ராங்கால் தி.மு.க. கூட்டணி பா.ம.க. அச்சாரம்! விலகிய கோவை செல்வராஜ்! பரிதவிக்கும் ஓ.பி.எஸ்.

ff

"ஹலோ தலைவரே, நாடே எதிர்பார்க்கும் குஜராத் சட்டமன்றத் தேர்தல் ஒருவழியாக நடந்து முடிஞ்சிருக்கு.''”

"ஆமாம்பா, மோடியின் மாநிலமான குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கும், இரண்டு கட்டமாக தேர்தல் நடந்திருக்கு. நாடே தெரிஞ்சிக்கத் துடிக்கும் அதன் தலையெழுத்து, 8ஆம் தேதி முடிவாயிடும்.''”

"உண்மைதாங்க தலைவரே, கால் நூற்றாண்டுக்கும் மேலாக குஜராத்தில் பா.ஜ.க. அதிகாரத்தில் இருக்கு. பல்வேறு டேஞ்சரஸ் வித்தைகளைக் கையாண்டுதான், இப்படி தன் ஆட்சியை பா.ஜ.க. அங்கே தக்கவைத்தது. இந்த முறையாவது பா.ஜ.க.வை வீழ்த்திவிடணும்னு காங்கிரஸும், ஆம் ஆத்மியும் தனித்தனியாக வரிஞ்சிகட்டி நிற்குது. அதேபோல் பா.ஜ.க.வும், தன் கௌரவத்தைத் தக்கவைக்கப் போராடுது. தன் சொந்த மாநிலத்தில் பா.ஜ.க. எந்த வகையிலும் சறுக்கிவிடக் கூடாதுன்னு பல்வேறு வியூகங்களை வகுத்துக் கொடுத்துவிட்டு, பிரதமர் மோடி பல்ஸ் ரேட் எகிற எகிற, முடிவுக்காகக் காத்திருக்கிறார். இந்தத் தேர்தல் முடிவு, வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்ஸ் ரேட்டாக சிலரால் கணிக்கப்படுது.''”

rr

"சரிப்பா, முதல்வர் ஸ்டாலின் டெல்லிக்குப் போயிருந்தாரே?''”

"ஆமாங்க தலைவரே, கடந்த வாரமே நாம பேசிக்கிட்ட மாதிரி, பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் ஜி-20 மாநாட்டை நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க, தமிழக முதல்வர் ஸ்டாலின் 5ஆம் தேதி டெல்லிக்குச்

"ஹலோ தலைவரே, நாடே எதிர்பார்க்கும் குஜராத் சட்டமன்றத் தேர்தல் ஒருவழியாக நடந்து முடிஞ்சிருக்கு.''”

"ஆமாம்பா, மோடியின் மாநிலமான குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கும், இரண்டு கட்டமாக தேர்தல் நடந்திருக்கு. நாடே தெரிஞ்சிக்கத் துடிக்கும் அதன் தலையெழுத்து, 8ஆம் தேதி முடிவாயிடும்.''”

"உண்மைதாங்க தலைவரே, கால் நூற்றாண்டுக்கும் மேலாக குஜராத்தில் பா.ஜ.க. அதிகாரத்தில் இருக்கு. பல்வேறு டேஞ்சரஸ் வித்தைகளைக் கையாண்டுதான், இப்படி தன் ஆட்சியை பா.ஜ.க. அங்கே தக்கவைத்தது. இந்த முறையாவது பா.ஜ.க.வை வீழ்த்திவிடணும்னு காங்கிரஸும், ஆம் ஆத்மியும் தனித்தனியாக வரிஞ்சிகட்டி நிற்குது. அதேபோல் பா.ஜ.க.வும், தன் கௌரவத்தைத் தக்கவைக்கப் போராடுது. தன் சொந்த மாநிலத்தில் பா.ஜ.க. எந்த வகையிலும் சறுக்கிவிடக் கூடாதுன்னு பல்வேறு வியூகங்களை வகுத்துக் கொடுத்துவிட்டு, பிரதமர் மோடி பல்ஸ் ரேட் எகிற எகிற, முடிவுக்காகக் காத்திருக்கிறார். இந்தத் தேர்தல் முடிவு, வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்ஸ் ரேட்டாக சிலரால் கணிக்கப்படுது.''”

rr

"சரிப்பா, முதல்வர் ஸ்டாலின் டெல்லிக்குப் போயிருந்தாரே?''”

"ஆமாங்க தலைவரே, கடந்த வாரமே நாம பேசிக்கிட்ட மாதிரி, பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் ஜி-20 மாநாட்டை நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க, தமிழக முதல்வர் ஸ்டாலின் 5ஆம் தேதி டெல்லிக்குச் சென்றார். அந்த மாநாட்டில் பங்கேற்கும் மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அதிகபட்சமாக தலா 5 நிமிடங்களே ஒதுக்கப்பட இருக்கிறது. சுருக்கமாகப் பேசுவதற்கும், விரிவான கருத்துக்களை அறிக்கையாக அரசிடம் சமர்ப்பிக்கவும் மாநில முதல்வர்களைக் கேட்டுக்கொண்டது டெல்லி. அதன்படி மாநாட்டில் பங்கேற்று தமிழகத்தின் கருத்தைத் தெரிவித்த ஸ்டாலின், இரவே சென்னைக்குத் திரும்பிவிட்டார்.''”

"இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடியும் கலந்துக்கிட்டாரே?''”

"ஆமாங்க தலைவரே, ஜி-20 மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டத்துக்கு எடப்பாடியையும் அழைத்திருந்தது டெல்லி. அழைப்பில், அ.தி.மு.க.வின் இடைக்காலப் பொதுச்செயலாளர் என்றே எடப்பாடியை குறிப்பிட்டிருந்தார்கள். இதனை கட்சி சீனியர்களிடம் காட்டி உற்சாகப்பட்டாராம் எடப்பாடி. காரணம், அமித்ஷாவை எடப்பாடி அலட்சியமாகப் பேசிய விவகாரத்தால், பா.ஜ.க.வினரின் கசப்புக்கு அவர் அண்மையில் ஆளாகி இருந்தார். இந்த நிலையில், அதை மறந்து, அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராகத் தன்னை டெல்லி ஏற்றுக்கொண்டதில் அவருக்கு மகிழ்ச்சியான மகிழ்ச்சியாம். எனவே தன்மீது டெல்லியின் கருணைப் பார்வை திரும்பி இருப்பதாகவும் அவர் நம்புகிறாராம்.''”

"ஓ.பி.எஸ். அணியில் இருந்து கோவை செல்வராஜ் விலகியிருக்காரே?''”

rr

"ஓ.பி.எஸ். அணியின் கோவை மாநகர அ.தி.மு.க. மா.செ.வாக ஓ.பி.எஸ்.ஸால் அறிவிக்கப்பட்டவர் முன்னாள் எம்.பி. கோவை செல்வராஜ். அவர் பக்கம் இருந்தபடி எடப்பாடி தரப்பினரை கடுமையாகத் தாக்கிவந்தார் செல்வராஜ். இந்த நிலையில், ஓ.பி.எஸ்.ஸுக்கும் செல்வராஜுக் கும் கடந்த சில நாட்களாகவே உரசல்கள் ஏற்பட, அதனால் அவரிடம் இருந்த கோவை மாநகர் மா.செ. பொறுப்பைப் பறித்துவிட்டார் ஓ.பி.எஸ். இதனால் கடுப்பான செல்வ ராஜ், ஓ.பி.எஸ். அணிக்கு குட்பை சொல்லிவிட்டார். இது ஓ.பி.எஸ். தரப்பில் அதிர் வலைகளை ஏற்படுத்தி வரு கிறது.''”

"அவரை ஓ.பி.எஸ். தரப்பே சமாதானப்படுத்த முயல் கிறதே?''”

"தனது இந்த ராஜினாமா முடிவை செல்வராஜ் மறு பரிசீலனை செய்யணும்னு ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். ஓ.பி.எஸ். ஏன் இவரது மா.செ. பதவியைப் பறித்தார்னு விசாரித்தபோது, அ.தி.மு.க. பொதுக்குழு தொடர் பான rrவிவகாரத்தில் மேல் முறையீடு செய்ததே ஓ.பி.எஸ். தான். ஆனால், அந்த வழக்கை விசாரித்து விரைந்து தீர்ப்பை பெற வேண்டிய ஓ.பி.எஸ்., அதற்கு மாறாக, வழக்கை இழுத்தடிக்கும் வகையில் வாய்தா வாங்கி வருகிறார். இது குறித்து ஓ.பி.எஸ்.ஸிடமே கோவை செல்வராஜ் கேட்டு விவாதித் திருக்கிறார். அப்போது சில வார்த்தைகள் இரு தரப் பிலும் தடித்த நிலையில் தான், செல்வராஜின் மா.செ. பதவியை ஓ.பி.எஸ். பறித்தார் என்கிறார்கள். எனினும் தங்கள் அணி சார்பில் வாள் சுழற்றிவந்த செல்வராஜை இழப்பது தங்களுக்கு பலவீனம் என்று பரிதவிக்கிறாராம் ஓ.பி.எஸ்.''”

"பொய்ப் புகார்களை அடுக்கிய பா.ஜ.க. அண்ணாமலை யை டெல்லி கண்டித் திருக்கிறதே?''”

"உண்மைதாங்க தலைவரே, தமிழக பா.ஜ.க.வில் அண்மையில் நடந்த ஆபாச லாவணி தொடர்பான விசா ரணைக்காக, பா.ஜ.க. அண்ணாமலையை அக்கட்சியின் தலைமை, டெல்லிக்கு அழைத்திருந் தது. அப்போது தமிழக அரசின் மீதான அவரது ஏடாகூடப் புகார்கள் குறித்தும் விசாரித்திருக்கிறார்கள். குறிப்பாக, தமிழகக் கடலோரத்தில் பெருமளவில் போதைப் பொருட்கள் பிடிபட்டதாக ஒரு புகார்க் குரலை அவர் எழுப்பி இருந்தார். அதேபோல் ஒலிம்பியாட் போட்டிக்காக சென்னை வந்த பிரதமர் மோடிக்கு, இங்கு தரப்பட்ட பாதுகாப்பில் குளறுபடி இருந்த தாகவும் அவர் கவர்னரிடம் மனுவைக் கொடுத் துப் பரபரப்பூட்டினார். கடலோரக் காவல் படையோ, கைப்பற்றப்பட்ட அந்தப் பொருள் யூரியா என்று அறிவித்து அவர் புகாரை பூமராங் ஆக்கியது. அதுபோல் பிரதமர் பாதுகாப்பு குறித்த குற்றச்சாட்டிலும் உண்மை இல்லை என்று காவல்துறையே விளக்கம் கொடுத்து விட்டது. இதை எல்லாம் சுட்டிக்காட்டிய பா.ஜ.க. தலைமை, அண்ணாமலையை கடுமையாக வார்ன் பண்ணியதாம்.'' ”

"பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஸ்டாலினை சந்திச்சிப் பேசியிருக்காரே?''”

"தமிழக காங்கிரஸ் கட்சி எம்.பி.யான டாக் டர் விஷ்ணுபிரசாத்தின் மகள் திருமண நிச்சய தார்த்தம் கடந்த 2ஆம் தேதி சென்னை தாஜ் கோரமண்டல் ஓட்டலில் விமரிசை யாக நடந்தது. தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இதில் கலந்துக்கிட்டாங்க. முதல்வர் ஸ்டாலினும் வந்திருந்து மணமக்களை வாழ்த் தினார். அங்கே டாக்டர் ராமதாசும் வந்திருந்தார். அப் போது இருவரும் நலம் விசாரித்துக் கொண்டார்கள். இவர்கள் இந்த நிகழ்ச்சியில் சந்தித் துப் பேசிக்கணும்னு சிலர் விரும்பி, அதற் காக மெனக்கெட வும் செய்தனர். அதன் படியே சந்திப்பும் நடந்தது. தி.மு.க. கூட்டணிக்குள் பா.ம.க.வை கொண்டுவர நினைக்கும் சிலர், இந்த சந்திப்பில் அதிக ஆர்வம் காட்டினார்கள். கூட்டணிக்கு அச்சாரமாக ஸ்டாலின், ராமதாஸ் சந்திப்பு அமையலாம்னு சொல்லப்படுது.''”

"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். வீட்டுவசதித்துறையின் முதன்மைச் செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஹிதேஷ்குமார் மக்வானா, துறை அமைச்சர் முத்துசாமியிடம் அலட்சியப் போக்கில் நடந்துவந்தது பற்றியும், பா.ஜ.க.வில் சேர்ந்து பவர்ஃபுல் அரசியல்வாதியாக அவர் ஆசைப்படுவது குறித்தும் நாம் ஏற்கனவே பேசி இருக்கிறோம். மேலும், அண்மையில் தமிழகம் வந்த மோடியை அவர் தனியே சந்திக்கத் துடித்தது குறித்தும் கூட குறிப்பிட்டிருக்கிறோம். நாம் தெரிவித்தது போலவே, அவர் பதவி ஆசையில் மோடியைத் துரத்துகிறார். தற்போது டெல்லிக்கு மாற்றப்பட்ட இவரின் அடுத்த குறி, பா.ஜ.க. வேட்பாளராகக் களமிறங்குவதுதானாம்.''

nkn071222
இதையும் படியுங்கள்
Subscribe