லாக்டவுன் முழுவதுமாக ரத்தாகி, சாதாரண மக்களாகிய நாமெல்லாம் சகஜமாக கொரோனோவுடன் வாழப்பழகிவிட்டோம், வாழ்ந்து தான் ஆகணும் என்ற மனநிலைக்கும் வந்துவிட்டோம். ஆனால் சினிமா நட்சத்திரங்களுக்கு இன்னும் கொரோனா பீதி விலகாததால் பலர் ஷூட்டிங்கிற்கு கிளம்பவே நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
சில தயாரிப்பாளர்கள் கொரோனோவுக்கு முன்பே படத்தை எடுத்து முடித்துவிட்டு, இப்போது ரிலீசுக்கு ரெடியாக இருக்கிறார்கள். அந்த வரிசையில் கடந்த பிப்ரவரி மாதம் ஷூட்டிங்கை தொடங்கி, மார்ச் 20-ஆம் தேதிக்குள் மொத்த ஷூட்டிங் கும் முடிந்த படம்தான் வரலட்சுமி நடித்த "கலர்ஸ்'. படத்தின் தயாரிப்பாளரான துபாயைச் சேர்ந்த அஜி இடிகுலாவுக்கு தென்னிந்திய சினிமாவில் இதுதான் முதல் படமாம். அதே போல் படத்தின் டைரக்டர் நிஜாருக்கும் இதுதான் தமிழில் முதல் படம் என்றாலும் மலையாளத்தில் ஜெயராம், திலீப், சுரேஷ்கோபி ஆகியோரை வைத்து 25-க்கும் மேற்ப
லாக்டவுன் முழுவதுமாக ரத்தாகி, சாதாரண மக்களாகிய நாமெல்லாம் சகஜமாக கொரோனோவுடன் வாழப்பழகிவிட்டோம், வாழ்ந்து தான் ஆகணும் என்ற மனநிலைக்கும் வந்துவிட்டோம். ஆனால் சினிமா நட்சத்திரங்களுக்கு இன்னும் கொரோனா பீதி விலகாததால் பலர் ஷூட்டிங்கிற்கு கிளம்பவே நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
சில தயாரிப்பாளர்கள் கொரோனோவுக்கு முன்பே படத்தை எடுத்து முடித்துவிட்டு, இப்போது ரிலீசுக்கு ரெடியாக இருக்கிறார்கள். அந்த வரிசையில் கடந்த பிப்ரவரி மாதம் ஷூட்டிங்கை தொடங்கி, மார்ச் 20-ஆம் தேதிக்குள் மொத்த ஷூட்டிங் கும் முடிந்த படம்தான் வரலட்சுமி நடித்த "கலர்ஸ்'. படத்தின் தயாரிப்பாளரான துபாயைச் சேர்ந்த அஜி இடிகுலாவுக்கு தென்னிந்திய சினிமாவில் இதுதான் முதல் படமாம். அதே போல் படத்தின் டைரக்டர் நிஜாருக்கும் இதுதான் தமிழில் முதல் படம் என்றாலும் மலையாளத்தில் ஜெயராம், திலீப், சுரேஷ்கோபி ஆகியோரை வைத்து 25-க்கும் மேற்பட்ட படங்களை டைரக்ட் பண்ணியுள்ளாராம். படத்தின் டைட்டிலுக்கு ஏற்றாற் போல நம்ம ஊரு வரலட்சுமியுடன், மலையாள தேசத்தின் இனியா, திவ்யா பிள்ளை ஆகியோரும் கூட்டணி சேர்ந்துள்ளனர். படத்தில் ஹீரோவாக சரத்குமாரின் அண்ணன் சுந்தரேசனின் மகன் ராம்குமார் ஹீரோவாக அறிமுகமாகிறார். இவர்கள் போக மொட்டை ராஜேந்திரன், தேன்ன்ன்ன் அடை மதுமிதா என நம்ம ஊர் நட்சத்திரங்கள் இருந்தாலும் டெக்னீஷியன்கள் எல்லோருமே மல்லுவுட்டைச் சேர்ந்தவர்கள்.
"பெரிய டைரக்டர்களிடம் அடக்கிவாசிக்கும் வரலட்சுமி, சின்ன டைரக்டர்களை, அதிலும் அறிமுக டைரக்டர்களை கொஞ்சம் இம்சைப்படுத்துவார்'’என கோலிவுட்டில் ஒரு டாக் உண்டு. அப்படி எதுவும் இம்சை கொடுத்தாரா வரலட்சுமி? என ‘கலர்ஸ்’டைரக்டர் நிஜாரிடம் கேட்டோம். மலையாளம் கலந்த தமிழில் நம்மிடம் படத்தைப் பற்றியும் வரலட்சுமி பற்றியும் ஓப்பனாக பேசினார்.
""அய்யோ சாரே வரலட்சுமி மேடம் ரொம்ப ரொம்ப பாஸிட்டிவ் திங்கிங் உள்ளவர். நான் இந்தப் படக்கதையின் ஒன்லைனை கேரளாவில் இருந்து போனில் சொன்னேன். அவர் ஓ.கே. சொன்னவுடன் மறுவாரமே சென்னைக்குப் போய் முழுக்கதையையும் சொன்னதும் உடனே கால்ஷீட் கொடுத்தார். படம் முடியும் வரை அவர் கொடுத்த ஒத்துழைப்பை மறக்கவே முடியாது. படத்தில் மார்ஷல் ஆர்ட்ஸில் எக்ஸ்பெர்ட்டாக வருகிறார் வரலட்சுமி. அமெரிக்க ரிட்டர்னாக வருகிறார் இனியா. மலையாளத்தில் சிறந்த நடிகையான திவ்யா பிள்ளைக்கும் வெயிட்டான கேரக்டர் இருக்கு. ஃபேமிலி த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்தப் படம் தென்னிந்திய சினிமாவில் இதுவரை வெளிவராதது. மொத்தப் படத்தையும் 53 நாட்களில் முடித்த மறுநாள் தான் கொரோனா லாக்டவுன் வந்தது. இப்போது நிலைமை சீராகி போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கம்ப்ளீட்டாகி, சென்சாருக்கும் தயாராகிவிட்டது. நவம்பர் மாதம் தியேட் டர்கள் திறக்கப் படும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்'' என்றார்.
தமிழில் பேசுவது பெரும் பாக்கியம்’’
டைரக்டர் கௌதம் மேனன் 2011-ல் தயாரித்த "வெப்பம்' படம் மூலம் டைரக்டராக அறிமுகமானவர் அஞ்சனா அலிகான். ஒன்பது வருடங்கள் கழித்து இப்போது "வெற்றி' என்ற படத்தை டைரக்ட் பண்ணவுள்ளார். படத்தின் ஹீரோவாக பிக்பாஸ் புகழ் முகென்ராவ், ஹீரோயினாக அனுகீர்த்தி வாஸ் நடிக்கிறார்கள்.
தனது முந்தைய படமான "வெப்பம்' படம் பற்றியும் இப்போதைய "வெற்றி' பற்றியும் அஞ்சனா அலிகான் என்ன சொல்றாருன்னா, “""நானி, நித்யாமேனன் காம்பினேஷனில் உருவான "வெப்பம்' படம் இன்றளவும் பேசப்படுவது எனக்குப் பெருமையாக உள்ளது. அதேபோல் இப்போது டைரக்ட் பண்ணப் போகும் ஆக்ஷன் படமான "வெற்றி' எனக்கு கனவு நன வாகிய தருணம். படத்தின் திரைக்கதை எழுதியதென் பது மனதிற்கு மிகவும் நெருக்கமானது, உணர்வுப் பூர்வமானது. வாழ்வில் ஏற்படும் இடர்ப்பாடுகளைக் கடந்து, ஹீரோ எப்படி மனிதத் தோடு தனது லட்சியத்தை அடை கிறான் என்பதுதான் "வெற்றி'யின் கதை. ஆக்ஷன் காட்சிகளில் ஹீரோ முகென்ராவ் நன்றாக ஸ்கோர் பண்ணுவார் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்கடுத்து ஹீரோயின் அனுகீர்த்தி வாஸுக்கு படத்தில் சூப்பர் ஸ்கோப் இருக்கு. 2018-ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்ற இவர், கடின உழைப்பாளி. அனு வின் அழகும் திறமையும் கோலிவுட் ஏரியாவில் பாராட்டை அள்ளும். இதையெல்லாம்விட ரொம்ப முக்கியமான விஷயம் என்னன்னா அனுகீர்த்தி சரளமாக தமிழ் பேசக்கூடியவர். அதுவே எங்களுக்கு கிடைத்த பெரும் பாக்கியம் என நினைக்கிறேன்.
இந்தியாவின் தலை சிறந்த ஒளிப்பதிவாளரான ராண்டி என்ற ரத்னவேலு, எடிட்டர் ஆண்டனி போன்ற ஆளுமைகள் எனக்கு பக்கபலமாக இருப்பதால், தலைப்புக்கு ஏற்ற மாதிரி படத்தின் வெற்றியும் நிச்சயம்'' என நம்பிக்கையுடன் சொன்னார் அஞ்சனா அலிகான்.
ஒவ்வொரு திரைப் படமும் திரைக்கு (ஓ.டி.டி.க்கு) வரும்வரை மிகுந்த நம்பிக்கையுடன்தான் எடுக்கப்படுகிறது.
-ஈ.பா.பரமேஷ்வரன்