அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம் என்கிற பெயரில் தமிழகம் முழுவதும் 16 ஆயிரம் கிராம சபைக்கூட்டங்களை நடத்த முடிவு செய்து டிசம்பர் 23ந்தேதி தமிழகம் முழுவதும் 1100 கூட்டங்கள், அதற் கடுத்த நாள் 1600 கூட்டங்கள் என நடத்தியுள்ளது தி.மு.க. வரும் டிசம்பர் 10 ஆம் தேதி வரை கிராமசபை கூட்டத்தை நடத்த முடிவு செய்து நடத்தி வருகின்றனர். கடந்த இதழில் "அ.தி.மு.க. ஊழல் பட்டியலுடன் ஊராட்சிகளில் நுழைந்த தி.மு.க.' என்கிற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதில் பஞ்சாயத்து செயலாளர்கள் யாரும் கூட்டத்தில் கலந்துகொள்ளக்கூடாது என அரசுத் தரப்பிலிருந்து வாய்மொழி உத்தரவிட்டிருந்ததை குறிப்பிட்டிருந்தோம்.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 24ந்தேதி ஊரகவளர்ச்சித்துறைக்கு பொறுப்பு வகிக்கும் கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி வைத்த அறிக்கையில், கிராம சபை என்பது அரசமைப்பு சட்டத்தால் உருவாக்கப்பட்டது. இதனை கூட்டும் அதிகாரம் ஊராட்சி தலைவருக்கு மட்டுமே உள்ளது. ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராம சபை கூட்டலாம். தனிநபரோ, அரசியல் கட்சிகளோ கிராமசபை கூட்டும் அதிகாரம் கிடையாது, அது சட்டத்திற்கு எதிரானது. அரசியல் ஆதாயம் தேடுவதற்காக கிராம சபை என்கிற பெயரில் அரசியல் கட்சி அல்லது தனிநபர் கூட்டங்களை நடத்துவது பொதுமக்களை குழப்பத்திற்கு உள்ளாக்கும் என்பதால் இந்த கூட்டங்கள் நடத்த மாவட்ட ஆட்சியர் அனுமதிக்ககூடாது, அரசியல் கட்சிகள் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று இருந்தது.
இதற்கு பதிலளி
அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம் என்கிற பெயரில் தமிழகம் முழுவதும் 16 ஆயிரம் கிராம சபைக்கூட்டங்களை நடத்த முடிவு செய்து டிசம்பர் 23ந்தேதி தமிழகம் முழுவதும் 1100 கூட்டங்கள், அதற் கடுத்த நாள் 1600 கூட்டங்கள் என நடத்தியுள்ளது தி.மு.க. வரும் டிசம்பர் 10 ஆம் தேதி வரை கிராமசபை கூட்டத்தை நடத்த முடிவு செய்து நடத்தி வருகின்றனர். கடந்த இதழில் "அ.தி.மு.க. ஊழல் பட்டியலுடன் ஊராட்சிகளில் நுழைந்த தி.மு.க.' என்கிற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதில் பஞ்சாயத்து செயலாளர்கள் யாரும் கூட்டத்தில் கலந்துகொள்ளக்கூடாது என அரசுத் தரப்பிலிருந்து வாய்மொழி உத்தரவிட்டிருந்ததை குறிப்பிட்டிருந்தோம்.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 24ந்தேதி ஊரகவளர்ச்சித்துறைக்கு பொறுப்பு வகிக்கும் கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி வைத்த அறிக்கையில், கிராம சபை என்பது அரசமைப்பு சட்டத்தால் உருவாக்கப்பட்டது. இதனை கூட்டும் அதிகாரம் ஊராட்சி தலைவருக்கு மட்டுமே உள்ளது. ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராம சபை கூட்டலாம். தனிநபரோ, அரசியல் கட்சிகளோ கிராமசபை கூட்டும் அதிகாரம் கிடையாது, அது சட்டத்திற்கு எதிரானது. அரசியல் ஆதாயம் தேடுவதற்காக கிராம சபை என்கிற பெயரில் அரசியல் கட்சி அல்லது தனிநபர் கூட்டங்களை நடத்துவது பொதுமக்களை குழப்பத்திற்கு உள்ளாக்கும் என்பதால் இந்த கூட்டங்கள் நடத்த மாவட்ட ஆட்சியர் அனுமதிக்ககூடாது, அரசியல் கட்சிகள் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று இருந்தது.
இதற்கு பதிலளித்த தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ""மாதிரி நாடாளு மன்றம், மாதிரி சட்டமன்றம் போல் இது மாதிரி கிராமசபை கூட்டங்கள். இங்கு பொதுமக்களுடன் கலந்துரையாடல் செய்கிறோம், கிராமசபை என்கிற பெயரை பயன்படுத்தக்கூடாது என சட்டத்தில் எங்கும் சொல்லவில்லை, மக்கள் பிரதிநிதிகளுக்கு மக்களை சந்திக்கும் உரிமையை அரசியல் சாசனம் வழங்கியுள்ளது என்றார். கிராமசபை கூட்டம் நடத்த தடை என்றால், அதனை மக்கள் கிராமசபைக்கூட்டம்'' என்றார் மு.க.ஸ்டாலின்.
மறுநாளே, (டிசம்பர் 25) விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நடைபெற்ற கிராமசபைக்கூட்டத்தில் கலந்துகொண்ட தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பேசும்போது, அ.தி. மு.க.வின் ஊழலை மக்களுக்கு தெரியப்படுத்து கிறோம் என்பதால் பயந்துபோன எடப்பாடி அரசு இதனை முடக்கப்பார்க்கிறது. எடப் பாடியல்ல இவர்களை ஆட்டிவைக்கும் பிரதமர் மோடி வந்தாலும் தி.மு.க. நடத்தும் இந்த கிராம சபைக்கூட்டத்தை நிறுத்த முடியாது என்றார்.
இதுபற்றி ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் பேசியபோது, ""கிராம சபைக்கூட்டங்களுக்கு தி.மு.க. உறுப்பினர்களைத் தாண்டி பொதுமக்களும் வருகின்றனர் என்கிற தகவல் மேலிடத்துக்கு சென்றது. ஸ்டாலின் கலந்துகொண்ட மரக் காணம் கிராமசபைக் கூட்டத்தில், தேவி என்கிற பெண்மணி, மத்திய- மாநில அரசுகள் தரும் பல திட்டங் களை அரசியல்வாதிகள் தங்கள் பக்கம் திருப்பிக்கொண்டு கொள்ளையடிக்கிறார்கள் என குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட ஸ்டா லின், எல்லா அரசியல்வாதிகளையும் பொத்தாம் பொதுவாக இப்படி குற்றம்சாட்டாதீர்கள். பத்தாண்டுகளாக ஆட்சியில் இல்லாத அரசியல் வாதிகளான தி.மு.க.வினர்தான் கொரோனா காலத்தில் "ஒன்றிணைவோம் வா' என உங்களைத் தேடி வந்து உதவி செய்தனர் என்றார். உடனே அந்த பெண்மணி, இப்போது ஆட்சியில் உள்ளவர்களை சொல்கிறேன், உங்கள் மீது நம்பிக்கை இருப்பதால்தான் இந்த கிராமசபை கூட்டத்துக்கு வந்தேன் என்று இயல்பாகச் சொன்னார். கட்சிக்காரப் பெண்மணியால் இப்படி பேசமுடியாது. தமிழகம் முழுவதுமே தேவி போன்ற பெண்கள் தி.மு.கவின் கிராமசபை கூட்டங்களில் பங்கேற்கிறார்கள்.
தமிழகத்தில் 60 சதவிகிதத்துக்கும் மேலாக ஊராட்சி மன்ற தலைவர், துணை தலைவர், ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், சேர்மன்கள் தி.மு.க.வை சேர்ந்தவர்கள். அதேபோல் தி.மு.க. எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் கூட்டங்களில் கலந்துகொள்கின்றனர். மக்கள் பிரதிநிதிகளான அவர்கள் வருவதால், இவர்களிடம் தங்களது கோரிக்கை மனுக்களை தந்தால் பலன் கிடைக்கும் என பொதுமக்கள் வருகிறார்கள், இதுதான் ஆட்சியாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது'' என்றார்கள்.
மாநில உளவுத்துறையும் தங்கள் பங்குக்கு நோட் போட்டுள்ளது. அதில் மக்களிடம் செல் வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனங் களை வெல்வோம் என கடந்த எம்.பி தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு 2019 ஜனவரி மாதம் தமிழகம் முழுவதும் கிராமசபை கூட்டங்களை நடத்தியது தி.மு.க. அப்போது மோடி அரசின் மக்கள் விரோத திட்டங்களை வெளிப்படுத்தினர். அந்த கூட்டத்துக்கு வந்த பொதுமக்கள் பலரும் கோரிக்கை மனுக்களை தந்தனர். அதில் அரசு மட்டுமே செய்ய வேண்டிய கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பினர் தி.மு.க. எம்.எல். ஏக்கள். தங்களால் செய்ய முடிந்த தையல் இயந்திரம் வழங்கு வது, மூன்று சக்கர வாகனம் தருவது, கண் கண்ணாடி தருவது, கல்வி உதவித்தொகை போன்றவற்றை அண்ணா, கலைஞர், ஸ்டாலின் பிறந்தநாள் விழாக்களின் போது தந்து மக்களின் நம்பிக்கையை பெற்றனர். அதனால் இந்த முறை தி.மு.க. நடத்தும் கிராம சபைக்கூட்டம் என்றதும் மக்கள் திரள்கின்றனர். மக்களிடம், எளிமையான முறை யில் அரசின் ஊழல்களை பேசுவது, மக்களிடம் பெரிய அளவில் ரீச்சாகியுள்ளது. வேலூர் மாநகராட்சியில் குழாய் தண்ணீரை ஒவ்வொரு குடும்பத்தாரும் எவ்வளவு பிடிக்கிறார்கள் என்பதை கணக்கெடுக்க வீடுகளுக்கு மீட்டர் பொருத்தும் பணிகள் நடப்பதை அணைக்கட்டு நந்தகுமார் எம்.எல்.ஏ சொன்னார். அதனைக்கேட்டு அதிர்ச்சியான பெண்கள், மாநகராட்சி அதிகாரிகளிடம் கேள்வி எழுப்ப துவங்கியுள்ளனர். தி.மு.க. எதிர்பார்த்தது இதனைத்தான், அது வெற்றிகரமாக நடக்க துவங்கியுள் ளது என உளவுத்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
அ.தி.மு.க.வில் மகளிரணி, இளம்பெண்கள் பாசறை என வலிமையாகவுள்ளது. தி.மு.க.வில் மகளிரணி, இளம்பெண்கள் பாசறை என களப்பணிக்குப் பெண்கள் உண்டு. தி.மு.கவில் அந்தளவில் அமைப்புகள் கிடையாது. அ.தி.மு.கவில் மகளிரணி, இளம்பெண் பாசறையை சேர்ந்த வர்களை கொண்டு தனியாக பூத் கமிட்டி அமைத்துள் ளது. பெண்கள் வாக்குகளை கவர தி.மு.க. இன்னமும் பின்தங்கியே உள்ளது. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பியின் பிரச்சாரத்தில் பெண்கள் அதிகளவில் பங்கேற்கின்றனர். அதனை வாக்குகளாக மாற்ற வேண்டுமென்றால், பெண்களின் நம்பிக்கையைப் பெறவேண் டும். இதனால்தான் தி.மு.க.வின் கிராம சபை கூட்டங்களில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள் கிராமங் களில் மட்டுமின்றி, பேரூராட்சி, நக ராட்சி, மாநகராட்சிகளின் வார்டுகளி லும் நடத்த உத்தரவிடப்பட்டு அதன்படி நடந்து பெண்களின் கோரிக்கைக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். இது தி.மு.க.வுக்கு தேர்தலில் பலன் தரும் என்பதால்தான் எடப்பாடி அரசு எந்த விதத்தில் தடுக்கலாம் என முயற்சிக்கிறது.
தி.மு.க. நிர்வாகிகள் நம்மிடம், ""கிராம சபை கூட்டங்களை சிறப்பாக செய்து வருகிறோம். அதே நேரத்தில், தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் உள்ள நிலையில் தி.மு.க. நிர்வாகிகளுக்கு செலவு மேல் செலவை தலைமை வைப்பதால் மா.செ.க் கள் உட்பட நிர்வாகிகள் திணறி வருகின்றனர். விடியலை நோக்கி, ஸ்டாலின் குரல் பிரச்சார பயணம், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு விசிட், கிராமசபைக்கூட் டம், போராட்டங்கள் என அடுத்தடுத்து நடத்த தலைமை உத்தரவிட்டு நடத்து கிறோம், தொடர்ந்து நிறைய செலவாகிறது. 10 ஆண்டுகளாக ஆட்சி பொறுப்பில் இருந்த அ.தி.மு.க.வின் அமைச்சர் முதல் எம்.எல்.ஏக்கள் வரை தேர்தல் தேதி அறிவித்ததும் கோடி கோடியாக இறக்குவார்கள். அவர்களுக்கு பக்க பலமாக மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, தேர்தல் ஆணையம் செயல்படும்.
10 ஆண்டுகாலமாக அதிகாரத்தில் இல்லாமல் செலவு மட்டுமே செய்த எங்களுக்கு இதனை எப்படி சமாளிப்பது என தெரியவில்லை. முக்கிய நிர்வாகிகள் பணத்தை வெளியே எடுக்கவிடாமல் மத்தியில் உள்ள பாஜக அரசு முடக்குகிறது. வேலூர் நாடாளுமன்ற தேர்தலின் போது, பொதுச்செயலாளர் துரைமுருகன் வீட்டிலேயே ரெய்டு செய்து தேர்தலை நிறுத்தியது, வழக்குப்போட்டு அவரை மிரட்டுகிறது என்றனர்.
-து.ராஜா