"எட்டுவழிச் சாலை திட்டத்திற்கு தி.மு.க. என்றுமே எதிரி இல்லை'' என்றதன் மூலம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, விவசாயிகளிடையே கொந்தளிப்பை உருவாக்கியுள்ளார். இதனால் எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு அணுகுமுறை, ஆட்சியிலிருக்கும்போது ஒரு அணுகுமுறையா என விவசாயிகள் தரப்பில் கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் சேலம் முதல் சென்னை வரை, பாரத்மாலா பரியோ ஜனா திட்டத்தின்கீழ் எட்டுவழிச் லை அமைக்க கடந்த 2018-ஆம் ஆண்டு மத்திய அரசு ஒரு திட்டம் கொண்டுவந்தது. சேலத்தில் தொடங்கி தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் வழியாக சென்னை வரை 8 வழிச்சாலை அமைப்பதுதான் திட்டத்தின் நோக்கம். சேலம் முதல் காஞ்சிபுரம் வரை 277.3 கி.மீ. தூரத்திற்கு எட்டு வழிச்சாலை அமைக்க, 1900 ஹெக்டேர் நிலங்களைக் கையகப்படுத்த பா.ஜ.க. அரசு உத்தரவிட்டது.

dd

Advertisment

அதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அப்போதைய அ.தி.மு.க. அரசு, காவல்துறை யினரை ஏவி, அப்பாவி விவசாயிகளின் நிலத்தை அவசர அவசரமாகக் கையகப்படுத்தியது.

இந்த திட்டத்தால் விவசாயி களின் வாழ்வாதாரம் பறிபோவ தோடு, கஞ்ச மலை, தீர்த்த மலை, ஜவ்வாது மலை, சேர்வராயன் மலைகளில் உள்ள கனிம வளங்கள் சுரண்டப்படும் என்றும், கார்ப்ப ரேட்டுகளுக்கு மட்டும் இத் திட்டம் பயனளிக்கும் என்றும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க., இத்திட்டத்தை மிகக் கடுமையாக எதிர்த்தது. 2021 சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க., "விவசாயிகளுக்கு எதிரான எட்டுவழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படாது'' என்று வாக்குறுதி அளித்தது. இந்த வாக்குறுதி, தங்கள் நெஞ்சில் பாலை வார்த்ததாக அப்போது விவசாயிகள் நெகிழ்ச்சியுடன் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.

e

Advertisment

இது ஒருபுறமிருக்க, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, "எட்டுவழிச் சாலைத் திட்டத்திற்கு தி.மு.க. என்றுமே எதிரி இல்லை. இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டாம் என்று நாங்கள் சொல்லவே இல்லை. மக்கள் கருத்தை அறிந்து, அதன் படி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றுதான் சொன் னோம்'' என்று அண்மையில் சொல்லப்போக, விவசாயிகளி டையே இது கடும் கொந் தளிப்பை ஏற்டுத்தி இருக்கிறது.

அதேநேரம், எ.வ.வேலு வின் இந்த கருத்து, முதல்வருக்கு தேவையற்ற குடைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது என்று ஒரு தரப்பு சொல்கிறது. மற்றொரு தரப்போ, மக்களின் மனநிலையை "பல்ஸ்' பார்ப்பதற்காக அரசே எ.வ.வேலுவை ஏவிவிட்டிருக்கலாம் என்றொரு சந்தேகத்தையும் கிளப்பிவிட்டிருக்கிறது.

இதற்கிடையே, எ.வ.வேலுவைக் கண்டித்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் பல இடங்களில் விவசாயிகள் கருப்புக்கொடி பிடித்தும், கால்நடைகளோடும் போராட்டம் நடத்தியுள்ளனர். விரைவில் சேலம், தர்மபுரி மாவட்டங்களிலும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இது தொடர்பாக எட்டுவழிச்சாலைத் திட்ட எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரான திருவண்ணாமலை அருள் கூறுகையில், "தேர்தல் அறிக்கையில், சேலம் -சென்னை எட்டுவழிச் சாலைத் திட்டம் செயல்படுத்தப்படாது என்று தி.மு.க. கூறியுள்ளது. மட்டுமின்றி, கடந்த 17.6.2021-ல் தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமரிடம் ஒரு கோரிக்கை மனு வழங்கினார். அதிலும், இத்திட்டத்தைக் கைவிடும்படிதான் கோரியிருந்தார்.

dd

இவ்வளவு ஆதாரம் இருந்தும்கூட, அமைச்சர் எ.வ.வேலு, இத்திட்டத்தை தி.மு.க. எங்கேயும் எதிர்க்கவில்லை என்று கூறுவது அப்பட்டமான பொய். பச்சை துண்டு போட்டவன் எல்லாம் விவசாயி என்ற பெயரில் போராடுவதாக பதவித் திமிரில் பேசுகிறார்.

உச்சநீதிமன்றம், இத்திட்டத்துக்கு தடைவிதிக்காதது எங்களுக்கு அதிருப்திதான். என்றாலும், நிலங்களைக் கையகப்படுத் திய முறை சரியில்லை என்றும், நிலங்களை உரிய விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறியிருந்தது. ஆனால் இன்று வரை 8 வழிச் சாலைக்காக கையகப்படுத்திய நிலங்களை விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைக்கவில்லை.

இதனால் நிலங்களை பங்கு பாகம் பிரித்துக்கொடுக்கவோ, நிலத்தை விற்கவோ முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப் பட்டுள்ளனர். நிலத்தின் மீது அடமானக்கடனும் பெறமுடியவில்லை.

எ.வ.வேலு இப்படி சொன்னாலும்கூட, இன்னும் எங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் மீது நம்பிக்கை இருக்கிறது. அவர் எங்களைக் காப்பாற்றுவார். ஒருவேளை, உச்சநீதிமன்றம், மத்திய அரசு கெடுபிடிகளைக் காரணம் காட்டி திட்டத்தை நிறைவேற்ற முனைந்தால், ஒட்டுமொத்த விவசாயிகளையும் திரட்டிப் போராடுவோம்'' என்றார்.

மற்றொரு ஒருங்கிணைப்பாளரான தர்மபுரி பழனியப்பன், "அமைச்சர் எ.வ.வேலு, ஆரம்பத்தில் இருந்தே எட்டுவழிச்சாலை திட்டத்தில் தி.மு.க.வின் முந்தைய நிலைப்பாட்டிற்கு எதிராகத்தான் பேசி வருகிறார். தேர்தல் நேரத்தில் ஒன்றும், ஆட்சிக்கு வந்த பிறகு வேறு ஒன்றுமாக அமைச்சர் பேசுவது கண்டிக்கத்தக்கது.

dd

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, அமைச்சர் எ.வ.வேலு ஆகியோரின் கருத்தை கண்டித்து, தர்மபுரி மாவட்டத்தில் வேடுகாத்தாம் மடுவு, தீர்த்தமலை, முத்தானூர், லிங்காபுரம், நாச்சனாம்பட்டி, விஜயநகரம் உள்ளிட்ட ஊர்களில் விவசாயிகளை வீடு வீடாகச் சந்தித்து துண்டறிக்கை மூலம் பரப்புரை செய்துள்ளோம். முதல்வர் மு.க.ஸ்டாலின், எட்டுவழிச்சாலைத் திட்டம் குறித்து அரசின் நிலைப்பாட்டை உடனடியாக தெரிவிக்கவேண்டும்'' என்றார்.

சேலம் மாவட்டம் வீரபாண்டியைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர் மோகனசுந்தரம் கூறுகையில், "முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, எட்டுவழிச் சாலைத் திட்டத்திற்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இருந்தார். அதனால் ஸ்டாலின் மீதும், தி.மு.க. மீதும் நம்பிக்கை ஏற்பட்டது.

அந்த நம்பிக்கையின் காரணமாக, கடந்த சட்ட மன்றத் தேர்தலின்போதுகூட, வீரபாண்டி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டி யிட்ட டாக்டர் தருண் முன்னிலையில் விவசாயிகள் ஒன்றுதிரண்டு, தி.மு.க.வை வெற்றிபெறச் செய்வதாக உறுதிமொழி எடுத்துக்கொண் டோம். தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது, எங்கள் கவலையும் தீர்ந்துவிட்டதாகத்தான் நினைத் தோம்.

ஆனால் சமீபகாலமாக அமைச்சர் எ.வ.வேலு பேசிவருவதைப் பார்த்தால், எட்டுவழிச் சாலைத் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுவரை முதல்வர் மவுனமாக இருப்பதன் மர்மமும் புரியவில்லை.

முதல்வர் தனது மவுனத்தைக் கலைத்து, அரசின் கொள்கை முடிவை அறிவிக்க வேண்டும். இந்த திட்டத்தால் பாதிக்கப்பட உள்ள விவசாயி களை முதல்வர் அழைத்துப் பேசவேண்டும். ஏற்கனவே இருக்கும் சாலையை விரிவாக்கம் செய்தால் போதுமானது'' என்றார்.

சேலத்தில் அமையவுள்ள ராணுவத் தளவாட தொழிற்சாலைக்கு வசதியாகத்தான், மத்திய அரசு எட்டுவழிச் சாலையை போடத் துடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

எட்டுவழிச் சாலைத் திட்டம் வந்தால், திட்டத்திற்காக பறிபோகும் நிலம் மட்டுமின்றி, சாலையை ஒட்டியுள்ள விளைநிலங்களும் வணிக நிறுவனங்களாகவும், குடியிருப்புகளாகவும் மாறிவிடும். அதைச் சுற்றிலும் நகர மயமாகும்.

பிறகு விவசாயிகள், உழவுத்தொழிலை விட்டு முற்றாக வெளியேற்றப்படும் அபாயம் உள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் தவிர விவசாயி களுக்கோ, உள்ளூர் மக்களுக்கோ பயன் தராத இத்திட்டத்தை எக்காரணம் கொண்டும் நிறைவேற்றக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் விவசாயிகளும், சூழலியல் ஆர்வலர்களும்.

திட்டத்தை நிறை வேற்ற முனைந்தால் ஜல்லிக்கட்டு போராட்டம் போல மீண்டும் ஒரு போராட்டம் வெடிக்கும் என்கிறார்கள், எட்டுவழிச் சாலை எதிர்ப்பாளர்கள்.

விவசாயிகளின் எதிர்வினைகளை யடுத்து பொதுப்பணி மற்றும் நெடுஞ் சாலைகள் துறை அமைச்சரான எ.வ.வேலுவோ, "உச்சநீதிமன்றம் எட்டுவழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றக் கூறியுள்ளது. இருந்தாலும், அதில் அரசு கொள்கை முடிவெடுக்கவேண்டியிருக்கிறது. இந்தத் திட்டத்தை நான் வேண்டும் என்று சொல்வதாக சில செய்திகள் வருகின்றன. இந்தத் திட்டத்தை நிறைவேற்றவேண்டுமென நான் எங்கும் கூறிவில்லை. கூறுபவர்கள் அதற்கான ஆதாரம் இருந்தால் வெளியிடட்டும்''’என்று கூறியுள்ளார்.

மவுனம் கலைப்பாரா முதல்வர்?