மிழகம் முழுவதும் தனது தலைமையிலான தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைந் துள்ளதா? என்பதை அறிந்து கொள்ளவும், பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கவும், மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டிருந்த முதல்வர் ஸ்டாலின், முதல் பயணமாக கோவை மாவட்டத்தில் தனது ஆய்வினை நடத்தி முடித்திருக்கிறார்.

ஸ்டாலினின் இந்த ஆய்வுப்பணிகள் குறித்து விசாரித்தபோது, "தேர்தலுக்கு இன்னும் ஒன்னரை வருடங்களே இருக்கின்றன. எனவே தேர்தலை மனதில் வைத்தே இந்த ஆய்வு பணிகளுக்குத் திட்ட மிடப்பட்டுள்ளது. அதாவது, எதிர்வரும் சட்ட மன்றத் தேர்தலில் 200 இடங்களில் போட்டியிட்டு 200 இடங்களிலும் ஜெயிக்க வேண்டும் என்பது முதல்வரின் விருப்பமாக இருக்கிறது. இதற்கு தனது ஆட்சியின் சாதனைகளும், திட்டங்களும் சாட்சி களாக இருக்க வேண்டும் என நினைக்கிறார். கலைஞ ரின் தேர்தல் அறிக்கை எப்படி 2006-ல் கதா நாயகனாக இருந்ததோ, அதேபோல 2026-ல் தனது ஆட்சியின் திட்டங்கள்தான் ஹீரோவாக இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறார் ஸ்டாலின்.

sta

அதனால்தான், மக்கள் நலத்திட்டங்கள் மக்களிடம் சென்றடைந்துள்ளதா? என்பதை ஆராய்ந்து, அதன் முடிவுகளுக்கேற்ப, அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறிப்பாக, சில திட்டங்கள் நீண்ட மாதங்களாக முடிக்கப்படாமல் இருக்கும். எதனால் தடைப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்து ஆக்சன் எடுக்க வேண்டும். அதேபோல, கடந்த மூணரை ஆண்டுகாலத்தில் அறிவிக்கப்பட் டத் திட்டங்களில் சில தொடங்கப்படாமலும் இருக்கக்கூடும். அதற்கு காரணம் என்ன என்பதை யறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதையெல் லாம் தெரிந்துகொள்ளத்தான் இந்த ஆய்வுகள். தவிர, சில திட்டங்களை நேரடியாகத் தொடங்கி வைப்பதன் மூலம் மக்களுக்கும் முதல்வருக்கும் இடைவெளி இல்லை என்பதை உணர்த்துவதற்கும் தான் இந்த மாவட்டச் சுற்றுப்பயணம்'' என்று விவரிக்கிறார்கள் கோட்டை அதிகாரிகள்.

அந்த வகையில், முதல் ஆய்வுப் பயணத்தை துவக்க கோவைக்கு சென்ற ஸ்டாலினுக்கு விமானநிலையம் தொடங்கி, எல்காட் நிறுவனம் வரையில் தி.மு.க.வினரும் பொதுமக்களும் ஏக வரவேற்பை அளித்தனர். 4 கிலோ மீட்டர் தொலைவைக் கடக்க 1 மணி நேரம் பிடித்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி கவனித்துக் கொண்டார். "நல்லா இருக்கீங் களா முதல்வரே' என கேட்டு ஸ்டாலினை திக்குமுக்காட வைத்தனர் கோவைவாசிகள்.

Advertisment

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி யை விரைவுபடுத்துவதில் தகவல் தொழில் நுட்பத்துறையின் திறனை உணர்ந்து, விரைவான தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உகந்த வணிகச் சூழல்களை உருவாக்குவதில் தி.மு.க. அரசு கவனம் செலுத்தி வருவதன் அடையாளமாக, கோவை விளாங்குறிச்சியில் சுமார் 158 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில் நுட்பக் கட்டடத்தை திறந்து வைத்தார் ஸ்டாலின்.

sta

இந்த தொழில்நுட்ப வளாகத்தில் மின்னணு சார்ந்த பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளன. அதற்கான ஆணைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கி னார் ஸ்டாலின். இதன்மூலம், சுமார் 3,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள் தகவல் தொழில் நுட்பத் துறையினர்.

Advertisment

கோவை அனுப்பர்பாளையத்தில் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு பிரமாண்டமான நூலகம் மற்றும் 300 கோடியில் அமைக்கப்படவுள்ள அறிவியல் மையம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டினார் ஸ்டாலின். இந்த விழாவில் பேசிய அவர், "கோவையில் அரசுத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தத் திரும்பி வந்துள்ளார் செந்தில் பாலாஜி. அவரது வேகமான செயல்பாடுகளைப் பார்த்து சில தடைகளை இடையில் ஏற்படுத்தினர் (கைது நடவடிக்கை). அதையெல்லாம் உடைத்து மீண்டும் வந்துள்ளார். சென்னையில் அண்ணா நூலகம், மதுரையில் கலைஞர் நூலகம் உருவாக்கியுள்ளோம். அதேபோல, கோவையில் அமையும் இந்த நூலகத்துக்கு பெரியார் பெயர் வைக்கப்படும். 2026 ஜனவரியில் இந்த நூலகம் திறக்கப்படும்''’என்றார் பெருமிதமாக. மேலும், கோவை மாவட்டத்துக்கென பல்வேறு புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகளையும் வெளியிட்டார் ஸ்டாலின்.

இரண்டு நாள் அரசு முறைப் பயணத்தில் கோவை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்களை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டா லின், அரசு நிகழ்ச்சிகள் முடிந்ததும், தி.மு.க. தலைவராக மாறி, கோவை தி.மு.க.வினருடன் கட்சி ரீதியிலான ஆய்வுகளிலும் ஆலோசனையிலும் ஈடுபட்டார்.

போத்தனூரில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேரூர்க் கழக, ஒன்றியக் கழக, நகரக் கழக, பகுதிக்கழக நிர்வாகிகளும், மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மாநில நிர்வாகிகளுக்கு அனுமதி இல்லை. கூட்டத்தில் கலந்துகொண்டவர்களின் மொபைல் போன்களுக்கும் அனுமதி மறுக்கப் பட்டது.

மாவட்ட தி.மு.க.வின் மினிட் புத்தகத்தை எடுத்துவரச் செய்து அதனை ஆய்வு செய்தார் ஸ்டாலின். ஒரு வருடத்தில் எத்தனை கூட்டங்களை நடத்தியிருக்கிறார்கள் என்பதை ஆராய்ந்தார். இதனைத் தொடர்ந்து நிர்வாகிகளிடம் பேசிய அவர், ‘எவ்வித எதிர்பார்ப்புமின்றி கட்சிக்காக உழைக்கும் தொண்டர்களுக்கு நாம் என்ன செய்கிறோம் என்பதை நீங்கள் நினைத்துப்பார்க்க வேண்டும். என்றைக்காவது நினைத்துப் பார்த்ததுண்டா?

உங்களுக்கு கீழே உள்ள தொண்டர்களுக்கு நீங்கள்தான் பலமாகவும் பாலமாகவும் இருக்க வேண்டும். ஆனால், அப்படி இருப்பதாக எனக்கு தெரியவில்லை. தொண்டர்களுக்கும் உங்களுக்கும் இடைவெளி இருக்கக்கூடாது. இன்றைய இளைஞர் கள் ரொம்ப ஷார்ப்பானவர்கள். அவர்களிடம் நம் கட்சியின் கொள்கைகளை விதைப்பது முக்கியம். எதிர்காலத்திற்கான விதைகள் அவர்கள் தான்.

ஒவ்வொரு பகுதியிலும் பத்து, பதினைந்து கொள்கை வீரர்களாக இளைஞர்களை உருவாக்குங்கள். இது உங்களின் கடமைதானே! கட்சியின் வளர்ச்சிக்கு பேச்சாளர்கள் முக்கியம். அவர்களை அழைத்து வந்து பாசறைக் கூட்டங் களை நடத்துங்கள். கட்சிக்காக உழைப்பதையும் தாண்டி இன்னொரு பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. அதாவது, குடும்பத்திற்கும் நீங்கள் செய்யும் தொழிலுக்கும் நேரம் ஒதுக்குங்கள். ஒரு நாளில் 2 மணி நேரமும், வாரத்தின் இறுதியில் 1 நாளும் கட்சிக்காக ஒதுக்குங்கள். அது போதும்.

இன்னும் சொல்லப்போனால் நம் கழகத்திற்கு இருக்கும் கட்டமைப்பு போல தமிழ்நாட்டில் வேறு எந்த கட்சிக்கும் கிடையாது. நாம் நினைத்தால், எந்தச் செய்தியையும் ஆறரைக் கோடி வாக்காளர் களிடமும் கொண்டு சேர்த்துவிட முடியும். அந்தளவுக்கு நமக்கு கட்டமைப்பு இருக்கிறது. அதைப் பயன்படுத்தி நமது அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணிகளில் கவனம் செலுத்துங்கள். 2026-லும் நாம்தான் ஆட்சி அமைப்போம்''’என்று நிறைய அறிவுறுத்தல்களை நிர்வாகிகளுக்கு கொடுத்தார் ஸ்டாலின்.

இப்படி ஆட்சி மற்றும் கட்சி ரீதியிலான ஆய்வுக் கூட்டங்களை மாவட்டம் தோறும் நடத்தத் திட்டமிட்டுள்ள ஸ்டாலின், இதனூடாக, துறை வாரியாக ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவும் முடிவு செய்திருக்கிறார். பொதுவாக, துறை ரீதியிலான ஆய்வுக்கூட்டங்களின் போது, சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர், உயரதிகாரிகள் பலரும் கலந்துகொள்வர். அவர்களிடம் கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்புவார் முதல்வர்.

அப்போது துறையின் செயலாளராக உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்தான் பதிலளிப்பார்கள். சீனியர் அமைச்சர்களின் துறைகளாக இருந்தாலும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்தான் விளக்குவார்கள். அதிகாரிகள் சொல்வதில் ஏதேனும் மாறுபட்ட கருத்து இருந்தால் மட்டுமே சீனியர் அமைச்சர்கள் குறுக்கிடுவார்கள். மற்றபடி அதிகாரிகள் பதில் சொல்வதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

இனி நடக்கப்போகும் துறை வாரியான ஆய்வுக் கூட்டங்களில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பேசுவதற்கு பதில் சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் தான் பதில் அளிக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளார் ஸ்டாலின். அதற்கேற்பத்தான் துறை ரீதியான ஆய்வுகள் நடக்கவிருக்கின்றன. துணை முதல்வர் உதயநிதியும் பங்கேற்கவுள்ள அந்த ஆய்வுக் கூட்டங் களில் கடந்த மூணரை ஆண்டுகால ஆட்சியில் சட்டமன்றத்தில் அறிவிக்கப் பட்ட திட்டங்கள், தேர்தல் வாக்குறுதி களில் சொல்லப்பட்ட விசயங்கள் அனைத்தும் ஆராயப்படவிருக்கின்றன. இதற்கு அமைச்சர்கள்தான் பதிலளிக்க வேண்டும்.

இதன்மூலம், தனது துறையை சம்பந்தப்பட்ட அமைச்சர் எந்தளவுக்கு தெரிந்து வைத்திருக்கிறார்? ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை எந்தளவுக்கு வேலை வாங்கியிருக்கிறார்? திட்டங்கள் குறித்து அவருக்கு என்ன தெரிந்திருக்கிறது? போன்ற பல விபரங்களின் அடிப்படையில் அமைச்சர்களை எடை போடவிருக்கிறார் ஸ்டாலின். அதனடிப்படையில் கேபினெட் மாற்றமும் கூட நடக்கும். இனி வரும் நாட்கள் தி.மு.க. ஆட்சியிலும் கட்சியிலும் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது”என்கிறார்கள் கோட்டையிலும் அறிவாலயத்திலுமுள்ள உடன்பிறப்புகள்.

விஜய்யின் அரசியல் வருகையை ஒட்டி தனது தேர்தல் நடவடிக்கைகளை சுறுசுறுப்பாக்குவதில் தீவிர கவனம் செலுத்துகிறது தி.மு.க. தலைமை. அதற்கான முதல்கட்ட நகர்வுகள்தான் முதல்வரின் ஆய்வுப் பணிகள் என்பதே நிதர்சனம்!