சேலத்தையே பரபரப்பாக்கி இருக்கிறது தில்லாலங்கடி லேடியான காயத்ரி விவகாரம். யார் இவர்?

சேலம் பச்சைப்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மனைவிதான் காயத்ரி. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேலம் மாநகர துணைச் செயலாளர் பதவியில் இருக்கிறார். இவர் மீது, தொளசம்பட்டியைச் சேர்ந்த மஞ்சுளா என்பவர், சேலம் மத்திய குற்றப்பிரிவில் ஒரு புகார் அளித்தார். அதில், 'சமூகநலத்துறையில் உயரதிகாரியாக உள்ளதாகவும், அத்துறையில் வேலை வாங்கிக் கொடுப்பதாகவும் சொல்லி காயத்ரி 24 லட்சம் ரூபாய் வசூலித்து என்னை மோசடி செய்துவிட்டார்' என்று தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து சேலம் மாநகர குற்றப்பிரிவு காவல்துறை யினர், காயத்ரிக்கு வலை விரித்தனர். அதில் அவர் கூட்டாளிகளான லெனின், இளமாறன், சாவித்திரி ஆகியோர் சிக்க, அவர்களை கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்தனர். காயத்ரி மட்டும் அப்போது 'எஸ்கேப்' ஆகிவிட்டார். அவர் மீது மேலும் மேலும் புகார்கள் கிளம்பிய நிலையில், காயத்ரியைப் பிடிக்க, தனிப்படைகளை அமைத்தார் காவல் துறை ஆணையரான விஜயகுமாரி.

ss

Advertisment

இரண்டு மாதங்களாக போக்குக் காட்டிவந்த காயத்ரி, சென்னை அசோக்நகரில் பதுங்கியிருப் பது தெரியவர, அவ ரைக் கடந்த 20ஆம் தேதி சுற்றி வளைத் துக் கைது செய்தது தனிப்படை. அவருக்கு உதவியாக இருந்த புரோக்கர்கள் அசோக் குமார், ராஜசேகர் ஆகியோரும் பிடிபட்ட னர். அவர்களிடமிருந்து சொகுசு கார் ஒன் றும், நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டிருக் கின்றன. கைதான மூவரும் நீதிமன்ற உத்தர வின்பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதுபற்றி சேலம் மாநகர காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது "காயத்ரி லேசுப்பட்ட ஆளில்லை. தன்னை அரசியல் செல்வாக்குள்ள நபர் போலவும், சமூகநலத் துறையில் உயர் அதிகாரியாக இருப்பது போலவும் கூறி பலரையும் நம்ப வைத்துள்ளார். மதியழகன் என்பவரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 42 லட்ச ரூபாயும், ஒரு காரும் வாங்கியிருக்கிறார். வாசுதேவன் என்பவரின் மக ளுக்கு போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக 21 லட்ச ரூபாய், சேலத்தாம் பட்டி அமுதாவிடம் தாட்கோ துறையில் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி 42 லட்ச ரூபாய், அழகாபுரம் விஜயாவிடம் மானியக் கடன் பெற்றுத் தருவதாக 5.30 லட்ச ரூபாய் என ஏகத்துக்கும் கறந்துள்ளார்.

இதேபோல் ஆத்தூர் காளீஸ்வரன் என்பவ ரிடம் கட்சிப் பணிகளுக்காக பணம் தேவை எனக் கூறி 8 லட்சம் ரூபாயும், 1.70 லட்சம் ரூபாய் செல வில் சிறுத்தை சிலை, வேல், கேடயம் ஆகியவற்றை யும் செய்து வாங்கிக்கொண்டு கம்பி நீட்டியிருக் கிறார். இப்போது வசமாகப் பிடிபட்டி ருக்கிறார். விரைவில் காயத்ரியை காவ லில் எடுத்து விசாரிக்க இருக்கிறோம். பணம் கொடுத்தவர்கள் திருப்பிக் கேட்டால், அவர்களை ரவுடிகளை வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டி வந்துள்ளார். இந்த மோசடி வழக்கில் மேலும் அவருடைய சில கூட்டாளிகளையும் தேடி வருகிறோம்'' என்று திகைக்கவைத்தனர்.

இதற்கிடையே, தன்னைத் தேடிக்கொண் டிருந்த தனிப்படைகளையும், போலீஸ் டிபார்ட்மெண்ட் ஆட்கள் மூலமே காயத்ரி வேவு பார்த்திருக்கிறாராம். இதற்காக தனது வழக்கறிஞர் ஒருவர் மூலமாக கணிசமான கரன்சிகளை வாரிக் கொடுத்ததாகவும் சொல்கிறார்கள். மேலும், கூலிப் படைக் கும்பலையும் தன்னுடன் வைத்துக் கொண்டு அவர் அடாவடிகளை அரங்கேற்றிய தாகவும் புகார்கள் கிளம்பியுள்ளன.

இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் சிலர் நம்மிடம், "காயத்ரியால் எங்க கட்சியின் மானமே போகுது. முன்பு முக்கிய பொறுப்பில் இருந்த எங்கள் நிர்வாகி ஒருவர்தான், காயத்ரிக்கு மகளிர் சுயஉதவிக் குழுக்களில் செல் வாக்கு உள்ளதாகவும், அவர் நிறைய கடனுதவி களைப் பெற்றுத் தந்திருப்பதாகவும் கூறி, கட்சித் தலைமையிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். அதனால்தான் அவர் கட்சி நிர்வாகி ஆனார். கட்சி யில் அதிகாரத்தில் உள்ள சில வழிசல் பார்ட்டி களுக்கு பணத்தையும், பெண்களையும் சப்ளை செய்து சரிக்கட்டினார். சினிமாவில் வருவதுபோல காயத்ரி, தன்னை புரமோட் செய்வதற்காகவே ரவுடி லெனின் தலைமையில் ஒரு கும்பலைப் பணம் கொடுத்து வளர்த்து வைத்திருந்தார். தன் பெயர், படத்தைப் போட்டு சுவர் விளம்பரம் செய்வது, போஸ்டர்களை ஒட்டுவது உள்ளிட்ட வேலைகளைச் செய்து வந்தார். அந்த லெனினும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சேலத்தில் எங்கள் கட்சியின் முக்கிய பிரமுகரான வழக்கறிஞர் ஒருவருக்கும், காயத்ரிக்கும் கட்டப்பஞ்சாயத்து செய்வதில் மோதல் ஏற்பட்டது. இதனால் அவரைப் போட் டுத்தள்ள திருச்சியில் இருந்து ஒரு கூலிப்படையை கொண்டுவந்தாராம். நல்லவேளை, அந்த முயற்சி பலிக்கவில்லை. கடந்த 2021ம் ஆண்டு, கள்ளக்குறிச்சியில், வீடு புகுந்து 18 லட்சம் ரூபாயைக் கொள்ளை அடித்த வழக்கிலும் இதே காயத்ரி, லெனின், அசோக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதுமட்டுமின்றி, மேட்டூரைச் சேர்ந்த கொலை வழக்கு களில் தொடர்புடைய ரவுடி ரகு என் பவனை, எங்கள் தலைவர் திருமாவள வனிடம் அழைத்துச் சென்று, கட்சி யில் சேர்த்துக்கொள்ள காயத்ரி பரிந்துரை செய்தார். அதையறிந்த சேலம் மாவட்ட நிர்வாகிகள், தலை வரை அலர்ட் செய்த பிறகுதான், ரகுவை கட்சியில் சேர்க்காமல் தவிர்த்தார்''’என மேலும் திகைப்பை ஏற் படுத்தினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேலம் மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் காஜா மொய்தீ னிடம் இதுகுறித்து நாம் கேட்டபோது, "காயத்ரி மீதான புகார்கள் குறித்து ஏற்கனவே கட்சித் தலை மையின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள் ளது. தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். விரைவில் அவர் மீது கட்சி விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார் அழுத்தமாக.

இந்தப் பரபரப்புக்கு இடையே, "காயத்ரி மீதான பழைய வழக்குகளை எல்லாம் தூசி தட்டி வருகிறது காவல்துறை. அவர் மீது குண்டர் சட்டம் பாயும்' என்றும் சொல்கிறார்கள்.

காயத்ரியின் மோசடி லீலைகளுக்கு ஒரு வழியாக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது போலீஸ்.