"ஹலோ தலைவரே, இப்போது தி.மு.க.வுக்கும் பா.ம.க.வுக்கும் இடையில் பகைமை நெருப்பு மூண்டிருக்கிறது.''”
"ஆமாம்பா, இந்த இரு கட்சிகளுக்கும் இடையில் மலர இருந்த கூட்டணி உறவுக்கும் இனி வாய்ப்பில்லை என்கிறார்களே?''”
"ஆமாங்க தலைவரே, நிலைமை அப்படிதான் மாறி இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்குள் பா.ம.க. வரலாம் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில், தி.மு.க.வுக்கும் பா.ம.க.வுக் கும் ஏற்பட்ட திடீர் மோதலால், நிலைமை மோசமாகியிருக்கிறது. சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க. தமிழகத்தில் அ.தி.மு.க. வுடன் கூட்டணி இல்லை; ஆனால், தேசிய அள வில் பா.ஜ.க. தலைமையிலான என்.டி.ஏ. கூட் டணியில் பா.ம.க. இருக்கிறது என்கிற அரசியல் நிலைப்பாட்டை பா.ம.க.வின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ் எடுத்திருந்தார். இந்த நிலைப் பாடு தொடர்ந்து வந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்குள் பா.ம.க. இணைவதற்கான மறைமுக பேச்சு வார்த்தைகள் நடந்தன. குறிப்பாக, அமைச்சர் துரைமுருகன் இதற்கான முன்னெடுப்பில் ஆர்வமாக இறங்கினார். சில வாரங்களுக்கு முன்புகூட அவர், டாக்டர் ராமதாஸிடம் அது குறித்து விவாதித்தார். அப்போது வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை தி.மு.க. அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ராமதாஸும் கேட்டுக்கொண்டார். ஆனால்...''”
"அதற்குள் உறவில் முறிவா?''”
"ஆமாங்க தலைவரே, காரணம் என்.எல்.சி.க்கு எதிராக பா.ம.க. அன்புமணி நடத்திய ஆர்ப்பாட் டம் வன்முறையாக மாறியதை தி.மு.க. ரசிக்க வில்லை. அதனால் போராட்டத்தில் குதித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை தி.மு.க. அரசு எடுத்தது. இதனால் அன்புமணியும் தி.மு.க.வை கடுமையாக விமர்சித்தார். அவருக்குப் பதிலடியாக, வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் பெயரில் ஒரு அறிக்கையை கொடுத்தது அறிவாலயம். அந்த அறிக்கையில், "சென்னையில் வீராவேசம் காட்டும் அன்புமணி டெல்லியில் கைகட்டி, ஒன்றிய அரசுக்கு அடிமையாக இருந்து வருகிறார்' என்றும், "என்.எல்.சி. விரிவாக்கத்தை கைவிடும் எண்ணம் ஒன்றிய அரசுக்கு இல்லை என நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் பிரகலாத்ஜோஷி சொன்ன போது கூட, அதைக் கண்டித்து வெளிநடப்பு செய்திருக்க வேண்டிய அன்புமணி, பெட்டிப் பாம்பாக அடங்கியிருந்தது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியதோடு, வெளிநடப்பு செய் திருந்தால் மருத்துவக் கல்லூரி முறைகேட்டில் அமலாக்கத்துறை தன் வீட்டுக் கதவைத் தட்டும் என்பது அன்புமணிக்குத் தெரியும்'” என்றெல்லாம்
"ஹலோ தலைவரே, இப்போது தி.மு.க.வுக்கும் பா.ம.க.வுக்கும் இடையில் பகைமை நெருப்பு மூண்டிருக்கிறது.''”
"ஆமாம்பா, இந்த இரு கட்சிகளுக்கும் இடையில் மலர இருந்த கூட்டணி உறவுக்கும் இனி வாய்ப்பில்லை என்கிறார்களே?''”
"ஆமாங்க தலைவரே, நிலைமை அப்படிதான் மாறி இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்குள் பா.ம.க. வரலாம் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில், தி.மு.க.வுக்கும் பா.ம.க.வுக் கும் ஏற்பட்ட திடீர் மோதலால், நிலைமை மோசமாகியிருக்கிறது. சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க. தமிழகத்தில் அ.தி.மு.க. வுடன் கூட்டணி இல்லை; ஆனால், தேசிய அள வில் பா.ஜ.க. தலைமையிலான என்.டி.ஏ. கூட் டணியில் பா.ம.க. இருக்கிறது என்கிற அரசியல் நிலைப்பாட்டை பா.ம.க.வின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ் எடுத்திருந்தார். இந்த நிலைப் பாடு தொடர்ந்து வந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்குள் பா.ம.க. இணைவதற்கான மறைமுக பேச்சு வார்த்தைகள் நடந்தன. குறிப்பாக, அமைச்சர் துரைமுருகன் இதற்கான முன்னெடுப்பில் ஆர்வமாக இறங்கினார். சில வாரங்களுக்கு முன்புகூட அவர், டாக்டர் ராமதாஸிடம் அது குறித்து விவாதித்தார். அப்போது வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை தி.மு.க. அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ராமதாஸும் கேட்டுக்கொண்டார். ஆனால்...''”
"அதற்குள் உறவில் முறிவா?''”
"ஆமாங்க தலைவரே, காரணம் என்.எல்.சி.க்கு எதிராக பா.ம.க. அன்புமணி நடத்திய ஆர்ப்பாட் டம் வன்முறையாக மாறியதை தி.மு.க. ரசிக்க வில்லை. அதனால் போராட்டத்தில் குதித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை தி.மு.க. அரசு எடுத்தது. இதனால் அன்புமணியும் தி.மு.க.வை கடுமையாக விமர்சித்தார். அவருக்குப் பதிலடியாக, வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் பெயரில் ஒரு அறிக்கையை கொடுத்தது அறிவாலயம். அந்த அறிக்கையில், "சென்னையில் வீராவேசம் காட்டும் அன்புமணி டெல்லியில் கைகட்டி, ஒன்றிய அரசுக்கு அடிமையாக இருந்து வருகிறார்' என்றும், "என்.எல்.சி. விரிவாக்கத்தை கைவிடும் எண்ணம் ஒன்றிய அரசுக்கு இல்லை என நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் பிரகலாத்ஜோஷி சொன்ன போது கூட, அதைக் கண்டித்து வெளிநடப்பு செய்திருக்க வேண்டிய அன்புமணி, பெட்டிப் பாம்பாக அடங்கியிருந்தது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியதோடு, வெளிநடப்பு செய் திருந்தால் மருத்துவக் கல்லூரி முறைகேட்டில் அமலாக்கத்துறை தன் வீட்டுக் கதவைத் தட்டும் என்பது அன்புமணிக்குத் தெரியும்'” என்றெல்லாம் அதில் கடுமை யான அட்டாக் இருந்தது.''”
"ஆமாம்பா, இதுக்கு பா.ம.க. தரப்பில் ஜி.கே.மணி வரிந்துகட்டினாரே?''”
"உண்மைதாங்க தலை வரே, அமைச்சர் எம்.ஆர்.கே. வுக்கு பதிலடி கொடுப்பதற்காக வரிந்துகட்டிய பா.ம.க.வின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, ’"ஒன்றிய அமைச்சர்கள் எழுத் துப் பூர்வமாக அளிக்கும் பதில்களுக்கு கேள்விகேட்ட எம்.பி.யால் எதிர் கேள்வி கேட்க முடியாது. இந்த அடிப் படை கூட ஒரு அமைச்சருக்கு தெரியவில்லை. என்.எல்.சி. விவகாரத்தில் தி.மு.க. அரசின் தோல்வியையும் துரோகத்தை யும் மூடி மறைக்கவே அன்பு மணி மீது பழி போடுகிறார் எம்.ஆர்.கே. தங்களின் தோல்வி களைத் தட்டிக் கழிக்கவும், அடுத்தவர் வெற்றிக்கு சொந்தம் கொண்டாடுவதும் தி.மு.க.வின் மரபணுவில் ஊறியவை. துரோக வரலாற்றின் கூடாரமே தி.மு.க. தான். தி.மு.க. அமைச்சர் களுக்கும், எம்.எல்.ஏ.க்களுக்கும் என்.எல்.சி. நிறுவனத்தில் இருந்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கடந்த பல பத்தாண்டுகளில் கொடுக்கப்பட்டுள்ளன. அதை எம்.ஆர்.கே.வால் மறுக்க முடியுமா?' என்றெல் லாம் காட்டத்தைக் காட்டியிருந்தார். இப்படி எங்கேயோ, எப்படியோ, தொடங்கிய தீப்பொறி, இரு தரப்புக்கும் இடையில் நெருப்பைப் பற்ற வைத்துவிட்டது. பா.ம.க. தரப்பின் பதிலில் கடும் வெப்பம் இருந்ததால் தி.மு.க. தரப்பு, பா.ம.க. மீது ஏக டென்ஷனில் இருக்கிறது.''”
"சரிப்பா, அ.தி.மு.க. மாநாட்டை நடத்தும் தீவிரத்தில் இருக்கும் எடப்பாடி, அடிக்கடி அப்செட் ஆகிறாராமே?''”
"அதுக்குக் காரணங்கள் இருக்கு தலைவரே, அ.தி.மு.க. மாநாட் டுக்கான இடம் மிகப் பெரிதாக இருக்கவேண்டும் என்று எடப்பாடி ஆசைப்பட, மாஜி மந்திரிகளோ, மதுரை பைபாஸில் ஒரு சிறிய இடத் தைக் காட்டி, இதுவே போதும் என்று ஏற்கவைத்து விட்டார்களாம். அதில் ஒரு லட்சம் பேர் மட்டுமே திரள முடியுமாம். இந்த மாநாட்டுக்கு அதிக கூட்டத்தைக் கூட்டும் பொறுப்பை, அவர் மாஜி மந்திரிகளிடம் ஒப்படைக்க, அந்த மாஜிக்களோ, அந்தப் பொறுப்பை மா.செ.க்களிடம் ஒப்படைத்துவிட்டார்களாம். மா.செ.க்களோ, கட்சியின் வட்ட, நகர, ஒன்றிய செயலாளர்களிடம் இந்தப் பொறுப் பை ஒப்படைத்துவிட்டு ரிலாக்ஸாக இருக்கிறார்களாம். இதுவும் எடப்பாடியை அப்செட் ஆக்கியிருக்கிறதாம். இதேபோல் எடப்பாடி மாநாட்டு நிதி கேட்டதும், மாஜி மந்திரிகளான விஜயபாஸ்கர், உதயகுமார் உள்ளிட்டோர் கணிசமாக நிதி கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இவர்கள், ஓ.பி.எஸ். நடத்திய மாநாட்டுக்கும் அதே அளவுக்கு நிதியை அள்ளிக்கொடுத்த தகவல் எடப்பாடிக்குக் கிடைக்க, அதுவும் அவரை அப்செட்டாக்கி இருக்கிறது. ஆனால் மாஜி மந்திரிகளோ, அரசியலில் யாருக்கு, எப்போது, எப்படி, செல்வாக்கு வரும் என்று யாருக்கும் தெரியாது. அதனால் எல்லோரின் தயவும் எங்களுக்குத் தேவை என்று சித்தாந்தம் பேசி மேலும் எடப்பாடியின் பி.பி.யை எகிற வைக்கிறார்களாம்.''”
"கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மீது ஏகத்துக்கும் புகார் கிளம்புதே?''”
"கோவை மாநகராட்சியில் பெரும்பான்மையாக உள்ள தி.மு.க. கவுன்சிலர்களின் எதிர்ப்பை நிறையவே சம்பாதித்திருக்கிறார் மேயர் கல்பனா. அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆதரவு இவருக்கு அதிக மாக இருந்ததால், மாநகராட்சி கமிஷனர் பிரதாப்பைக்கூட இவர் மதிப்பதில்லையாம். கட்சி நிர்வாகிகளையும் இவர் ஒரு பொருட் டாகவே நினைப்பதில்லை என்கிறார்கள். கட்டிங்’ விவகாரத்திலும் இவர், தன் பெயரை அதிகம் கெடுத்து வைத்திருக்கிறாராம். இவர்மீதான ஊழல் புகார்கள் பற்றி கமிஷனர் பிரதாப் கேள்வி எழுப்பினால், ’"உங்க வேலையை மட்டும் பாருங்க சார். புகார் வருது புடலங்கா வருதுன்னு என்கிட்டே கேட்காதீங்க. அமைச்சர் செந்தில்பாலாஜி சொன்னபடிதான் நான் நடக்கிறேன். அவர் மூலம் முதலமைச்சர் குடும்பமே எனக்கு நெருக்கம். அவங்களை விட்டே உங்களுக்கு போன் பேசச் சொல்லவா? நீங்க வேணும்னா சி.எம்.கிட்டே என்னைப் பத்தி கம்ப்ளைண்ட் கொடுத்துப் பாருங்க. அடுத்த நாள் இந்த சீட்ல நீங்க இருக்கமாட்டீங்க' என்றெல்லாம் ஏகத்துக்கும் எடுத்தெறிந்து பேசுவாராம்.''”
"அடக்கொடுமையே..''”
"இந்த நிலையில், துறை அமைச்சர் கே.என்.நேருவைக் கடந்த வாரம், மேயர் கல்பனா சந்தித்தார். அவரைப் பார்த்ததும், "நான் தான் நகராட்சி நிர்வாகத்துக்கு அமைச்சர்னு இப்போதான் உனக் குத் தெரிஞ்சதா?''ன்னு நேரு காட்டமாகக் கேட்க, " கோவைக்கு நான்தான் அமைச்சர், வேறு யாரையும் பார்க்கத் தேவையில்லைனு செந்தில்பாலாஜிதான் சொன்னார் அண்ணா, அதான்...'' என தலை யைச் சொறிந்திருக்கிறார் கல்பனா. அதற்கு நேரு, "கோவை மாநக ராட்சியில எந்தப் பணியும் நடக்கலை. "நீயும் உன் புருஷனும் ஒரு தள்ளுவண்டிக்காரனைக்கூட விடாம, மாமூல் கேட்டு டார்ச்சர் பன்றீங்களாமே? உங்களால மக்கள் நம்ம ஆட்சியைத் திட்றாங்க. ஒழுங்கா மக்கள் பிரச்சனைகளை தீர்க்கப் பாரு. இல்லேன்னா... உன் பதவி கைமாறிடும்'னு டோஸ் விட்டு, எச்சரிக்கை செய்து அனுப்பியிருக்கிறார். "இதன் பிறகாவது மேயர் மாறுவாரா?' என்று கோவை ஆளுங்கட்சியினர் கேள்வி எழுப்புகிறார்கள்.''”
"திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் போர்டு மெம்பராக தமிழக அரசின் சார்பில் இரண்டாண்டுகளாக இருந்த அணைக் கட்டு திமுக எம்.எல்.ஏ. நந்தகுமாருக்கு மறுபடியும் வாய்ப்பு இல்லைன்னு அறிவாலயம் சொல்லிவிட்டதாமே?''”
"ஆமாங்க தலைவரே, நந்தகுமாரின் 2 ஆண்டு பதவிக் காலம் முடிந்ததால், அடுத்து புதிய உறுப்பினராக யாரை நியமிக்கலாம் என முதல்வர் ஸ்டாலின் ஆலோசித்துவருகிறார். மீண்டும் தனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என நந்தகுமார் ஸ்டாலினிடம் கோரிக் கை வைத்தபோது, "நீ மட்டும் தான் கட்சிக்காரனா? உனக்கே மீண்டும் மீண்டும் வாய்ப்பை எப்படித் தரமுடியும்?'ன்னு அவர் கடுப்படித்து திருப்பி அனுப்பிவிட்டாராம். நந்தகுமார் கம்மா நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர். அவருக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கி னால் மற்ற சமூகத்தினரின் அதிருப்தியை சம்பாதிக்கவேண்டி வருமேன்னு ஸ்டாலின் நினைக்கிறாராம். அதோடு போர்டு உறுப்பினர் பதவியை வைத்திருந்த நந்தகுமார், தன் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தவில்லை என்று உளவுத்துறையும் ரிப் போர்ட் கொடுத்திருக்கிறதாம்.''”
"அந்தப் பதவியில் இருந்து கொண்டு திருப்பதி தேவஸ்தானத் திடம் எதை சாதிக்க முடியும்?''
"திருப்பதியில் தமிழ்வழி வழிபாடு, தமிழில் அறிவிப்புகள் எல்லாம் சிறப்பாக நடந்து கொண்ருந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக அதெல்லாம் குறைந்துவிட்டது. மார்கழி மாதத்தில் மட்டும்தான் திருப்பாவை பாடல் ஒலிக்கிறதாம். நாலாயிரத் திவ்ய பிரபந்தங்கள் பாடப் படுவதில்லையாம். அதேபோல் தமிழ்நாடு தொடர்புடைய ஏராளமான கல்வெட்டுகளை திருப்பதி நிர்வாகம் மறைக்கிறதாம். இது பற்றியெல்லாம் மாதந்திர போர்டு மீட்டிங்கில் பேசி, இழந்த உரிமைகளை மீட்க, போர்டுமெம்பராக இருந்த நந்தகுமார் அக்கறை காட்டவில்லை என்கிற ஆதங்கம், பரவலாகவே இருக்கிறது.''”
"அண்மையில் 27 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம் நடந்திருக்குதே?''”
"ஆமாங்க தலைவரே, தென்மாவட்ட ஐ.ஜி.யான அஸ்ரா கார்க்கை சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக நியமித்துவிட்டு, அவருக்கு பதில் அங்கே ஸ்ட்ரெய்ட் ஃபார்வேர்டு அதிகாரி என்று பெயரெடுத்த நரேந்திரநாயர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் குட்கா ஊழல் விவகாரத்தில் அடிபட்ட ஜோஷி நிர்மல்குமார், வடசென்னை இணை கமிஷனராக இருந்தார். அவருக்கு நல்ல போஸ்டிங் கொடுக்கவேண்டும் என்று பலரிடம் இருந்தும் அழுத்தம் வந்தது. இருந்தும், அதற்கு அசைந்துகொடுக்காத டி.ஜி.பி. சங்கர்ஜிவால், அவரை போலீஸ் அகாடமியில் இப்போது அமர வைத்திருக்கிறார். இப்படி பலரும் சரியான இடங்களில் அமரவைக்கப்பட்டிருப்பது, பாராட்டைப் பெற்றிருக்கிறது. எனினும் தி.மு.க. ஆட்சியில் சி.பி.சி.ஐ.டி. பிரிவும், பொருளாதாரக் குற்றப்பிரிவும் மட்டுமே பலவீனமாக இருக்கிறது என்கிற விமர்சனம் மட்டும் இன்னும் தொடர்கிறது. குறிப்பாக, ஆருத்ரா நிறுவன மோசடி விவகாரத்தில் தொடர்புடைய பா.ஜ.க. தலைகளை இன்னும் இறுக்கிப் பிடிக்காத பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு சுறுசுறுப்பு டானிக் கொடுக்கவேண்டும் என்கிறார்கள் பலரும்.''”
"தமிழ்நாடு, புதுச்சேரிக்கு விசிட் அடித்த இந்திய குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை தமிழக பா.ஜ.க.வின் மாநில செயற்குழு உறுப்பினர் ராஜரத்தினம், கவர்னர் மாளிகையில் சந்திச்சிருக்காரே?''
"ஆமா தலைவரே. அவர்ட்ட தமிழ்நாட்டு அரசியல் நிலவரங்களைக் கேட்டுத் தெரிஞ்சிருக்கார். எந்தெந்த கட்சிகள் எவ்வளவு தொகுதியில் வெற்றி பெற்றிருக்குது... கிராம பஞ்சா யத்து நிர்வாகங்களில் கட்சிகளோட வெற்றி எண்ணிக்கை எவ்வளவு... பா.ஜ.க. எத்தனை தொகுதியில் வென்றிருக்குன்னு ஏகப்பட்ட விஷயங்களை ஆர்வமா கேட்டுத் தெரிஞ்சிருக்கார். அவர்ட்ட, தமிழ்நாட்டில் பா.ஜ.க. குறைவா வென்றதோட கார ணத்தை எடுத்துச் சொல்லியிருக்கார். தி.மு.க., அ.தி.மு.க. இப்பவரைக்கும் வலுவா இருப்பதால் இப்போதைக்கு அ.தி.மு.க.வோட தான் பா.ஜ.க. இணைந்து பயணிக்கும்னும், அடுத்த தேர்தலில் பா.ஜ.க. தனித்து வெற்றி பெறக்கூடிய அளவுக்கு வந்திடும்னும் முர்முவிடன் எடுத்துச்சொல்லியிருக் கார். அதோட, அங்கிருந்து கிளம்பும் போது, தமிழக மரபுப்படி உங்களை 'அம்மா'ன்னு அழைக்கத் தோணுதுன்னு சொல்லி, 'வணக்கம் அம்மா'ன்னு சொல்லி முர்முவை வணங்கியிருக்கார். அவர்ட்ட குடியரசுத்தலைவர், 'தமிழ் நாட்டில அம்மா என்று ஜெயலலிதா இருந்தார்களே?' என்று கேட்டதும், அட, ஜெயலலிதாவை அம்மான்னு சொன்னது வட இந்தியா வரைக்கும் தெரிஞ்சிருக்கேன்னு ஆச்சர்யப்பட்டாராம்!''
"நானும் ஒரு தகவலைப் பகிர்ந் துக்கறேன். ஒன்றிய அரசின் பல்கலைக் கழகங்களில் இதற்கு முன்பு, பிற்படுத்தப் பட்ட சமூகத்தினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டு வந்தது. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் நிறைவேற்றப்பட்ட 93-வது அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா மூலம் இந்த 27 சதவீத இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட் டது. ஆனால், தற்போதைய மோடி தலை மையிலான பா.ஜ.க. அரசில், இதை அமல்படுத்துவதில்லை. இதனால், இந்தியா முழுக்க உள்ள உயர்நிலை கல்வி நிறுவனங் களான 45 மத்திய பல்கலைக் கழகங்களி லும் பிற்படுத்தப்பட்டோருக்கான சமூக நீதி பறிக்கப்பட்டுள்ளது. போராடிப் பெற்ற இந்த உரிமையை தமிழக அரசியல் கட்சிகள் கண்டுகொள்ளாத நிலையில், ஒன்றிய அரசின் இந்த சமூக அநீதியை எதிர்த்து, ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் போராட்டத்தை முன்னெடுக்கத் திட்ட மிட்டுள்ளது திராவிடர் கழகம்.''