ட்சி நிர்வாக வசதிக்காக நீலகிரி மாவட்டம் பந்தலூர் ஒன்றியத்தை கிழக்கு, மேற்கு என இரண்டாகப் பிரித்துள்ளது அறிவாலயம். மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் முபாரக் சிபாரிசின்படி, மேற்கு ஒன்றிய செய லாளராக சிவானந்த ராஜா நியமிக்கப்பட்டார். கட்சித் தொண்டர்களுக்கு இவருக்கும் கொரோனா காலத்துக்கு முன்பிருந்தே சமூக இடைவெளிதான்.

கிழக்கு ஒ.செ. யாரு? அதையேதான் அந்த ஒன்றிய உ.பி.க்களும் கேட்கிறார்கள்.

hills

ஒ.செ. அட்ரஸ் எங்கே இருக்கு? தமிழ்நாட்டின் பந்தலூர் ஒன்றியத்துக்கு கேரளா மாநிலத்து அம்புலம்புழாவைச் சேர்ந்த சுஜேஸ் என்பவர் தி.மு.க. ஒ.செ.வாகியிருக்கிறார். இவர் அ.தி.மு.க.வின் நீலகிரி மாவட்ட பொறுப்பாளரும் கொடநாடு கொலை- கொள்ளை வழக்கில் தொடர்புடையவருமான சஜீவனுக்கு வேண்டியவர். இருவரும் கேரளாக் காரர்கள். அ.திமு.க. சஜீவனின் காய் நகர்த்தலில் தி.மு.கவில் ஒ.செ. நியமனம் நடந்திருக்கிறது என்கிறார்கள்.

Advertisment

""கூடலூர் தி.மு.க. எம்.எல்.ஏ. திராவிடமணிக்கு சீட் கிடைக்க சிபாரிசு செய்தவர் தொகுதி எம்.பி யான ஆ.ராசா. 2011ல் பலமான லீடிங்கில் ஜெயித்த திராவிடமணி, 2016ல் குறைந்த லீடிங்கில்தான் ஜெயித்தார். அதனால், மலைப்பகுதியல் கலைஞர் காலத்தில் குடியமர்த்தப்பட்ட, இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய குடும்பத்தைச் சேர்ந்த தீவிர தி.மு.க.காரருக்கு சீட் கிடைப்பதில் ஆ.ராசா ஆர்வம் காட்டுகிறார். அந்த நபருக்கும் முபாரக்குக்கும் ஆகாது. திராவிடமணியைக் காப்பாற்ற, சஜீவன் ஆளை ஒ.செ.வாக நியமிக்கச் செய்துவிட்டார்'' என உ.பி.க்கள் குமுறுகிறார்கள்.

hills

அத்துடன் மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ரமேஷூக்கு சஜீவன் வலை வீச, தனக்கு கீழ் உள்ள கட்சியின ருடன் சஜீவனின் ஜோதியில் ஐக்கியமாகி விட்டான் ரமேஷ். தி.மு.க.வின் வாக்கு வங்கி அதிகமுள்ள கரியச்சோலை கிராமத்தை குறி வைத்து செயல்படுகிறார் சஜீவன். அங்கே தி.மு.க. மகளிரணியைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பெண்களை... அ.தி.மு.க. ddபந்தலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் அபு மூலம் வரவழைத்து .அவர்களுக்கு வேண்டியதை எல்லாம் செய்து கொடுத்து கட்சிக்குள் இணைத்திருக்கிறார் சஜீவன் . நெல்லியாளம் நகர தி.மு.க அவைத்தலைவர் ராமச்சந்திரனும் சஜீவனால் அ.தி.மு.க. பக்கம் சாய்ந்துவிட்டார்.

Advertisment

அதே நேரத்தில், கூடலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மசினகுடியில் உள்ள 100க்கும் அதிகமான அ.தி.மு.க.வினர் தி.மு.கவில் இணைய விரும்பி ஒ.செ.லியாகத் அலியைத் தொடர்பு கொண்டும், மாவட்ட பொறுப் பாளர் முபாரக்குக்கு தகவல் தெரிவித்தும் ரெஸ்பான்ஸ் இல்லையாம். தி.மு.க. தரப்பிலிருந்தே சஜீவனுக்கு இந்த தகவல் போக, கட்சி மாற இருந்தவர்கள் சமாதானப்படுத்தப் பட்டுள்ளார்கள்.

சஜீவனிடம் விலை போகும் நீலகிரி தி.மு.க.வை காப்பதற்கு தலைமையிலிருந்து மீட்பர் ஒருவரை தளபதி அனுப்பினாலொழிய, மலை இடுக்கிலிருந்து சூரியன் வெளியே வராது என்கிறார்கள் உ.பி.க்கள் வேதனையுடன்.

-அருள்குமார்

_______

ஒ.செ. காட்டிய மரியாதை?

மாவட்ட அரசியல்களே பரத்துக்கிடையே பந்தலூர் மேற்கு ஒ.செ சிவானந்தராஜா, துணை செயலாளர் குழந்தைவேலுவிடம் நாகரீகமாகப் பேசும் ஆடியோ .

சிவானந்த ராஜா: குழந்தைவேலு...

குழந்தைவேலு : என்ன சிவா...

""நேத்து மீட்டிங் போட் டீங்க போல. ஆனா ஒரு வார்த்தை கூட என் கிட்ட சொல்லலை.''

சி. ராஜா: .சொல்ல வேண்டிய அவ சியமில்லை .

s

கு.வே. : ...ஏன் இவ்வளவு நாளா சொல்லலியா? நீங்க எனக்கு ஒன்றிய செயலாளராத்தானே இருக்கறீங்க? இருக்கறீங்களா? இல்லையா?

சி.ராஜா : ஓ... அப்படியா? நாளைக்கு சேரங்கோடுல கூட்டம் இருக்கு. அங்க வாங்க. நேர்ல பேசிக்கலாம் .

கு.வே. : ...அது இருக் கட்டும் நிலாக் கோட்டை கூட்டத்துக்கு ஏன் கூப்பிடலை? நான் துணை செயலாளர்தானே?

சி. ராஜா : அப்படியா? முப்பெரும் விழாவுக்கு எத்தனை வசூல் பண்ணிக் கொடுத்தீங்க?

கு.வே. : நீங்க வசூலுக்கு போகும் போது உங்க பின்னால யாரை கூப்பிட்டுப் போனீங்க?

சி. ராஜா: அதெல்லாம் என் இஷ்டம். எனக்கு நம்பிக்கையா இருக்கறவங்க கூடத்தான் போக முடியும்.

கு.வே. : அப்ப சிவா நாங்க நம்பிக்கையில்லையா?

சி. ராஜா: அடப் போடா பன்னி......

என கெட்ட வார்த்தை ஒன்றை சொல்லி விட்டு லைனை கட் செய்கிறார் சிவானந்த ராஜா.

கட்சியின் நிர்வாகிக்கே இவ்வளவுதான் சிவானந்த ராஜா மரியாதை தருகிறார் என்றால்... எங்களைப் போன்ற சாதாரண தொண்டர்களுக்கு என்ன மரியாதை என்கிறார் கள் உடன் பிறப்புகள் பரிதாபமாய்.