"ஹலோ தலைவரே, முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவில் இருக்கும் நேரத்தில் தமிழகத் தில் பரபரப்பான சம்பவங்கள் நடந்தபடியே இருக்கிறது.''”
"ஆமாம்பா, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூட இந்த நேரத்தில் தமிழகம் வந்து சென்றிருக்கிறாரே?''”
"அரசுமுறைப் பயணமாக சென்னைக்கு வந்த கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், சென்னை மாநகராட்சி செயல்படுத்தி வரும் திடக் கழிவு மேலாண்மைத் திட்டங்களின் செயல்பாடு களை பார்வையிட்டார். இது தவிர, குப்பைகளை மறுசுழற்சி செய்வது, பயோகேஸை பல்வேறு துறைகளில் பயன்படுத்துவது குறித்தும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந் திருக்கிறார். இந்தப் பயணத்தில் அமைச்சர் உதய நிதியை சந்தித்தும் விவாதித்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று சொல்லப்பட்டாலும் வேறு சில விசயங்கள் இருக்கிறது என்று கிசுகிசுக்கிறது கோட்டை வட்டாரம்.''”
"அது என்னப்பா வேறு சில விசயங்கள்?''”
"இதுகுறித்து கோட்டைத் தரப்பில் விசாரித்தபோது, ’தமிழகத்திலும் சிவக்குமாருக்கு நிறைய மின் உற்பத்தி தொடர்பான பல தொழில்கள் இருக்கிறது. சென்னையில் உள்ள மார்வாடிகள் சிலர் அவரின் தொழில் பார்ட்னர்கள். பவர் ப்ராஜெக்ட்டில் (மின் உற்பத்தி திட்டம்) சில பிரச்சனைகள் இருக்கிறது. அதனை அவரது தொழில் பார்ட்னர்கள் தெரிவித் திருக்கிறார்கள். அது குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் விவாதிக்கவிருந்தார் சிவக்குமார். ஆனால், முதல்வர் அமெரிக்காவில் இருப்பதால், உதய நிதியை சந்திக்குமாறு அவருக்கு அமெரிக்காவிலிருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதனையடுத்தே, உதயநிதியிடம் அப்பாயின்ட்மெண்ட் ஃபிக்ஸ் செய்யப்பட்டது. உதயநிதியை சந்திக்கத்தான் சிவக்குமார் சென்னை வந்திருக்கிறார். அவரை மட்டும் சந்தித்துவிட்டுச் சென்றால், சந்திப்பின் நோக்கம் என்ன என்பது குறித்து பல விமர்சனங்கள் றெக்கை கட்டிப் பறக்கும். அதனால், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை பார்வையிடுவது போல அரசு முறை பயணமாக வந்து செல்வது என அவர் தீர்மானித்தாராம். அதன்படியே நடந்திருக்கிறது. தொழில்ரீதியாக உள்ள பிரச்சினைகளை உதயநிதியிடம் சிவக்குமார் தெரிவித்திருக்கிறார். பாசிட்டிவான பதில் உதயநிதி தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டுள்ளது’என்கிறார்கள்.''”
"முதல்வர் அமெரிக்கா சென்றுள்ள நிலையில், சில சீனியர் அமைச்சர்களிடம் தொய்வு தெரிந்தபோதும், இளம் அமைச்சர்கள் சிலர் விறுவிறுப்பாக இயங்கிவருகிறார்களே?''”
"முதல்வர் அமெரிக்காவில் இருக்கும் நிலையிலும், அமைச்சர்கள் சிலர் மட்டும் தங்களின் துறை சார்ந்த ஆய்வுக்கூட்டங்களை நடத்தி, உடனடியாக எடுக்க வேண்டிய பல நடவடிக்கை களை எடுத்துவருகின்றனர். அதாவது, முதல்வர் தான் ஊரில் இல்லையே, நாம் ஜாலியாக இருக்க லாம் என்று இருந்துவிடாமல், துறை சார்ந்த விசயங் களில் கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகை யில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தனது துறையில் நிலுவை யில் உள்ள சட்டப்பேரவை அறிவிப்பு கள், செயல்படுத்த வேண்டிய புதிய திட்டங்கள், ஒன்றிய அரசிடமிருந்து வரவேண்டிய நிதியை பெறுவது தொடர்பான மூவ்கள், ஆசிரியர் தினத்தை சிறப்பாகக் கொண்டாடுவது உள்ளிட்ட பணிகள் குறித்து, துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட துறையின் செயலாளர் மதுமதி ஐ.ஏ.எஸ்., இயக்குநர் கண்ணப்பன், தொடக்க கல்வி இயக்குநர் நரேஷ், தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிச்சாமி, அரசு தேர்வுகள் துறை இயக்குநர் லதா உள்ளிட்டவர்களுக்கு தேவையான உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளா ராம் அமைச்சர் மகேஷ்.''”
"அமைச்சர் நேருவால் தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறதே?''”
"அண்மையில் ஒரு கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, இப்போது இருக்கும் நம் நிலைமை 2026-லும் இருக்காது. இப்போது நம்மோடு இருக்கும் கூட்டணிக்கட்சிகள், அப் போதும் இருக்குமா? என்று தெரியாது’ என்றரீதி யில் பேசியிருக்கிறார். திடீரென அவர் இப்படிப் பேச என்ன காரணம்? தி.மு.க. சீனியர்கள் பற்றி ரஜினி பேசியதால், அவர் அவர்கள் சார்பில் கோபத்தை வெளிப்படுத்துகிறாரா? என்றெல்லாம் தி.மு.க. உடன்பிறப்புகள் மத்தியில் கேள்விகள் எழுந்து சலசலப்பு ஏற்பட்டநிலையில், "கூட்டணி குறித்து நான் பேசியதை சிலர் திரித்து வெளியிட்டுள்ளனர்' என கூறிய கே.என்.நேரு, "தி.மு.க. தலைமையிலான கூட்டணி மிகச் சரியான கூட்டணி' என்று தெரிவித் துள்ளார். மேலும், தற்போதைய கூட்டணியை என்றைக்கும் எங்கள் தலைவர் விட்டுக் கொடுக்க மாட்டார். இந்த ஆட்சி அடுத்த முறையும் தொடர எந்த நிலை வந் தாலும் பாடுபடுவோம் என்றுதான் பேசியிருந் தேன்' என விளக்கமளித்துள் ளார்.''
"தமிழக கடலோர மாவட் டங்களின் காவல்துறைக்கு எச்சரிக்கை கொடுக்கப் பட்டிருக்கிறதே?''”
"சென்னைக்கு அண்மை யில் தேசிய பாதுகாப்பு ஆலோ சகர் அஜீத் தோவல் வந்ததையும், அவர் கவர்னர் ரவியுடன் அகதிகள் ஊடுருவல் குறித்து தீவிரமாக விவாதித்தது குறித்தும் நாம் ஏற்கனவே பேசிக்கொண் டோம். குறிப்பாக, வங்கதேசம் மற்றும் இலங்கையி லிருந்து ஊடுருவும் அகதிகள், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து இலங்கை வழியாக தமிழகத்துக்குள் போதைப்பொருளைக் கடத்துகிற விவகாரங்களும் நடப்பது குறித்தே அவர்கள் விவாதித்தார்கள். இந்த நிலையில், இது குறித்து தமிழக அரசின் கவனத்துக்கு கவர்னர் ரவி, தெரி வித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து தமிழக காவல் துறை அதிகாரிகளின் உயர்மட்ட ஆலோசனைகள் நடந்திருக்கிறது. அதில், தீவிரவாதிகள் ஊடுருவலை கடுமையாகத் தடுக்கவேண்டும் என்றும், அதே போல் போதைப்பொருள் கடத்தலையும் தடுக்க வேண்டும் என்றும் இரண்டாம் நிலை அதிகாரி களுக்கு உயரதிகாரிகள் உத்தரவிட்டிருக்கிறார்கள். அதுவும் கடலோர மாவட்ட போலீஸ் அதிகாரி களுக்கு கூடுதல் எச்சரிக்கையும் செய்யப் பட்டிருக்கிறது.''”
"பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்னு மேற்குவங்க அரசு சிறப்பு சட்ட மசோதாவை நிறைவேற்றியிருக்கிறதே?''”
"மேற்குவங்க மாநிலத்தில் கூட்டு பாலியல் கொடுமையால் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டி ருக்கிறார். இந்த சம்பவம் தேசத்தையே உலுக்கி எடுத்திருக்கிறது. இடை விடாமல் நடத்தப்பட்ட போராட்டங்களால், மம்தாவின் மேற்கு வங்க அரசுக்கு மிகுந்த நெருக் கடி உருவானது. இதைத் தொடர்ந்து சட்டமன்றத் தைக் கூட்டி, பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்ட மசோதாவை அவர் அதிரடியாக நிறைவேற்றி இருக்கிறார். அந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஒவ்வொரு மாநில அரசும் மருத்துவ கட்டமைப்புகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழகத்திலும் மேற்குவங்கம் போன்ற ஒரு சம்பவம் நடந்துவிடக்கூடாது என்று அமெரிக்கா சென்றிருக்கும் முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்தபடியே ஆலோசித்திருக்கிறார். இதுகுறித்து இங்குள்ள உயரதிகாரிகளைத் தொடர்புகொண்டு அவர் இதற்கான கட்டளைகளை இட்டிருக்கிறார். இதைத்தொடர்ந்து ஒவ்வொரு மருத்துவமனையிலும் போலீஸ் செக்போஸ்ட்டை அமைக்க, சுகாதாரம் மற்றும் காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.''”
"மாநில பா.ஜ.க. ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் ஹெச்.ராஜா தரப்பிடம் பரபரப்பு அதிகம் தெரியுதே?''”
"புதிய பொறுப்பில் அமர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, ஏற்கனவே இருந்த மாநிலத் தலைவரை விடவும் கூடுதலாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுப் பெயரெடுக்க வேண்டும் எனத் திட்டமிட்டிருக்கிறார் ஹெச்.ராஜா. அதன் முதல்கட்டமாக, கவர்னர் ரவியை சந்தித்து பரபரப்பாக்கினார். அடுத்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்சா உள்ளிட்ட அதிகாரமிக்க தலைவர்களை சந்தித்து வாழ்த்தினைப் பெற்றிருக்கிறார். அமித்ஷாவுடன் அவர் மதிய உணவும் சாப்பிட்டிருக்கிறார். அப்போது தமிழகத்தில் மாநிலத் தலைவராக இருந்த நபரைப் பற்றிக் கடுமையாக விமர்சித்த அமித்ஷா, ’தவறான தகவலைக் கொடுத்து, அ.தி.மு.க. கூட்டணியை உடைத்து, நம் கட்சியை நட்டாற்றில் விட்டுவிட்ட ராஸ்கல்’ என்று திட்டினாராம். அந்த மாநில தலைவர் அமெரிக்கா வில் இருந்து சென்னை திரும்புவதற்குள் தமிழக பா.ஜ.க.வில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடிக்கும் வகையில் பல வியூகங்களை வகுத்துவருகிறாராம் ராஜா. இதற்கிடையே, ராஜாவின் தினசரி நடவடிக்கைகளைக் கவனித்து உடனுக்குடன் தனக்கு அப்-டேட் செய்ய வேண்டும் என தனது ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளாராம் லண்டனில் இருக்கும் மாநில தலைவர். ஹெச்.ராஜாவின் அரசியல் நடவடிக்கைகள் தன்னை காவு வாங்கிவிடுமோ என்கிற பதட்டமும், மிரட்சியும் அவருக்கு இருப்பதாக அவரது ஆதரவாளர்களே சொல்கிறார்கள்.''”
"நடிகர் விஜய்க்கு ஆதரவாக பா.ஜ.க. தமிழிசை குரல் கொடுத்திருக்கிறாரே?''”
"தமிழிசை, திடீரென த.வெ.க. கட்சித் தலைவரான நடிகர் விஜய் மீது கரிசனம் கொண்டு அவருக்காக வக்காலத்து வாங்கிப் பேசியிருக்கிறார். ஃபார்முலா-4 போட்டியை நடத்த முடிந்த இந்த தி.மு.க. அரசால், உடனடியாக விஜய்யின் மாநாட்டுக்கு இடத்தை ஓ.கே. செய்ய முடியவில்லை. அவரைக்கண்டு பயப்படு கிறார்கள்’என்றெல்லாம் விஜய்க்கு ஜே போட்டிருக்கிறார் தமிழிசை. அவர் இப்படி பேசக் காரணம், பா.ஜ.க.வில் தனக்கு தமிழக அளவிலான பதவி மறுக்கப்பட்டதால்தான், அந்த தோல்வி மனப்பான்மையை மாற்றிக் கொள்ள இப்படியெல்லாம் பேசி, தன்னை நிலை நிறுத்திக்கொள்ள முனைகிறார் என்றும் சொல்கிறார்கள். ஏற்கனவே தமிழிசையிடம் மேனேஜராக இருந்த ஒருவர், விஜய் கட்சிக்கு சென்ற நிலையில், தமிழிசையும் விஜய் பக்கம் சென்றாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள் அவர் மனநிலையை அறிந்தவர்கள். அதிலும் அந்த முன்னாள் மேனேஜர் சொன்ன தன் அடிப்படையில்தான் அவர் இந்த அளவுக்கு வக்காலத்து வாங்கியிருக் கிறாராம்.''”
"எடப்பாடி சொந் தக்கட்சியிலேயே பலவீனமாக இருக்கிறார் என்கிறார்களே?''”
"ஆமாங்க தலைவரே, அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை அனைத்து மட்டத்திலும் எடப்பாடிக்குப் பெருகிவரும் அதிருப்திகள் அவருக்குத் தலைவலியை ஏற்படுத்தி வருகின்றன. இந்த பலவீனத் தால்தான் இதுவரை அவர் ஒருவரைக் கூட கட்சியில் இருந்து நீக்கவோ, புதிய பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை நியமிக்கவோ இல்லை என்கிறார்கள். இதுதவிர, அவரது நம்பிக்கைக் குரியவர்களாக இருந்த சேலம் இளங்கோவனும், தளவாய் சுந்தரமும் கூட அவருக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார்களாம். இவர்கள் இருவரும் ஓ.பி.எஸ்., சசிகலா, தினகரன் ஆகியோரிடம் தினசரி பேசிவரு கிறார்களாம். அ.தி.மு.க. தொண்டர் களோ, எடப்பாடிக்கு தவறான ஐடியாக்களைக் கொடுக்கிறவர்களே இவர்கள் இருவரும்தான். இவர்கள் அ.தி.மு.க.வில் இருந்து விலகி னால்தான் கட்சி உருப்படும் என சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.''”
"அ.தி.மு.க. மாஜி வேலுமணி பற்றி ஏகப்பட்ட தகவல்கள் வந்து கொண்டிருக்கிறதே?''”
"ஆமாங்க தலைவரே, அ.தி.மு.க. மாஜி மந்திரி வேலுமணி, தன் மகன் திருமணத்திற்காக அண்மையில் சசிகலாவை சந்திக்கச் சென்றிருக்கிறார். ஆனால் சசிகலாவோ அவரை வரவேற்காததோடு சந்திக்கவும் மறுத்துவிட்டாராம். இதேபோல் தினகரனை சந்திக்க வேலுமணி சென்றபோதும், வீட்டுக்குள் இருந்துகொண்டே, தான் இல்லை என்று சொல்லி அனுப்பிவிட்டாராம். திவாகரனை மட்டும் சந்தித்து பத்திரிகையை வைத்திருக்கிறார். அப்போது திவாகரன், வேலுமணியைப் பார்த்து, ’"நீங்களும், தங்கமணி போன்றவர்களும் சேர்ந்துதான் எடப்பாடியைக் கெடுத்துவிட்டீர்கள். உங்களைப் போன்றவர்களால்தான் அ.தி.மு.க. வீணாகிவிட்டது'’என்று கடுமையாக திட்டியனுப்பினாராம்.''”
"தலைமறைவாக இருந்த மாஜி மந்திரி கரூர் விஜயபாஸ்கரின் தம்பியும் பிடிபட்டிருக்கிறாரே...?''
"கரூரில் 100 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கைதாகி ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார். இந்த நிலையில் அவரது தம்பி சேகர், காவல்துறையுடன் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தார். இவர், ஆண்டாங்கோயில் கிழக்கு ஊராட்சிமன்றத் தலைவர் சாந்தியின் கணவராவார். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பதுங்கியிருந்த அவரை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் கடந்த ரெண்டாம் தேதி மடக்கியது. கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விடுமுறை என்பதால், அவர் கரூர் விரைவு நீதிமன்ற நீதிபதி மகேஷ் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 12ஆம் தேதி வரை, 10 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி மகேஷ் உத்தரவிட... அதன்படி அன்று இரவே கிளைச் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே கைதான அ.தி.மு.க. மாஜி மந்திரி விஜயபாஸ்கர், நிபந்தனை ஜாமீனில் கரூர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் தினமும் கையெழுத்திட்டு வருகிறாராம்.''
"நானும் எனக்குக் கிடைச்ச தகவலைப் பகிர்ந்துக் கிறேன்... கடந்த இதழ், ராங்கால் பகுதியில் தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தை மண்டல இணை இயக்குநர்கள் புறக்கணித்த செய்தியைக் குறிப்பிட்டிருந்தோம். ஆனால், இந்த ஆலோசனைக் கூட்டம் அமைச்சரால் திடீரென ஏற்படு செய்யப்பட்டிருந்ததால்... மண்டல இணை இயக்குநர்கள் அவசர, அவசரமாக கிளம்பிவர இயலாததால்தான் கூட்டத்தில் கலந்துகொள்ள இயலவில் லையே தவிர, திட்டமிட்டுப் புறக்கணிக்கவில்லை எனவும், இந்த விஷயத்தை கோட்டையில் உள்ள சில விஷமிகள் மண்டல இயக்குநர் களுக்கு எதிராக புரளியைக் கிளப்பி விட்டுள்ளதாகவும் கோட்டை வட்டாரத் தினர் முணுமுணுக் கின்றனர்.'