ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ஒவ்வொரு நாளும் உற்சாகம் மிகுந்து காணப்படுகிறது.
காங்கிரஸ் வேட் பாளர் ஈ.வி.கே.எஸ். இளங் கோவன் 3-ஆம் தேதி வேட்புமனுவை தாக்கல் செய்தார். மாநில அமைச்சர் களும், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க் கள் அடங்கிய குழுவும், அவர்களுக்கு ஒதுக் கப்பட்ட பகுதிகளில் காலை முதல் இரவு வரை வாக்குச் சேகரிப்புக்காகச் சுற்றிக்கொண்டே யிருக்கிறார்கள். ஒவ்வொரு வீட்டிலுமுள்ள வாக்காளர்களை நேரில் சந்தித்து அவர்களோடு பேசி அவர்களின் குறைகளைக் கேட்டு, அரசின் நலத்திட்டங்களை எடுத்துச் சொல்லி வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் 37 வார்டுகள் வருகிறது. ஒவ்வொரு பூத்களிலும் சென்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. பெற்ற வாக்கு கள், அ.தி.மு.க. பெற்ற வாக்குகள், அதேபோல் மாநகராட்சி தேர்தலில் இ
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ஒவ்வொரு நாளும் உற்சாகம் மிகுந்து காணப்படுகிறது.
காங்கிரஸ் வேட் பாளர் ஈ.வி.கே.எஸ். இளங் கோவன் 3-ஆம் தேதி வேட்புமனுவை தாக்கல் செய்தார். மாநில அமைச்சர் களும், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க் கள் அடங்கிய குழுவும், அவர்களுக்கு ஒதுக் கப்பட்ட பகுதிகளில் காலை முதல் இரவு வரை வாக்குச் சேகரிப்புக்காகச் சுற்றிக்கொண்டே யிருக்கிறார்கள். ஒவ்வொரு வீட்டிலுமுள்ள வாக்காளர்களை நேரில் சந்தித்து அவர்களோடு பேசி அவர்களின் குறைகளைக் கேட்டு, அரசின் நலத்திட்டங்களை எடுத்துச் சொல்லி வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் 37 வார்டுகள் வருகிறது. ஒவ்வொரு பூத்களிலும் சென்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. பெற்ற வாக்கு கள், அ.தி.மு.க. பெற்ற வாக்குகள், அதேபோல் மாநகராட்சி தேர்தலில் இரு கட்சிகளும் பெற்ற வாக்குகள், எங்கெங்கே தி.மு.க.வுக்கு பலவீனம், எங்கெங்கே பலம் என்கின்ற நுணுக்கமான பட்டியலை எடுத்து அதற்கேற்ப தேர்தல் பணி செய்துவருகிறார்கள். அமைச்சர்களுக்கு கொடுக் கப்பட்ட பகுதிகளில் யார் அதிக வாக்குகளை தி.மு.க. கூட்டணிக்கு கொண்டு வருவது என்ற வேகமும் போட்டியும் நிலவுகிறது.
தி.மு.க. கூட்டணி தொடர்ச்சியாகக் களப்பணியில் இருக்க, மறுபுறம் எடப்பாடி அணியும் ஓ.பி.எஸ். அணியும் இறுதி முடிவுக்கு வராத சூழலில் எடப்பாடி அணி சார்பாக அறி விக்கப்பட்ட வேட்பாளர் தென்னரசு 3-ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்வதாக அறிவிக் கப்பட்டது. இந்த நிலையில் பா.ஜ.க.வின் பஞ்சாயத்து தொடர, இறுதி நாளான 7-ஆம் தேதி தாக்கல் செய்வார் என எடப்பாடி அறிவித் தார். வேட்பாளர் தென்னரசோ, “"7-ஆம் தேதி என்ன? 8-ஆம் தேதி சொல்லுங்க, அப்பதான் எனக்கு சவுகரியமா இருக்கும்'’ என ஈரோடு அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் கிண்டலாகக் கூறியிருக்கிறார்.
இந்த தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் முதலியார் சமூகத்தின் வாக்குகளைப் பெறுவதற்காக ஒவ்வொரு கட்சியிடமும் முனைப்பு தெரிகிறது. இதில் தி.மு.க. கூட்டணி ஓரளவு வெற்றிகண்டுள்ளது. மேற்கு மாவட் டத்தில் செங்குந்த முதலியார் சமூக அமைப்பான தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம் செல்வாக்கானது. அதன் தலைவராக இருக்கும் திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் கே.பி.கே. செல்வராஜை, தி.மு.க. அமைச்சர்களான முத்துசாமி, வெள்ளக்கோயில் சாமிநாதன், தா.மோ. அன்பரசன், தி.மு.க.விலுள்ள அச்சமூக நிர்வாகிகளான முன்னாள் எம்.எல்.ஏ. சந்திரகுமார், செந்தில்குமார் ஆகியோரோடு நேரில் சென்று சந்தித்து ஆதரவைக் கேட்டுள்ளனர். தி.மு.க.வைப் போலவே தே.மு.தி.க. வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் வேட்பாளர் மேனகா, அ.ம.மு.க. வேட் பாளர் சிவபிரசாத் ஆகியோர் வாக்குச் சேகரிப் பில் வேகம் காட்டிவருகிறார்கள். ஓ.பி.எஸ். வேட்பாளர் செந்தில் முருகன் வேட்புமனுத் தாக்கல் செய்ததோடு ஓ.பி.எஸ். எப்போது கூறுகிறாரோ அப்போது வாக்கு கேட்கப் போகலாம் என வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் சுயேட்சை கள் அதிக ஆர்வத்துடன் வேட்புமனுத் தாக்கல் செய்துவருகின்றனர். பிப்ரவரி 4-ஆம் தேதி சென்னையைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் விதவைக் கோலத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்தார். பாதுகாப்புப் பணியில் ஈடு பட்டிருந்த போலீசார் நுழைவாயி லில் அவரைத் தடுத்துநிறுத்தி, “இதே கோலத்தில் உள்ளே செல்ல அனுமதி இல்லை” என்று கூறினார்கள். இதனையடுத்து அவர் சாதாரண உடையணிந்து வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, "நான் தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் மாநில செயலாளராக உள்ளேன். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக பாட்டில் சின்னத்தில் போட்டியிடுவதற்காக இன்று வேட்புமனுத் தாக்கல்செய்ய வந்துள்ளேன். கரூரில் குடியரசு தின விழா அன்று டாஸ்மாக் கடையில் அதிக விற்பனை செய்த விற்பனையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மது குடித்து இறந்தவர்களின் விதவை மனைவிகள் எண்ணிக்கை அதிகம். தேர்தலில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வானால் மது குடித்து இறந்த விதவை மனைவிமார்களுக்காக நான் சட்டமன்றத்தில் குரல்கொடுப்பேன்'' என்றார். இதனால் மாநகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
வருகிற 10-ஆம் தேதிக்கு பிறகே இந்த இடைத்தேர்தல் களத்தில் யார் யாரெல்லாம் வேட்பாளர்கள் என்பது உறுதியாகத் தெரியவரும். அதற்குப் பின் என்ன வியூகத்தை எடுக்கப் போகிறார்கள், எப்படி வாக்காளர்களை வளைக்கப்போகி றார்கள் என்பது தெரியவரும்.
-ஜீவாதங்கவேல்