"பாடப் புத்தகங் களை தாண்டி படிக்க வேண்டும். எல்லாத் தலை வர்களையும் தெரிந்து கொள்ளுங்கள். அம்பேத் கர், காமராஜர், பெரியார் பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்'' என மாணவ, மாணவிகள் மத்தியில் பேசி வைத்தார் நடிகர் விஜய். இதற்கு எதிராக, "உன் மகளை நீ கட்டப்போறியாக்கும்? விசய் சோசப்பு..? என பா.ஜ.க. தரப்பு அருவருப்பு அரசியல் செய்த நிலையில் கோவை போலீஸாரால் அவசரம், அவசரமாக கைது செய்யப்பட்டுள்ளார் பா.ஜ.க. பெண் ஆதரவாளர்.
"முன்னாள் விமான நிலைய ஊழியர்.! சனாதானி.! ஹிந்து தமிழச்சி'' எனத் தன்னுடைய சுயவிபரக் குறிப்புக்களாக்கி பா.ஜ.க.விற்கு ஆதரவாக உமாகார்க்கி26 எனும் அடையாளத் தில் பா.ஜ.க. தவிர அனைத்துக் கட்சிகளுக்கு எதிராகவும் ட்விட்டரில் தனது அருவருப்பு அரசியலை செய்து வந்தவர் சிங்காநல்லூர் சிவா கார்டன் பகுதியைச் சேர்ந்த உமா கார்த்திகேயன். குறிப்பாக திராவிடம், பெரியாரின் தனிப்பட்ட வாழ்க்கை, கலைஞர், முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோருக்கு எதிராக ஆபாச அருவருப்பு கருத்துக்களை பதிவிடுவதில் உமாகார்த்திகேயன் எனும் உமா கார்கி கில்லாடி. இரண்டு தினங் களுக்கு முன் காளப்பட்டி பகுதியில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு பேரியக்கம் மற்றும் சமூக ஊடக செயல் வீரர்கள் சந்திப்பு கூட்டத்தில், உமா கார்கியின் அருவருப்பு அரசியலை ஊக்குவிக்கும் விதமாக சிறந்த சமூக ஊடக செயல்பாட்டாளருக்கான விருதை வழங்கினார் மாநிலத் தலைவர் அண்ணா மலை.
இதே வேளையில் நடிகர் விஜய், மாணாக்கர் களிடையே பேசியதைக் குறிப்பிட்டு, "உன் மகளை நீ கட்டப்போறியாக்கும்? விசய் சோசப்பு..?' எனத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் உமா கார்கி. பெரியார் மற்றும் நடிகர் விஜய் குறித்தான அவதூறான கருத்துக்களையும், விஜய் மகள் குறித்து அருவருக்கத்தக்க வகையிலான ஆபாசக் கருத்துக்களையும் பதிவிட்ட உமா கார்கி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் சென்னை யில் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை எழும்பூர் சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதற்காக 21-06-2023 அன்று சென்னையில் ஆஜராக வேண்டுமென சம்மனையும் அனுப்பினர். இதே போல், தமிழ்நாடு அரசு மற்றும் முதல்வர் குறித்தும் விமர்சித்தது, மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி பிரிவினை ஏற்படுத்தி வருகிறார் உமா கார்கி என கோவை தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியும் கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகாரளித்திருந்தது.
சைபர் க்ரைம் போலீஸோ, "முதலமைச்சர் ஸ்டாலினை ஹிட்லர் போல சித்தரித்து கார்ட்டூனும், அச்சில் ஏற்ற இயலாத வார்த்தைகளை பிரயோகித்தும் அருவருப்புக் கருத்துக்களையும், சர்ச்சைக்குரிய புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். மேலும் தமிழக அரசுக்கு எதிராகவும் மற்றும் சமூகத்தில் பிரச்சனை ஏற்படுத்தும் விதத்திலும் தொடர்ந்து கருத்துக்களை பதிவிட்டுள்ளார். இது இரு பிரிவினரிடையே பிரச்சனை ஏற்படுத்தும் விதமாக உள்ளதால் மம்ஹஏஹழ்ஞ்ண் என்ப வர் மீது நடவடிக்கை எடுக்குமாறு நுண்ணறிவு போலீஸா ருக்கு பரிந்துரைத்தோம்'' என்றது. தொடர்ச்சியாக, விஜய் மக்கள் இயக்கம் கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை எழும்பூர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புதனன்று விசாரணைக்காக ஆஜராக இருந்த நிலையில் கோவை போலீஸாரால் செவ்வாய்க்கிழமையன்றே அதிரடியாகக் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலிற்கு அனுப்பி வைக்கப்பட்டார் அருவருப்பு அரசியல்வாதி உமாகார்கி.
உமா கார்கி கைது செய்யப்பட்டதையடுத்து, கோவை சைபர் கிரைம் அலுவலகத்திற்கு வந்த பா.ஜ.க. மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமியோ, "பா.ஜ.க. ஆதரவாளரான உமா கார்த்திகேயனை காவல் துறையினர் கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. சமூக வலைத்தளத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக அவருக்கு விருது கொடுத்திருக்கிறோம். இதைத் தாங்க முடியாமல் பொய் வழக்கு போட்டு கைது செய்து இருக்கிறார்கள். இதுபோல வழக்கு போட்டால் தி.மு.க.வினர் மீது ஏராளமான வழக்கு போட வேண்டும். கலைஞரைப் பற்றியோ, பெரியாரைப் பற்றியோ பேசியது பொய் என்றால் அதை தி.மு.க.வினர் நிரூபிக்க வேண்டும். தி.மு.க.வினரைப் போல படுத்து உருண்டு கைதாகவில்லை. பெண்ணாக இருந்தாலும் துணிச்சலாக கைதாகி இருக்கிறார். இந்த துணிச்சல் தி.மு.க. அமைச்சருக்கு இல்லை. ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு, கண்டிப்பாக எதிர்வினை ஆற்றுவோம்'' என்றார் அவர்.
"தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் குந்தகம் விளைவிக்கும் வகையிலும், தந்தை பெரியார் மற்றும் அவரது மனைவி குறித்து தவறான வார்த்தைகளைக் குறிப்பிட்டு, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில், இரு மதங்களுக்கு இடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். முதலமைச்சர் ஸ்டாலின் சர்வாதிகாரப் போக்குடன் நடந்து வருவது போல் பதிவிட்டுள்ளார். இது போன்று சர்வாதிகாரப் போக்கை ஒன்றிய அரசு இவர்களை போன்ற ஆட்களைக் கொண்டு திணிக்கப் பார்க்கிறார்கள்'' என் றார் கோவை தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் ஹரிஷ்.
அருவருக்கத்தக்க ஆபாச அரசியல் செய்து வரும் பா.ஜ.க. கருத்தியல் அரசியலைக் கற்றுக் கொண்டு அரசியல் பழக வேண்டுமென்பது பொதுமக்களின் விருப்பம்.!