ஆளும்கட்சி பிரமுகர் ஒருவர், எதிர்க்கட்சியாகக் கூட செயல்படமுடியாத அ.தி.மு.க.வில் இணைந்து உடன் பிறப்புகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க. முன்னாள் செயலாளர் காசி, கடந்த வாரம் தி.மு.க.விலிருந்து விலகி தனது ஆதரவாளர்களுடன், முன்னாள் அமைச்சரும், மா.செ.வுமான கே.சி.வீரமணிக்கு சால்வை அணிவித்து அ.தி.மு.க.வில் இணைந்து தி.மு.க.வினருக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளார்.
காசி தரப்பில் கேட்டபோது, “"2016 சட்டமன்றத் தேர்தலின் போது ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க. கே.சி.வீரமணிக்கு ஆதரவாகவும், தி.மு.க. வேட்பாளர் கவிதா தண்டபாணிக்கு எதிராகவும் வேலை செய்து தி.மு.க.வைத் தோற்கடித்தார்கள் வீரமணியின் அண்ணனும், தி.மு.க. ஜோலார் பேட்டை மேற்கு ஒ.செ.வுமான கே.சி.அழகிரியும், இப்போது மாவட்ட சேர்மனாகவுள்ள சூர்யகுமாரும். இதுபற்றி தலைமையிடம் புகார் தந்ததன் அடிப்படையில் இருவரும் கட்சியைவிட்டு நீக்கப்பட்டனர். அழகிரி வகித்த ஒ.செ. பதவி, கட்சி விசுவாசியான காசிக்கு தரப்பட்டது.
மா.
ஆளும்கட்சி பிரமுகர் ஒருவர், எதிர்க்கட்சியாகக் கூட செயல்படமுடியாத அ.தி.மு.க.வில் இணைந்து உடன் பிறப்புகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க. முன்னாள் செயலாளர் காசி, கடந்த வாரம் தி.மு.க.விலிருந்து விலகி தனது ஆதரவாளர்களுடன், முன்னாள் அமைச்சரும், மா.செ.வுமான கே.சி.வீரமணிக்கு சால்வை அணிவித்து அ.தி.மு.க.வில் இணைந்து தி.மு.க.வினருக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளார்.
காசி தரப்பில் கேட்டபோது, “"2016 சட்டமன்றத் தேர்தலின் போது ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க. கே.சி.வீரமணிக்கு ஆதரவாகவும், தி.மு.க. வேட்பாளர் கவிதா தண்டபாணிக்கு எதிராகவும் வேலை செய்து தி.மு.க.வைத் தோற்கடித்தார்கள் வீரமணியின் அண்ணனும், தி.மு.க. ஜோலார் பேட்டை மேற்கு ஒ.செ.வுமான கே.சி.அழகிரியும், இப்போது மாவட்ட சேர்மனாகவுள்ள சூர்யகுமாரும். இதுபற்றி தலைமையிடம் புகார் தந்ததன் அடிப்படையில் இருவரும் கட்சியைவிட்டு நீக்கப்பட்டனர். அழகிரி வகித்த ஒ.செ. பதவி, கட்சி விசுவாசியான காசிக்கு தரப்பட்டது.
மா.செ.வாக இருந்த தேவராஜ் பதவியும் பறிக்கப்பட்டு முத்தமிழ்ச் செல்வியிடம் வழங்கப்பட்டது. 4 ஆண்டுகளாக ஒ.செ. பதவியில் சிறப்பாகப் பணியாற்றிய காசியை, மீண்டும் தேவராஜ் மா.செ. பதவிக்கு வந்ததும், 2020 டிசம்பர் மாதம் பதவியிலிருந்து மாற்றிவிட்டு சதிஷ்குமாரை மேற்கு ஒ.செ.வாக்கினார். இது நியாயமா? என கேட்டதுக்கு, முதலியார் சமுதாயத்துக்கு பிரதிநிதித் துவம் தரவேண்டும் என்பதால் மாற்றம்ன்னு சொன்னார். முதலியார் சமுதாயத்துக்கு பலமேயில்லாத ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் அவரை எப்படி ஒ.செ.வாக்கலாம் என கேட்டபோது பதில் இல்லை. பணம் வாங்கிக்கொண்டு முதலியார் சமுதாயத்தினருக்கு முக்கியத்துவம் தந்தார் தேவராஜ்.
2021 சட்டமன்ற தேர்தலின்போது நானும் வன்னியர்தான் எனச் சொல்லிக்கொண்டு காசியை வந்து சந்தித்தார் தேவராஜ். அப்போது உட்கட்சி தேர்தல் வரும்போது மீண்டும் பதவிதருகிறேன் எனச்சொல்லி சமாதானப்படுத்தினார். எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்றார். உள்ளாட்சி தேர்தல், உட்கட்சி தேர்தலின்போது எந்த பதவியும் தராமல் ஏமாற்றிவிட்டார். வயதானவர் கள் எனச் சொல்லி சிலரை ஒ.செ. பதவியில் இருந்து மாற்றியவர், அவர் களுக்கு செயற்குழு, பொதுக்குழு பதவி தந்தார். அதுகூட இவருக்கு வழங்க வில்லை. பதவி வழங்காதது மட்டுமல்ல, மா.செ.வும், ஒ.செ.வும் சுத்தமாக மதிக்கவில்லை, கட்சி நிகழ்ச்சிகளுக்குக் கூட அழைக்கவில்லை. மரியாதை இல்லாத இடத்தில் சுயமரியாதையின்றி இருப்பதைவிட வேறு கட்சிக்குப் போய்விடலாம் என அ.தி.மு.க.வுக்கு போய்விட்டார்''’என்கிறார்கள்.
"பதவியும் வேணாம், வருமானமும் வேண்டாம் என காசி போய்விட்டார். பல நிர்வாகிகள் முடிவெடுக்கமுடியாமல் மனவருத்தத்திலேயே உள்ளார்கள். இரண்டு மாதத்துக்கு முன்பு மாவட்ட செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கவுன்சிலரும், ஜோலார்பேட்டை கிழக்கு ஒ.செ.வுமான கவிதா தண்டபாணி பேசும்போது, "கட்சியினரை நிர்வாகிகள் மதிப்பதில்லை, கட்சியினர் சொல்லும் எந்த வேலையும் நடப்பதில்லை. கட்சிக்காரர்களின் கோரிக்கையை நிர்வாகிகள், அதிகாரிகள் யாரும் கேட்பதில்லை''’என பேசியதைக் கேட்டு ஒட்டுமொத்த கட்சியினரும் எழுந்து கைதட்டி தங்களது ஆதரவைத் தெரிவித்தார்கள்.
பல ஊராட்சிகளில் தலைவர் களாக தி.மு.க.வினர் இருக்கின்றனர். அவர்களால் தங்களது ஊராட்சியிலுள்ள மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணியாற்றும் பணித்தள பொறுப்பாளர்களைக்கூட மாற்ற முடியவில்லை. அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மாதாமாதம் பணித்தளப் பொறுப்பாளர்களை மாற்றச் சொல்ல, அதிகாரிகள் செய்தார்கள். இப்போது ஊராட்சிகளின் அதிகாரம் தலைவர் களிடம் உள்ளது, அவர்களால் மாற்றமுடியும். ஆனால் அதிகாரிகள் மாற்றவிடாமல் தடுக்கிறார்கள். காட்டேரி, பெரியமோட்டூர், ஏலகிரி ஊராட்சிகளில் இதே நிலை.
அ.தி.மு.க.வினர் ஊராட்சி மன்றத் தலைவர் களாக உள்ள கிராமங் களுக்கு எம்.எல்.ஏ. நிதி, எம்.பி. நிதி, மாவட்ட சேர்மன் நிதியிலிருந்து ஏதாவது ஒரு வேலைக்கு நிதி ஒதுக்கி அந்த வேலை யை அதே கிராமத்திலுள்ள கட்சிக்காரரிடம் கொடுத்து செய்வாங்க. தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் இந்த வேலையை நாங்கள் கொண்டுவந்து செய்திருக் கோம்னு சொல்லி ஓட்டுக் கேட்பாங்க, மக்களும் நம்புவாங்க, அப்படின்னு மாவட்ட பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலு, மா.செ. தேவராஜ் எம்.எல்.ஏ.விடம் முறையிட்டும் கண்டுகொள்ளவில்லை. இப்போதும் அதிகாரிகளுடன் சேர்ந்து அ.தி.மு.க.வினர்தான் ஆட்சிசெய்கிறார்கள். பதவிக்கு வந்தும் எதுவும் செய்ய முடியலயேன்னு கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் விரக்தியில் இருக்காங்க. தீபாவளி கிப்ட், பொங்கல் கிப்டெல்லாம் முகத்தில் சிரிப்பை வரவைக்குமே தவிர, தொண்டர்களின் அடிமனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தாது''’என்றனர் வேதனையுடன்.
இதுகுறித்து மா.செ.வும், ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான தேவராஜ் தரப்பில் கேட்டபோது, "ஒரு தொகுதியில் ஒரே சாதி மக்களே பெரும்பான்மையாக இருக்கிறாங்கங்கறதுக்காக எல்லா பதவிகளையும் ஒரே சமுதாயத்துக்கே தரமுடியாது. மற்ற சமுதாயத்தினருக்கும் பதவிகள் தரவேண்டும். அதன்படியே தரப்பட்டது. காசிக்கு மாவட்ட அளவில் பதவி தருவதாக மா.செ.வே பேசினார். ஆனால் அவர் ஒ.செ. பதவியே வேண்டும் எனக் கேட்டதால் எந்த பதவியும் தரமுடியவில்லை. கட்சிக்காரர்களுக்கு தேவையானதை செய்துகொண்டுதான் இருக்கிறோம். வேலை செய்யாத, உத்தரவுகளை மதிக்காத அதிகாரிகளிடம் சண்டை போட்டால் மிரட்டுகிறார்கள் என திசை திருப்புகிறார்கள், இதனால் எல்லாவற்றையும் பக்குவமாக செய்யவேண்டியிருக்கிறது''’என்கிறார்கள்.