நீ பெரிய ஆளா? நான் பெரிய ஆளா? என ஆளும்கட்சி ஒ.செ.வுக்கும் - மாவட்ட சேர்மனுக்கும் இடையேயான சண்டை ஜப்பான் வரை எதிரொலித்துள்ளது.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதியிலுள்ள அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாபுவும், அணைக்கட்டு மத்திய ஒன்றியச் செய லாளர் வெங்கடேசனும் நேருக்கு நேராக சண்டை போட்டுக்கொண்ட தால், இருதரப்பும் மோதிக்கொள்ளும் சூழல் உருவானது. இது வேலூர் மாவட்ட ஆளும்கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அணைக் கட்டு ஆளும்கட்சி கவுன்சிலர்கள் சிலர் நம்மிடம், “"அணைக்கட்டு ஊராட்சியில் 26 கவுன்சிலர்கள் உள்ளனர். தி.மு.க.வில் அணைக்கட்டு ஒன்றியத்தை கிழக்கு, மேற்கு, மத்தி என மூன்றாகப் பிரித்து வைத்துள்ளனர். இதில் கிழக்கு ஒ.செ.வாக மு.பாபு, மேற்கு ஒ.செ.வாக குமாரபாண்டியன், மத்திய ஒ.செ.வாக வெங்கடேசன் உள்ளனர்.
ஒ.செ. பாபு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவராகவுள்ளார். பாபு மாவட்ட சேர்மனாக இருந்தாலும், அணைக்கட்டு ஒன்றிய சேர்மன் பதவியில் தனக்கு வேண்டப்பட்ட பாஸ்கரனை உட் காரவைத்து ஊராட்சி ஒன்றி யத்தை தன் கட் டுப்பாட்டில் வைத் துள்ளார். புதியதாக ஒ.செ.வாகியுள்ள மத்திய ஒ.செ. வெங்க டேசன், கிழக்கு ஒ.செ.வும் அணைக் கட்டு ஒன்றிய வைஸ் சேர்மன் குமாரபாண்டி யன் ஆகிய இருவருக்கும் பிடிக்கவில்லை.
கடந்த அக்டோபர் 29-ஆம்தேதி அணைக் கட்டு பி.டி.ஓ. அலுவலகத் தில் சேர்மன் அறையில், மாவட்ட சேர்மன் பாபு, ஒ.செ.க்கள் குமாரபாண்டி யன், வெங்கடேசன், அவர் களது ஆதரவாளர்கள் இருந் தனர். நமக்கு நாமே திட்டத் தில் எந்தெந்த கிராமங்களில் என்னென்ன பணி செய்வது, அதற்கு அரசுக்கு கட்டவேண்டிய தொகை குறித்து பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது, "என்னோட ஒன்றியத்துக் குள்ள நீ எப்படி தலையிடலாம்?' என பாபுவை நோக்கி கேள்விகேட்டார் வெங்கடேசன். “நான் ஏன் சொல்லக்கூடாது” என பாபு எதிர்க்கேள்வி கேட்டார். இருவரும் வாடா போடான்னு தொடங்கி மோசமாகத் திட்டிக்கொண்டார்கள். கோபத்தில் வெங்கடேசனை நோக்கி வாட்டர் பாட்டிலை எடுத்து எறிந்தார் பாபு. சண்டையின் உக்கிரத்தால் அதிர்ச்சியான அதிகாரிகள் சேர்மன் அறையிலிருந்து வெளியேபோய் அரசுப் பயணமாக கைத்தறித்துறை அமைச்சர் காந்தியுடன் ஜப்பானில் சுற்றுப்பயணத்திலிருந்த அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ.வும், வேலூர் மா.செ.வுமான நந்தகுமாரை தொடர்புகொண்டு சொல்லியிருக்கிறார்கள். உடனே பாபு, வெங்கடேசன் இருவரையும் தொடர்புகொண்ட நந்தகுமாரும், காந்தியும் பிரச்சனையை பெரு சாக்காம அங்கிருந்து கிளம்புங்க, தலைமைக்குத் தெரிந்தால் அவ்வளவுதான். ஊருக்கு வந்ததும் பேசிக்கலாம்'' எனச் சொல்ல அனைவரும் அங்கிருந்து சென்றுவிட்டார்கள்''’என்றனர்.
பிரச்சனை குறித்து ஒ.செ. வெங்கடேசனை தொடர்புகொண்டு கேட்டபோது, "சின்னச் சின்ன சண்டை அப்பப்ப வரும், இது எங்க உட்கட்சி விவகாரம், வேறு எதுவுமில்லை'' என்றார்.
அவரது ஆதரவாளர்களோ, "ஒன்றியங்கள் பிரிக்கப்பட்டு மூன்று ஒ.செ.க்கள் இருந்தாலும் இன்னமும் ஒருங்கிணைந்த ஒ.செ. போலவே செயல்படுகிறார் பாபு. மற்ற ஒன்றியங்களின் கட்சி விவகாரங்களில் தலையிடுகிறார். இது எப்படி சரியாகும்? மாவட்ட சேர்மனாக இருந்து கொண்டு அணைக்கட்டு ஒன்றியக்குழு தலைவரை டம்மியாக்கிவிட்டு ஊராட்சி ஒன்றியத்தில் நடக்கும் எல்லா வேலையிலும் தலையிடுகிறார். வேலைகளை அவரே பிரித்துத் தருகிறார். கவுன்சில் கூட்டம் பற்றி ஒப்புக்கு கவுன்சிலர்களுக்கு கடிதம் அனுப்புகிறார்கள். கூட்டத்துக்கு வந்தால் கையெழுத்து போட்டுவிட்டு போய்விடவேண்டும் என்கிறார் பாபு. அதிகாரிகளும் பாபு சொல்வதை மட்டுமே செய்கிறார்கள். இதெல்லாம் நியாயமா எனக் கேட்டால் மிரட்டுகிறார்கள்''’என்றார்கள்.
குற்றச்சாட்டுகள் குறித்து மாவட்ட ஊராட்சிக்குழு பெருந்தலைவர் பாபுவை தொடர்புகொண்டு கேட்டபோது, "சின்ன பிரச்சனைதான்... சொல்றதுக்கு ஒன்னுமில்லை''” என்பதோடு முடித்துக்கொண்டார்.
இவரின் ஆதரவாளர்களோ, "வெங்கடேச னுக்கு ஒ.செ. பதவியே பாபுவால்தான் கிடைத்தது. பதவிக்கு வந்த வெங்கடேசன் கட்சியின் நிர்வாகிகளை ஒருமையில் பேசுகிறார்'' என கட்சியினர் புகார் சொல்லத் துவங்கினார்கள். "என்னை மோசமா திட்டிட்டார், நான் எழுதிவச் சிட்டு தற்கொலை செய்து கொள்வேன்னு ஒன்றிய கவுன் சிலர் ஒருத்தர் மாவட்ட சேர்மனிடம் வந்து முறையிட்டார், அவரை சமாதானப்படுத்தி அனுப்பினார். அதிகாரிகளிடம் ஒருமையில் பேசுவது, நான் சொல்றதைத்தான் செய்யணும்னு அதிகாரிகளை மிரட்டுவது, எந்த வேலையாயிருந்தாலும் 15 சதவிகிதம் கமிஷன் கேட்டு பிரச் சனை செய்யறார். உங்க நண்பர் தானே எடுத்துச் சொல்லுங்கண் ணான்னு வர்றாங்க.
அணைக்கட்டு ஒன்றியத்தி லிருந்து மாவட்ட கவுன்சிலராகி மாவட்ட சேர்மனானார். ஒன்றிய அலுவலகத்துக்கு வந்தால் மாவட்ட சேர்மன்னு மரியாதை தர்றாங்க. யாரும் யார் கட்டுப்பாட்டிலும் இல்லை. நமக்கு நாமே திட்டத்தில் எந்தெந்த கிராமத்துக்கு என்னென்ன பணி என முடிவுசெய்து அதுபற்றிய தகவலை பாபு விடம் தரச்சொல்லியிருந்தார் மா.செ. நந்தகுமார். அதுபற்றி பேசவே அணைக் கட்டு பி.டி.ஓ. அலுவலகத் துக்குச் சென்றார். அணைக்கட்டு தொகுதியில் கெத்தாக வலம் வருபவரை வெங்கடேசன் அசிங்கப்படுத்திட்டார், மா.செ.வுக்காக, அமைதியா இருக்கார்''’என்றார்கள்.
மா.செ. ஊர் திரும்பியதும் இந்த விவகாரத்துக்கான பஞ்சாயத்து இருக்கிறதாம்!