ஈரோடு பாராளு மன்றத் தொகுதியில் நீண்ட காலத்துக்கு பிறகு தி.மு.க. நேரடியாகக் களம் காண்கிறது. வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஈரோடு தொகுதி எம்.எல்.ஏ., ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ., செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன் காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ. என கொங்கு மண்டலத்தை சேர்ந்த மூன்று அமைச்சர்கள் இத்தொகுதிக்குள் இருக்கிறார்கள். இந்த பாராளுமன்றத் தொகுதிக் குள் மூன்று சட்டமன்றத் தொகுதிகளில்தான் தி.மு.க. வென்றது. அந்த மூன்றிலும் வெற்றி பெற்றவர்கள் அமைச்சர்களாக உள்ளனர்.
தி.மு.க. சார்பில் கே.இ.பிரகாஷ் வேட் பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஈரோடு, சிவகிரி அருகேயுள்ள காணியம்பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். தி.மு.க. இளைஞர் அணியில் ஒன்றிய மற்றும் மாவட்ட அமைப்பாளராகவும், தற்போது மாநில துணைச் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். தி.
ஈரோடு பாராளு மன்றத் தொகுதியில் நீண்ட காலத்துக்கு பிறகு தி.மு.க. நேரடியாகக் களம் காண்கிறது. வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஈரோடு தொகுதி எம்.எல்.ஏ., ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ., செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன் காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ. என கொங்கு மண்டலத்தை சேர்ந்த மூன்று அமைச்சர்கள் இத்தொகுதிக்குள் இருக்கிறார்கள். இந்த பாராளுமன்றத் தொகுதிக் குள் மூன்று சட்டமன்றத் தொகுதிகளில்தான் தி.மு.க. வென்றது. அந்த மூன்றிலும் வெற்றி பெற்றவர்கள் அமைச்சர்களாக உள்ளனர்.
தி.மு.க. சார்பில் கே.இ.பிரகாஷ் வேட் பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஈரோடு, சிவகிரி அருகேயுள்ள காணியம்பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். தி.மு.க. இளைஞர் அணியில் ஒன்றிய மற்றும் மாவட்ட அமைப்பாளராகவும், தற்போது மாநில துணைச் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். தி.மு.க.வில் இளைஞர் அணிக்கு வாய்ப்பு தர வேண்டுமென்ற உதயநிதி ஸ்டாலினின் கோரிக்கை அடிப்படையில் ஈரோடு பிரகாசுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எளிமையான அணுகுமுறையும், நிர்வாகத் திறமையும் கொண்ட பிரகாசுக்கு, தொகுதி முழுக்க தி.மு.க.வினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் மத்தியில் நல்ல அறிமுகமுள்ளது. தேர்தல் களத்தில் பிரகாஷின் செயல்பாடுகள் சுறுசுறுப்பாக இருக்கும் என்கிறார்கள் தி.மு.க.வினர். மாவட்ட அமைச்சரான முத்து சாமி, மென்மையான போக்கு கொண்டவர். ஆனால் பிரகாஷ் கட்சிக்குள் அதிரடி காட்டி வருவதால் இவருக்கென்று ஆதரவாளர்கள் பலர் உள்ளார்கள். 21ஆம் தேதி, ஈரோடு தி.மு.க. மூத்த நிர்வாகிகள், தோழமைக்கட்சி நிர்வாகிகளை நேரில் சென்று சந்தித்து தேர்தல் பணியை தொடங்கினார் பிரகாஷ்.
அ.தி.மு.க.வில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் ஆற்றல் அசோக்குமார். இவரும் சிவகிரி அருகே உள்ள கொடுமுடி புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர். முன்பு ஈரோட்டை உள்ளடக்கிய திருச்செங்கோடு தொகுதியின் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.யான சவுந்திரம்தான் இவரது தாயார். அதேபோல், மொடக்குறிச்சி பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான டாக்டர் சரஸ்வதியின் மருமகன் இவர். பா.ஜ.க.விலிருந்த அசோக்குமார், சென்ற சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டார். ஆனால் இவரது மாமியார் டாக்டர் சரஸ்வதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதன்பிறகு எம்.பி. கனவில், ஈரோடு தொகுதிக்குள் பத்து ரூபாய்க்கு சாப்பாடு, கோயில் திருப்பணிகள் எனப் பல்வேறு நலப் பணிகளை செய்து வந்தார். பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தவுடன், எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து அ.தி.மு.க.வில் இணைந்தார் அசோக்குமார். அப்போதே ஈரோடு தொகுதி உனக்குத்தான் என எடப்பாடி உறுதி கொடுத்திருந்தார். தேர்தல் வெற்றிக்காக 100 கோடி வரை செலவு செய்வேனென்று தாராளம் காட்டி வருகிறார். அசோக்குமார் அ.தி.மு.க. வேட்பாளராக களமிறக்கப்பட்டதால் அதிக மகிழ்ச்சி அடைந்திருப்பவர்கள் ஈரோடு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள்தான். இத்தொகுதியில் பெரும்பாலும் தி.மு.க.வின் கையே ஓங்கியிருப்பதால், இங்கே போட்டி யிட அ.தி.மு.க.வினர் யாருக்குமே விருப்ப மில்லை.
பா.ஜ.க. கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரசுக்கு இத்தொகுதி ஒதுக்கப் பட்டுள்ளது. அக்கட்சியின் இளைஞரணி மாநில தலைவர் யுவராஜாவை போட்டியிடுமாறு கேட்டுக்கொண்டார் ஜி.கே.வாசன். அதற்கு யுவராஜா "ஐயா என்னை விட்டு விடுங்கள்... போன சட்டமன்றத் தேர்தலிலும், இடைத்தேர்தலிலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் இரட்டை இலையில் போட்டியிட எனக்கு எங்க மாமா எடப்பாடி பழனிச்சாமி வாய்ப்பு தந்தார். அவருக்கு நான் துரோகம் செய்யமாட்டேன்'' எனக் கூறிவிட்டாராம். அடுத்து முன்னாள் எம்.எல்.ஏ. விடியல் சேகரை கேட்க, அவரும் நழுவிவிட்டாராம். வேறு வழியில்லாமல், செலவுக்கு பணம் கொடுப்பதாகச் சொன்ன பிறகே அக்கட்சியின் ஈரோடு மாவட்டத் தலைவரான விஜயகுமார் சம்மதித்திருக்கிறாராம். தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சி, மருத்துவர் கார்மேகம் என்பவரை இறக்கிவிட்டுள்ளது.
தி.மு.க., அ.தி.மு.க., த.மா.க., நாம் தமிழர் என நான்கு கட்சியின் வேட்பாளர்களும் கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர்கள். இந்த தொகுதியில் கவுண்டர் சமூக வாக்கு 30% உள்ளது. முதலியார் சமூக வாக்கு 28% உள்ளது. பட்டியலினத்தவர்கள் 22% வேட்டுவ கவுண்டர், நாடார், செட்டியார், வன்னியர் என பிற சமூகத்தினர் 20% உள்ளனர்.
ஈரோடு தொகுதியில் போட்டியென்பது தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் மத்தியில் தான். ஈரோடு தொகுதியில் தற்போது தான் தி.மு.க.வை சேர்ந்தவர் நேரடியாகக் களம் காண்கிறார். இது உடன்பிறப்புகள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது. பெரியார் பிறந்த பூமியான ஈரோட்டை வெல்வதற்காக மூன்று அமைச்சர்களும் முனைப்போடு களம் இறங்கியுள்ளார்கள்.