""ஹலோ தலைவரே, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும், அந்தக் கட்சியின் சீனியர் மோஸ்ட் தலைவரான சோனியா காந்தியையும் கமல் சந்திச்சிருக்காரே?''
""இவர்களை சந்திக்கத்தான் அவர் டெல்லிக்குப் போனாரா?''
""இல்லைங்க தலைவரே, கமல் தன்னோட’மக்கள் நீதி மய்யத்தை’ இந்தியத் தேர்தல் ஆணையத்தில் பதிவு பண்ண, ஏற்கெனவே விண்ணப்பிச்சிருந்தார். அவர் அனுப்பிய ஆவணங்களைப் பரிசீலிச்ச தேர்தல் ஆணையம், அந்தக் கட்சியின் சட்ட திட்டங் களை வரையறுப்பதில், சில குளறுபடிகள் இருப்பதைப் பார்த்துட்டு, அதுக்கு நேரில் விளக்கம் கொடுங்கன்னு கமலைக் கூப்பிட்டது. அதுக்காகத்தான் கமல், 20-ந் தேதி டெல்லிக்குப் போய் தன் தரப்பு விளக்கங்களை சமர்ப்பிச்சார். கமல் டெல்லிக்கு வந்திருக்கும் தகவல் ராகுல் காந்தியின் கவனத்துக்குப் போச்சு. உடனே அவர், காங்கிரஸின் தமிழக மேலிடப் பார்வை யாளரான முகுல் வாஸ்னிக்கைத் தொடர்பு கொண்டு, "நான் கமலை சந்திக்க விரும்பறேன். அவருக்கு விருப்பமான்னு கேட்டுச் சொல் லுங்க'ன்னு கேட்டிருக்கார்.''’
""ஓகோ, ராகுலின் விருப்பத்தின் பேரில்தான் இந்த சந்திப்பே நடந்திருக்கா?''’
""ஆமாங்க தலைவரே, உடனே முகுல் வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவரான திருநாவுக்கரசரைத் தொடர்புகொண்டு, ராகுலின் விருப்பத்தைச் சொன்னார். இதைக் கேட்டதும் உற்சாகமான திருநாவுக்கரசர், இது குறித்துக் கமலிடம் பேச, கமலும், ராகுலைச் சந்திக்கிற வாய்ப்புன்னா எனக்கும் சந்தோசம்தான்னு சொல்லியிருக்கார். இதன்படிதான், கமல், ராகுல் சந்திப்பு டெல்லியில் ந
""ஹலோ தலைவரே, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும், அந்தக் கட்சியின் சீனியர் மோஸ்ட் தலைவரான சோனியா காந்தியையும் கமல் சந்திச்சிருக்காரே?''
""இவர்களை சந்திக்கத்தான் அவர் டெல்லிக்குப் போனாரா?''
""இல்லைங்க தலைவரே, கமல் தன்னோட’மக்கள் நீதி மய்யத்தை’ இந்தியத் தேர்தல் ஆணையத்தில் பதிவு பண்ண, ஏற்கெனவே விண்ணப்பிச்சிருந்தார். அவர் அனுப்பிய ஆவணங்களைப் பரிசீலிச்ச தேர்தல் ஆணையம், அந்தக் கட்சியின் சட்ட திட்டங் களை வரையறுப்பதில், சில குளறுபடிகள் இருப்பதைப் பார்த்துட்டு, அதுக்கு நேரில் விளக்கம் கொடுங்கன்னு கமலைக் கூப்பிட்டது. அதுக்காகத்தான் கமல், 20-ந் தேதி டெல்லிக்குப் போய் தன் தரப்பு விளக்கங்களை சமர்ப்பிச்சார். கமல் டெல்லிக்கு வந்திருக்கும் தகவல் ராகுல் காந்தியின் கவனத்துக்குப் போச்சு. உடனே அவர், காங்கிரஸின் தமிழக மேலிடப் பார்வை யாளரான முகுல் வாஸ்னிக்கைத் தொடர்பு கொண்டு, "நான் கமலை சந்திக்க விரும்பறேன். அவருக்கு விருப்பமான்னு கேட்டுச் சொல் லுங்க'ன்னு கேட்டிருக்கார்.''’
""ஓகோ, ராகுலின் விருப்பத்தின் பேரில்தான் இந்த சந்திப்பே நடந்திருக்கா?''’
""ஆமாங்க தலைவரே, உடனே முகுல் வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவரான திருநாவுக்கரசரைத் தொடர்புகொண்டு, ராகுலின் விருப்பத்தைச் சொன்னார். இதைக் கேட்டதும் உற்சாகமான திருநாவுக்கரசர், இது குறித்துக் கமலிடம் பேச, கமலும், ராகுலைச் சந்திக்கிற வாய்ப்புன்னா எனக்கும் சந்தோசம்தான்னு சொல்லியிருக்கார். இதன்படிதான், கமல், ராகுல் சந்திப்பு டெல்லியில் நடந்துச்சு.''’
""சந்திப்பில் என்ன பேசிக்கிட்டாங்க?''’
""வழக்கமான நலன் விசாரிப்புக்குப் பிறகு, தமிழக அரசியல்ல வெற்றிடம் இருப்பதுபற்றி பேசியிருக்காங்க. எங்களுடன் தேர்தல் கூட்டணி வைத்துக்கொள்ளும் யோசனை இருக்கான்னு ராகுல் கமலிடம் நேரிடையாவே கேட்க, அதுக்கு கமல், நாங்க தேர்தல்ல தனிச்சி நின்னு, எங்க பலம் என்னன்னு தெரிஞ்சிக்க விரும்பறோம். இருந்தாலும் தேர்தல் நெருக்கத்தில் கூட்டணி பற்றி முடிவெடுப்போம்ன்னு நம்பிக்கையோடு சொல்லி யிருக்காரு. பேச்சுவாக்கில் கமல் சோனியாவின் உடல்நலன் பற்றி விசாரிக்க, நாளைக்கு நீங்க டெல்லியில் இருக்கமுடியும்ன்னா, அவங் களை நீங்க சந்திக்கலாமேன்னு ராகுல் சொல்லியிருக்கார். கமலும் தலையாட்ட, 21-ந் தேதி சோனியாவையும் கமல் சந்திச்சார். தமிழக அரசியல் நிலவரங்கள் பத்தி சோனியாவும் கமலோட விவாதிச்சிருக் கார்.''’
""ராகுல், இத்தனை ஆர்வமா கமலை சந்திக்க வேண்டிய அவசியம் என்னவாம்?''’
""தமிழகத்தில் தங்கள் கூட்டணிக் கட்சியான தி.மு.க.விடம் சீட் விவ காரத்தில் காங்கிரஸ் டிமாண்ட் வச்சா, இதையே சாக்காக்கி தங்களை கழற்றிவிட லாம்ன்னு காங்கிரஸ் கணக் குப் போடுது. அப்படி ஒரு நிலைமை வந்தால், அதை சமாளிக்கும் வகையில், சூழலை ஏற்படுத்திக்க ணும்னு காங்கிரஸ் நினைக்கிது. அதனால்தான் அண்மையில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவின் சந்திப்புக்கு ராகுல் இசைந்தார். இப்ப அதே எண்ணத் தில்தான் கமலுக்கும் ரூட் போடப்பட்டிருக்கு. பா.ஜ.க., ரஜினியை டார்கெட்டா வச்சி, அவரைத் தங்களை விட்டு வெகு தூரத்துக்குப் போகமுடியாதபடி, வச்சிருப்பதுபோல், தி.மு.க. இல்லைன்னா திருமாவையும் கமலையும் காங்கிரஸ் கையிலெடுக்க நினைக்கிது. அதுக்குக் கமல் இசைவாராங்கிறது போகப் போகத்தான் தெரியும்.''’
""ஆமாம்பா. டெல்லி காங்கிரஸ் தலைமை இவ்வளவு கவனம் செலுத்துற நிலையில் சத்தியமூர்த்தி பவனில் நடந்த ராகுல், கக்கன் பிறந்தநாள் விழாக்களிலேயே கூட லோக்கல் கட்சி நிர்வாகிகள் அதிகம் தலைகாட்டலையே.''’
""மாநில நிர்வாகிகளை நியமிக்காததால் நிர்வாகச் சிக்கலை சரிசெய்ய முடியலைன்னு திருநாவுக்கரசர், கட்சியின், டெல்லித் தலைமை யிடம் முறையிட்டார். அதனால் அதற்கான பட்டியலோட வாங்கன்னு ராகுல் அவரை அழைச்சிருந்தார். இந்த நிலையில் கோஷ்டிப் பிரமுகர்கள் பலரும், எங்களை எல்லாம் புறக்கணிச்சிட்டு, தன்னிச்சையா திருநாவுக்கரசர் மாநில நிர்வாகிகள் பட்டியல் தயாரிச்சிருக் கார்ன்னு ராகுலுக்குப் புகார்களை அனுப்பி வச்சிட்டு புலம்பறாங்க. திருநாவுக்கரசர் தரப்போ, எல்லாத் தரப்பிலிருந்தும்தான் பட்டியல் தொகுக்கப்பட்டிருக்குன்னு பதில் சொல்லிக்கிட்டு இருக்குது. உள்கட்சி யுத்தம் ஓயலை.''’
""தினகரனின் அ.ம.மு.க.விலும் உட்கட்சி யுத்தம் தீவிரமாகி வருதே?''’
""உண்மைதாங்க தலைவரே, தினகரன் தரப்பின் 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் தொடர்பான ’இப்படியும் அப்படியுமான’ தீர்ப்பு வந்ததும், பல தரப்பிலும் ஊசலாட்டம். அவங் களைத் தங்கள் பக்கம் இழுக்க, அண்டர்கிரவுண்ட் வேலைகளை ஆரம்பிச்சிருக்கு எடப்பாடி தரப்பு. இந்த நேரத்தில் எங்க தரப்பிலிருந்து ஒரு எம்.எல்.ஏ.வையாவது உங்களால் இழுக்க முடியுமான்னு தினகரன் டீமிலிருக்கும் அ.ம. மு.க.வின் தென் மண்டலப் பொறுப்பாளரான தங்க தமிழ்ச்செல்வன், பகிரங்கமா சவால் விட்டிருக்கார். ஆனால் அவரே, சீக்ரெட்டா அந்த 18 பேர்களில், தன் மண்டலத்தைச் சேர்ந்த நிலக்கோட்டை தங்கதுரை, சாத்தூர் எஸ்.ஜி.சுப்பிரமணியன், ஒட்டப் பிடாரம் சுந்தர்ராஜன், , மானாமதுரை மாரியப்பன் கென்னடி, பெரியகுளம் கதிர் காமு, விளாத்திகுளம் உமா மகேஸ்வரி ஆகியோரிடம், திவாகரனின் வழிகாட்டுதலின்படி, எடப்பாடிக்காக டீலிங் பேசிக்கிட்டு இருக்காராம். இவர்களில் உமாமகேஸ்வரி, தங்க தமிழ்ச்செல்வனிடமும் இன்னொரு புறம் எடப்பாடி தரப்பிடம் நேரடியாகவும் பேசிக்கிட்டு இருக்கார்ன்னு விறுவிறு தகவல்கள் வருது.''’
""தங்க.தமிழ்ச்செல்வன் உள்பட தினகரன் டீமின் 7 பேரை தங்கள் பக்கம் இழுத்து, ஆட்சியை ஸ்ட்ராங் பண்ணப் பார்க்கறாரா எடப்பாடி?''’
""ஆமாங்க தலைவரே, இதுக்கிடையில் ஈரோடு தி.மு.க. மா.செ.வான முத்துசாமியின் மனைவி இறந்த துக்கத்துக்கும், அண்மையில் ஓ.பி.எஸ்.சோடு நேர்ல போய் துக்கம் விசாரிச்சார் எடப்பாடி. அதே பாணியில் சபாநாயகர் தனபாலும் சமீபத்தில் துக்கம் விசாரிக்கப் போனார். முன்பு, இருவரும் ஒரே கட்சியில் ஏற்கெனவே இருந்தவங்க என்கிற முறையில், மனம்விட்டு ரெண்டுபேரும் பேசிக்கிட்டு இருந்தாங்க. அப்ப தனபால் முத்துசாமியிடம், நீங்க மட்டும் தி.மு.க.வுக்குப் போகாமல் அ.தி.மு.க.வி லேயே இருந்திருந்தால் நீங்கதான் சி.எம்.மா. இருந்திருப்பீங்க. இ.பி.எஸ்.அணி, ஓ.பி.எஸ். அணின்னு எந்த அணியும் இருந்திருக்காது. இப்ப அ.தி.மு.க.வில் ஆளாளுக்கு அதிகாரம் பண்றாங்க. செங்கோட்டையனே அமைதியாயிட்டார். வண்டி ஓடுற வரைக்கும் நாம ஓட்ட வேண்டியதுதான். இப்ப டெல்லி புண்ணியத்துல ஆட்சி நடக்குது. அடுத்த தேர்தல்ல அ.தி.மு.க. கரை யேறும்ங்கிற நம்பிக்கையெல்லாம் எனக்கில்லைன்னு சொல்லியிருக்காராம்.''’
""ஓடுற வண்டி மூலமா ஒருவழியா எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரை- தோப்பூரில் அமைப்பதற் கான வேலைகள் தொடங்கிடுச்சே?''’
""ஆமாங்க தலை வரே, எப்பவோ அமைய வேண்டிய எய்ம்ஸ் மருத்துவமனை, மத்திய மாநில அரசுகள் ரெண் டும் சேர்ந்து இழுத் தடிச்சி மதுரை தோப்பூரில் 1500 கோடி ரூபாயில் 200 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பதற்கான பூர்வாங்க வேலைகள் தொடங்கியிருக்கு. சகல நவீன வசதிகளும் கொண்ட டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையைப் போலவே அச்சு அசலாக இதை இங்கே உருவாக்கு வாங்களாங்கிற சந்தேகம் இருக்குது. நவீன மருத்துவமனையா மதுரை எய்ம்ஸ் அமையணும். இல்லைன்னா இதை லட்டு கொடுத்து கொண்டாடியது, மக்களுக்கு கொடுக்கப்பட்ட அல்வான்னு ஆயிடும்.''’
""இந்த எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செங்கல் பட்டு, தஞ்சாவூர், புதுக்கோட்டை, தஞ்சை செங்கிப்பட்டி, ஈரோடு, பெருந்துறைன்னு பல ஊர்கள்லயும் பரிசீலிச்சாங்க. தோப்பூருக்கு எய்ம்ஸ் போனதில் மற்ற ஏரியாவைவிட கொங்கு மண்டல அ.தி.மு.க. பிரமுகர்கள் அப்செட் ஆயிட்டாங்க. தங்கள் கொங்கு பகுதியைச் சேர்ந்தவர்களே முதல்வராகவும் பவர்ஃபுல் அமைச்சர்களாகவும் இருந்தும் கூட, பெருந்துறையில் எய்ம்ஸ் அமையாதபடி கோட்டையில் இருந்தும்கூட கோட்டை விட்டுட்டாங்களேன்னு வருத்தப்படறாங்க.''