"ஹலோ தலைவரே, பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள், நடந்துமுடிந்த வாக்குப்பதிவு குறித்த விசாரணையில் இருக் காங்க.''”
"ஆமாம்பா, இது தேர்தல் பற்றிய கணக்குகளைப் போட்டுப் பார்க்கும் நேரமாச்சே? முதல்வர் ஸ்டாலினும் கட்சி நிர்வாகிகளிடம் இது குறித்து விசாரிச்சிக்கிட்டு இருக்காரே?
"ஆமாங்க தலைவரே, தற்போது முதல்வர் ஸ்டாலினை, தி.மு.க. அமைச்சர்கள், மா.செ.க்கள், வேட்பாளர்கள்ன்னு கட்சிக்காரர்கள் பலரும் தினமும் சந்தித்து வருகிறார்கள். அவர்களிடம் தொகுதியின் வெற்றி நிலவரம் எப்படி இருக்கிறது ? எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் அங்கே நாம் ஜெயிக்கலாம்? போட்டி வேட்பாளர்களுக்கு எவ்வளவு வாக்குகள் கிடைக்கும்? என்றெல்லாம் விசாரிக்கும் ஸ்டாலின், நாம் தமிழர் கட்சிக்கு ஆத ரவு எப்படி இருந்தது? என்றும் மறக்காமல் கேட் கிறாராம். அவரை சந்திப்பவர்களோ, நம் தி.மு.க. அணி, 40-லும் வெற்றி பெறும். பா.ஜ.க. உள்ளிட்ட மற்ற கட்சியினர் டெபாசிட் வாங்கறதே பெரிது என்றும் மிகைப்படுத்திச் சொல்கிறார்களாம்.''”
"முதல்வரை கூட்டணிக்கட்சித் தலைவர் களும் சந்திக்கிறார்களே?''”
"உண்மைதாங்க தலைவரே, முதல்வர் ஸ்டாலினை தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளின் தலைவர்கள் அனைவரும், அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்து வருகிறார்கள். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தனது மகன் துரை.வைகோவுடன் சென்று சந்தித்தார். சி.பி.ஐ. மற்றும் சி.பி.எம்.மைச் சேர்ந்த இடதுசாரி தலைவர்கள் தங்கள் வேட்பாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் சென்று, சுட்டெரித்த வெய்யிலையும் பொருட்படுத்தாமல், தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்ததற்காக ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்கள். அதேபோல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரான திருமாவும், மற்றொரு வேட்பாளரான ரவிக்குமா ரும் சந்தித்தபோது, அவர்களிடமும் வெற்றி நிலவரம் பற்றி ஸ்டாலின் விசாரித்திருக்கிறார். அதற்கு திருமாவளவன், கடந்த முறை மாதிரி இல் லாமல் இந்த முறை வெற்றி வித்தியாசம் மேலும் அதிகமாகவும் பெரு மகிழ்ச்சியைத் தருவ தாகவும் இருக்கும்னு உற்சாகமாகச் சொன்னாராம். மேலும், "40-லும் நாம்தான் ஜெயிக்கப் போகிறோம். அதேபோல் வடக்கில் இருந்து வரும் தகவல்களும் கூட இந்தியா கூட்டணிக்கு சாதகமாகவே இருக்கிறது' என்றும் திருமா பூரிப்பாகச் சொல்லியிருக்கிறார்.''”
"காங்கிரஸ் தரப்பில் இருந்து ஒருசிலர் மட்டுமே முதல்வரை சந்தித்ததாகச் சொல்கிறார்களே?''”
"காங்கிரஸ் தலைவர் செல் வப்பெருந்தகையும், அக்கட்சியின் 10 வேட்பாளர்களும் 24ஆம் தேதி வரை ஸ்டாலினை சந்திக்க அவர் இல்லத்திற்கோ, அறிவாலயத்திற்கோ வரவில்லை. காங்கிரஸ் வேட்பாளர்கள் பலரும் பல்வேறு வேலை காரணமாக சென்னைக்கு வரமுடியாத சூழலில் இருப்பத
"ஹலோ தலைவரே, பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள், நடந்துமுடிந்த வாக்குப்பதிவு குறித்த விசாரணையில் இருக் காங்க.''”
"ஆமாம்பா, இது தேர்தல் பற்றிய கணக்குகளைப் போட்டுப் பார்க்கும் நேரமாச்சே? முதல்வர் ஸ்டாலினும் கட்சி நிர்வாகிகளிடம் இது குறித்து விசாரிச்சிக்கிட்டு இருக்காரே?
"ஆமாங்க தலைவரே, தற்போது முதல்வர் ஸ்டாலினை, தி.மு.க. அமைச்சர்கள், மா.செ.க்கள், வேட்பாளர்கள்ன்னு கட்சிக்காரர்கள் பலரும் தினமும் சந்தித்து வருகிறார்கள். அவர்களிடம் தொகுதியின் வெற்றி நிலவரம் எப்படி இருக்கிறது ? எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் அங்கே நாம் ஜெயிக்கலாம்? போட்டி வேட்பாளர்களுக்கு எவ்வளவு வாக்குகள் கிடைக்கும்? என்றெல்லாம் விசாரிக்கும் ஸ்டாலின், நாம் தமிழர் கட்சிக்கு ஆத ரவு எப்படி இருந்தது? என்றும் மறக்காமல் கேட் கிறாராம். அவரை சந்திப்பவர்களோ, நம் தி.மு.க. அணி, 40-லும் வெற்றி பெறும். பா.ஜ.க. உள்ளிட்ட மற்ற கட்சியினர் டெபாசிட் வாங்கறதே பெரிது என்றும் மிகைப்படுத்திச் சொல்கிறார்களாம்.''”
"முதல்வரை கூட்டணிக்கட்சித் தலைவர் களும் சந்திக்கிறார்களே?''”
"உண்மைதாங்க தலைவரே, முதல்வர் ஸ்டாலினை தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளின் தலைவர்கள் அனைவரும், அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்து வருகிறார்கள். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தனது மகன் துரை.வைகோவுடன் சென்று சந்தித்தார். சி.பி.ஐ. மற்றும் சி.பி.எம்.மைச் சேர்ந்த இடதுசாரி தலைவர்கள் தங்கள் வேட்பாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் சென்று, சுட்டெரித்த வெய்யிலையும் பொருட்படுத்தாமல், தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்ததற்காக ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்கள். அதேபோல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரான திருமாவும், மற்றொரு வேட்பாளரான ரவிக்குமா ரும் சந்தித்தபோது, அவர்களிடமும் வெற்றி நிலவரம் பற்றி ஸ்டாலின் விசாரித்திருக்கிறார். அதற்கு திருமாவளவன், கடந்த முறை மாதிரி இல் லாமல் இந்த முறை வெற்றி வித்தியாசம் மேலும் அதிகமாகவும் பெரு மகிழ்ச்சியைத் தருவ தாகவும் இருக்கும்னு உற்சாகமாகச் சொன்னாராம். மேலும், "40-லும் நாம்தான் ஜெயிக்கப் போகிறோம். அதேபோல் வடக்கில் இருந்து வரும் தகவல்களும் கூட இந்தியா கூட்டணிக்கு சாதகமாகவே இருக்கிறது' என்றும் திருமா பூரிப்பாகச் சொல்லியிருக்கிறார்.''”
"காங்கிரஸ் தரப்பில் இருந்து ஒருசிலர் மட்டுமே முதல்வரை சந்தித்ததாகச் சொல்கிறார்களே?''”
"காங்கிரஸ் தலைவர் செல் வப்பெருந்தகையும், அக்கட்சியின் 10 வேட்பாளர்களும் 24ஆம் தேதி வரை ஸ்டாலினை சந்திக்க அவர் இல்லத்திற்கோ, அறிவாலயத்திற்கோ வரவில்லை. காங்கிரஸ் வேட்பாளர்கள் பலரும் பல்வேறு வேலை காரணமாக சென்னைக்கு வரமுடியாத சூழலில் இருப்பதால், எல்லோரும் சென் னைக்கு வந்த பிறகு சேர்ந்து சென்று முதல்வரை சந்திக்கப் போகிறோம் என செல்வப்பெருந்தகை சொல்லிக் கொண்டிருந்தார். இந்தநிலையில் காங்கிரஸ் வேட்பாளர்களுடன் 25-ந் தேதி ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தார் செல்வப்பெருந்தகை. சில காங்கிரஸ் வேட்பாளர்கள் மட்டும் ஸ்டாலினை சந்திக்கத் தயங்கினார் களாம். காரணம், தேர்தலில் ஜெயித்து விடலாம் என்கிற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தபோதும், தேர்தல் களத்தில் தாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு தி.மு.க.வினர் ஒத்துழைக்க வில்லை என்கிற மனவருத்தம் அவர்களுக்கு இருக்கிறதாம். இதே மாதிரியான புகார்கள் தி.மு.க. தரப்பிலும் இருக்கிறது.''”
"எடப்பாடியும் தங்கள் கட்சி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி வருகிறாரே?''”
"தேர்தல் பணிகள் மற்றும் வாக்குப்பதிவுகள் குறித்து மாவட்ட வாரியாக தங்கள் கட்சி நிர்வாகி களிடம் எடப்பாடியும் விசாரிக்கத் தொடங்கியிருக்கிறார். முதல் கட்ட மாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட தொகுதிப் பொறுப்பாளர்கள், மா.செ.க்கள் மற்றும் நிர்வாகிகளை அழைத்து 23ஆம் தேதி விசாரித்திருக்கிறார் எடப்பாடி. அப்போது கட்சி நிர்வாகிகள் பலரையும் அவர், "நீங்கள் எல்லாம் சரியாக வேலை செய்யலைன்னு தெரியுது'’ என்றபடி கடுமையாக அவர்களை விளாசினாராம். குறிப்பாக, சென்னை அ.தி.மு.க. மா.செ.க் களான விருகை ரவி, தி.நகர் சத்யா, பாலகங்கா, ஆதிராஜாராம், அசோக், ராஜேஷ் என பலருக்கும் செம டோஸ் விழுந்திருக் கிறது. அப்போது ‘"நீங்க கேட்ட மாதிரி, நம்ம ஆட்சியில் சம்பாதிக்க வழியை ஏற்படுத்திக் கொடுத்தேன். கோடி கோடியாய் சம்பாதித்தீர்கள். தேர்தலில் அ.தி.மு.க.வை ஜெயிக்க வைக்க உங்கள் காசைச் செலவு செய்வதாகவும் சொன்னீர்கள். ஆனால் ஒருவரும் ஒரு ரூபாயைக் கூட எடுக்கவில்லை. இதில் கட்சித் தலைமை கொடுத்த பணத்தையும் வேட் பாளர்களுக்கு செலவு செய்யாமல் அமுக்கியிருக் கிறீர்களே, உங்களுக்கெல்லாம் வெட்கமாக இல் லையா?'’என்றும் அவர் நொந்துகொண்டாராம்.''”
"இதற்கு அ.தி.மு.க நிர்வாகிகளின் ரியாக்ஷன் என்னவாம்?''”
"கொந்தளிப்பாக எகிறிய எடப்பாடியிடம் விளக்கம் தர, சென்னை அ.தி.மு.க. மா.செ.க்கள் முயன்றபோதும், அவர்களைப் பேசவிடாமல், "நீங்கள் யாரும் விசுவாசமாக இல்லை. உங்கள் யோக்கியதை என்ன என்பது எனக்குத் தெரியும். நீங்க எப்படியெல்லாம் சோரம் போனீங்கன்னு என்னிடம் பெரிய லிஸ்ட்டே இருக்கு. உங்கள் மீது நம் வேட்பாளர்கள் கொடுத்த புகார்களைச் சொன்னால் நீங்கள் தாங்க மாட்டீர்கள். இந்த லட்சணத்தில் பதில் சொல்லக் கிளம்பறீங்க'’ என்றும் காரமாகக் கூறி அவர்களை உட்கார வைத்துவிட்டாராம். இதுவரை எடப்பாடியிடம் இப்படி ஒரு கோப முகத்தை தாங்கள் பார்த்த தில்லை என்கிறார்கள் அ.தி.மு.க.வின் சென்னை மா.செ.க்கள். பெரும்பாலும் நக்கீரன் ராங்கால் பகுதியில் நாம் பகிரங்கப்படுத்தியிருந்த அ.தி.மு.க. நிர்வாகிகளின் ‘சுருட்டல்’ செய்தியை வைத்துக் கொண்டுதான் எடப்பாடி, தங்கள் கட்சி நிர்வாகிகளிடம் இந்த காட்டு காட்டியிருக் கிறார் என்கிறார்கள். தேர்தல் முடிவுகள் வந்த பிறகு அ.தி.மு.க. விலும் மா.செ.க்கள் தொடங்கி ஒன்றியச் செயலாளர்கள் வரை மாற்றம் இருக்கும் என்கிறார்கள்.''”
"பா.ஜ.க.வின் அந்த மாநில நிர்வாகி, பிரச்சாரம் செய்ய இப்ப கர்நாடகாவிற்கு போகிறாராமே?''”
"இரண்டாம் கட்டத் தேர்தலை 26ஆம் தேதி சந்திக்கும் கேரளாவில், பிரச்சார நிறைவின் போது அங்கங்கே ’கொட்டிக் கலாசம்’ என்ற வைபவத்தை அங்குள்ள அரசியல் கட்சியினர் நடத்துவார்கள். அதேபோல் தமிழகத்தில் இருந்து பிரச்சாரத்திற்குச் சென்ற பா.ஜ.க.வின் அந்த தில்லாலங்கடி நபரும், ஆளே இல்லாத பகுதிகளில் ரோட் ஷோ நடத்தி, காமெடி பண்ணியிருக்கிறார். அதன்பின் அங்கிருந்து அவர் கர்நாடக மாநிலத் துக்குப் பிரச்சாரத்திற்காகப் புறப்பட்டார். இவர் போன நேரத்தில், அங்கே வந்த தேர்தல் கணிப்பு களில், இந்தமுறை காங்கிரஸிடம், பா.ஜ.க.. 15 தொகுதிகளை இழக்கும் என்றே சொல்லப்பட்டி ருக்கிறதாம். இதனால், நாம் போகிற பக்கம் எல்லாம் இப்படி சறுக்கல் செய்திகளாகவே வருகிறதே என்று அந்த நபர் அதிர்ச்சியில் நொந்துபோய் இருக்கிறாராம்.''”
"சரிப்பா, தபால் வாக்குகள் விவகாரத்திலும் தேர்தல் ஆணையம் சரிவர நடந்துக்கலைன்னு புகார்கள் வருகிறதே?''”
"அரசு ஊழியர்கள், அரசு ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் தனியார் கல்லூரிகளில் பணியாற்றிய பேராசிரியர்கள் பலரையும் இந்த முறை வாக்குப்பதிவின்போது, தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தியது தேர்தல் ஆணையம். ஆனால், அவர்களில் பலருக்கும் தபால் வாக்குகளை பதிவு செய்யும் விண்ணப்பம் தரப்படவே இல்லையாம். குறிப்பாக, சென்னை மீனாட்சி கல்லூரியிலிருந்து பேராசிரியர்கள் பலரும் தேர்தல் பணிக்குச் சென்றிருக்கிறார்கள். இவர்களில் பலருக்கும் தபால் ஓட்டுப் போட விண்ணப்பம் தரப்படவில் லையாம். இது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு முறைப்படி புகார்கள் தெரிவிக்கப்பட்டும் அதன் மீது இப்போது வரை தேர்தல் ஆணைய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை யாம். 100 சதவீத வாக்கு பதிவு நடக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்த தேர்தல் ஆணையம், தேர்தல் பணியில் இருந்தவர்களுக்கே தபால் வாக்குகளை சரிவர விநியோகிக்கவில்லை என்பது கொடுமையிலும் கொடுமை என்கிறார்கள், பாதிக்கப்பட்ட பேராசிரியர்கள்.''”
"கோட்டை அதிகாரிகள் மத்தியில் பரபரப்பு தெரியுதே?''
"ஆமாங்க தலைவரே, கோட்டை யில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் டிரான்ஸ்பர் லிஸ்ட் பரபரப்பாகத் தயாராகுதாம். விரைவில் இந்தப் பட்டியல் வெளிவர இருப்பதால், அது குறித்த பரபரப்பு பல துறைகளிலும் நிலவுது. அதில் மின்வாரிய சேர்மன் ராஜேஷ் லக்கானி யும், சென்னை மாநகராட்சி ஆணையராக இருக்கும் ராதாகிருஷ்ணனும் மத்திய அரசுப் பணிக்கு செல்ல இருக்கிறார்களாம். அதனால் இவர்களின் இடத்தைக் குறிவைத்து, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரும் காய்களை நகர்த்தி வருகிறார்களாம். இதற்காக பெரிய பெரிய இடங்களில் எல்லாம் அவர்கள் முட்டிமோதி வருகிறார் களாம்.''”
"திருச்சி ஆட்சியருக்கு சிக்கல்ன்னு தகவல் வருதே?''”
"திருச்சி மாவட்ட ஆட்சியராக இருக்கும் பிரதீப் குமார், மணல் மாஃபியா கரிகாலனுக்கு நெருக்கமான வராம். கரிகாலன் உள்ளிட்ட மணல் மாஃபியாக்களைக் குறிவைத்து ரெய்டுகளை மேற்கொண்ட அமலாக்கத்துறை, இந்த பிரதீப்குமார் ஐ.ஏ.எஸ். உட்பட சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை விசா ரணைக்கு அழைத்திருக்கிறதாம். கரிகாலன் தரப்பிற்கு எப்படி அனுமதி கொடுத்தீர் கள்? என்று அவரிடமும் துருவிக் கொண்டிருகிறார்களாம். இவரது வங்கிக் கணக்குகளை ஆராய்ந்த அமலாக்கத்துறை அதிகாரி கள், மணல் மாஃபியாக்கள் மூலம் இவர் அதிக லாபம் அடைந்திருப்பதைக் கண்டு மிரண்டு போயிருக்கிறார்களாம். எனவே அவர் மீது கடும் நட வடிக்கை பாயும் என்கிறார்கள், அவர் ரகசியங்களை அறிந்த வருவாய்த் துறையினர்.''”
"சென்னை நட்சத்திர ஓட்டல் ஒன்றை ஒரு காவல் துறை அதிகாரி, புரட்டிப் போட்டு அதகளம் பண்ணி யிருக்கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, அண்மையில் கர்நாடகாவில் உள்ள ராமேஸ்வரம் கபேயில் குண்டு வெடித்த நிலையில், சென்னையில் உள்ள முக்கிய ஓட்டல்களையும் சோதனை யிடுங்கள் என்று, சென்னை கமிஷனரான சந்தீப்ராய் ரத்தோர் ஒரு ஆர்டரை ரிலீஸ் செய்திருந்தாராம். அதைக் கையில் எடுத்துக்கொண்டு அண்மையில் சென்னையின் மத்தியப் பகுதியில் உள்ள அந்த நட்சத்திர ஓட்டலுக்குச் சென்ற ஏரியா இன்ஸ்பெக்டர், சோதனை என்ற பெயரில், அந்த ஓட்டல் அறையில் தங்கி இருந்த அத்தனை பேரையும் சோதனையிட்டுவிட்டு, அவர்களை வெளியே அனுப்பி இருக்கிறார். இதில் பல வி.ஐ.பி.க் களும் சிக்கியிருக்கிறார்கள். இதனால் கடுப்பான ஓட்டல் நிர்வாகம், உள்துறைச் செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ்.சிடம் புகார் கொடுக்க, அவர் இது குறித்து விசாரணை நடத்தி இருக்கிறார். அப்போதுதான் அந்த பில் விவகாரம் வெளியே வந்திருக் கிறது.'' ”
"அந்த பில் விவகாரம் என்னங்கிறதை நான் சொல்றேம்பா. அண்மையில் அந்த நட்சத்திர ஓட்டலுக்குப் போன ஒரு காவல்துறை உயர் அதிகாரி, அங்கே உள்ள ரெஸ்டாரெண்ட்டில் விருந்து சாப்பிட்டிருக்கிறார். அதற்கு 25 ஆயிரம் பில் வர, அதைக் காவல்துறை அதிகாரிகள் கட்டுவார்கள் என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறார். அந்த பில், அந்தப் பகுதியின் டி.சி.க்கு அனுப்பப்பட, அவர் அந்த பில்லை ஏரியா இன்ஸ்பெக்டருக்கு அனுப்பி, அதை செட்டில் பண்ணச் சொன்னாராம். இன்ஸ்பெக் டரோ அந்த ஓட்டலுக்குச் சென்று, பில்லுக்கு டிஸ் கவுண்ட் கேட்டிருக்கிறார். இதற்கெல்லாம் டிஸ் கவுண்ட்டா? என்று ஓட்டல் நிர்வாகம், மறுத்திருக்கிறது. அதனால் கடுப்பான இன்ஸ்பெக்டர், பாதுகாப்புச் சோதனை என்ற பெயரில் அந்த ஓட்டலை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டாராம். அந்த ஹோட்டல் சென்னை நுங்கம்பாக்கத்துல உள்ள தாஜ் ஹோட்டல்தானாம்.''”
________
இறுதிச் சுற்று!
தமிழகத்தில் செயல்பட்டு வந்த மணல் குவாரிகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாகவும், சட்ட விரோதப் பணப்பரிமாற்றம் தொடர்பாகவும் நடந்த அமலாக்கத்துறை ரெய்டுகளைத் தொடர்ந்து... திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்கள் மீது, சரியாக நடவடிக்கை எடுக்கவில்லையென்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. சம்மனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 2ஆம் தேதி விசாரணைக்கு வந்ததுபோது, தேர்தல் காரணமாக ஆஜராக கால அவகாசம் கேட்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 25ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக வேண்டுமென்றும், சம்மனுக்கு தடையில்லை என்றும் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, 25ஆம் தேதி, வியாழனன்று 5 மாவட்ட ஆட்சியர்களும் அமலாக்கத்துறையில் நேரில் ஆஜராகினர். அவர்களில் திருச்சி மாவட்ட ஆட்சியர், சென்னையில் நடைபெற்ற முதன்மைச் செயலாளரின் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர், சென்னை யில் தங்கியிருந்து அமலாக்கத்துறை விசாரணைக்காக ஆஜராகி யுள்ளார்.
-மகி
சொத்துக் குவிப்பு ஊழல் வழக்கை எதிர்கொண்டு வரும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் புதுக்கோட்டை விஜயபாஸ்கர், வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் 25-ந் தேதி வியாழக் கிழமை ஆஜரானார். தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக 35.79 கோடி ரூபாய் சொத்து சேர்த்தாக விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்தது தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை. இதனையடுத்து விஜயபாஸ்கர் தொடர்புடைய 56 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்துவரும் புதுக்கோட்டை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 2023-ல் விஜயபாஸ்கருக்கு எதிராக 216 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர் லஞ்ச ஒழிப்புத்துறையினர். இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் விசாரணை விரைவுபடுத்தப்பட்டது. இதுவரை 13 முறை விசாரணை நடந் துள்ள நிலையில், 14-வது முறையாக 25-ந் தேதி விஜயபாஸ்கரும் அவரது மனைவியும் நீதிமன்றத்தில் ஆஜராகி விசாரணையை எதிர்கொண்டனர்.
-இளையர்