத்தினரும் கேள்வி கேட்கிறார்களாம். ஜெயக்குமார் படுகொலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு எதிராகவும், குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை கட்சியின் பொருளாளர் பதவியிலிருந்து ரூபியை நீக்கி வைக்க கோரியும் சத்தியமூர்த்தி பவன்ல போராட்டம் நடத்த நெல்லை காங்கிரசார் ஆலோசித்து வருகிறார்கள்.''’
"என்னப்பா மறுபடியும் ச...................ன் வார்த்தை விவகாரம் சீரியஸ் ஆகுதுன்னு பேசிக்கிறாங்களே.''…”
"ஆமாங்க தலைவரே உண்மைதான். பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த ஒரு தி.மு.க. வழக்கறிஞர் அந்த வார்த்தையை சாட்டை முருகன் பயன்படுத்தியது தொடர்பாக ஆதிதிராவிடர் நல வாரியத்தில் மனு கொடுத் திருக்கிறார். அவரும் ஒரு ஆதிதிராவிடர். காவல் நிலையத்தில் அவர் கொடுத்த புகாருக்கு எஃப்.ஐ.ஆர். போடவேண்டும். போடாவிட்டால் சம்பந்தப்பட்ட காவல்நிலைய ஆய்வாளர் ஆதிதிராவிடர் நல வாரியத்துக்குப் பதில் சொல்ல வேண்டும் என ஆதிதிராவிடர் நல வாரியத்துக்கு மனு கொடுத்திருக்கிறார். ஏற்கெனவே சாட்டை முருகன் மீது இவ்விவகாரத்தில் புகார் கொடுத்தவர் பிற்படுத்தப்பட்டவர் இனத்தைச் சேர்ந்தவர். அதனால் அப்போது அந்தப் புகார் எடுபடவில்லை. இப்போது ஆதிதிராவிடர் நல வாரியம் தலையிடுவதால், உடனடியாக சாட்டை முருகன் மீது வழக்கு பதியப்பட்டு சீரியஸான நடவடிக்கைகள் இருக்குமெனத் தெரிகிறது.''”
"மறுபடியும் காங்கிரஸ் மீது தி.மு.க. தரப்பு குற்றச்சாட்டுகளை அடுக்குகிறதே.''”
"காங்கிரஸ் நிர்வாகி அஸ்வத்தாமனை ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரம் தொடர்பாக போலீசார் கைதுசெய்திருக்கின்றனர். அவர் சிறையிலிருக்கும் நாகேந்திரன் மகன். அஸ்வத் தாமன், செல்வப் பெருந்தகைக்கு மிகவும் நெருக்க மாக இருந்தவர். அவருக்கு அடுத்த சட்ட மன்றத் தேர் தலில் சீட்டு வாங்கித் தருவ தாக செல்வப் பெருந்தகை வாக்குறுதி கொடுத்ததாக அஸ்வத்தாமன் கூறிக்கொண்டி ருந்தார். அஸ்வத்தாமன் ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஈடுபட்டுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இது இப்படியென்றால், சசிகாந்த் செந்திலின் ஐ.டி. டீமில் இருப்பவர் சி.சுப்பிரமணியன். இவர் பிராமணர். தி.மு.க. அரசுக்கு எதிராக சவுக்கு சங்கர் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை பாராட்டி பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டி ருக்கிறார் இந்த சுப்பிரமணியன். காங்கிரஸ் கட்சியில் ஒரு பக்கம் அஸ்வத்தாமன், இன்னொரு பக்கம் சுப்பிரமணியன் என தி.மு.க.வுக்கு எதிரான விஷயங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ஏற்கெனவே கார்த்தி சிதம்பரம் இதே வேலையைச் செய்தார். இப்போது செல்வப் பெருந்தகையும், சசிகாந்த் செந்திலும் இந்த வேலையைச் செய்துகொண்டிருக்கிறார்கள். இது தி.மு.க.வுக்கு பெரும் கடுப்பை ஏற்படுத்தியிருக்கிறது.''”
"சரி, காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றத்தில் பல முணுமுணுப்புகள் எழுந்திருக் கிறதைக் கேள்விப்பட்டியா?''
"ஆமாங்க தலைவரே... விஷ்ணுப்ரியாவின் தற்கொலை விவகாரத்தில் எதிர்ப்பை வெளிக் காட்டி பேட்டியளித்த மகேஸ்வரி என்கிற டி.எஸ்.பி.யை நாகப்பட்டினத்திலிருந்து தூத்துக் குடிக்கு தூக்கி அடித்திருக்கிறார்கள். அவர் சென் னைக்கு வரவே விரும்பினார். அதேபோல, ஸ்ரீமதி வழக்கை விசாரித்த கோமதிக்கு பதவி உயர்வு கொடுத்து, சென்னை போலீஸ் தலைமை அலுவல கத்தில் நேரடியாக டி.ஜி.பி.க்கு கீழே நியமித் திருக்கிறார்கள். அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இருந்த டி.ஜி.பி.யாக ராஜேஸ்தாஸுக்கு எதிராக புகார் கொடுக்க வந்தார் ஒரு பெண் எஸ்.பி. அவரை செங்கல்பட்டில் எஸ்.பி.யாக இருந்த கண்ணன் தடுத்தார். இதுதொடர்பான வழக்கில் அவர் குற்றவாளி எனத் தீர்மானிக்கப்பட்டு அவருக்கு அபராதமும் போடப்பட்டது. அதை உயர்நீதிமன்றத்துக்குச் சென்று ரத்துசெய்தார். ஆனால் குற்றவாளி இல்லையென நீதிமன்றம் சொல்லவில்லை. அவருக்கு விருதுநகரில் சட்டம்-ஒழுங்கை நிர்வாகிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. டி.ஜி.பி.யின் இந்த பதவி உயர்வு திருவிளையாடல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே வெள்ளதுரையை சஸ்பெண்ட் செய்ததனால் உள்துறை செயலாளர் மாற்றப்பட்டார். ஆனால் அதற்குப் பரிந்துரை செய்தது காவல்துறைதான். அதேநேரத்தில் முருகன் என்கிற ஐ.ஜி. மீது புகார் இருந்தும் ஓய்வுபெற அனுமதிக்கப்பட்டார். இப்படி மொத்தமும் குளறுபடியிலேயே ஓடிக்கொண்டி ருப்பதாக தமிழகக் காவல்துறை பணியிடமாற்றம் மீது சர்ச்சை எழுந்துள்ளது.''
"இந்த முறை அமைச்சரவை மாற்றம் உறுதின்னு சொல்றாங்களே?''
"ஆமாங்க தலைவரே... தி.மு.க. அமைச்சரவை மாற்றம் அடுத்த வாரம் நிச்சயம் என்கிறார்கள். அப்போது முக்கியமான ஒரு அமைச்சர் மாற்றப்பட இருக்கிறார் என தி.மு.க.வினர் பேசுகிறார்கள். வாயில் வடை சுட்ட சிறை குற்றவாளியிடம் தி.மு.க.வின் உள் விஷயங்களை கக்கியதால் கட்டாயம் நடவடிக்கை இருக்குமெனக் கூறுகிறார்கள். அதேபோல, உதயநிதியின் துணை முதல்வர் பிரவேசமும் நிச்சயமெனச் சொல்கிறார்கள் தி.மு.க. வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.''.’
"வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மு.க.அழகிரி மகன் துரை தயாநிதிக்கு கொலை மிரட்டலாமே.''”
"ஆமாம் தலைவரே, ஏற்கெனவே அழகிரி குடும்பமே மருத்துவமனையில் இருந்து துரை தயாநிதி சிகிச்சையில் முழுக்கவனம் செலுத்திவருது. இந்த நிலையில் சி.எம்.சி. மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு கடந்த 10-ஆம் தேதி இரவு ஒரு மின்னஞ்சல் வந்திருக்கு. அதில் துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல் குறிப்பு இருந்திருக்கு. இதைப் பார்த்துப் பதட்டமான கண்காணிப்பாளர், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மின்னஞ்சல் வழியாகவே புகார் அனுப்பிவைச்சிருக்கார். இதையடுத்து மாவட்ட எஸ்.பி. (பொறுப்பு) கிரண் ஸ்ருதி தனி டீம் அமைத்து, மிரட்டல் விடுத்த நபர் தொடர்பாக சைபர் குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரிச்சு வர்றார். துரை தயாநிதி சிகிச்சை பெறும் சி.எம்.சி. ஏ-பிளாக்குக்கு கூடுதலாக ஓர் உதவியாளர் தலைமையில் 3 காவலர்கள் சீருடை அணியாமல் பாதுகாப்புப் பணிக்கு நியமிக்கப்பட்டிருக்காங்க.''’
"நானும் ஒரு முக்கிய விஷயத்தை சொல்லிவிடுறேன். கடந்த ஆக 07 - 09 இதழில் ராங்கால் பகுதியில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் கந்து வட்டி தொழிலில் ஈடுபட்டுள்ள நல்லுச்சாமி கடன் வசூலுக்காக அமைச்சர் மெய்யநாதன் பெயரை பயன்படுத்தி மிரட்டுவதாக வந்த செய்தியில், அமைச்சர் மெய்யநாதனுக்கு கந்துவட்டி நபருடன் எந்த தொடர்பும் இல்லை, அவரது நற்பெயரை களங்கப்படுத்தும் விதமாக யாரோ தவறான தகவலை கொடுத்துள்ளனர். அடுத்த வீட்டில் வசிக்கும் நல்லுச்சாமி குடும்பத்துடன் பல வருடங்களாக பேச்சுவார்த்தை கூட இல்லை என்று அமைச்சர் மெய்யநாதன் தரப்பினர் சொல்றாங்க.''