ஜாபர்சாதிக். இவர் தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலகப் பிரிவின் நிர்வாகி. இவர் தி.மு.க.விலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். இது சென்னை முதல் டெல்லி வரை பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு தி.மு.க.வுக்கு எதிராக பெரிய அளவில் அறிக்கைகள் விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

dd

யார் இந்த ஜாபர்சாதிக்?

தெற்கு டெல்லியில் உள்ள இரண்டு குடோன்களை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவான என்.சி.பி. சோதனையிட்டது. அதில் மெத்தாபெட்டமைன் என்கிற போதைப்பொருள் மூட்டை மூட்டையாக இருப்பதைக் கண்டுபிடித்தது. அங்கிருந்த மைதீன் மற்றும் சலீம் ஆகிய இரு தமிழர்களைக் கைது செய்தது. விசாரணையில் இந்த போதைப்பொருளை தேங்காய் பவுடர் மற்றும் ஊட்டச்சத்து மாவு என வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதுதான் இவர்களது வேலை என கண்டுபிடித்தது. அத்துடன் இவர்கள் கூரியர் கம்பெனி, டிராவல்ஸ் நிறுவனம் மற்றும் சினிமா தயாரிப்பு கம்பெனி ஒன்றையும் நடத்தி வந்திருக்கிறார்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. பெட்டமைன் என்பது ஒரு வீரியம்மிக்க போதைப்பொருள். அதை அடிப்படையாக வைத்து பல போதைப்பொருள்களை உருவாக்க முடியும். அப்படிப்பட்ட போதைப்பொருளை உணவுப்பொருள் என பெயர் மாற்றி ஒரு மருந்துக் கம்பெனியின் பெயரில் டெல்லியிலிருந்து விமானம் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறார்கள். அவர்கள் இதுவரை ஏற்றுமதி செய்த போதைப்பொருள் மதிப்பு சர்வதேச மார்க்கெட்டில் 2000 கோடி ரூபாய் மதிப்புள்ளது என கண்டுபிடித்துள்ளார்கள்.

Advertisment

dd

இந்த கம்பெனியின் உரிமையாளர் யார் எனத் தேடியபோது அவர்தான் மேற்படி ஜாபர்சாதிக் என தெரியவந்தது. குடோனில் கைது செய்யப்பட்ட மைதீன் மற்றும் சலீம் ஆகியோர் ஜாபர்சாதிக்கின் தம்பிகள். இதில் மைதீன் தன்னை ஒரு சினிமா நடிகர் எனச் சொல்லிக் கொண்டார். இயக்குனர் அமீர் டைரக்ஷனில் "இறைவன் மிகப்பெரியவன்' என்கிற படத்தில் மைதீன் ஹீரோவாக நடித்துள்ளார். யார் இந்த ஜாபர்சாதிக் என தேடியபோது, அவர் ஒரு தி.மு.க. நிர்வாகி. அவர் இந்த போதை மருந்து கடத்தலை வெகுநாட்களாக செய்து வருகிறார். சென்னையில் ஒரு ரெஸ்டா ரெண்ட் மற்றும் டிராவல்ஸ் கம்பெனிகளை நடத்துகிறார். அத்துடன் சினிமா தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.

இந்த விவரங்களை பா.ஜ.க.வின் மேலிடம் தி.மு.க.வுக்கு எதிரான ஆயுத மாகக் கையிலெடுத்து வெளிப்படுத்தி வரு கிறது. பா.ஜ.க. மா.தலைவர் மற்றும் எடப் பாடி பழனிச்சாமி ஆகியோரின் பேசுபொருள் ஆனது. உடனே தி.மு.க. ஜாபர் சாதிக்கை கட்சியிலிருந்து டிஸ்மிஸ் செய்தது. வழக்கமாக சஸ்பெண்ட் செய்வார்கள். அதை மீறி சாதிக்கை டிஸ்மிஸ் செய்தது. இதன் மூலம் பா.ஜ.க. முதல்வர் குடும்பத் தை குறிவைத்து பிரச்சாரம் செய்வதைத் தடுப்பதற்காகத்தான் இந்த டிஸ்மிஸ் நடவடிக்கை என்கிறார்கள் தி.மு.க. வட் டாரத்தைச் சேர்ந்தவர்கள். இன்றளவிலும் ஜாபர் சாதிக் பிடிபடவில்லை. அவரைக் கைது செய்ய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பெரும் முயற்சி எடுத்து வருகிறது. அவர் கைது செய்யப்பட்டால் அவர் எப் படி கடத்தினார்? அதற்கு யார் யார் உதவி செய்தார்கள்? அதில் தொடர்புடையவர் கள் யார்? என அவரது வாக்குமூலத்தை வைத்தே அடுத்தடுத்த கைதுகள் இருக்கும்’என்கிறார்கள் போதைப்பொருள் தடுப்புப் பிரிவைச் சார்ந்தவர்கள்.

இதுபற்றி நம்மிடம் பேசிய தி.மு.க. வட்டாரத்தினர், "சென்னை மாவட்டச் செயலாளர் மூலமாகத்தான் ஜாபர் அறி முகம் ஆனார். அவர் படத் தயாரிப்பாளர் என்கிற அடிப்படையில்தான் தி.மு.க. மந்திரிகள் அவருடன் பழகினர். போதைப்பொருள் கடத்தும் நபர் என மா.செ. உட்பட யாருக்கும் தெரியாது. இவர் டெல்லியில் பிசினஸ் செய்கிறார் என்றுதான் எல்லோரும் நம்பினார்கள். இப்பொழுது இவரது முகம் வெளிப்பட்டுவிட்டது''’என வருத்தப்படுகிறார்கள்.

"ஜாபர்சாதிக் இந்தியாவிலிருந்து போதைப்பொருள் களைக் கடத்துவதில் மிகமுக்கியமான ஆள். நெடுங்கால மாக இந்த கடத்தல்களில் ஈடுபட்டு இருக்கிறார். டெல்லியில் உள்ள போதை மருந்து கடத்தல் மாபியா கொடுத்த தகவலின் அடிப்படையில்தான் நாங்கள் இவரது குடோனை ரெய்டு செய்தோம். அங்கு உணவுப்பொருட்களுடன் போதை மருந்துகளை மிக்சிங் செய்யும் வேலை நடை பெற்றுக்கொண்டிருந்தது. அதைக் கையும் களவுமாக பிடித் தோம். போதைப்பொருள் பிடிபட்டால் அது சீரியசான விஷயம். ஐந்து கிராம் ஒருவர் வைத்திருந்தாலே அவர் குற்றவாளி. கிலோக் கணக்கில் போதைப்பொருள்களுடன் பிடிபட்ட ஜாபர்சாதிக் கும்பல் தப்ப முடியாது'' என்கிறார்கள் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள்.

"ஜாபர்சாதிக் விவகாரம் மிகப்பெரிய அரசியல் விவகாரமாகவே மாறியுள்ளது' என்கிறார்கள் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள்.

Advertisment

dd