"ஹலோ தலைவரே, ஜெ.வின் மர்ம மரணம் குறித்து விசாரித்த ஆறுமுகசாமி கமிஷன், ஒருவழியாக அரசிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறது.''”
"ஆமாம்பா, அதை அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்து விவாதிக்கப்போவதாக முதல்வர் ஸ்டாலின் சொல்லி இருக்கிறாரே?''”
"உண்மைதாங்க தலைவரே, போயஸ்கார்டனில் ஜெ.வுக்கு என்னென்ன விபரீதம் நடந்தது? அவர் மருத்துவமனைக்குச் செல்லும் நிலை யாரால் ஏற்பட்டது என்பது போன்ற சிக்கலான விவகாரங்களைப் பற்றி விசாரணையின் பார்வை சென்றதாகத் தெரியவில்லை. முதலிலேயே கமிஷனின் அறிக்கை சசிகலாவுக்குச் சாதகமாக தயாராகி, அதன்பின் அதில் சில திருத்தங்கள் செய்யப்பட்டதாகவும் செய்தி கசியுது. இந்த ஆறுமுகசாமி கமிஷன் ரிப்போர்ட்டில், அப்பல்லோ மருத்துவமனை கொடுத்த தவறான சிகிச்சையால் தான் ஜெ.வின் உடல் நிலையில் அதிகப் பின்னடை வும் அதனால்தான் மரணமும் நிகழ்ந்தது என்று சொல்லப்பட்டிருக்கிறதாம். இதன் மூலம் அப்பல்லோ தரப்புக்கு நெருக்கடி ஏற்படும்னு தெரியுது. அதேநேரம், சசிகலா தரப்பு இப்போது நிம்மதிப் பெருமூச்சு விடுகிறதாம். இதில் உண்மையிலேயே பரிதாபத்துக்குரியவர் ஜெ.தான்.''”
"அதைவிட பரிதாபத்துக்குரியவர்கள் தங்கள் தலைவிக்கு என்ன நடந்தது என்பதை அறிய முடியாமலேயே இருக்கும் அ.தி.மு.க. தொண்டர்கள்.''”
"தலைவரே, 3 நாள் பயணமாக கொங்கு மண்டலத்துக்குப் போன முதல்வர் ஸ்டாலினுக்கு பிரமாண்டமான வரவேற்பைக் கொடுத்து அசத்தினார் அமைச்சரான செந்தில்பாலாஜி. அதே நேரத்தில் தி.மு.க.வில் அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 50 ஆயிரம் பேர் தி.மு.க.வில் இணைத்த நிகழ்வும் அரங்கேறி ஸ்டாலினை மேலும் மனம் குளிர வைத்தது. இதில் ஸ்டாலின் மிகுந்த உற்சாகத்தில் இருந்தார். ஆனால், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையோ, அதேநாளில் தி.மு.க.வைச் சேர்ந்த கோவை மாநகர் கிழக்கு மாவட்ட மாணவர் அணியின் துணை அமைப் பாளர்கள் செந்தில்நாதன், விக்னேஷ், திருப்பூர் புறநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன் ஆகியோரைப் பா.ஜ.க.வில் சேர்த்து, அறிவாலயத்தை அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியிருக்கார்.''”
"இதுக்கு அறிவாலயத்தின் ரியாக்ஷன் என்ன?''”
"இப்படி கொங்கு மண்டல தி.மு.க. மாணவரணியில் சூறாவளி ஏற்பட்டதை அறிந்த ஸ்டாலின், கோவை, திரு
"ஹலோ தலைவரே, ஜெ.வின் மர்ம மரணம் குறித்து விசாரித்த ஆறுமுகசாமி கமிஷன், ஒருவழியாக அரசிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறது.''”
"ஆமாம்பா, அதை அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்து விவாதிக்கப்போவதாக முதல்வர் ஸ்டாலின் சொல்லி இருக்கிறாரே?''”
"உண்மைதாங்க தலைவரே, போயஸ்கார்டனில் ஜெ.வுக்கு என்னென்ன விபரீதம் நடந்தது? அவர் மருத்துவமனைக்குச் செல்லும் நிலை யாரால் ஏற்பட்டது என்பது போன்ற சிக்கலான விவகாரங்களைப் பற்றி விசாரணையின் பார்வை சென்றதாகத் தெரியவில்லை. முதலிலேயே கமிஷனின் அறிக்கை சசிகலாவுக்குச் சாதகமாக தயாராகி, அதன்பின் அதில் சில திருத்தங்கள் செய்யப்பட்டதாகவும் செய்தி கசியுது. இந்த ஆறுமுகசாமி கமிஷன் ரிப்போர்ட்டில், அப்பல்லோ மருத்துவமனை கொடுத்த தவறான சிகிச்சையால் தான் ஜெ.வின் உடல் நிலையில் அதிகப் பின்னடை வும் அதனால்தான் மரணமும் நிகழ்ந்தது என்று சொல்லப்பட்டிருக்கிறதாம். இதன் மூலம் அப்பல்லோ தரப்புக்கு நெருக்கடி ஏற்படும்னு தெரியுது. அதேநேரம், சசிகலா தரப்பு இப்போது நிம்மதிப் பெருமூச்சு விடுகிறதாம். இதில் உண்மையிலேயே பரிதாபத்துக்குரியவர் ஜெ.தான்.''”
"அதைவிட பரிதாபத்துக்குரியவர்கள் தங்கள் தலைவிக்கு என்ன நடந்தது என்பதை அறிய முடியாமலேயே இருக்கும் அ.தி.மு.க. தொண்டர்கள்.''”
"தலைவரே, 3 நாள் பயணமாக கொங்கு மண்டலத்துக்குப் போன முதல்வர் ஸ்டாலினுக்கு பிரமாண்டமான வரவேற்பைக் கொடுத்து அசத்தினார் அமைச்சரான செந்தில்பாலாஜி. அதே நேரத்தில் தி.மு.க.வில் அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 50 ஆயிரம் பேர் தி.மு.க.வில் இணைத்த நிகழ்வும் அரங்கேறி ஸ்டாலினை மேலும் மனம் குளிர வைத்தது. இதில் ஸ்டாலின் மிகுந்த உற்சாகத்தில் இருந்தார். ஆனால், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையோ, அதேநாளில் தி.மு.க.வைச் சேர்ந்த கோவை மாநகர் கிழக்கு மாவட்ட மாணவர் அணியின் துணை அமைப் பாளர்கள் செந்தில்நாதன், விக்னேஷ், திருப்பூர் புறநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன் ஆகியோரைப் பா.ஜ.க.வில் சேர்த்து, அறிவாலயத்தை அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியிருக்கார்.''”
"இதுக்கு அறிவாலயத்தின் ரியாக்ஷன் என்ன?''”
"இப்படி கொங்கு மண்டல தி.மு.க. மாணவரணியில் சூறாவளி ஏற்பட்டதை அறிந்த ஸ்டாலின், கோவை, திருப்பூர் மா.செ.க்களிடம், இங்கே தி.மு.க.வில் என்ன நடக்குது, இதுதான் தொண்டர்களை அரவணைத்துச் செல்லும் லட்சணமான்னு கடுமையாக கடிந்துகொண்டு இருக்கிறார். இந்த நிலையில், பா.ஜ.க. அண்ணாமலை, பா.ஜ.க.வுக்குத் தாவிய அந்த நிர்வாகிகளிடம், கொங்கு மண்டலத் தி.மு.க.வில் இன்னும் யார் யார், அதிருப்தியில் இருக்காங்கன்னு பட்டியல் எடுக்கச்சொல்லி இருக்காராம். அப்படிப்பட்டவர்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் என்ன? தேவைகள் என்ன? என்றும் விசாரிக்கச் சொல்லி இருக்கார். இதன் அடிப்படையில் அவர்களை யும் வளைத்து இன்னும் 2 மாதத்தில் கோவையில் பிரமாண்டமான இணைப்பு விழாவை நடத்தணும் என்றும் அவர்களுக்கு அசைன் மெண்ட் கொடுத்திருக்காராம். இதையெல்லாம் அறிந்துகொண்ட தி.மு.க. தரப்பு, பா.ஜ.க. பாணியிலேயே அவர்களை அடித்து விளையாட ரூட் போட்டுக்கொண்டிருக்கிறது.''”
"தி.மு.க. மீது பாய பா.ம.க.வும் ரெடியாகுதே?''
"உண்மைதாங்க தலைவரே, தி.மு.க. ஆட்சி அமைந்த பின், அரசை அதிகம் விமர்சிக்காமல் இருந்தார் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ். இது குறித்து கட்சி சீனியர்களிடம் அவர் பேசும் போது, புதிதாக ஆட்சிக்கு வருபவர்களுக்கு ஹனிமூன் பீரியட் என 6 மாத காலம் அவகாசம் கொடுப்பதுதான் தார்மீகம்னு சொல்லியிருந்தார். இந்த நிலையில், தி.மு.க. ஆட்சிக்கு வந்து 15 மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. இன்னும் சும்மா இருக்கலாமா? என்று கட்சியின் சீனியர்கள் சிலர் ராமதாஸிடம் கேட்டதால், தி.மு.க. அரசை விமர் சிக்கத் தயாராகிவிட்டார் ராமதாஸ். இதுகுறித்து அவர், அன்புமணியிடம் விவாதித்திருக்கிறார். அதைத் தொடர்ந்துதான், பரந்தூரில் அமையவிருக் கும் விமானநிலைய விவகாரத்தில், நிலம் எடுப்பது குறித்த அரசின் திட்டம் பொதுமக்களின் கருத்தை அறிய அன்புமணி களமிறங்கினார்னு பாட்டாளி கள் தரப்பே சொல்லுது.''”
"கோட்டையில் ஒருவித பரபரப்பு தெரியுதே?''”
"ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் டிரான்ஸ்பர் தொடர்பான லிஸ்ட் எடுக்கப்பட்டு வருது. அதில் பெரிய பெரிய அதிகாரப் புள்ளிகள் எல்லாம் இருப்பாங்கன்னு சொல்லப்படுது. இதுகுறித்து கோட்டைத் தரப்பில் விசாரித்தபோது, தலைமைச் செயலகத்திலேயே அதிகத் தவறுகள் இப்போது நடக்குது. குறிப்பாக, 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே லஞ்ச ஊழலில் கோட்டையில் கொடிகட்டிப் பறக்குறாங்க. அவர்களால்தான் இந்த அரசுக்கு நெருக்கடிகள் சூழுது. சக சீனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே அவர்களின் ஆட்டத்தைப் பொறுக்கமுடியாமல் குமுறுறாங்க. அதனால் அவர்களை முதலில் கோட்டையில் இருந்து நகர்த்தணும்னு முதல்வர் திட்டமிட்டிருக்கார்னு சொல்றாங்க. முதல்வரின் ஆக்ஷன் தள்ளிப்போகு மானால், அந்த ஊழல் அதிகாரிகளின் ரகசியங்களை ஆதாரப்பூர்வமாக எதிர்க்கட்சித் தரப்பினரிடம் கொடுக்க கோட்டையிலேயே ஒரு க்ரூப் காத்திருக்குதாம்.''”
"சேலம் மாவட்டத்தில் இருக்கும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள், ஆளும்கட்சியினர் மீது அதிருப்தியில் இருக்காங்களே?''”
"ஆமாங்க தலைவரே, சேலம் மாவட்டத்தில் மொத்தம் 11 எம்.எல்.ஏ.க்கள் இருக்காங்க. இவர்களில் அ.தி.மு.க.வினர் 8 பேர். பா.ம.க.வினர் 2 பேர். இவங்களுக்கு எந்தவித முக்கியத்துவமும் தரக்கூடாதுன்னு அரசு அதிகாரிகளுக்கு தி.மு.க. மா.செ.க்கள் ஆர்டர் போட்டிருப்பதாகவும், அதனால் தாங்கள் எல்லா விதத்திலும் மிகமோசமாகப் புறக்கணிக்கப்படுவதாகவும் புலம்பறாங்க. மாவட்ட ஆட்சியர் கூட தங்களைப் பொருட்டா நினைப்ப தில்லைன்னும் அவங்க குற்றம் சாட்டறாங்க. குறிப்பா, பா.ம.க. எம்.எல்.ஏ.வான அருள், நானும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன்தான்னு சமீபத்தில், தன் சமூக வலைத்தளத்தில் பதிவு போட்டிருக்கார். இது பரபரப்பை ஏற்படுத்தி வருது.''
"இப்படி ஒரு புகாரை ஆளும்கட்சி எம்.பி. ஒருத்தரே தெரிவிச்சிருக்காரே?''”
"ஆமாங்க தலைவரே, ஆளும் கட்சி எம்.பி.யான பார்த்தீபன், தனது அதிருப்தியை மிக கடுமையாக வெளிப்படுத்தி இருக்கார். இவரை மா.செ.வான பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் போன்றவர்கள் கூட புறக்கணிக்கறாங்களாம். இந்த பார்த்திபன், தனக்கு மீண்டும் 2024-ல் எம்.பி. சீட் கிடைத்துவிடக்கூடாதுன்னுதான் இப்படி செய்யறாங்கன்னு புலம்பறாராம். இது குறித்த தனது மனக்குமுறலை அவர் அண்மையில் பகிரங்கமாகவே வெளிப்படுத்த, அது ஸ்டாலினையே அதிரவச்சி ருக்கு. உடனே சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சரான கே.என்.நேருவிடம் இது குறித்து அவர் விசாரிக்க, அமைச்சர் நேருவோ பனைமரத்துப்பட்டி ராஜேந்திரனைக் கடுமையாக் கண்டிச்சிருக்கார். இதற்கிடையே, அதிருப்தியில் இருக்கும் எம்.பி. பார்த்திபனை தங்கள் பக்கம் இழுக்க தூண்டில்போட்டு வருகிறதாம் பா.ஜ.க.''”
"பா.ஜ.க. பிரமுகர்கள் போதை வழக்கில் சிக்கியிருக்காங்களே?''”
"ஆமாங்க தலைவரே, புதுக்கோட்டை மாவட்டம் சந்தைவாசல் பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க. பிரமுகரான முருகையன், போதைப்பொருட்களை வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்டார். இவரோடு அரவக்குறிச்சியைச் சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் ஒருவரும், இந்த பிசினஸில் இருப்பது தெரிய வந்திருக்கிறது. அதோடு விசாரணை நீண்டநிலை யில்... பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு மிக நெருக்கமான ஒருவரும் இந்த வில்லங்க விவகாரத்தில் சிக்கி இருக்கிறார். இந்தத் தகவலை அறிந்த அண்ணாமலை, எப்படியாவது பா.ஜ.க. வினரை இந்த வில்லங்கத்தில் இருந்து மீட்டுவிட வேண்டும் என்று காவல்துறைக்கு பலவகையிலும் பிரஷர் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.''”
"என்னப்பா காங்கிரஸில் என்னென்னவோ நடக்குதே?''”
"ராகுல்காந்தியோடு முரண்பட்டிருந்த காங்கிரஸின் சீனியர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், கட்சியில் இருந்து விலகிவிட்டார். இது தொடர்பாக அவர் சோனியாவுக்கு எழுதிய கடிதத்தில், சின்னப்பையனான ராகுல்காந்தி, சீனியர்கள் என்றுகூட பார்க்காமல் அதிகாரப் போக்கில் நடந்துகொண்டார்னு சரமாரியாக விமர்சித்திருக்கிறாராம். இதை அறிந்து வெகுண்டு போன காங்கிரசின் இளம் தலைவர்களோ, 2004-2014 வரை 10 ஆண்டுகாலம் ஒன்றிய அமைச்சராக இருந்த குலாமுக்கு, நிறைய உத்தரவுகளைப் போட்டவர் ராகுல். அதை எல்லாம் தலைமேல் மேற்கொண்டு செய்தவர் குலாம் நபி. அவருக்கு அப்போதெல்லாம் ராகுல்காந்தி சின்னப்பையன் என்பதும் அவர் அதிகாரம் செய்ததும் தெரியவில்லையா? அன்றே ராகுலை விமர்சித்துவிட்டு அவர் அமைச்சர் பதவியிலிருந்து வெளியேறியிருந்தால் அவரைப் பாராட்டியிருப்போம்னு குலாம் நபியை விமர்சிக்கிறாங்க.
அதே நேரம் தமிழ்நாடு மற்றும் கேரள எம்.பி.க்கள் சிலரும், கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளரான சுனிலும்தான் ராகுலுக்கு கெட்டபெயரை உருவாக்குகிறார்கள் என்கிற டாக் டெல்லியிலேயே அடிபடுது. "விரை வில் தனிக்கட்சி தொடங்க இருக்கிறார் குலாம் நபி ஆசாத். கட்சி தொடங்கியதும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இருக்கும் மொத்த காங்கிரசையும் அவர் கூண்டோடு தன்பக்கம் கொண்டு வரப்போகிறாராம். இந்த ஆண்டு இறுதியில் ஜம்மு- காஷ்மீருக்கு தேர்தல் நடக்க இருப்பதால், அங்கே காங்கிரஸ் ஆட்சி அமைவதைத் தடுக்கவே பா.ஜ.க. -குலாம் கூட்டணி மலர்கிறதாம். அந்த திட்டத்தின்படிதான் காங்கிரஸில் இருந்து குலாம் வெளியேறியிருக்கிறார் என்கிறார்கள் டெல்லி தரப்பினர்.''”
"நானும் ஒரு தகவலைச் சொல்றேன்... விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வழக்கம்போல் தமிழ்நாடு முழுவதும் இந்து அமைப்புகள் சார்பில், ஆங்காங்கே பெரிய அளவிலான பிள்ளையார் சிலைகள் வைக்கப்பட்டிருக்கு. இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள் அதிகம் இருக்கும் இடத்தி லும் சிலைகள் வைக்கப்பட்டிருக்கு. இது குறித்து சிறுபான்மையினர், வழக்கம்போல் சிலைகள் வைத்து வழிபடுவதிலோ, ஊர்வலம் நடத்துவதிலோ எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால், உள்ளூர் மக்களைத் தவிர்த்து வெளியூர் ஆட்கள் ஏன் பல இடங்களில் அதிகளவில் நடமாடு கிறார்கள். இது அச்ச உணர்வை எழுப்புகிறது. இதை காவல் துறையினர் கவனித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிறார்கள். மதாபிமானம் கடந்து பொது மக்களின் கோரிக்கையும் இதுவாகவே இருக் கிறது.''
இறுதிச்சுற்று!
'நான் முதல்வன்' மாபெரும் திறன் மேம்பாட்டுத்திட்டத்துக்கான செயல்முறைகள், பாடத்திட்டம், பயிற்சி ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் புதிய இணையதளத்தை தமிழக அரசு வடிவமைத்துள்ளது. இதற்கான இணையதளத்தை சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன், உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, தலைமைச் செயலாளர் இறையன்பு, அதிகாரிகள் உதயச்சந்திரன், கார்த்திகேயன், இன்னசென்ட் திவ்யா, ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி மற்றும் பல்வேறு நிறுவனங்களின் செயல் அதிகாரிகள், தொழில்முனைவோர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய முதல்வர், நம்முடைய இளைஞர்களை, தற்போதைய தொழில் நிறுவனங்களின் தேவைக்கேற்ப உருவாக்குதல், அதன்மூலம் அவர்களின் திறனுக்கேற்ற தகுதியான வேலையைக் கிடைக்கச்செய்வதை அடிப்படையாகக் கொண்டே 'நான் முதல்வன்' என்ற திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்துத் துறை வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி இதுவே திராவிட மாடல் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.