சிதம்பரம் நடராஜர் கோவில், தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவ தாகவும் கோவில் சொத்துக்கள் தவறான வழியில் பயன்படுத்தப்படுவதாகவும் இந்து சமய அறநிலையத்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வர ஆரம்பித்தன.

அதனடிப்படையில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் கோவில் கணக்குகள், திருப்பணி குறித்த விவரங்கள், அவற்றுக்கான தொல்லியல் கருத்துரு, இந்து சமய அறநிலையத்துறை அனுமதி விவரம், நகைகள் விவரம், சொத்துக்களின் தற்போதைய நிலை, இந்து சமய அறநிலையத் துறையின் சட்ட விதிகளின்படி அங்கீ கரிக்கப்பட்ட சொத்துப் பதிவேடு உள்ளிட்ட வற்றை ஆய்வு செய் வதற்காக, கடந்த மாதம் ஜூன் 7, 8 தேதிகளில் ஆய்வு நடத்தப்படும் என்று கடிதம் வழங்கினர்.

cc

Advertisment

இதனைத் தொடர்ந்து ஜூன் 6லிஆம் தேதி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கோயிலுக்கு திடீர் வருகை தந்து தீட்சிதர்களுடன் ஆலோசனை நடத்தி, சுமுகமான தீர்வுக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்நிலையில் ஜூன் 7லிந்தேதி செவ்வாய்க்கிழமை சென்னை அறநிலையத்துறை அலுவலகத்திலிருந்து டி.ஆர்.ஓ. சுகுமார் தலைமையில் பழனி கோயில் ஜே.சி. நடராஜன், வேலூர் மாவட்ட ஜே.சி. லட்சுமணன், கடலூர் மாவட்ட ஜே.சி. அசோக்குமார் உள்ளிட்ட 15லிக்கும் மேற்பட்ட அறநிலையத்துறை அலுவலர்கள் குழு கோவிலுக்கு வந்தது. தீட்சிதர்கள் அவர்களுக்கு மடியிலிருந்த விபூதியை வழங்கினர்.

பின்னர், “நீங்கள் சட்டப் படியான குழு இல்லை, இந்து சமய அறநிலையத்துறையின் உத்தரவு இந்தக் கோவிலை கட்டுப்படுத்தாது என்ற தீட்சிதர்கள், ஆய்வுக்கு அனுமதியளிக்காமல் அலுவலர் களை திருப்பியனுப்பினர். கோவி லிலே காத்திருந்த அலுவலர்கள், மாலையில் நீதிமன்றத் தீர்ப்பை சுட்டிக்காட்டி ஆய்வுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டனர். அதற்கு தீட்சிதர்கள் தரப்பினர் "உங்களுக்குப் புரிதல் இல்லை. புரிதல் உள்ளவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்' என்று பிடிவாதமாகப் பேசினர். இதனால் பொதுவெளியில் என்ன பேசுவதெனத் தெரியாமல் அதிகாரிகள் திகைத்துத் திரும்பினர்.

மீண்டும் அவர்கள் ஜூன் 8-ஆம் தேதி 2-வது நாள் கோவிலுக்கு ஆய்வுக்குச் சென்றனர். அப்போது தீட்சிதர்கள், முதல்நாள் என்ன சொல் லப்பட்டதோ அதே நிலைதான் என அவர்களைத் திருப்பியனுப்பினர். இதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள், கோவிலில் பழைமை வாய்ந்த கட்டடங்களை மாற்றியமைத்து, புதிதாகக் கட்டப்பட்ட கட்டடங்கள் பற்றி ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வு அறிக்கையை இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு சமர்ப்பிப்பதாகவும், தீட்சிதர்களின் ஒத்துழை யாமை குறித்து அரசு கவனத்திற்கு எடுத்துச் சென்று சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தனர்.

இதனிடையே கீழவீதியில் "கணக்கு காட்ட மறுக்கும் தீட்சிதர்களை கைது செய்யவேண்டும், கோவிலை இந்து சமய அறநிலையத்துறையின்கீழ் கொண்டுவரவேண்டும்' என்று சி.பி.எம். சார்பில் தடையை மீறி போலீஸாருடன் தள்ளுமுள்ளு போரட்டம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவில் ஆய்வுக்கு வந்த அதிகாரிகளிடம் முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்த வி.வி சாமிநாதன் தனது உதவியாளர் மூலம் கடிதமளித்துள்ளார். அதில், "சிதம்பரம் கோவிலுக்குக் கடந்த 2002-ஆம் ஆண்டு 8 கிராமில் தங்க வில்வ மாலை அளித்துள்ள தாகவும், அதனைத் தீட்சிதர்கள் காட்ட மறுக்கிறார்கள் என்றும், அவர் கொடுத்த தங்கமாலையைப் பார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோவிலுக்கு நகை கொடுத்தவர்கள் அதே நகைகள் உள்ளதா? என பார்க்க வேண்டும்' எனவும் கூறியுள்ளார்.

cc

Advertisment

தீட்சிதர்களின் இந்த மோசமான அணுகுமுறை, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிரானதாகும். இப்போக்கினை அனுமதித்தால், கோவிலுக்கோ, கோவிலின் பாரம்பரிய சொத்துக்களுக்கோ எது நடந்தாலும், அரசாங்கம் தலையிட முடியாது என்ற ஆபத்தான நிலைமை உருவாகிவிடும். எனவே தமிழ்நாடு அரசாங்கம் தனது கடமையிலிருந்து பின்வாங்கிடக் கூடாது. மேலும், உத்திரபிரதேசத்தில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் நிர்வாகத்தை அரசு எடுத்துக்கொண்ட வழிமுறையைப் பின்பற்றி, ஒரு தனி சட்டமியற்றி, நடராஜர் கோவில் நிர்வாகத்தை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும்.”

நடராஜர் கோவில் கனகசபையில் அனைத்து மக்களும் ஏறி வழிபட, நீதிமன்றத்தில் தீட்சிதர் களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து வெற்றிபெற்ற ஜெமினி ராதாகிருஷ்ணன் கூறுகையில், “ஆய்வுக்கு தீட்சிதர்கள் ஒத்துழைப்பு வழங்க மறுத்தது கண்டிக்கத்தக்கது. இது பொதுக்கோவியில். இந்து சமய அறநிலையத்துறைக்கும் தமிழக அரசுக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல என்று தீட்சிதர்கள் கூறுவது வேடிக்கையாக உள்ளது . தீட்சிதர்கள் தம் போக்கை மாற்றிக்கொண்டு பக்தர்கள் மற்றும் தமிழக அரசுடன் இணக்கமாக இருக்கவேண்டும். பல தீட்சிதர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்கு கோவிலைக் கொண்டுவரவேண்டும்''’என்றார்.

-காளிதாஸ்