டைரக்டர் ஷங்கரின் கதைத் திருட்டு! மூக்குடைத்த உச்சநீதிமன்றம்!

ee

மிழ்த் திரையுலகில் மட்டுமின்றி பாலிவுட்வரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இயக்குநர் ஷங்கரின் "எந்திரன்' கதைத் திருட்டு’விவகாரம்.

நக்கீரன் இதழின் முதன்மைத் துணை ஆசிரியரும் எழுத்தாளருமான ஆரூர் தமிழ்நாடன் 24 ஆண்டுகளுக்கு முன், 1996-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நக்கீரன் குழுமத்தின் "இனிய உதயம்' இதழில் எழுதிய "ஜூகிபா' என்ற கதையை எழுதியிருந்தார்.

e

ரோபாட்டுக்கு மனித உணர்வுகளை உண்டாக்கினால், அது மனிதர்களிடையே என்ன மாதிரியான உணர்வுச் சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதுதான் "ஜூகிபா' கதையின் கரு. அதே கதை, 2007-ல் "திக் திக் தீபிகா' என்ற ஆரூர் தமிழ்நாடனின் தொகுப்பு நூலிலும் பிரசுரமானது.

1996-ல் வெளியான "ஜூகிபா' கதையைப் போலவே, ரோபோவின் உருவாக்கத்தில் தொடங்கி, ரோபோ காதல் கொள்வதில் வளர்ந்து, ரோபாவின் டிஸ்மேண்டில் என்கிற தற்கொலையில் முடிகிறது 2010-ல் வெளியான இயக்குநர் ஷங்கரின் "எந்திரன்'. ரோபோவின் காதல், அதனால் விஞ்ஞானியுடன் ஏற்படும் மோதல், கடைசியில் தற்கொலை (டிஸ்மேண்டில்) என அத்தனையும் "ஜூகிபா'வுடன் ஒத்துப்போனது.

ee

"எந்திரன்' படத்தைப் பார்த்து அதிர்ந்த தமிழ்நாடன், "எந்திரன்' கதையும் தனது "ஜூகிபா' கதையும் ஒன்றாக இருப்பதை "இனிய உதய'த்தின் பதிப்பாளரும் ஆசிரியருமான நக்கீரன்கோபாலிடம் தெரிவித்தார். கதைக்கான காப்புரிமைப் பலன்கள் எழுத்தாளருக்குரியவை என்பதால், படத்தின் இயக்குநர் ஷங்கருக்கும் தயாரிப்பாளருக்கும் நோட்டீஸ் அனுப்பினார் தமிழ்நாடன். அவர்களிடமிருந்து எந்தவித பதிலும் வராததால், "ரோபாட் பற்றிய தனது "ஜூகிபா' கதையைத் திருடி, மோசடி செய்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். கதையைப் படித்த காவல்துறை அதிகாரிகளும் ஒற்றுமையை உணர்ந்து ஆச்சரியமடைந்தனர்.

தயாரிப்பாளர் தரப்பின் செல்வாக்கினால், அவர் பெயரை புகாரிலிருந்து நீக்க, காவல்துறை வலியுறுத்தியதை எழுத்தாளர் ஏற்கவில்லை. புகார் பதிவாகாததால், எழும்பூர் நீதிமன்றத்தில் தமிழ்நாடன் தனிப்பட்ட முறையில் கிரிமினல் வழக்கைத் தொடர்ந்தார். மேலும், "இயக்குநரும் தயாரிப்பாளரும் தனக்கு நஷ்டஈடாக ஒருகோடி ரூபாய் தரவேண்டும்' என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கையும் தொடர்ந்தார். சக்தி படைத்த செல்வாக்

மிழ்த் திரையுலகில் மட்டுமின்றி பாலிவுட்வரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இயக்குநர் ஷங்கரின் "எந்திரன்' கதைத் திருட்டு’விவகாரம்.

நக்கீரன் இதழின் முதன்மைத் துணை ஆசிரியரும் எழுத்தாளருமான ஆரூர் தமிழ்நாடன் 24 ஆண்டுகளுக்கு முன், 1996-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நக்கீரன் குழுமத்தின் "இனிய உதயம்' இதழில் எழுதிய "ஜூகிபா' என்ற கதையை எழுதியிருந்தார்.

e

ரோபாட்டுக்கு மனித உணர்வுகளை உண்டாக்கினால், அது மனிதர்களிடையே என்ன மாதிரியான உணர்வுச் சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதுதான் "ஜூகிபா' கதையின் கரு. அதே கதை, 2007-ல் "திக் திக் தீபிகா' என்ற ஆரூர் தமிழ்நாடனின் தொகுப்பு நூலிலும் பிரசுரமானது.

1996-ல் வெளியான "ஜூகிபா' கதையைப் போலவே, ரோபோவின் உருவாக்கத்தில் தொடங்கி, ரோபோ காதல் கொள்வதில் வளர்ந்து, ரோபாவின் டிஸ்மேண்டில் என்கிற தற்கொலையில் முடிகிறது 2010-ல் வெளியான இயக்குநர் ஷங்கரின் "எந்திரன்'. ரோபோவின் காதல், அதனால் விஞ்ஞானியுடன் ஏற்படும் மோதல், கடைசியில் தற்கொலை (டிஸ்மேண்டில்) என அத்தனையும் "ஜூகிபா'வுடன் ஒத்துப்போனது.

ee

"எந்திரன்' படத்தைப் பார்த்து அதிர்ந்த தமிழ்நாடன், "எந்திரன்' கதையும் தனது "ஜூகிபா' கதையும் ஒன்றாக இருப்பதை "இனிய உதய'த்தின் பதிப்பாளரும் ஆசிரியருமான நக்கீரன்கோபாலிடம் தெரிவித்தார். கதைக்கான காப்புரிமைப் பலன்கள் எழுத்தாளருக்குரியவை என்பதால், படத்தின் இயக்குநர் ஷங்கருக்கும் தயாரிப்பாளருக்கும் நோட்டீஸ் அனுப்பினார் தமிழ்நாடன். அவர்களிடமிருந்து எந்தவித பதிலும் வராததால், "ரோபாட் பற்றிய தனது "ஜூகிபா' கதையைத் திருடி, மோசடி செய்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். கதையைப் படித்த காவல்துறை அதிகாரிகளும் ஒற்றுமையை உணர்ந்து ஆச்சரியமடைந்தனர்.

தயாரிப்பாளர் தரப்பின் செல்வாக்கினால், அவர் பெயரை புகாரிலிருந்து நீக்க, காவல்துறை வலியுறுத்தியதை எழுத்தாளர் ஏற்கவில்லை. புகார் பதிவாகாததால், எழும்பூர் நீதிமன்றத்தில் தமிழ்நாடன் தனிப்பட்ட முறையில் கிரிமினல் வழக்கைத் தொடர்ந்தார். மேலும், "இயக்குநரும் தயாரிப்பாளரும் தனக்கு நஷ்டஈடாக ஒருகோடி ரூபாய் தரவேண்டும்' என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கையும் தொடர்ந்தார். சக்தி படைத்த செல்வாக்கான திரைப்புள்ளிகளுக்கு எதிரான சட்டப் போரை, தனக்கு கொடுக்கப்பட்ட மன உளைச்சல்களுக்கு இடையிலும் எழுத்தாளர் மேற்கொண்டார்.

இயக்குநர் ஷங்கரும் தயாரிப்பாளரும் நீதிமன்றத்தில் ஒருமுறை கூட ஆஜராகாமல், இழுத்தடித்து வந்தனர். வழக்கை eஅலட்சியப்படுத்தியதால், 2016 செப்டம்பரில், தயாரிப்பாளர் தரப்புக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதத்தை விதித்தது உயர் நீதிமன்றம். அதேபோல், இயக்குநர் ஷங்கருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் இதே காரணத்துக்காக 2018 செப்டம்பரில் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது. சாட்சிகள் விசாரணையில், "ஜூகிபா' கதையின் தாக்கத்தில் உருவாக்கப்பட்ட படம்தான் "எந்திரன்' என்று நீதிமன்றத்தில் பலரும் வாக்குமூலமும் கொடுத்தனர். குறுக்கு விசாரணையிலும் எழுத்தாளர் தமிழ்நாடன் அதனை நிறுவினார்.

இதற்கிடையே தங்கள் மீது தமிழ்நாடன் எழும்பூர் நீதிமன்றத்தில் காப்புரிமை சட்டப்படி தொடுத்திருந்த கிரிமினல் வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இயக்குநர் ஷங்கரும் தயாரிப்பாளரும் 2010-ல் தாக்கல் செய்து நிலுவையில் இருந்த இரண்டு வழக்குகளும் நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு கடந்த ஆண்டு நீதிபதி திரு.புகழேந்தி முன்பு இறுதி விசாரணைக்கு வந்தது. இயக்குநர் ஷங்கர் வழக்கில் தமிழ்நாடன் சார்பில் முன்னாள் அரசு வழக்கறிஞரும் மூத்த வழக்கறிஞருமான குமரேசன், இளங்கோவன், சிவகுமார் ஆகியோரும் தயாரிப்பாளர் வழக்கில் தமிழ்நாடன் சார்பில் வழக்கறிஞர்கள் பி.டி.பெருமாள், சதீஷ்குமாரும் ஆஜராகி வாதாடினர். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட உயர் நீதிமன்ற நீதிபதி திரு.புகழேந்தி கடந்த 6-6-2019 அன்று தனது தீர்ப்பை வழங்கினார்.

அந்த தீர்ப்பில் நீதிபதி, தயாரிப்பாளர் மீது தொடுக்கப் பட்ட வழக்கை மட்டும் ரத்து செய்தார். அதேநேரத்தில், "படத்தின் பெரும்பாலான காட்சிகள் தமிழ்நாடனின் "ஜூகிபா' கதையை ஒத்து இருக்கின்றன'’என்று அழுத்தமாகக் குறிப்பிட்டார். இதுகுறித்து தமிழ்நாடன் தரப்பு தாக்கல் செய்திருந்த 29 ஒப்பீட்டு பாயிண்டுகளில் இருந்து 16 பாயிண்டுகள் வெகுவாக ஒத்துப் போவதாகத் தன் தீர்ப்பில் சுட்டிக் காட்டியிருந்தார் நீதிபதி.

1. நான்கு வருடகால நீண்ட உழைப்பில் விஞ்ஞானி ரோபோவை உருவாக்கியதாக "ஜூபிகா' கதையில் சொல்லப்பட்டிருக்கிறது. எந்திரன் படத்திலும் 10 வருட கால நீண்ட உழைப்பில் ரோபோ சிட்டியை விஞ்ஞானி வசீகரன் உருவாக்கியதாகக் காட்டப்பட்டிருக்கிறது. உழைப்பின் நீளம் இங்கு பொது அம்சம்.

2. ரோபோவை உருவாக்க, விஞ்ஞானி, தன் காதல் பொழுதுகளையும் ஒத்திவைத்துவிட்டு உழைத்தான் என்கிறது "ஜூபிகா' கதை. "எந்திரன்' படத்திலும், காதலியின் தொலைபேசி அழைப்பையும் மறுதலித்துவிட்டு, தன் காதலுக்கு விஞ்ஞானி இடைவெளி கொடுத்தான் என்று காட்டப்பட்டிருக்கிறது.

ee

3. மனித வரலாற்றின் உச்சபட்ச சாதனையாக ரோபாட்டை விஞ்ஞானி உருவாக்கினான் என்கிறது ஜூகிபா. அதேபோல் மனிதனின் உச்சபட்ச சாதனையாக சிட்டி ரோபோ உருவாக்கப்பட்டதாகக் காட்டுகிறது "எந்திரன்'.

4. ரோபோவை முழுமையாக உருவாக்கும் வரை ஷேவ்கூட செய்துகொள்ளாமல், அதிலேயே கவனமாக விஞ்ஞானி ராபின் இருந்தான் என்று உணர்த்துகிறது "ஜூகிபா' கதை. அதேபோல், விஞ்ஞானி, சிட்டி ரோபோவை உருவாக்கும்வரை ஷேவ்கூட செய்துகொள்ளாமல் இருந்தான் என்று காட்டப்பட்டிருக்கிறது எந்திரனில்.

5. ரோபோ எந்திரன் தன் நியான் விழிகளை உருட்டி, கண்களால் பார்க்கும் எல்லாவற்றையும் தனக்குள் முழுதாய் சேகரித்துக்கொள்ளும் என்று "ஜூகிபா' கதையில் சொல்லப்பட்டிருக் கிறது. "எந்திரன்' படத்திலும் ரோபோவான சிட்டி தன் நியான் விழிகளை உருட்டி, பார்ப்பதை எல்லாம் முழுதாகத் தனக்குள் பதிவு செய்துகொள்கிறது என்று காட்டப் பட்டிருக்கிறது, உதாரணமாக, டெலிபோன் டைரி உள்ளிட்டவைகளை தனக்குள் அது கிரஹித்துக்கொள்வதைக் காட்டுகிறது.

6. கேட்கும் கேள்விகளுக்கு மெட்டாலிக் வாய்சில் ரோபோ பதில் சொல்கிறது என்று "ஜூகிபா' கதையில் வருகிறது. "எந்திரன்' படத்திலும் ரோபோ மெட்டாலிக் வாய்சில் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதாகக் காட்டப்பட்டிருக்கிறது.

7. "ஜூகிபா' கதையில் ரோபோவின் உடல் ஸ்பெஷல் பைபர் மூலம் மனிதனைப்போல் உருவாக்கப்பட்டி ருக்கிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது. எந்திரன் படத்திலும் ரோபோவின் உடல் ஸ்பெஷல் பொருளால் மனிதனைப் போல் உருவாக்கப்பட்டதாகக் காட்டப்பட்டிருக்கிறது.

8. "ஜூகிபா' கதையில், விஞ்ஞானி தான் உருவாக்கிய ரோபாட்டை, உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்கள், விஞ்ஞான கேந்திரங்கள், பல்கலைக் கழகங்கள் போன்றவற்றின் முன் நிறுத்தி அதன் ஆற்றலை மெய்ப்பிக்க நினைக்கிறான். "எந்திரன்' படத்திலும், கான்ஃபரன்சில் ரோபாட்டை நிறுத்தி அதன் திறமையை விஞ்ஞானி நிரூபிப்ப தாகக் காட்டப்பட்டிருக்கிறது.

9. விஞ்ஞானி, தனது ரோபாட்டுக்கு ஆதாம் காலத்தில் இருந்து இன்றைய நொடி வரையிலான உலகின் அத்தனை விசயங்களையும் புகட்டியிருப்பதாகச் சொல்கிறது "ஜூகிபா'. "எந்திரன்' படத்திலும் ரோபோவும் கணிதம், நடனம் இசை, தொடங்கி மருத்துவம் வரை அனைத்து கலைகளையும் வித்தைகளையும் கற்றுவைத்திருப்பதாகக் காட்டப்பட்டிருக்கிறது.

ee

10. "ஜூகிபா' கதையில் வரும் ரோபோ, தனது உலோகக் கைகளை கண்ட திசையிலும் கண்டபடி சுழற்றும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. "எந்திரன்' படத்திலும் ரோபா தனது உலோகக் கைகளை கண்டதிசையிலும் கண்டபடி சுழற்றுவதாகக் காட்டப்பட்டிருக்கிறது.

11. "ஜூகிபா'வில் வரும் ரோபோ, சூழ் நிலைக்கு ஏற்ப முடிவெடுத்து இயங்கும் திறன் கொண்டதாக சித்தரிக்கப் பட்டிருக்கிறது. "எந்திரன்' படத்திலும் சூழ்நிலைக்குத் தக்க படி முடிவெடுத்து இயக்கும் திறன்கொண்ட தாக ரோபாவான சிட்டி காட்டப்பட்டிருக் கிறது,. உதா ரணத்துக்கு தீ விபத்திலிருந்து மக்களைக் காப்பாற்றுவது, கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவம் பார்ப்பது என்று.

12. "ஜூகிபா'வில் வரும் ரோபோ, காதலுக் குரியவளை அடையமுடியாத வருத்தத்தில் தற்கொலை முடிவை எடுத்துத் தற்கொலை செய்து கொள்கிறது. "எந்திரன்' படத்தில் வரும் ரோபோவும் காதல் விரக்தியில் தற்கொலை முடிவை எடுக்கிறது என்றும், அதற்கான முயற்சியில் இறங்குகிறது என்றும் காட்டப் பட்டிருக்கிறது.

13. "ஜூகிபா'வில் வரும் ரோபோ, கை குலுக்குவதில் காதலின் மெல்லுணர்வை அடைவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. எந்திரன் படத்தில் வரும் ரோபோ, முத்தத்தின் மூலம் காதலின் மெல்லுணர்வை அடைவதாகக் காட்டப்பட்டி ருக்கிறது.

14. "ஜூகிபா'வில் வரும் ரோபோ, தைரியமாக விஞ்ஞானியின் காதலியைக் காதலிப்பதாக அவனிடமே கூறுகிறது என்று அந்தக் கதையில் சொல் லப்பட்டிருக்கிறது. "எந்திரன்' படத்திலும், ரோபோ சிட்டி, தன்னைப் படைத்த விஞ்ஞானியின் காதலியைத் தான் காதலிப்பதாக தைரியமாகச் சொல்கிறது என்று காட்டப் பட்டிருக்கிறது.

15. "ஜூகிபா' வில் வரும் ரோபோவும் காதலி இல்லை என்றால் தன்னால் வாழ முடியாது என்று சொல்கிறது. எந்திரனில் வரும் ரோபோவும் காதலி இல்லாமல் தனக்கு வாழ்க்கை இல்லை என்று சொல்வதாகக் காட்டப்பட்டிருக்கிறது.

16. "ஜூகிபா'வில் வரும் ரோபோ, கதையின் கடைசியில் மாடியில் இருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்துகொண்டு, தன் முடிவைத் தேடிக்கொள்கிறது. எந்திரனிலும் ரோபோ, கடைசியில் நீதிமன்றத்தால், டிஸ்மேண்டில் மூலம் முடிவை எய்துகிறது.

ee

-இப்படி 16 ஒப்பீடுகளைச் சுட்டிக்காட்டி, அவற்றை அலசி ஆராய்ந்திருக்கும் நீதிபதி, "இயக்குநர் ஷங்கர் மீதான கதைத் திருட்டு வழக்கை நடத்த முகாந்திரம் இருக்கிறது' என்று அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும், "சிவில் வழக்கு விசாரணையில் இருக்கும் போது கிரிமினல் வழக்கை நடத்துவது தவறல்ல. இரண்டையும் ஒரே நேரத்தில் நடத்தலாம்'’என்றும் தெரிவித்திருந்தார் நீதிபதி.

மேலும் தனது தீர்ப்பில் அவர், "ஒரு படைப்பாளியின் உண்மையான திறமைக்கும் உழைப்புக்குமான ஊதியம், அவருக்குக் கிடைத்தாக வேண்டும் என்பதற்காகத்தான் காப்பிரைட் சட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதை நீதிமன்றம் கருத்தில் கொண்டிருக்கிறது'’என்றும் அக்கறை யோடு குறிப்பிட்டிருக்கிறார்.

இதன்பிறகும் இயக்குநர் ஷங்கரோ, எதிர் பாராதவிதமாக, கொரோனா நேர நெருக்கடிகளுக்கு நடுவிலும் உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை ரத்து செய்யவேண்டும் என்று, உச்சநீதிமன்றத்தின் கதவைத் தட்டினார்.

அவருக்காக சீனியர் வழக்கறிஞர் பி.வில்சன், வழக்கறிஞர்கள் ஆர்.நெடுமாறன், ரிச்சர்டு வில்சன் ஆகியோர் ஆஜரானார்கள். எழுத்தாளர் தமிழ்நாடன் சார்பில் சீனியர் வழக்கறிஞர் ஆர்.பாலசுப்பிரமணியம், வழக்கறிஞர்கள் பி.டி.பெருமாள், கே.இளங்கோவன், எல்.சிவகுமார், ராம்.சங்கர், அமித் அரோரா, மொஹமது ஆசிப் அலி, ஜி.சித்ரகலா, சுஜாதா பஹதி, ரிஷா பாண்டே யூசுப் ஆகியோர் ஆஜரானார்கள்.

இந்த வழக்கு நீதியரசர்களான ரொஹிண் டன் பாலி நாரிமன், நவீன் சின்ஹா, கே.எம். ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் கடந்த 12-ந் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கைக் கையில் எடுத்த உச்சநீதிமன்ற அமர்வோ, எடுத்த எடுப்பி லேயே வழக்கின் போக்கைப் புரிந்து கொண்டு, “"உயர்நீதிமன்றம் இந்த வழக்கு தொடர் பாகக் கொடுத்த தீர்ப்பிலும் விசாரணையிலும் உச்சநீதி மன்றம் தலையிட விரும்பவில்லை' என்று தெரிவித்து, மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது. உச்ச நீதிமன்றத்திலும் மூக்குடைபட்டிருக்கிறார் ஷங்கர்.

நீதிக்கான போராட்டத்தை உறுதியுடன் தொடர்கிறார் எழுத்தாளர் தமிழ்நாடன்.

-நமது நிருபர்

nkn171020
இதையும் படியுங்கள்
Subscribe