வரவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும்விதமாக தி.மு.க.வில் நிர்வாக ரீதியாக அதிகாரப் பரவல் செய்ய, இரண்டு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு மா.செ. என நியமிக்க தலைமை ஆலோசித்துவந்த நிலையில், சீனியர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். தற்போது நடிகர் விஜய்யின் த.வெ.க. கட்சியும் களமிறங்கியுள்ள நிலையில், தமிழகத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. எனவே, மாவட்டச் செயலாளர்களை அதிகரிப்பதோடு, அதில் இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்று துணை முதல்வர் உதயநிதி அழுத்தம் கொடுத்துவருகிறார்.
புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்படுவது உறுதியான நிலையில், அப்பதவிக்காக வடக்கு மண்டலத்தில் கடும் போட்டி நிலவுகிறது.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் வேலூர், அணைக்கட்டு, காட்பாடி, கே.வி.குப்பம் (தனி), குடியாத்தம் (தனி) என 5 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளராக அணைக் கட்டு தொகுதி எம்.எல்.ஏ. நந்தகுமார் இருக்கிறார். மாநகர செயலாளராக கார்த்தி எம்.எல்.ஏ. உள்ளார்.
தி.மு.க. பொதுச் செயலாளரின் மகனும், வேலூர் எம்.பி.யு மான கதிர்ஆனந்த், எப்படியாவது மா.செ.வாகிவிட வேண்டுமென்று முயற்சி செய்கிறார். இங்கே போட்டி போடுமளவுக்கு யாரையும் நிர்வாகிகள் வளர்க்கவில்லை. எம்.பி. பதவிக்கே சீட் கேட்டுப் போட்டி போடுமளவுக்கு கட்சியில் வளரவிடாதபடி பார்த்துக்கொள்கிறார்கள். மாவட்ட செய லாளர் பதவிக்கு ஆட்கள் இல்லையென்பது ஒருபுறம், மற்றொரு சிக்கலும் இதில் உள்ளது. மாவட்டத்தை சீரமைக்கும்போது, வேலூர், அணைக்கட்டு, காட்பாடி ஒரு மாவட்டமாகவும், குடியாத்தம், கே.வி.குப்பம் ஒரு மாவட்டமாகவும் பிரிக்கப்பட வாய்ப்புள்ளது. இப்படி பிரிக்கப்படும் பட்சத்தில்தான் சிக்கலே என்கிறார்கள் கட்சி நிலவரம் அறிந்தவர்கள்.
வே
வரவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும்விதமாக தி.மு.க.வில் நிர்வாக ரீதியாக அதிகாரப் பரவல் செய்ய, இரண்டு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு மா.செ. என நியமிக்க தலைமை ஆலோசித்துவந்த நிலையில், சீனியர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். தற்போது நடிகர் விஜய்யின் த.வெ.க. கட்சியும் களமிறங்கியுள்ள நிலையில், தமிழகத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. எனவே, மாவட்டச் செயலாளர்களை அதிகரிப்பதோடு, அதில் இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்று துணை முதல்வர் உதயநிதி அழுத்தம் கொடுத்துவருகிறார்.
புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்படுவது உறுதியான நிலையில், அப்பதவிக்காக வடக்கு மண்டலத்தில் கடும் போட்டி நிலவுகிறது.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் வேலூர், அணைக்கட்டு, காட்பாடி, கே.வி.குப்பம் (தனி), குடியாத்தம் (தனி) என 5 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளராக அணைக் கட்டு தொகுதி எம்.எல்.ஏ. நந்தகுமார் இருக்கிறார். மாநகர செயலாளராக கார்த்தி எம்.எல்.ஏ. உள்ளார்.
தி.மு.க. பொதுச் செயலாளரின் மகனும், வேலூர் எம்.பி.யு மான கதிர்ஆனந்த், எப்படியாவது மா.செ.வாகிவிட வேண்டுமென்று முயற்சி செய்கிறார். இங்கே போட்டி போடுமளவுக்கு யாரையும் நிர்வாகிகள் வளர்க்கவில்லை. எம்.பி. பதவிக்கே சீட் கேட்டுப் போட்டி போடுமளவுக்கு கட்சியில் வளரவிடாதபடி பார்த்துக்கொள்கிறார்கள். மாவட்ட செய லாளர் பதவிக்கு ஆட்கள் இல்லையென்பது ஒருபுறம், மற்றொரு சிக்கலும் இதில் உள்ளது. மாவட்டத்தை சீரமைக்கும்போது, வேலூர், அணைக்கட்டு, காட்பாடி ஒரு மாவட்டமாகவும், குடியாத்தம், கே.வி.குப்பம் ஒரு மாவட்டமாகவும் பிரிக்கப்பட வாய்ப்புள்ளது. இப்படி பிரிக்கப்படும் பட்சத்தில்தான் சிக்கலே என்கிறார்கள் கட்சி நிலவரம் அறிந்தவர்கள்.
வேலூர் மாவட்டச் செயலாளராக இருக்கும் நந்தகுமாரின் ஊரான லத்தேரி, கே.வி.குப்பம் தொகுதிக்குள் இருக்கிறது. அவர் காட்பாடி தொகுதியில் குடியிருக்கிறார். மாவட்டத்தைப் பிரிக்கும்பட்சத்தில் மா.செ. பதவியைப் பெற்றுவிடத் துடிக்கும் வேலூர் எம்.பி. கதிர்ஆனந்த், காட்பாடியில் வசிக்கிறார். மா.செ.வாக நியமிக்கப்படுபவர் அந்த தொகுதிக்குள் இருக்க வேண்டும். அதன்படி பார்த்தால் கதிர்ஆனந்த்துக்கு மா.செ. பதவி வழங்குவதில் சிக்கலிருக்கிறது.
அதே நேரத்தில், சீரமைப்பில் வேலூர், அணைக்கட்டு ஒரு மாவட்டமாகவும், காட்பாடி, குடியாத்தம், கே.வி.குப்பம் ஒரு மாவட்டமாகவும் பிரிக்கப்படும்பட்சத்தில் தற்போதைய மா.செ. நந்தகுமாருக்கு சிக்கல் வரும். வேலூர், காட்பாடி ஒரு மாவட்டமாகவும், அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம் ஒரு மாவட்டமாகவும் பிரித்தால் ஓரளவு பிரச்சனை தீரும். இல்லையென் றால் கே.வி.குப்பம், குடியாத்தம் ஒரு மாவட்டமாக அறிவித்து, கே.வி.குப்பத்திலுள்ள சொந்த ஊரை காரணமாக வைத்து பதவியைப் பெற வேண்டியதிருக்கும். காட்பாடி, தன் மகனிடமில்லாமல் வேறொருவருக்கு போவதை துரைமுருகன் ஒப்புக்கொள்வாரா எனத் தெரியவில்லை என்கிறார்கள் உட்கட்சி விவகாரம் அறிந்தவர்கள்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை, ஆற்காடு, அரக் கோணம், சோளிங்கர் என நான்கு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய ராணிப்பேட்டை மா.செ.வாக அமைச்சர் காந்தி உள்ளார். வடக்கு, தெற்கு என இரண்டாக மாவட்டத்தைப் பிரிப்பதற்கான வாய்ப்பு கள் அதிகமுள்ளது என்கிறார்கள் நிர்வாகி கள். தெற்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு, ஆற்காடு தொகுதியில் இரண்டாவது முறை யாக வெற்றிபெற்ற மாவட்ட இளைஞ ரணி அமைப்பாளரும், சபரீசனோடு நெருக்கமானவருமான எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன் காத்துக்கொண்டிருக்கிறார். அதேபோல், அமைச்சர் காந்தியின் மகனும், சுற்றுச் சூழல் அணியின் மாநில துணைச் செயலாளருமான வினோத்காந்தியும் எதிர்பார்க்கிறார். மா.செ. காந்தி, அந்த பதவியை விட்டுத்தரமாட்டார் என்கிறார்கள். அதனால் இங்கு மாற்றத்துக்கு வாய்ப்பில்லை என்கிறார்கள்.
அரக்கோணம் (தனி):
அரக்கோணம் (தனி), சோளிங்கர் தொகுதிகளை இணைத்து உருவாக்கப்படும் புதிய மாவட்டத்தை வன்னியர் சமுதாயத்துக்கு என ஒதுக்கினால், அங்கே வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த நெமிலி ஒ.செ. பெருமாள், நெமிலி ஒன்றிய சேர்மன் வடிவேல், அரக்கோணம் கிழக்கு ஒ.செ. தமிழ் செல்வன் ஆகியோர் உள்ளனர். இப்பகுதியில் மா.செ. பதவிக்கு பொருத்தமான ஆட்கள் இல்லை என்கிறார்கள் கட்சியினர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப் பத்தூர் என நான்கு தொகுதிகள் உள்ளன. மா.செ.வாக இருப்பவர் தேவராஜ். திருப்பத்தூர் வடக்கு மாவட்டம், தெற்கு மாவட்டம் என இரண்டாகப் பிரிக்கப்படும்போது, ஆம்பூர், வாணியம்பாடி தொகுதிகள் ஒரு மாவட்டமாகவும், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் மற்றொரு மாவட்டமாகவும் பிரியும். இதில் ஒரு சிக்கல் உள்ளது. சிட்டிங் மா.செ. தேவராஜ், வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட ஆலங்காயம் செக்கு மேடு கிராமத்தை சேர்ந்தவர். இவர் ஜோலார்பேட்டையில் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். மாவட்டம் பிரிக்கப்படும்போது எந்த மாவட்டத்துக்கு செயலாளராக இருப்பார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. மாவட்டம் சீரமைக்கப்பட்டபின்பே யாருக்கு பதவி என் பதில் கடும் போட்டி நிலவும். இரண் டாவது முறை எம். எல்.ஏ.வாகவுள்ள நல்லதம்பி, கட்சி யில் சீனியரான திருப்பத்தூர் ந.செ. ராஜேந்திரன், மாவட்ட சேர்மன் சூரியகுமார், பெண் கோட்டாவில் மாவட்ட கவுன்சிலர் கவிதா, எம்.பி. கதிர்ஆனந்த் ஆதரவாளர் ந.செ. சாரதிகுமார் ஆகியோர் மா.செ. பதவியைப் பெறுவதற்காக அமைச்சர் வேலுவை வலம் வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், வடக்கு, தெற்கு எனப் பிரிக்கப்பட்டுள்ளது. இரண்டு தொகுதிக்கு ஒரு மா.செ. எனப் பிரிக்கப்படும் பட்சத்தில், கூடுதலாக இரண்டு மா.செ. பதவிகள் உருவாக வாய்ப்புள்ளது. தெற்கு மாவட்ட செய லாளராக அமைச்சர் எ.வ.வேலு உள்ளார். நான்கு தொகுதி யிலிருந்து இரண்டு தொகுதியாகச் சுருங்கும்போது, மா.செ.வாக இருக்க அமைச்சர் விரும்பமாட்டார், தலை மைக் கழக பதவி வாங்கிக்கொள்வார் என்கிறார்கள் அவருடன் இருப்பவர் கள்.
தெற்கு மாவட்ட சீரமைப்பில், கிழக்கு, மேற்கு எனப் பிரியும்போது, திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர் தொகுதிகளை உள்ளடக்கியதாக கிழக்கு மாவட்டம் இருக்கும். இதில் கிழக்கு மா.செ. பதவியைத் தனக்கு பெறுவதற் காக, அமைச்சரின் மகனும், நிழல் மா.செ.வாக வலம்வருபவருமான மருத்துவர் கம்பன் முயற்சி செய்கிறார். அவருக்கு நேரடிப் போட்டியாக யாரும் வரவில்லையென்றாலும், மறைமுகமாக தலைமையிடம் சிலர் முயற்சித்து வருகின்றனர்.
மாநகர செயலாளர் பதவியை கம்பனுக்கு தாருங்கள், மா.செ. பதவியை முதலியார் சமுதாயத்துக்கு தாருங்கள் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.
திருவண்ணாமலை மேற்கு மாவட்டமாக செங்கம் (தனி), கலசப்பாக்கம் தொகுதிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த மா.செ. பதவிக்கு சிட்டிங் திருவண்ணாமலை எம்.பி. யும், மாவட்ட இளைஞரணி அமைப்பாளருமான அண்ணாதுரை, செங்கம் எம்.எல்.ஏ. மு.பெ.கிரி, கலசப்பாக்கம் எம்.எல்.ஏவும், ஒ.செ.வுமான சரவணன் ஆகியோர் முயற்சி செய் கின்றனர்.
இரண்டு முறை எம்.பி., மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், உதயநிதி ஆதரவாளர் என்கிற தகுதியோடு அண்ணாதுரை முன்னிலை வகிக்கிறார். மாவட்ட துணைச்செய லாளர், இரண்டு முறை எம்.எல்.ஏ. என்கிற முறையில் மு.பெ.கிரியும் அடுத்த இடத்திலிருக்கிறார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக முதலியார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மா.செ. பதவியில் இல்லை. அதனால் இங்கு முதலியார் சமு தாயத்தை சேர்ந்தவர் தான் மா.செ.வாக வேண்டும் என்கிற குரல் எழுந்துள்ளது. அதன்படி அண்ணாதுரை, சரவணன் இருவரும் ரேஸில் உள்ளனர். பட்டியலின சமு தாயத்துக்கு மா.செ. பதவி தரத் தலைமை விரும்பும் பட்சத்தில், எம்.எல்.ஏ. கிரிக்கு வாய்ப்புள்ளது. "அதே பட்டியலின சமுதாயத்தை சேர்ந்தவரான நான், 25 ஆண்டுகளாக தனி, பொதுப் பிரிவுகளில் ஒன்றியக்குழு சேர்மன், மாவட்ட துணைச்செயலாளராக இருந்துள்ளேன்'' என புதுப்பாளையம் சுந்தரபாண்டியன் தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தில் போளூர், ஆரணி, வந்தவாசி, செய்யார் என நான்கு தொகுதிகள் உள்ளன. இதில் செய்யாறு, வந்தவாசி தொகுதிகள் வடக்கு மாவட்டமாகவும், ஆரணி, போளூர் தொகுதிகள் தெற்கு மாவட்டமாகவும் பிரிக்கப்பட வாய்ப்புள்ளது. இப்போது ஆரணி தொகுதி எம்.பி.யாகவுள்ள தரணிவேந்தன் மா.செ.வாகவும் உள்ளார். இவர் வன்னிய சமுதாயத்தை சேர்ந் தவர் என்பதால் மற்றொரு மா.செ.வாக முதலியார் சமுதா யத்தை சேர்ந்தவரை நியமிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள் உடன்பிறப்புகள்.
மா.செ. பதவியைப் பிடிக்க போளூர் பகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. ஒ.செ. கே.வி.சேகரன், சேத்பட் ஒன்றிய சேர்மனின் மகனும், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளருமான மணிகண்டன் ஆகியோர் போட்டி போடுகின்றனர். ஆரணியில் ந.செ. ஆரணி சேர்மன் ஏ.சி.மணி, ஒ.செ. எஸ்.எஸ்.அன்பழகன், மாவட்ட துணைச்செயலாளர் விண்ணமங்களம் ரவி ஆகியோர் ஆசைப்படுகின்றனர். இவர்களில் யாருக்கு நல்வாய்ப்பு வாய்க்குமென்பது விரைவில் தெரியவரும்!
-து.ராஜா
படங்கள்:எம்.ஆர்.விவேகானந்தன்