"ஹலோ தலைவரே, ராகுலின் ஒற்றுமை யாத்திரை நிகழ்வில் நடிகர் பிக்பாஸ் கமல் கலந்துக்கிட்டு கலக்கி இருக்கார்''”’

"ஆமாம்பா, டெல்லியில் அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கிட்ட கமல், தமிழ்லயே பேசினாரே?''”’

"உண்மைதாங்க தலைவரே, ராகுல்காந்தி யின் ஒற்றுமை யாத்திரை டெல்லி சென்ற போது, ராகுலின் அழைப்பின் பேரில், ம.நீ.ம. தலைவரான நடிகர் கமல் கலந்துக்கிட்டார். அப்ப அவர் யாத்திரையை வாழ்த்தி ஆங்கிலத்தில் பேசியபோது இடைமறித்த ராகுல், நீங்க தமிழ்லயே பேசுங்க'ன்னு சொல்ல, உற்சாகமாக கமலும் தமிழில் பேசினார். இந்த டெல்லி விசிட் டின் போது, ராகுலும் கமலும் சிலமுறை சந்தித்து நீண்ட நேரம் பேசியிருக்கிறார்கள். தேர்தல், கூட்டணின்னு பேச்சு வந்தப்ப "நீங்கள் காங்கிரசில் இணைய வேண்டும். அப்படி இணைந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். உங்களைக் கட்டாயப் படுத்துவதாக நினைக்க வேண்டாம். தேசிய அரசியலில் எங்களுடன் நீங்கள் இருந்தால் நன்றாக இருக்கும். அப்படி இணைய இயலாத நிலையில், காங்கிரஸின் கூட்டணியில் தான் நீங்கள் இருக்க வேண்டும்'னு ராகுல் கேட்டுக் கொண்டு இருக் கிறார். "காங்கிரஸில் இணைய சாத்தியமில்லை. கூட்டணி வைப்பதில் எனக்கு ஆட்சேபனையும் இல்லை'ன்னு சொன்னதோடு, "தி.மு.க. கூட்டணி யில்தானே காங்கிரஸ் இருக்கிறது. அப்படியிருக்க எங்களை நீங்கள் கூட்டணிக்கு அழைக்கிறீர் களே'ன்னு ராகுலிடம் கமல் கேட்டிருக்கிறார்.''’ ”

Advertisment

rr

"அதுக்கு ராகுலின் பதில் என்னவாம்?''”’

"வரும் தேர்தலில் காங்கிரஸை தன் கூட்டணியில் தி.மு.க. வைத்திருக்குமா என்பது சந்தேகம். ஏனென்றால், கடந்த தேர்தலில் போட்டியிட்டதைவிட இந்தமுறை சற்று கூடுதலான இடங்களை நாங்கள் கேட்க இருக்கிறோம். அதற்கு தி.மு.க. ஒப்புக்கொள்ளுமா என்பதற்கு உறுதி இல்லை. அதனால் சீட் ஷேரிங் விசயத்தில் இந்த முறையும் காங்கிரஸ் அவமானப்படக் கூடாது என்று நினைக் கிறேன். அப்படிப்பட்ட சூழலில், ஒரு முடி வெடுக்கும் பட்சத்தில் அந்த முடிவுகளுக்கு பலம் சேர்க்கும் வகையில் உங்களின் ஒத்துழைப்பு இருந்தால் நன்றாக இருக்கும். அந்த வகையில்தான் காங்கிரஸ் கூட்டணிக்கு வாருங்கள் என்று உங்களை அழைக்கிறேன் என்று விவரித் திருக்கிறார் ராகுல்காந்தி. "தி.மு.க. கூட்டணியை விட்டு நீங்கள் விலகும் சூழல் உருவானால், உங்களுக்கு நாங்கள் பக்கபலமாக இருப்போம்' என்று உறுதி தந்திருக்கிறாராம் கமல்.''”’

"சரிப்பா, தன் ஒற்றுமை யாத்திரைக்கு ராகுல் லீவு விட்டிருக்கிறாரே?''”’

"செப்டம்பர் முதல்வாரம் கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரை, தொய்வில்லாமல் தொடர்ந்துவந்த நிலையில், டெல்லி பாதயாத்திரையைக் கொஞ்சம் நிறுத்தி இருக்கிறார் ராகுல். கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்தைத் தன் அம்மாவுடன் கழிக்கும் எண்ணத்தில் ஜனவரி 3 வரை ஒருவாரம் அவர் யாத்திரைக்கு விடு முறை விட்டிருகிறார். ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்குப் பிறகு, ஜனவரி 4- ஆம் தேதியிலிருந்து மீண்டும் யாத்திரையை அவர் தொடங்குகிறார். யாத்திரையை முழுமை பெற இன்னும் 50 நாள் இருக்கிறது. விடுமுறையில் இருக்கும் ராகுல், தன் பாத யாத்திரை மக்கள் எப்படி பார்க்கிறார்கள்? அதன் சாதக, பாதகம் என்ன? என்றெல்லாம் விசாரித்து வருகிறாராம். இதற் கிடையே கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உள்ளிட்ட கட்சியின் சீனியர் லீடர்களுடன் அவர் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் விவாதித்திருக்கிறார்.''”’

"தமிழக காங்கிரஸுக்கு புதிய தலைவரைத் தேர்ந் தெடுப்பது பற்றியும் ராகுல் விவாதிச்சிருக்காரே?''”’

"உண்மைதாங்க தலை வரே, கட்சித் தலைவர்களு டன் ராகுல் ஆலோசனை நடத்தியபோது, தமிழக காங் கிரஸுக்கு புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பது குறித்த ஆலோசனையும் நடந்திருக் கிறது. அப்போது, தமிழக எம்.பி.க்களான செல்லக்குமார், ஜோதிமணி, எம்.எல்.ஏ. விஜயதாரணி உள்ளிட்ட 6 பேரைப் பற்றி அலசி இருக்கிறார்கள். எனினும் இது குறித்து இறுதியாக முடிவு எட்டப்படவில்லை. இதுபற்றி சோனியாவிடம் ராகுல் ஆலோசிக்க இருக்கிறாராம். அநேகமாக, மீண்டும் தன் பாதயாத்திரையைத் தொடங்குவதற்கு முன்பே, புதிய தலைவர் நியமனம் குறித்த முடிவை ராகுல் எடுக்கக்கூடும் என்றும் டெல்லி வட்டாரம் தெரிவிக்குது.''”’

"அதேசமயம் இந்தத் தலைவர் பதவிக்காக இன்னொரு பக்கம் சூட்கேஸ்கள் கை மாறுவதாகவும் செய்தி உலவுதே?''”’

"தமிழக காங்கிரஸின் மேலிடப் பொறுப்பாளரான தினேஷ் குண்டுராவ் மற்றும் கே.சி.வேணுகோபால் ஆகிய இருவரின் பரிந்துரைக்கும் டெல்லியில் முக்கியத்துவம் இருக் கும் என்ற வகையில், இவர்களை இங்குள்ள முக்கிய நிர்வாகி கள் சிலர் சந்தித்தித்துப் பேசியிருக்கிறார்கள். அப்போது தலைவர் பதவியைக் கைப்பற்ற நினைப்பவர்கள் கனமான சூட்கேஸ்களுடன் மூவ் செய்தார்களாம். இந்த விவகாரம் தெரிந்த கட்சியின் சீனியர்கள் கொந்தளிக்கிறார்கள். புதிதாகத் தலைவர் பதவியில் நியமிக்கப்படுபவர் கட்சிக்குத் துரோகம் செய்யாதவராக இருக்க வேண்டும். உண்மையாக கட்சி விசுவாசி யாக இருக்க வேண்டும். அதனால் அப்படி நியமனம் நடப்ப தற்கு முன், பரிந்துரைக்கப்படும் நபர்களின் பின்னணி குறித்து ராகுல் நன்கு ஆராய வேண்டும் என்றெல்லாம் டெல்லிக்கு புகா ரின் சாயலில் கோரிக்கைகளை அனுப்பி இருக்கிறார்களாம்.''”’

rr

"தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் சுதா சேஷையன் பற்றி பரபரப்பான விமர்சனங்கள் எழுந்துக்கிட்டு இருக்குதே?''”’

"ஆமாங்க தலைவரே, கடந்த வாரம் எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகத்தின் 35-ஆவது பட்டமளிப்பு விழா நடந்தது. கவர்னர் தலைமையில் நடந்த இந்த விழாவுக்கு, பல்கலைக் கழகத்துக்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அழைத் திருந்தார், அதன் துணை வேந்தரான சுதா சேஷையன். காரணம், இருவரும் ஆர்.எஸ்.எஸ். சிந்தனை உள்ளவர்கள் என்பதுதானாம். ஏற்கனவே சுதாவும் நிர்மலாவும் இணைந்து தான் காசி சங்கமம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத் தார்கள். அதை அப்போதே கவனிக்காத தால், இப்போது தி.மு.க. அரசை சீண்டிப் பார்க்க நிர்மலாவை வைத்து விழாவை சுதா நடத்தினார் என்கிறார் கள். துணை வேந்தர்களை நிய மிக்கும் அதிகாரம் இனி முதலமைச்சருக்குத்தான் என்கிற வகையில் சட்டத் திருத்தம் செய்தால் மட்டும் போதாது, ராஜ்பவன் சொல்லுக்கேற்ப ஆடும் சுதா சேஷையன் போன்றவர்களைத் தட்டிவைக்காமல், ராஜ்பவனின் அதிகார மீறலை ஒன்றும் செய்யமுடியாது என் கிறது அதிகாரிகள் தரப்பு. சுதாவின் செயல்பாடுகள் தொடர் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.''”’

"தேர்வுக் கட்டண டெபாசிட் விசயத்திலும் சுதாசேஷையன், அவர் இஷ்டத்துக்கு விளை யாடுகிறார் என்றும் புகார் வருதேப்பா''”’

’"ஆமாங்க தலைவரே, மாணவ - மாணவிகளிடமிருந்து பல்கலைக்கழகம் வசூலிக்கும் தேர்வுக் கட்டணங்கள் உள்ளிட்ட அனைத்து வகையிலான பணத்தையும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில்தான் டெபாசிட் செய்ய வேண்டும் என்பது விதி. ஆனால், சுதாவோ, அவருக்கு நெருக்கமானவர் கள் உள்ள சிட்டி யூனியன் வங்கியில் டெபாசிட் செய்திருக் கிறாராம். இதுபோன்ற முறைகேடு கள், மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் குறித்து அவருக்கு எதிராக நிறைய புகார்கள் பெண் டிங்கில் இருக்கிறதாம். இவரது அடாவடிகளை எல்லாம் தி.மு.க. அரசு இன்னும் கண்டுகொள்ளவில்லை என்கிறார்கள். மேலும் சிட்டி யூனியன் பேங்க், கரூர் வைசியா பேங்க் மேனேஜர் களை எல்லாம் விழாவுக்கு அழைத்து, அவர் களை நிர்மலா சீதாராமனிடம் அறிமுகப் படுத்தி வைத்த சுதா, பல்கலைக்கழக வளாகத் திலே, உள்ள இந்தியன் வங்கியின் மேனேஜரை, விழாவுக்குக்கூட அழைக்கவில்லையாம். இந்த நிலையில், ஏற்கனவே 1 வருட பணி நீட்டிப்பில் உள்ள சுதா, விரைவில் ஓய்வு பெறவிருக்கிறார். ஆனால், தனக்கு மீண்டும் 1 வருடம் பணி நீட்டிப்பு வழங்கவேண்டும் என்று ராஜ்பவனை யும் டெல்லியையும் அணுகி வருகிறாராம்.''”’

"அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனிக்குடித்தனம் போக இருக்கிறாராமே?''”’

Advertisment

rr

"அமைச்சர் பொறுப்பேற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலினிடம் பொலிட்டிகல் ஸ்பெஷல் பி.ஏ.வாக இருப்பவர் செந்தில். இப்போது இவரைத்தான் கட்சிப் பிரமுகர்கள் பலரும் மொய்க்கிறார்கள். காரணம், விரைவில் இளைஞரணி நிர்வாகிகளை உதயநிதி நியமிக்க இருக்கிறாராம். அது தொடர் பான சந்திப்புகளுக்காகத்தான் இவ்வளவு முண்டி யடிப்புகளாம். இந்தநிலையில், செந்தில் மூலம் உதயநிதியை சந்திக்க, சித்தரஞ்சன் சாலை வீட்டுக்கு அண்மையில் மதுரையைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் செல்ல, "என்னங்க. காலங் கார்த்தாலேயே இங்க வந்து நிக்கறீங்க. இங்கெல்லாம் அண்ணனைப் பார்க்கமுடி யாது. அன்பகத்துக்குப் போங்க'’என்று செந்தில் எதிரிலேயே சிலர் சொல்லியனுப்பி இருக்கிறார்கள். இளைஞரணி அலுவலகமான அன்பகத்திலோ, உதயநிதியை சந்திக்கக் காத்திருந்த கட்சிப் பிரமுகர்களின் வரிசையில் அமைச்சர் உட்பட அனைவரையும் நிற்க வைக்கிறார்களாம். தன்னைச் சந்திக்க வருபவர்களுக்கு சங்கட அனுபவங்கள் நேர்வதை அறிந்த உதயநிதி, அமைச்சர்களைப் போல், தனி பங்களா ஒன்றுக்கு விரைவில் குடிபோகும் முடிவுக்கு வந்திருக்கிறா ராம். இது தி.மு.க.வில் விறு விறுப்பை ஏற்படுத்தியுள்ளது''’.”

"பா.ஜ.க.வில் ஹனி டிராப் விவகாரம் சூடு பிடிச்சிருக்கே?''”’

"ஆமாங்க தலைவரே, அடுக் கடுக்காகக் கிளம்பும் ஏடாகூட ஆடியோ வீடியோ சமாச்சாரங் களால் பா.ஜ.க. தரப்பு சங்கடத்தில் இருக்கு. இந்த நிலையில் அந்தக் கட்சியின் பெண் பிரமுகர் அலிஷாவிடம் சூர்யா சிவா, மோச மாகப் பேசியதாக அவரே இப்போது பேட்டி கொடுத்து, கட்சியினரின் சங்கடத்தை அதிகப்படுத்தி இருக் கிறார். இதற்கிடையே தமிழகம் வந்த பா.ஜ.க.வின் தேசியத் தலைவரான ஜே.பி. நட்டாவும், இங்கு பா.ஜ.க.வில் நடக்கும் மோசமான அக்கப்போர் கள் குறித்து தன் அதிருப்தியைத் தெரிவித்துவிட்டுப் போயிருக்கிறா ராம். இந்த விவகாரம் அகில இந்திய அளவில் பா.ஜ.க.வின் இமேஜை டேமேஜ் செய்வதாக அந்தக் கட்சியினரே புலம்புகிறார்கள்.''”’

"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். சுனாமி பேரிடர் நிகழ்ந்து 18 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த சுனாமி நாளை ஆண்டுதோறும் டிசம்பர் 26-ல் மீனவர் சமூக அமைப்புகள், துக்கம் அனுஷ்டிப்ப தோடு, அதில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலியையும் செய்துவருகிறார் கள். அந்த வகையில், சென்னையில் உள்ள பா.ஜ.க. மீனவர் அணியினர், இந்த வருட அஞ்சலி நிகழ்ச்சிக்கு, ஒன்றிய மீன்வளத் துறை அமைச்ச ரான் எல்.முருகனை அழைத்திருந் தனர். அமைச்சர் முருகனோ, இந்த நிகழ்ச்சியைப் புறக்கணித்துவிட் டாராம். இதனால் கடுப்பான பா.ஜ.க. மீனவர் அணியினர், எங்கள் உணர்வுகளை மதிக்காத முருகனுக்கு எதற்கு அமைச்சர் பதவி என்று, கோபக் கொதிப்போடு, பிரதமர் மோடியின் அலுவலகத்துக்கு புகார் களை அனுப்பி வருகிறார்கள்.''’

__________

இறுதிச் சுற்று!

ff

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், டிசம்பர் 29, வியாழனன்று, திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டு, ரூ.655 கோடி மதிப்பீட்டிலான 5,639 புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். மேலும், ரூ.308 கோடி மதிப்பீட்டிலான 5,951 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, 22,716 பயனாளிகளுக்கு, ரூ.79 கோடி மதிப்பீட்டிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினார். அதன்பின்னர் மணப்பாறை அருகே மொண்டிப்பட்டியிலுள்ள டி.என்.பி.எல் சென்ற முதல்வர், அங்கு புதிய காகித ஆலையைத் தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு, மூர்த்தி, எம்.பிக்கள் திருநாவுக்கரசர், ஜோதிமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தமிழக காவல்துறையில் மெகா டிரான்ஸ்ஃபர்!

காவல்துறையில் இந்த ஆண்டின் இறுதியிலோ அல்லது புத்தாண்டின் துவக்கத்திலோ பணியிட மாறுதல் இருக்குமென தகவல் தெரிவிக்கின்றன நம்பத்தகுந்த காவல்துறை வட்டாரங்கள். மொத்தம் 66 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றத்திற்கும் உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசு முடிவுசெய்து அதற்கான பட்டியல் தயார் செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

சத்தியபிரியா ஐ.பி.எஸ். பதவி உயர்வு பெற்று திருச்சி மாநகர காவல் துறை ஆணையராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ஏ.டி.ஜி.பி. நிலையிலுள்ள கருணாசாகர், ராஜீவ்குமார், சந்தீப்ராய் ரத்தோட், அபய்குமார்சிங், வன்னியபெருமாள் ஆகியோர் டி.ஜி.பி.க்களாகவும், ஐ.ஜி. அந்தஸ்திலுள்ள டாக்டர். ஆர்.தினகரன், அவிபிரகாஷ், வித்யாஜெயந்த் குல்கர்ணி, அ.அருண், டி.கல்பனாநாயக் ஆகிய அதிகாரிகள் ஏ.டி.ஜி.பி.க்களாகவும், டி.ஐ.ஜி. நிலையிலுள்ள பிரவீன்குமார்அபினபு, விஜயேந்திரபிடாரி, கே.எஸ்.நரேந்திரன்நாயர், ரூபேஷ்குமார்மீனா, டாக்டர் ஆனிவிஜயா, எம்.சத்தியபிரபா ஆகியோர் ஐ.ஜி.க்களாக பதவி உயர்வோடு பணியிட மாற்றங்கள் செய்யப்படவிருப்பதாக கூறப்படுகிறது.

-துரை.மகேஷ்