னவரி 26 குடியரசு தினத்துக்கு மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நடைபெறும் கொடியேற்றும் நிகழ்வில் கலந்துகொள்ளவேண்டும் என, வைஸ்சேர்மன் காங்கிரஸ் கிருஷ்ணவேணி உட்பட 13 கவுன்சிலர்கள் அழைக்கப்பட்டனர். ஆனால் ராதாப்ரியா, சுலோச்சனா, உத்திரகுமாரி என மூன்று கவுன்சிலர்கள் மட்டுமே கலந்து கொள்ள, வைஸ்சேர்மன் உட்பட 10 மாவட்ட கவுன்சிலர்கள் கலந்துகொள்ளாமல் புறக்கணித் திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியம் 14 மாவட்ட கவுன்சிலர்களை கொண்டது. 13 இடத்தில் தி.மு.க.வும், ஒரு இடத்தில் கூட்டணிக் கட்சியான காங்கிரஸும் வெற்றிபெற்றது. தி.மு.க.வை சேர்ந்த அணைக்கட்டு மேற்கு ஒ.செ. மு.பாபு மாவட்ட சேர்மனாக்கப்பட்டார்.

vee

குடியரசு தின விழா புறக்கணிப்பு குறித்து மாவட்ட கவுன்சிலர்கள் சிலர் நம்மிடம், “"குடியரசு தினத்துக்குப் போய்ட்டு அங்க தர்ற லட்டு சாப்பிட்டுட்டு வர்றதுக்கு நாங்க எதுக்குப் போகணும்? அதைத்தான் ஒவ்வொரு மாதமும் நடக்கும் மீட்டிங்லயே தர்றாங்களே. 14 கவுன்சிலர்களில் 9 பேர் பெண்கள், எல்லோருமே புதியவர்கள். அவுங்களுக்கு எதுவும் தெரியாது, அதனைப் பயன்படுத்திக்கறார் சேர்மன் பாபு. கூட்ட அஜென்டா குறித்து அனுப்பும் கடிதத்தில் இந்தந்த வேலை நடக்குது, வாட்ச்மேன் சம்பளம் இவ்ளோன்னு இருக்கே தவிர, கடந்த ஒன்னரை ஆண்டில் இவ்ளோ நிதி வந்துருக்கு, இந்த வேலைகளுக்கு இவ்ளோ நிதி ஒதுக்கியிருக்குன்னு சொல்லவேயில்லை.

vv15-வது நிதிக்குழு மூலமாக எவ்வளவு நிதி வந்துருக்குன்னே இதுவரை எங்களுக்குத் தெரி யாது. இதுவரை கவுன்சிலர்களுக்கு 40 லட்சத்துக்கு நிதி ஒதுக்கித் தந்திருக்கார். புதிய மாவட்டமான திருப்பத்தூர், ராணிப்பேட்டையில் 1.3 கோடிக்கு நிதி ஒதுக்கித் தந்திருக்காங்க. கவுன்சில் அனுமதியே இல்லாம சில லட்சம் செலவு செய்து சேர்மன் அறையை புதுப்பிச்சி, திறப்புவிழா செய்ததைக் கூட சரியானபடி கவுன்சிலர்களுக்கு தகவல் சொல்லவில்லை. கவுன்சிலர்களிடம் எதுவுமே கலந்து ஆலோசிப்பதில்லை. மாவட்ட சேர்மனாக தேர்வுசெய்த கவுன்சிலர்களுக்கு பத்து ரூபாகூட தரவில்லை.

கவுன்சிலர்களான நாங்கள் லட்சங்களில் செலவுசெய்து வெற்றிபெற்றிருக்கோம். அண்ணா மறுமலர்ச்சி திட்டங்களில் ஊராட்சிமன்றத் தலைவர், ஒன்றிய கவுன்சிலர்கள், சேர்மன், வைஸ்சேர்மன்களுக்கு பர்சன்டேஜ் கணக்கில் வேலை ஒதுக்கித் தந்திருக்காங்க, மாவட்ட கவுன்சிலர்களை கண்டுக்கல. ஒன்றிய கவுன்சிலர்கள் லட்சங்களில் வேலை எடுத்துச் செய்கிறார்கள். மாவட்ட கவுன்சிலரான நாங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறோம். ஒவ்வொரு முகூர்த்தத்தின்போதும் கட்சிக்காரர்கள், பொதுமக்களிடமிருந்து குறைந்தது 20 பத்திரி கைகள் வருகிறது. இதற்கு பரிசு வழங்கக்கூட வருமானம் இல்லை. எங்கள் பிரச்சனைகள் எதையும் மா.செ. நந்தகுமார் கண்டுகொள்ள வில்லை. அவருக்கு மணல் யார்டு நடத்து பவர்கள், நெடுஞ்சாலைத்துறை உட்பட பல துறைகளில் இருந்தும் பங்கு வருகிறது. அத னைப் பார்க்கவே அவருக்கு சரியாக இருக் கிறது, கட்சிக்காரர்கள் போன் செய்தாலும் எடுக்கமுடியாத அளவுக்கு பிஸி. அமைச்ச ரான பொதுச்செயலாளரிடம் முறையிடச் சென்றால் மா.செவை கைகாட்டுகிறார். இவ ரிடம் வந்தால் "அங்க போய்ட்டு எங்கிட்ட வர்றியா நீ அவரோட ஆளு'ன்னு ஒதுக்கி வைக்கறார். நாங்க என்ன செய்றதுன்னே தெரியல, அதனால்தான் குடியரசு தின விழாவை புறக்கணிச்சோம், வரும் கூட்டங்களின்போது வெளிநடப்பு செய்து எங்கள் எதிர்ப்புகளை வெளிப்படையாகத் தெரிவிக்கலாம் என யோசிக் கிறோம்'' என்றார்கள்.

மாவட்ட கவுன்சிலர்களை மட்டும் அடிமையாக நடத்த வில்லை. அணைக்கட்டு ஒன்றி யம், பேரூராட்சி, ஒடுக்கத்தூர், பள்ளிகொண்டா பேரூராட்சிகளின் விவகாரங்களிலும் தலையிடுகிறார் பாபு. அணைக்கட்டு ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கரை அடிமைபோலவே நடத்துகிறார். அவரை கையெழுத்து போட மட்டுமே வைத்திருக் கிறார். காண்ட்ராக்ட், கமிஷன் எல்லாமே அவரே வாங்கிக் கொள்கிறார். சேர்மன் தன்னுடைய காருக்கு பெட்ரோல் போடக்கூட வருமானமில்லாமல் தவிக்கிறார். பள்ளி கொண்டா பேரூராட்சி சேர்மன் சுபப்ரியா குமரன், ஒடுக்கத்தூர் பேரூராட்சி சேர்மன் சத்தியவதி பாஸ்கர் போன்றவர்களையும் முழுமையாகச் செயல்படவிடாமல் மாவட்ட சேர்மன் என்கிற அதிகாரத்தைக் காட்டுகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு அணைக்கட்டு, பள்ளி கொண்டா, ஒடுக்கத்தூர் ஒன்றியம், பேரூராட்சியின் 75 லட்ச ரூபாய்க்கான கமிஷனை சேர்மன் பாபுவே எடுத் துக்கொண்டார். அணைக்கட்டு ஒ.செ.க்கள் கிழக்கு குமார பாண்டியன், மத்திய வெங்கடேசன், பள்ளிகொண்டா, ஒடுக்கத்தூர் பேரூராட்சி சேர்மன்கள் சேர்ந்து மா.செ. நந்தகுமார் எம்.எல்.ஏ.விடம் முறையிட்டு பஞ்சாயத்து பேசினார்கள். பிரித்துத் தரச்சொல்லி மா.செ. சொல்லி யும் இதுவரை ஒழுங்காகத் தரவில்லை, இரண்டு பேரும் கூட்டு சேர்ந்துக்கிட்டு எங்களை ஏமாத்தறாங்க''’என்றார்.

இதுகுறித்து மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு.பாபுவிடம் கேட்டபோது, "சொந்த வேலை இருப்பதால் கொடியேற்றும் நிகழ்வுக்கு வரவில்லை எனச் சொன்னார்கள். கவுன்சிலர்களுக்கு என்ன தேவையென்றாலும் என்னைச் சந்தித்துக் கேட்கலாம் அல்லது மீட்டிங்கில் முறையிடலாம். செயல்பாடுகள், நிதி குறித்த தகவல்களை முன்கூட்டியே கடிதம் அனுப்புகிறோம். கவுன்சிலர்கள் கேட்பதை செய்து கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறேன். என் பெயரைக் கெடுக்கவேண்டும் என்பதற்காக இப்படி சிலர் குற்றம்சாட்டுகிறார்கள்''’என்றார்.

அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ.வும், மா.செ.வுமான நந்தகுமாரை தொடர்புகொண்ட போது, அவர் நமது அழைப்பை எடுக்கவில்லை.

-து.ராஜா