தி.மு.க. அரசின் காட்ஃபாதராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் உருவாகிவருகிறார் என்கிற சீக்ரெட் தகவல் கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

dd

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பொறுப்பேற்று மூன்றரை ஆண்டுகள் கடந்திருக்கின்றன. இந்த காலகட்டத்தில் மக்கள் நலத் திட்டங்கள், புதிய அறிவிப்புகள், தேர்தல் வாக்குறுதிகள் என பலவற்றையும் நிறைவேற்றி வருகிறார் ஸ்டாலின். அதேசமயம், அரசு கஜானா கடுமையான நிதி நெருக்கடிகளில் சிக்கியிருக்கும் சூழலில், அதனை சமாளிப்பதற்காக கடன்கள் வாங்குவதும் அதிகரித்திருக்கிறது. மக்களின் அன்றாட வாழ்வில் இணைந்துள்ள பல்வேறு இனங்களில் கட்டண உயர்வுகள், வரி உயர்வுகள், விலைவாசி உயர்வுகள் என மறைமுகமாக பல உயர்வுகளும் நடந்துகொண்டுதானிருக்கின்றன.

மேலும், அரசுக்கு வருவாய் கொடுக்கக்கூடிய சில முக்கிய துறைகளில் ஊழல்கள் அதிகரித்திருப்ப தும், அரசுக்கு கிடைக்கவேண்டிய வருவாயில் நட்டத்தை ஏற்படுத்துவதும் தொடர்கதையாக இருக்கின்றன. இதெல்லாம், முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்குச் செல்லாமல் தடுக்கப்படுகின்றன என்கிற எதிர்மறை விமர்சனங்களும் கடந்த சில மாதங்களாக எதிரொலிக்கத் தொடங்கியிருக் கிறது. இந்த சூழலில்தான், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக்வரதன் ஷெட்டி, தி.மு.க. அரசை மறைமுகமாக நிர்வகிக்கத் தொடங்கியிருக்கிறார் என்கிற தகவல் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியில் பரவிவருகிறது.

Advertisment

இதுகுறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, "கலைஞர் தலைமையிலான 2006-2011 ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தார் மு.க.ஸ்டாலின். ஒரு கட்டத்தில் துணை முதல்வரானார். அன்றைக்கு உள்ளாட்சித்துறையின் முதன்மைச் செயலாளராக இருந்தவர் அசோக்வர்தன் ஷெட்டி. துணை முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு அவருக்கு செகரட்டரியாகவும் மாறியிருந் தார். துணை முதல்வர் பொறுப்பில் இருந்து கொண்டு ஸ்டாலின் எடுக்கும் நிர்வாக ரீதியிலான நடவடிக்கைகளின் அறிவிக்கப்படாத ஆலோசக ராகவும் ஷெட்டி இருந்துவந்தார். சுருக்கமாகச் சொல்வதாயின், ஸ்டாலினுக்கு பக்கபலமாகவும் அனைத்துமாகவும் இருந்தவர் ஷெட்டி.

2011-ல் ஆட்சி மாற்றம் நடந்து முதலமைச்ச ராகிறார் ஜெயலலிதா. ஸ்டாலினை கைது செய்து உள்ளே அனுப்பத் துடிக்கிறார். அவர்மீது ஊழல் புகார் கொடுக்கச் சொல்லி அசோக் வர்தன் ஷெட்டிக்கு நெருக்கடி தரப்படுகிறது. ஆனால், ஷெட்டி மறுத்துவிடுகிறார். இதனால் கோபமான ஜெயலலிதா, தனது செகரட்டரிகள் மூலம், வி.ஆர். எஸ். வாங்கிக்கிட்டு சர்வீசிலிருந்து ஓடிப் போய்விடு என ஷெட்டியை மிரட்டுகிறார். வேறு வழி தெரியாமல் வீ.ஆர்.எஸ். கொடுத்து, ஐ.ஏ.எஸ். சர்வீசிலிருந்து ஓய்வுபெறுகிறார் ஷெட்டி.

அதேசமயம், அன்றைக்கு மத்திய அமைச்சராக இருந்த ஜி.கே.வாசனின் பெர்சனல் செக்ரட்டரியாக இருந்தவர் முருகானந்தம் ஐ.ஏ.எஸ். (தமிழக அரசின் தற்போதைய தலைமைச் செயலாளர்). முருகானந்தம், ஷெட்டியின் சிஷ்யர் என ஐ.ஏ.எஸ். அதிகாரிகளால் வர்ணிக்கப்படுபவர். தனது குருவுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளை உணர்ந்த முருகானந்தம், ஜி.கே.வாசனிடம், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் மத்திய அரசின் கடற்சார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியை ஷெட்டிக்கு கிடைக்க சிபாரிசு செய்கிறார். பதவியும் கிடைக்கிறது.

Advertisment

வீ.ஆர்.எஸ். வாங்கிய கையோடு மத்திய அரசு பணியில் அமர்ந்து ஜெயலலிதாவுக்கு செக் வைத்தார் ஷெட்டி. அதாவது, சர்வீசிலிருந்து என்னை விரட்டினால், வீட்டில் முடங்கி விடுவேன்னு நினைத்தீர்களோ? இதோ, மத்திய அரசு பணியில் உட்கார்ந்திருக்கிறேன் எனச் சொல்லாமல் சொன்னார் ஷெட்டி. துணைவேந்தர் பதவியின் காலம் முடிந்ததும் கனடாவுக்கு சென்று செட்டிலானார். அதேசமயம், ஸ்டாலினிடம் இருந்த நட்பும் தொடர்பும் நீடித்தபடி இருந்தது.

இந்த நிலையில், 2021-ல் ஆட்சிக்கு வருகிறது தி.மு.க. முதலமைச்சராகிறார் ஸ்டாலின். அப்போது, அரசின் ஆலோசகராகவும், ஸ்டாலினின் நிர்வாகத் தை கவனித்துக்கொள்பவராகவும் ஒருவர் நியமிக் கப்பட வேண்டும் என்கிற யோசனை வந்தபோது, கலைஞரிடம் செகரட்டரியாக இருந்த சண்முக நாதன், ராஜமாணிக்கம் மற்றும் ஸ்டாலினின் நட்பிலிருந்த அசோக்வர்தன் ஷெட்டி ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. ஆனால், சில சக்திகளால் அரசு ஆலோசகர் என்கிற யோசனை யே தடுக்கப்பட்டதால், ஆலோசகர் என்கிற கான் செப்ட்டை தள்ளி வைத்துவிட்டார் ஸ்டாலின்.

இந்த சூழலில், மத்திய அரசு பணியில் முக்கியத்துவமில்லாமலிருந்த முருகானந்தம், ஷெட்டியின் சிபாரிசில் தமிழக அரசு பணிக்கு கொண்டு வரப்பட்டார். அவருக்காக ஸ்டாலினிடம் நிறைய பேசியிருந்தார் ஷெட்டி. அரசுப் நிர்வாகம் சார்ந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடன் நடந்த ஒரு ஆலோசனைக் கூட்டத்தில், தனது முதன்மை செயலாளராக அப்போதிருந்த உதயச் சந்திரனிடம் (இப்போது நிதித்துறை செயலாளர்), நிர்வாக ரீதியாக முருகானந்தத்தின் யோசனை யையும் கேட்டுக்கொள்ளுங்கள் என உத்தர விட்டார் ஸ்டாலின். அப்போதிலிருந்தே, அரசு நிர்வாகத்தில் ஷெட்டியின் சிஷ்யர் முருகானந்தத் தின் ரோலும் முக்கியமாக இருந்தது.

தலைமைச் செயலாளராக இருந்த இறையன்பு ஓய்வுபெற்றபோது, புதிய தலைமைச் செயலாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் சீனியாரிட்டியில் முதலிடத்திலிருந்த ஹன்ஸ்ராஜ் வர்மாவை நியமிக்க மேலிடம் தீர்மானித்திருந்தது. ஆனால், அது தடுக்கப்பட்டு, சிவ்தாஸ்மீனாவை நியமிக்க வைத்தனர். சிவ்தாஸ்மீனா மாற்றப்பட்டபோதும், சீனியாரிட்டிபடி கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்திலிருந்த சிலரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்ட போது, அதைத் தடுத்து முருகானந்தத்திற்கு சிபாரிசு செய்தார் ஷெட்டி. இவருக் காக வேறு சிலரின் அழுத் தங்களும் இருந்தன. இதனை யடுத்து தலைமைச் செய லாளரானார் முருகானந்தம்.

இப்படிப்பட்ட சூழலில் தான், அரசின் நிர்வாகரீதி யான பல தகவல்கள் முதல் வரின் கவனத்துக்குச் செல்லாமல் தடுக்கப் பட்டதை ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், சில ரூட்டுகளைப் பிடித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். அந்த நிலையில்தான், துணை முதல்வர் பொறுப்பு உதயநிதிக்கு தரப்பட்டது. இதற்கிடையே, நிர்வாகரீதியாக ஆலோசனை வழங்க ஷெட்டி யை கேட்டுக்கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.

இதனைத் தொடர்ந்து நிர்வாகத்திற்குள் அதிகாரப்பூர்வமற்ற வகையில் ஷெட்டியின் கை ஓங்கியிருக்கிறது. ஷெட்டியிடம் தினமும் ஆலோசிப்பதை முருகானந்தம் வழக்கமாக வைத்திருக்கிறார். அதன்படி, உதயச்சந்திரனிடம் கலந்து பேசி பல முடிவுகளை தீர்மானித்து அமல்படுத்துகிறார் முருகானந்தம். ஆக, தி.மு.க. அரசின் காட்ஃபாதராக உருவாகிவருகிறார் ஷெட்டி''‘என்று விரிவாக சுட்டிக்காட்டுகிறார்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தரப்பினர்.

தமிழக அரசின் காட்ஃபாதராக உருவாக விருக்கும் ஷெட்டி, நிர்வாகத்தினை சரிசெய்வாரா? என்கிற கேள்வியும் எதிரொலிக்கத் தொடங்கி யிருக்கிறது!

___________________

"நாக்கை அறுப்பேன்!'' -ஓம்கார் பாலாஜி திமிர் பேச்சு!

ss

ந்து மக்கள் கட்சி யின் தலைவர் அர்ஜூன் சம்பத் மகனும், அக் கட்சி யின் இளைஞரணித் தலை வரும், ஈஷாவின் சிஷ்யர் களில் ஒருவருமான ஓம்கார் பாலாஜி, நக்கீரன் இதழில், ஈஷா மைய நிறுவனம் குறித்தும் ஜக்கி வாசுதேவ் குறித்தும் பிரத்யேகமாக வெளியான கட்டுரைக்கு எதிராக கோவையில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்தில் நக்கீரன் ஆசிரி யருக்கு எதிராக வன்முறையைத் தூண்டும்விதமாக, "நக்கீரன் கோபால் ஆட ஒரே காரணம் தி.மு.க.வினுடைய தலைமைக் குடும்பம்தான். என்னிக்குமே ஸ்டாலின் முதல்வராக நீடித்துவிட முடியாது. உன்னைக் காப்பாற்று வதற்கு என்றென்றைக்குமாக கருப்பு சிவப்புக் கொடி அதிகாரத்தில் இருக்கப்போறது கிடை யாது. ஒரு நாள் ஆட்சி மாறும். அன்றைக்கு நீ பேசும் பேச்சுக்கு உனக்கு கைவிலங்கு மாட்டி உள்ளே போடுவோம். நாக்கை இழுத்து வைத்து அறுத்துப் போடுவேன்''’என பேசியது சர்ச்சையாகியிருந்தது.

இதையடுத்து ஓம்கார் பாலாஜியின் பேச்சைக் கேட்ட தி.மு.க.வைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அப்துல் ஜலீல், அவரது பேச்சுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார். ஏற்கெனவே இதே போன்று யூடியூபில் மற்றொருவரை ஓம்கார் பாலாஜி அவதூறாக பேசியிருந்த நிலையில், கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் நவம்பர் 10-ஆம் தேதி ஓம்கார் பாலாஜியைக் கைது செய்து விசாரித்து அனுப்பினர்.

ஜக்கியின் ஆதரவாளரான ஓம்கார் பாலாஜி, ஜக்கியின் தூண்டுதல் காரணமாகவே, இந்த வன் முறைப் பேச்சைப் பேசியிருந் தார். தனது பேச்சுக்காக தான் கைது செய்யப்படலாமென அச்சமெழுந்த நிலையில் அவர் முன்ஜாமீன் கோரி மனுத் தாக் கல் செய்திருந்தார். அரசுத் தரப்பில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளைக் கூறி அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிடப்பட்டது.

ஓம்கார் பாலாஜி, விசா ரணைக்கு ஆஜராகாத தால் அவர் விசாரணை யின்போது நேரில் ஆஜராகும்படி குறிப் பிட்டு நவம்பர் 13-ஆம் தேதிக்கு விசாரணை யைத் தள்ளிவைத்தார் நீதியரசர் ஏ.டி. ஜெகதீஷ்.

இத்தகைய வன் முறைப் பேச்சுக்களுக்கு எதிராக சட்டமும் நீதியும் உடனடி நடவடிக்கை மேற்கொண்டிருப்பது நம்பிக்கை யளிக்கிறது.

-கீரன்