அக்டோபர் 31-ஆம் தேதி நாடு முழு வதும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப் பட்ட நிலையில், தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும்போது ஏற்பட்ட விபத்துகளின் காரணமாக மதுரை அரவிந்த் கண் மருத்துவ மனையில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். பட்டாசு கெமிக்கல் பட்டு தீபாவளியன்று இரவு 104 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 4 குழந்தைகள் கண் பார்வையை முற்றிலும் இழந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சைக்கு வந்த குழந்தைகளின் பெற்றோ ரிடம் தெரிவிக்க, அவர்கள் அதிர்ச்சியில் கதறியழுதது பெரும் வேதனையைத் தந்தது
நடந்த சம்பவம் குறித்து மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை முதன்மை மருத்துவர் கிம் கூறுகையில், "தீபாவளியன்று வெடி விபத்துகளால் கண்கள் பாதிக்கப்பட்டு, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் எண் ணிக்கை 104 பேர். அவர்களில் 10-க்கும் மேற்பட்டோர் கரு விழியில் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும், நான்கு பேருக்கு முற்றிலும் கண் பார்வை பாதிக்கப்பட்டு பார்வையை இழந்துள்ளனர். அந்த நான்கு பேரும் குழந்தைகள் என்பது மிகவும் வேதனையளிக்கிறது.
தீபாவளியின்போது தங்கள் குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் சமயங்களில் பெற்றோர் கள் உடனிருந்து மிகக் கவனத்துடன் குழந் தைகளையும், வெடிகளையும் கையாளுவதைக் கண்காணிக்க வேண்டும். குழந்தைகளின் எதிர்காலம் முக்கியம் என்பதை அறிந்து பட்டாசு வெடிக்க வேண்டும். தமிழ்நாடு முழு வதும் உள்ள எங்களது அனைத்து மருத்துவ மனைகளிலும் 266 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 10 வயது முதல் 16 வயதுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம். இதில் பெரும்பாலான குழந்தைகளுக்கு கருவிழி பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது மிகுந்த வேதனையளிக்கிறது''’என்றார்.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குழந்தை செந்தூர் பாண்டியனின் தந்தை பாண்டியன் கூறுகையில், "எனது 4 வயது மகன் என்னுடன் சேர்ந்து வெடி வெடித்துக் கொண்டிருந்தான். அவன் அடிக்கடி கண்களைக் கசக்கிக் கொண்டே இருந்தான். கம்பி மத்தாப்பிலிருந்து வந்த பொறி கண்ணில் பட்டதும் துடிதுடித்து அழுதான். நாங்கள் உடனே மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு வந்தோம். இப்ப வரும் வெடியே சரியில்லை. அதிகளவில் வண்ணங்களுடன் வெளிச்சம் கொடுக்கவேண்டும் என்று அதிக ஆபத்தை வரவழைக்கக்கூடிய ரசாயனங்களை உபயோகபடுத்துகிறார்களோ என்று சந்தேகம் வருகிறது. தற்போது என் மகன் கண்ணில் காயம் ஏற்பட்டு 2 அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டு சிகிச்சையில் இருக்கிறான்''” என்றார்.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மற்றொரு குழந்தையின் பெற்றோர் கூறுகையில், “"குழந்தைகளுக்கு ஏற்ற பட்டாசை வாங்கிக் கொடுத்து அவற்றை பெற் றோர்கள் கவனத்துடன் வெடிக்க வேண்டும். கம்பி மத்தாப்பு, புஸ்வாணம், சங்கு சக்கரம், பென்சில் மத்தாப்பு ஆகியவற்றை தரமான வெடிகள் என்று விற்பனை செய் கிறார்கள். பாதிப்பு ஏற்படாது என்றும் உத்தரவாதம் அளித்து வருகின்றனர். ஆனால் சில நேரங்களில் புஸ் வாணம், பென்சில் மத்தாப்பு போன்ற வெடிகளும் வெடித்து விடுகின்றன. முன்பு போல புஸ்வாணம்தானே என்று தைரியமாக வெடிக்கமுடியவில்லை. எனது மகன் கையில் பென்சில் மத்தாப்பு வைத்திருந்தபோது எதிர்பாராதவித மாக ரிவேர்சில் வெடித்து கண் பார்வை பாதிப்பு ஏற் பட்டது. எனவே தரமான வெடிபொருட்களை விற்பனை செய்ய வேண்டும். தரமற்ற வெடிபொருட்கள் மூலம் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது''’என தெரிவித்தார்.
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அதிகாரி இராமநாதன், “"சார், எப்பவுமே தீபாவளியன்று மருத்துவமனைகள் விடுமுறை விட்டாலும் மாற்று மத மருத்துவர்கள், செவிலியர்களை அமர்த்தி பணி செய்வார்கள். ஆனால் இந்தமுறை கண்கள் பாதிக்கப்பட்டு முகம் வீங்கி தொடர்ச்சியாக குழந்தைகள் வந்துகொண்டே யிருந்தார்கள். மேலும், குழந்தைகளின் பெற்றோர் கதறியபடி பதட்டத்தோடு வந்ததைப் பார்த்து அதிர்ச்சி யாகி விடுமுறையில் இருந்த மருத்துவர்களை அதிக அளவில் வரவழைத்து வைத்தியம் பார்த் தோம். அன்று மருத்துவமனையே பரபரப் பாக இருந்தது. மேலும் எங்களது மற்ற மாவட்டங்களில் உள்ள கிளைகளில் விசாரித்தபோது அங்கும் இதே போல் சம்பவங்கள் நடந் திருப்பதைக் கேட்டு அதிர்ச்சி யானோம். தொடர்ச்சியாக பட்டாசு வெடிப்பது தொடர் பாக விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்கிறோம். இருந்தும் இதுபோல் சம்பவங்கள் நடப்பது மிகுந்த வேதனை தருகிறது''’என்றார்
தமிழ் ஆய்வாளரும் பேராசிரி யருமான ஜெகநாதன் நம்மிடம், "தீபாவளி அன்று 200-க்கும் மேற் பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டு அதில் நான்கு குழந்தைகளின் கண் பார்வை பறிபோனது மிகவும் வேதனையளிக்கிறது. பட்டாசு, தமிழர்களுக்கு அறிமுகமானது 15-ஆம் நூற்றாண்டில்தான். தீபாவளி பண்டிகை தமிழ்நாட்டில் கொண் டாடப்பட்டது குறித்த சான்றுகள் தமிழ்நாடு வரலாற்றில் கடந்த 19-ஆம் நூற்றாண்டு வரை இல்லை. தொ.பரமசிவன் தீபாவளிப் பண்டிகை குறித்து கூறுகையில், பரவலாகக் கொண்டாடப்படும் தீபாவளி நாள் என்பது விசயநகர மன்னர்களின் காலத்தில் தெலுங்குப் பார்ப்பனர் வழியாக தமிழ்நாட்டுக்கு வந்த திருவிழா ஆகும் என்கிறார். தமிழர்களின் மிக முக்கியமான பண்டிகை அறுவடைத் திருநாள் பொங்கல் மட்டுமே.
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் பட்டாசு வெடிப்பதால் அதிக அளவில் காற்று மாசு ஏற்படு கிறது என்று தீபாவளி பட்டாசு வெடிக்க நீதிமன்றம் தடை விதித்துள் ளது. இங்கு பா.ஜ.க. தலைவர்கள் "நமது தீபாவளி, நமது பட்டாசு! பட்டாசு வெடிப்போம், தீபாவளியைக் கொண் டாடுவோம்!' என்கின்றனர். பண்டிகை என்பது பட்டாசில் மட்டும் இல்லை. தமிழகத்தில் தீபாவளி 63 நாயன்மார்கள் காலத்திலும் 12 ஆழ்வார்கள் காலத்திலும் கொண்டாடப்படாதது ஏன்? தமிழகத் தில் திணிக்கப்பட்ட பண்டிகை இது. அதிலும் வெடி வெடிப்பது கடந்த 15 ஆம் நூற்றாண்டு வரை இல்லை. இன்று தமிழ்நாட்டில் விறுவிறுப்பாகக் கொண்டாடப்படும் திருவிழா தீபாவளி. நகர்ப்புறம் சார்ந்ததாகவும் துணி, பட்டாசு ஆகிய பெருந்தொழில்களின் பொருளாதாரம் சார்ந்ததாகவும் மாறியிருக்கிறது.
பகட்டான விளம்பரங்களால் இது தமிழர்களின் "தேசி யத் திருவிழா' போல காட்டப்படுகிறது. இந்த பட் டாசு உற்பத்தியின்போது வருடா வருடம் நூற்றுக்கணக் கான தொழிலாளர்கள் இறக்கின்றனர். வெடிபொருட்களு டன் பல்வேறு இரசாயனங்கள் கலந்து பட்டாசுகள் தயாரிக் கப்படுகின்றன. கருப்புத்தூள், கந்தகம், கரி மற்றும் பொட் டாசியம் நைட்ரேட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. வான் வெளியில் நட்சத்திரங்களாக சிதற வெவ்வேறு வண்ண வடி வங்களை உருவாக்கும் சிறிய, செறிவூட்டப்பட்ட வெடி பொருட்கள், லித்தியம், ஸ்ட்ரோண்டியம், தாமிரம், குளோ ரின், சோடியம், சோடியம் குளோரைடு, பேரியம் போன்ற செயற்கையான ஆபத்தை விளைவிக்கக்கூடிய கெமிக்கல் மருந்துகள் அதிக அளவில் கலப்பதால் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பாதிக்கப்படுவதோடு புவியில் காற்றும் மாசுபடுகிறது. இது, இந்தியாவில் டெல்லி போன்ற நகரங்களில் மட்டுமல்லாமல் தேசம் எங்கும் அனைத்து மாநிலங்களிலும் பட்டாசு வெடிப்பதை தடை செய்ய, அல்லது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஒரு வரம்புக்குள் வைக்கவேண்டும். தீபாவளி, தமிழர்களை இழிவுபடுத்தும் ஒரு விழா என்ற உண்மையை தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும். விழாக்களைக் கொண்டாடு வதற்கு முன்பு எதற்கு கொண்டாடுகின்றோம் என ஆய்ந்து அறிந்து கொண்டாட வேண்டும்''’என்கிறார்.
வருங்காலங்களில் தரமற்ற வெடிபொருட்கள் மூலம் தயாராகும் பட்டாசுகளை கண்டறிந்து அதை தடை செய்ய வேண்டும் என்பதே தமிழக மக்களின் கோரிக்கை!