தி.மு.க.வின் 15-ஆவது உட்கட்சி தேர்தலில் மா.செ. பதவிக்காக வேட்புமனு தாக்கல் 22-ஆம் தேதி தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் இப்போதே குமரி மாவட்ட தி.மு.க.வில் சுனாமி சுழன்றடிக்கிறது.

குமரி மாவட்டத்தில் கிழக்கு மாவட்டத்துக்கு மேயர் மகேஷுக்கும் மேற்கு மாவட்டத்துக்கு மந்திரி மனோ தங்கராஜுக்கும் போட்டி இருக்காது என்று பலரும் எண்ணி வந்த நிலையில், திடீரென்று மாஜி மந்திரி சுரேஷ்ராஜன் ஆதரவாளர்களே மா.செ. பதவிகளுக்குப் போட்டியிடுவதால், இருவரும் கடும் போட்டிக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

dd

Advertisment

இது குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க. உ.பி.க்கள், நாகர்கோவில் மேயர் தேர்தலில் மகேஷுக்கு எதிராக சுரேஷ்ராஜன் செயல்பட்ட தால், அவருடமிருந்த கி.மா.செ. பதவியை பறித்து, மகேஷை பொறுப்பாளராக்கியது கட்சித் தலைமை. இப்படி நடவடிக்கை எடுத்த 3 ஆவது நாள், நாகர்கோவிலுக்கு வந்த முதல்வர் ஸ்டாலின், சுரேஷ்ராஜனின் நெருங்கிய ஆதரவாளர்களான ஒ.செ.க்களாக இருந்த தாமரைபாரதி, நெடுஞ்செழி யன் மற்றும் மதியழகன் ஆகியோரைப் பார்த்து, "சுரேஷ்ராஜன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை சரிதானே?''’ என்று கேட்டபோது... அதற்கு அவர்கள், "தலைவர் எந்த முடிவை எடுத்தாலும், அது கட்சியின் நல்லதுக்காகத்தான் இருக்கும்'' என்றனர். பின்னர் ஸ்டாலின், "சுரேஷ்ராஜனை கட்சித் தேர்தலில் போட்டியிடச் சொல்லுங்கள் பார்ப்போம்''’என்றிருக்கிறார். இது சுரேஷ்ராஜன் தரப்புக்கு ஆறுதலைத் தந்தது. இந்த நிலையில், மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மகேஷ், உட்கட்சி தேர்தலில் சுரேஷ்ராஜனின் ஆதரவாளர்கள் ஓருவரைக்கூட விட்டுவைக் காமல், எல்லாரையும் கட்சிப் பொறுப்பில் இருந்து தூக்கிவிட்டார். இதன்மூலம் சுரேஷ்ராஜன் தரப்புக்கு அவர் செக் வைத்தார்.

இதற்கிடையே சுரேஷ்ராஜன் ”"மா.செ. பதவிக்குப் போட்டியிட நான் வேட்புமனு தாக்கல் செய்யலாமா?'’என்று அறிவாலயத்தைத் தொடர்பு கொண்டு கேட்க, "அது, ”தளபதியிடம் கேட்டுச் சொல்லுகிறோம்'’என்றது. எனினும் கடைசிவரை எந்த பதிலும் வராததால், சுரேஷ்ராஜன், வேட்புமனுவைத் தாக்கல் செய்யவில்லை. இது அவருடைய ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது

இதனால் கி.மா.செ. ஆக மேயர் மகேஷ் போட்டியின்றி வெற்றி பெறுவார் என்ற நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் எக்ஸ் மா.மீனவரணி செயலாளர் நசரேத் பசிலியான், எக்ஸ் மா. அவைத்தலைவர் ஜோசப்ராஜ் ஆகியோர் வேட்புமனுவைத் தாக்கல் செய்து மகேஷுக்கு போட்டியை ஏற்படுத்தி நெருக்கடி யை உண்டாக்கியிருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் ஓரு கட்டத்தில் சுரேஷ்ராஜனுக்கு ஆதரவாளர்களாக வலம் வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

dd

Advertisment

இதில் நசரேத் பசிலியான் யார் மா.செ.ஆனாலும் அவருடன் சேர்ந்து கட்சிப் பணியாற்றக் கூடியவர். சமீபத்தில் மகேஷ் பொறுப்பாளரானதும் அவருக்கு நெருக்கமாக இருந்து வந்ததோடு மகேஷ் மேயர் ஆவதற்கு வைட்டமின் "ப'வைக் கொடுத்து உதவியவர் தற்போது அவர்களுக் குள் திடீரென்று ஏற்பட்ட மனக்கசப் பால் மகேஷை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய் திருக்கிறார்.

இதே போல் மேற்கு மாவட்டத்தில் மந்திரி மனோ தங்கராஜை எதிர்த்து ஆரம்பத்தில் இருந்தே சுரேஷ்ராஜனின் தீவிர ஆதரவாளராக இருந்து வரும் மா.து.செ. ஜான் கிறிஸ்டோபர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவருடைய அணியில் இருக்கும் பத்மநாபபுரம் எக்ஸ் நகர.செ.மணி, குழித்துறை எக்ஸ் நகர.செ. ஆசைத்தம்பி, ஒ.செ.க்கள் சிற்றார் ரவிசந்திரன், மனோன்மணி, மா.பிரதிநிதி ஷாபு இவர்களெல்லாம் தற்போது நடந்த உட்கட்சித் தேர்தலில் சுரேஷ்ராஜனின் தீவிர ஆதரவாளர்கள் என்று மனோதங்கராஜால் பதவி பறிக்கப்பட்டவர்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் ஏற்கனவே ஒருங்கிணைந்த மாவட்டமாக இருக்கும்போது நடந்த மா.செ. தேர்தலில் இருந்த கடுமையான போட்டிக்கு பிறகு, 10 ஆண்டுகள் கழித்து தற்போது நடக்கும் தேர்தலில் அந்த மாதிரியான கடுமையான போட்டி ஏற்பட்டிருக்கிறது'' என்கிறார்கள் உ.பி.க்கள்.

மகேஷ் மற்றும் மனோ தங்கராஜ் ஆதரவாளர்கள் கூறும் போது...’"கட்சித் தேர்தலில் போட்டியிருந்தால் தான் வெற்றி பெற்ற பிறகு செயல்பாடுகளும் நன்றாக இருக்கும். அதற்காக ஒருவரைத் தூண்டி விட்டுப் போட்டியிட வைக்கக்கூடாது. அதனால விரோதம் தான் உருவாகுமே தவிர கட்சி வளராது. அந்த வேலை யைத்தான் சுரேஷ்ராஜன் இப்போது செய்கிறார். மகேசும் மனோ தங்கராஜும் போட்டியின்றி மா.செ. ஆனால் சுரேஷ்ராஜனுக்கு, தலைமையில் இருக்கிற கொஞ்ச நஞ்ச பெயரும் கெட்டுப் போயிடும். அதுனால தான் தன் ஆதரவாளர்களைத் தூண்டிவிட்டுப் போட்டி யை ஏற்படுத்தி இருக்கிறார்''” என்கிறார்கள் காட்டமாய்.

இந்த நிலையில் மீண்டும் சுரேஷ்ராஜன் மா.செ. ஆகி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த இன்னொருவர் ஆஸ்டின். மகேசும் மனோ தங்கராஜும் வேட்புமனு தாக்கல் செய்யும் போது பின்னால் நின்ற ஆஸ்டினை, மந்திரி கே.என்.நேரு முன்னால் வரச் சொல்லி, ஆஸ்டின் கையால் மனுத்தாக்கல் செய்யவைத்தார். கிழக்கு மாவட்டத்தில் ஆஸ்டின் எந்த ஓரு பதவிக்கும் போட்டியிடாதது குறித்து அவரின் ஆதரவாளர் ஒருவர் கூறும் போது... ’"சுரேஷ்ராஜன் மா.செ. ஆகக் கூடாது என்பதுதான் ஆஸ்டினின் எண்ணம். அது நிறைவேறிவிட்டது. மற்ற படி அவர் குமரி தி.மு.க.வில் பதவி இல்லாவிட்டாலும் சாணக்யனாக இருப்பார்'' என்கின்றனர்.

இப்படி தேர்தல் களம் கொதிப்பேறி இருப்பதால், குமரி மாவட்ட தி.மு.க. பலத்த பரபரப்பை சந்தித்துக்கொண்டு இருக்கிறது.