அ.தி.மு.க.வின் உட்கட்சி தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. மே மாதம் மத்தியில் பொதுக்குழு கூட்டத்தைக் கூட்ட சோதிடம் பார்த்துவருகிறார் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி. பொதுக்குழு மூலமாக கட்சியின் பொதுச் செயலாளராக முயற்சிசெய்கிறார். உட்கட்சி தேர்தல் நடத்தி கட்சி சுறுசுறுப்பாக இருப்பதாகக் காட்டினாலும், அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

admk

இதுபற்றி நம்மிடம் பேசிய திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி, உட்கட்சி தேர்தல் தொடங்கியபோதே ஒ.செ., ந.செ, மாவட்ட செயலாளர், கமிட்டி நிர்வாகிகளை அப்படியே நியமிங்க. யாரையும் மாற்றாதீங்கன்னு வாய்மொழி உத்தரவை தலைமை போட்டது. இதனால் கி.செ. முதல் மா.செ. வரை அன்னபோஸ்ட்டாவே தேர்ந்தெடுக்கப்பட்டாங்க. 2015-ல் உட்கட்சி தேர்தல் நடந்தது, அப்போது ஒவ்வொரு பதவிக்கும் பத்துக்கும் மேற்பட்டவர்கள் போட்டியிட்டாங்க. இப்போது பல இடங்களில் போட்டியிட யாரும் முன்வரவில்லை. போட்டிபோட நினைத்தவர்களுக்கு விருப்பமனு கூட தேர்தல் பொறுப்பாளர்கள் தரவில்லை.

டெல்டா மண்டலத்தைச் சேர்ந்த வைத்திலிங்கம், பணம் வாங்கிக்கிட்டு திரு வண்ணாமலை மாவட்டத்தில் தண்டராம்பட்டு ஒ.செ.வாக கார்த்திகேயன் என்பவரை நியமிக்கவச்சார். ஆரணி நகரச்செயலாளராக, கூட்டுறவு வங்கிக் கடன் மோசடி வழக்கில் சிறையிலுள்ள அசோக்குமாரை பல எதிர்ப்புகளையும் மீறி மீண்டும் நியமிச்சாங்க. இப்படி தமிழகம் முழுவதுமே நடந்தது.

எடப்பாடி. பழனிச்சாமி, சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர், தலைமைநிலையச் செயலாளர், கட்சியின் இணைஒருங்கிணைப் பாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவிகளில் உள்ளார். கட்சியின் பொதுச்செய லாளராக முயற்சிசெய்யும் அவரே புறநகர் மா.செ.வானார். பின் விமர்சனம் எழுந்ததும் தனது நிழலான ஆத்தூர் இளங்கோவனிடம், மா.செ. பதவியை மாற்றித் தந்திருக்கார்.

Advertisment

admk

இதுபற்றி நம்மிடம் பேசிய இராணிப் பேட்டை மாவட்ட அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர், “"கட்சியை வழிநடத்துகிறோம் என ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். வெளியே சொன்னாலும் கேப்டன் இல்லாத கப்பலாகத்தான் எங்கள் கட்சி இருக்கிறது. கட்சியில் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் கட்சிக்கு துரோகம் செய்தால், பதவி யிலிருந்து தூக்கியெறிந்துவிடுவார் அம்மா. இப்போது அப்படியெல் லாம் இல்லை. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நான் போட்டியிட முடியாது, உங்களால என்ன செய்யமுடியுமோ செய்துக்குங்க என முகத்தில் அடித்தாற்போல் பதில் சொன்ன நிர்வாகிகள் பலர், அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டு களில் லட்சங்களில், கோடிகளில் சம்பாதித்தவர்கள். அவர்கள் மீது மாவட்டச் செயலாளர்களால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடிய வில்லை. காரணம், அவர்களே சட்டமன்றத் தேர்தலில் வெற்றிக்காக உழைக்காமல் வந்த பணத்தை அமுக்கிக்கொண்டார்கள்.

தேர்தல் முடிந்தபின் தோல்வி யுற்ற தொகுதிகளில் எதனால் தோல்வியென அறிய, தலைமைக் கழக நிர்வாகிகள் கொண்ட விசாரணைக்குழு, பிரைவேட் ஏஜென்ஸி மூலமாக விசாரணை நடத்தி அறிக்கை வாங்கி நட வடிக்கை எடுப்பார் அம்மா. அப்படியொரு விசாரணை, தேர்தல் முடிந்து ஓராண்டாகியும் இன்னமும் நடக்கவில்லை. தி.மு.க. ஆளும் கட்சியாகி ஓராண்டாகிறது. தமிழ்நாடு அரசின் குளறுபடிகளைப் பார்த்து எதிர் அரசியல் செய்யவேண்டும். அப்படிச் செய்யாமல் பம்முகிறார்கள் முன்னாள் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும். காரணம் நம் வீட்டுக்கு ரெய்டு வந்துவிடுமோ என பயம்.

admk

திருவண்ணாமலை அ.தி.மு.க. தெற்கு மா.செ. அக்ரி.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ, அமைச்சர் எ.வ.வேலுவின் தொண்டராகவே மாறிவிட்டார். விழுப்புரம் மா.செ. சண்முகம், அமைச்சர் பொன்முடியின் விசுவாசியாகிவிட்டார். முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அமைச்சர் ஐ.பி.யுடன் நெருக்கமாகவுள்ளார். திருப்பத்தூர் மா.செ. வீரமணி, அமைச்சர் துரைமுருகனின் செல்லப்பிள்ளையாகவுள்ளார்.

இதுபற்றியெல்லாம் தொண்டர்கள் தலைமைக்கு புகார்கள் அனுப்பியும் தலைமை கண்டுகொள்ளவில்லை. தி.மு.க.வை எதிர்க்க தலைமையே பயப்படுகிறது. இவர்கள் பயப்படுவதைப் பார்த்து கீழ்மட்டத்திலுள்ள நிர்வாகிகளும் கட்சிரீதியாக, ஆளும்கட்சியுடன் ஏதாவது பிரச்சனையென்றால் நம்மை யார் காப்பாற்றுவார்கள் என பயப்படுகிறார்கள். அந்த பயம்தான் அவர்களை மாற்றுக்கட்சியை நோக்கித் தள்ளுகிறது.

பொதுவாகவே கூட்டணியிலுள்ள ஒரு கட்சியி லிருந்து கூட்டணியிலுள்ள மற்றொரு கட்சிக்கு தொண் டர்களோ, நிர்வாகிகளோ கட்சி மாறிவருகிறார்கள் என்றால் அது கூட்டணியை பாதிக்கும் என் பதால் "வேண்டாம், பொறுத்திருங்கள், நேரம்வரும்போது சொல்கிறோம்' எனச்சொல்லி சேர்க்க மறுத்துவிடுவார்கள். ஆனால் பா.ஜ.க.வோ, அ.தி.மு.க.வில் இருந்து வருபவர்களை கட்சியில் சேர்த்து பதவிகளை வழங்கிவருகிறது.

அ.தி.மு.க. ஆதரவில் 4 எம்.எல்.ஏ.க்களை தமிழ்நாட்டில் பெற்ற பா.ஜ.க., நாடாளு மன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் பா.ஜ.க., தமிழ்நாட்டில் தங்கள் கட்சியை வளர்க்க, எங்கள் கட்சியை அழிப்பதை வேடிக்கை பார்க்கிறது எங்கள் தலைமை''’என பொங்கினார்.

தி.மு.க., அ.தி.மு.க., அ.ம.மு.க. என பயணமாகி பா.ஜ.க.வில் இணைந்த போளுர் ஏழுமலைக்கு திருவண்ணாமலை வடக்கு மாவட்டத் தலைவர் பதவியை தந்தனர். கடந்த மாதம் அ.தி.மு.க.விலிருந்து பா.ஜ.க.வில் இணைந்த திருவண்ணாமலை பால சுப்பிரமணிக்கு, தெற்கு மாவட்ட தலைவர் பதவிக் கான வாக்குறுதியை தனிப்பட்ட முறையில் அண்ணாமலை தந்துள் ளார் என்கிறார்கள். இவர்கள் இருவருமே தொழிலைக் காப்பாற்றிக்கொள்ள கட்சியில் இணைந்து, பதவி வாங்குகிறார்களாம். வழக்கமாக, பா.ஜ.க.வில் மாவட்ட தலைவர் பதவியில், ஆர்.எஸ்.எஸ். பயிற்சி பெற்றவர்கள் அல்லது ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளின் ஆதரவு பெற்றவர்களை மட்டுமே நியமிப்பார்கள். அந்த கொள்கையில் மாற்றம் செய்து பிற கட்சியிலிருந்து வரும் முக்கியஸ்தர்கள், பணபலம்மிக்கவர்களுக்கு பதவி வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி ஒன்றியத்துக்கான பா.ஜ.க. தலைவர் பதவிக்காக ஒருவர் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை கட்சிக்காக வழங்குவ தாகவும், அங்கே கட்சி அலுவலகம் கட்டித்தருகிறேன், எனக்கு ஒன்றியத் தலைவர் பதவி வேண்டும் எனவும் கேட்கிறார். மாவட்ட தலைவர் பதவியைக் கேட்டு மற்றொருவரும் கோடிகளில் செலவு செய்ய தயாராக இருப்பதாக அண்ணாமலையிடம் பேசியுள்ள தாக பேச்சுக்கள் அடிபடுகிறது.

தமிழ்நாட்டில் ஆளும்கட்சியான தி.மு.க. வுக்கு மாற்று நாங்கள்தான் என்பதை வெளிப் படுத்த தினம், தினம் மீடியாவை சந்திக்கிறார்கள் பா.ஜ.க. தலைவர்கள். சட்டமன்ற எதிர்க்கட்சி, தமிழ்நாட்டின் பெரிய கட்சி அடங்கிக்கிடக் கிறது. மாநில சுயாட்சி பேசிய அண்ணாவின் பெயரை கட்சியின் பெயராக வைத்துக்கொண்டு கவர்னருக்கு ஆதரவாகவும், மதவாத கட்சியான பா.ஜ.க.வுக்கு ஆதரவாகவும் அறிக்கைவிட்டு, இரட்டை இலையை தாமரையாக மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்'' என வேதனைப்படு கின்றனர் நீண்டகால அ.தி.மு.க. தொண்டர்கள்.

Advertisment