"சத்குரு தொடர்பாக எவ்வித செய்தி வந்தாலும், அதனை அடுத்தவருக்கு தெரியப்படுத்தக்கூடாது. எங்களுக்கு அனுப்பவேண்டும்' என அமெரிக்க நாட்டிலுள்ள ஈஷா தன்னார்வலர்களுக்கு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பியுள்ளது ஈஷா நிர்வாகம். மறுபக்கம், "நக்கீரனிலிருந்து' வெளியேறியவர்களின் துணை கொண்டு, Keyboard Warriors என்பவர் களை சம்பளத்துடன் பணிக்கமர்த்தி "நக்கீரனுக்கு' எதிராக அனைத்து கீழ்த்தர மான வேலைகளையும் துவக்கியுள்ளது ஜக்கி தரப்பு. இருப்பினும் ஜக்கிக்கு எதிராக மின்னஞ்சல்கள் நம்மை நோக்கி வரத் தொடங்கியுள்ளன.
ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து வந்த மின்னஞ் சல் ஒன்று, "நான் ஒரு ஆஸ்திரேலியன், சிட்னியில் வசிக்கிறேன். கோவை ஈஷாவிலுள்ள சுவாமி விபு என்னை அறையில் வைத்து என்ன செய்தார் என்ப தற்கு உறுதியான ஆதாரம் என்னிடம் இல்லை. ஆனால் எனக்கும் சுவாமிக்கும் இடையே 110-க்கும் மேற்பட்ட தனிப்பட்ட மின்னஞ்சல்கள் உள்ளன. பல்வேறு சுவாமிகள் இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க மறுத்ததற்கான ஆதாரமும் என்னிடம் உள்ளது. உங்கள் குழந்தையின் புகாரை சுவாமி விபு கையாள்வதாக சத்யா குறிப்பிட்டார். அதே குற்றத்தில் தானும் குற்றவாளியாக இருக்கும்போது, ஒருவரின் துஷ்பிரயோகத்தை சுவாமி விபு எவ்வாறு சமாளிக்க முடியும்? 2013-2016ஆம் ஆண்டு ஈஷா ஹோம் ஸ்கூலுக்கு நான் தன்னார்வத் தொண்டு செய்தபோது என்னிடம் தவறாக நடந்த சுவாமி விபுவைப் பற்றிய புகாருடன் 6 மாதங்களுக்கு முன்பு ஈஷா அறக்கட்டளையை அணுகினேன். அப்பொழுதும், அவரது தனியறையிலும் என்னிடம் அநாகரிகமாக நடந்தார். இப்பொழுது ஈஷா அறக்கட்டளை தங்கள் வழக்கறிஞரை இங்கு பணியமர்த்தியதுடன், இந்தியாவில் இந்த விஷயம் தெரியாமல் பார்த்துக்கொள்ள முயல்கின்றனர்' என்கின்றது Ramy Zach என்பவரது மின்னஞ்சல்.
இந்த Ramy Zach 2013- 2016 ஆண்டுகளில் கோவையிலுள்ள ஈஷா மையத்தில் தன்னார்வத் தொண்டராக பணிபுரிந்திருக்கின்றார். மிகுந்த செல்வ வளம்மிக்க இவர் மன உளைச்சலில் அவதிப்பட, ஈஷாவிற்கு பரிந் துரை செய்திருக்கின்றார் இவரது நண்பர். ஈஷாவை தொடர்புகொண்டபொழுது, "ஆஸ்திரேலியாவில் பெரிய வசதி இல்லை. இந்தியாவிற்கு வந்துவிடுங்கள். இன்னர் எஞ்சினியரிங் மூலம் அனைத்தையும் சரி செய்யலாம்' என ஈஷா ஆசைவார்த்தையை அள்ளிப் போட்டிருக்கின்றது. அதனடிப் படையில், இவரும் நம்பி இங்கு வர, தினசரி பாலியல் தொந்தரவுகள். இதில் சுவாமி விபு என்கின்ற மொட்டைத்தலை சாமியார் இவரிடம் பாலியல் சேட்டையை ஆரம்பித் திருக்கின்றார். அவர்தான் அப்படி என அவ ருக்கு மேலுள்ள மற்றொரு மொட்டைச் சாமியாரிடம் கூறினால், அவர்களும் அதே மாதிரிதான். இந்த லட்சணத்தில் எப்படி ஜக்கிக்குத் தெரிவிப்பது? அவரும் அப்படித்தான் என்கிறார்கள் அதே சாமியார்கள்' என்கிறார் Ramy Zach.
இது இப்படியிருக்க, சமீபத்தில் தங்க ளது குழந்தை ஈஷா சம்ஸ்கிருதி பள்ளியில் பாலியல் சீண்டலுக்கு ஆளானது குறித்து செய்தியாளர்களை சந்தித்துப் பேட்டியளித் தனர் நரேந்திராலி யானினி தம்பதியினர். இது அதிர்ச்சியலைகளை உண்டாக்கியது. இதேவேளையில், ஈஷா சம்ஸ்கிருதி பள்ளி யில் நடக்கும் கொடுமைகள் குறித்து மாநில குழந்தைகள் நல ஆணையத்தில் வழக்கு ஒன்று நிலுவையிலிருப்பது தெரியவந்தது. மதுரையைச் சேர்ந்த அந்த சிறுவர்கள் 2012- 2014ம் ஆண்டுகளில் ஈஷா சம்ஸ்கிருதி பள்ளியில் பயின்றிருக்கின்றார்கள். அப்பொழுது அவர்களுக்கு நடந்த கொடுமைகள்தான் மாநில குழந்தைகள் நல ஆணையத்தில் வழக்காகப் பதிவாகியுள்ளது.
"கோயம்புத்தூரில் ஈஷா யோகா மையம் மற்றும் ஈஷா சம்ஸ்கிருதி (வேத பாடசாலை) நடத்திவரும் சத்குரு ஜக்கி வாசுதேவின் யோக, தியான பயிற்சி வகுப்புகளில் நானும், எனது மனைவியும் கலந்துகொண்டு பயிற்சி பெற்று அவருடைய பேச்சுக்களால் ஈர்க்கப்பட்டோம். அதனால் சத்குரு ஜக்கி வாசுதேவ் நடத்திவரும் ஈஷா சம்ஸ்கிருதியில் எனது குழந்தையைச் சேர்ப்பதற்கு முடிவுசெய்து, அங்கு சென்று சுவாமி ஆதிரூபா. சுவாமி ஆலோக்கா மற்றும் பாடலாசிரியை ஜெயஸ்ரீ ஆகியோரைச் சந்தித்து பேசினோம்.
"இது ஒரு வேத பாடசாலை. சத்குரு ஜக்கி வாசுதேவ் நேரடி முழு வழிகாட்டுதலின்படி நடக் கும் இங்கு யோகா, களரி, பரத நாட்டியம், இந்திய சாஸ்திரிய சங்கீதம், சமஸ்கிருதம், ஆங்கிலம், தமிழ், கணிதம், விஞ்ஞானம் ஆகியவை கற்றுக் கொடுக்கப்படும். குழந்தைகளை 6 மாதத்தில் 21 நாட்கள் மட்டுமே விடுமுறையில் சந்திக்க முடியும். விதிமுறைகளை ஏற்றுக்கொண்டு எங்களது வேத பாடசாலையில் உங்கள் குழந்தைகள் படித்தால் குழந்தைகளின் உடல், மனம், உணர்ச்சி வளம் பெறுவதோடு மற்றும் ஆன்மீக நல்வாழ்வு உடையவர்களாகவும் எதிர்காலத்தை தைரியமாக எதிர்கொள்ளும் ஆற்றல்மிக்கவர்களாக வருவார் கள்' என்றார்கள். அதனடிப்படையில் மூத்த மகனையும், அதன்பின் இரண்டாவது மகனையும் அங்கு கல்விக்காக அனுமதித்தோம்.
கடந்த 05-01-15 அன்று பள்ளியி லிருந்து எங்களை அழைத்து, உங்களது மூத்த மகன் கோபப்படுகின்றான் எனக்கூறி. குழந்தைகள் மனநல மருத்துவர் பரந்தாமன் சேதுபதி என்பவரைச் சந்திக்க கூறினார்கள். நாங்களும் மகனை அழைத்து மருத்துவரைச் சந்தித்தோம். தொடர்ச்சியாக சில மருத்துவ ஆலோசனைகளுக்குப் பிறகு, எனது மகனிடம் தனியாகப் பேசிவிட்டு எங்களை அழைத்து "உங்கள் மகனை நீங்கள் கூட்டிச்சென்று உங்களது பாதுகாப்பில் வைத்து படிக்க வையுங்கள்' என்றார் மருத்துவர். எங்களது இரண்டாவது மகனும் இவனுடன் படிக் கிறான் என்று சொன்னவுடன் "அவனையும் உங்களுடனே கூட்டிச் செல்லுங்கள், அதுதான் நல்லது' என்றார் அவர். என்னவென்று தெரியாமலேயே அவர்களை மதுரைக்கு அழைத்துச் சென்றோம். பின்னர் அவர்களிடம் பேசியபொழுது, ‘பள்ளியில் அவர்கள் சொன்னதைச் செய்யவில்லை என்றால் மற்ற குழந்தைகளிடமிருந்து தனிமைப்படுத்தி, சாப்பிடும் மற்றும் தூங்கும் நேரம் தவிர, "சேவா' என்ற பெயரில் ஒருநாள் முழுவதும் பள்ளி வளாகத்தைச் சுற்றி ஓடவிடுதல், பள்ளி அறைகளைக் கூட்டித் துடைத்து சுத்தம் செய்யவைத்தல், மாட்டுத் தொழுவத்தை சுத்தம் செய்து சாணத்தை அள்ளிச் சுமந்து சென்று போட வைத்தல், தோட்ட வேலைகள் செய்ய வைத்தல், மற்ற குழந்தைகள் நல்ல சாப்பாடு சாப்பிடும்பொழுது தண்டனைக்குரிய மாணவனுக்கு மட்டும் உப்பில்லாத உணவு, கழிவறைகளைச் சுத்தம் செய்ய வைத்தல், மற்ற குழந்தை களின் துணிகளை துவைக்க வைத்தல், ஒருமணி நேரம் சூரியநமஸ்காரம் (காலை மற்றும் மாலை) முதல் தோப்புக்கரணம் வரை வற்புறுத்தி போட வைத்தல் என இரக்கமில்லாமல் துன்புறுத்தி பல தண்டனைகளைக் கொடுத்தும், தண்டனைகளைச் செய்யவில்லை யென்றால் தனியறையில் கூட்டிச்சென்று கம்பால் அடித்து மிரட்டி செய்ய வைத்திருக்கின்றார்கள்.
இதுகுறித்து, நிர்வாகத்திடம் கேட்டால், "குழந்தைகள் அங்கு படிக்கும் காலத்தில் விளையாட்டு மற்றும் ஏனைய நடவடிக் கைகளில் ஈடுபடும்பொழுது உடலுக்கோ உயிருக்கோ ஏதேனும் சேதம் ஏற்பட்டால் நிர்வாகம் பொறுப்பல்ல'’ என ஆங்கிலத்தில் பிரிண்ட் செய்த காகிதத்தில் நாம் கையெழுத்திட்டதை ஞாபகப்படுத்து கின்றார்கள்.
எங்களது குழந்தைபோல் மேலும் பல குழந்தைகள் ஈஷா சம்ஸ்கிருதியிலிருந்து இடையிலேயே வெளியேறியுள்ளனர். அவர்கள் எதற்காக வெளியேறினார்கள் என்பதையும், இப்போது அங்கு படிக்கும் ஆண், பெண் குழந்தைகளையும் தனித் தனியாக தகுந்த மருத்துவக் குழுவினருடன் சென்று எந்தளவுக்கு தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்கள் என்பதை விசாரித்தும் இந்திய கலாச்சாரம் , யோகா, தியானம் எனச் சொல்லி பெற்றோர்களின் ஆன்மிக நம்பிக்கையைப் பயன்படுத்தி உடல், மன பாதிப்பை ஏற் படுத்தும் வகையில் இரக்கமின்றி குழந்தை களை துன்புறுத்தி, அடிமைப்படுத்தும் நோக்கில் செயல்படுவதை அவர்களின் பெற்றோர்களுக்கு புரியும்வகையில் தகுந்த மனநல மருத்துவ உதவியுடன் ஆலோசனை வழங்கி குழந்தைகளை மீட்குமாறு தாழ்மை யுடன் கேட்டுக் கொள்கிறேன்'' என்கின்றது மாநில குழந்தைகள் நல ஆணையத்தில் வழக்காக மாறிய அந்த புகார் மனு.
இது குறித்து கருத்தறிய மாநில குழந்தைகள் நல ஆணையத்தினை தொடர்புகொண்டோம்... பதிலில்லை.
இதேவேளையில், "மானசரோவரில் அந்தப் பெண்ணிற்கு வழங்கிய தீட்சைபோல், கால் கட்டை விரலைக்கொண்டு தீட்சை பலருக்கும் வழங்கப்பட்டுள்ளது. சிறார் களுக்கோ கை கட்டைவிரல். அதாவது, அனைத்து மைனர் குழந்தைகள், ஆண் மற்றும் பெண் சுவாமிகள் அதேவழியில் தீட்சை பெறுகின்றனர்.