குமரி மாவட்டத்தில் மொத்த முள்ள ஒன்பது ஊராட்சி ஒன்றியங் களில் பா.ஜ.க. ஆளும் ஒரே ஒன்றிய மான குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் தலைவராக இருக்கும் அனுஷாதேவி பாரபட்சமாகவும், சர்வாதிகாரி போலவும் செயல்படுவ தாக உறுப்பினர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

11 உறுப்பினர்களைக் கொண்ட இந்த ஊராட்சி ஒன்றியத்தில், உள்ளிருப்புப் போராட்டம், முதல்வர் மற்றும் கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்புவது, தலைவரை முற்றுகையிடுவதும்தான் இங்கே எதிர்க்கட்சி உறுப்பினா?களின் இரண்டரை ஆண்டுகாலப் பணியாக உள்ளது.

ff

Advertisment

ஊராட்சி ஒன்றியத்தின் துணைத்தலைவரான காங்கிரஸ் எனல்ராஜ் கூறுகையில், "பா.ஜ.க. உறுப்பினரைத் தோற்கடித்து நான் துணைத்தலைவரானேன். அந்த கோபம் இன்னும் மாறவில்லை. பா.ஜ.க. 5, அ.தி.மு.க. 1 என இவர்களின் வார்டுகளைத் தவிர, காங்கிரஸ் 2, தி.மு.க. 1, மற்றும் சுயேட்சை 2 என இவர்களின் வார்டுகளுக்கு எந்த நிதியும் ஒதுக்காமல் ஊராட்சி ஒன்றிய தலைவர் அனுஷாதேவி பாரபட்சமாக நடந்துவருகிறார். 8-ம் வார்டான எனக்கு குறும்பனை, கோடிமுனை, சைமன்காலனி உள்ளடக்கிய 3 ஊராட்சிகளைக் கொண்ட மீனவக் கிராமம் ஆகும். கடந்த எம்.பி. தேர்தலில் மீனவர்கள் பா.ஜ.க.வுக்கு ஓட்டுப் போடலைன்னு மீனவ கிராமத்தைச் சார்ந்திருக்கிற எனது வார்டுக்கு எந்த வேலையும் செய்யக்கூடாதுன்னு முடிவுசெய்திருக்கிறாங்க. இதனால கோடிமுனையில் லூர்து மாதா தெரு, குறும்பனை சகாயமாதா தெரு, சிலுவை சாலை, வியாகப்பர் ஜங்ஷனில் இருந்து கடற்கரைக்குச் செல்லும் சாலைகள் எல்லாம் பழுதடைந்து மக்களும் வாகனங்களும் செல்லமுடியாத நிலையில் உள்ளது.

இங்கு கடந்த இரண்டரை ஆண்டுகளில் 4 லட்சம் ரூபாய்க்கு மட்டும் இன்டர்லாக் போட்ட ஒரே ஒரு வேலை நடந்துருக்கு. ஆனால் பா.ஜ.க. உறுப்பினர்களின் வார்டுகளில் 30 லட்சத்துக்கு மேலான நிதியை ஒதுக்கி வேலை செய்திருக் கிறார்கள்.

dd

Advertisment

இதில் தலைவர் வார்டில் மட்டுமே 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி வேலை நடந்திருக்கு. திட்டமிட்டே பா.ஜ.க. உறுப்பினர்களின் வார்டுகளுக்கு மட்டும் நிதி ஒதுக்கி அங்கு பா.ஜ.க.வை வளர்க்கிறார்கள். இதேபோல் எந்தெந்த வார்டுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கணும்னு முடிவுசெய்றதே பா.ஜ.க. ஒன்றிய தலைவர் ஜெனில் கண்ணன்தான். இதேபோல் வாணியக்குடி பஸ்நிலையம், மீனவ கிராமங்களில் உயர்கோபுர மின்விளக்கு கேட்டும் கழிவு நீரோடையை சரிசெய்யவும் கேட்டும் எதுவும் செய்ய நிதி ஒதுக்காததுனால முதல்வருக்கு மனு அனுப்பினேன். கலெக்டர்கிட்ட நான்கு முறை முறையிட்டேன். இனி நிதி கேட்டு சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன்''’என்கிறார்.

11-ஆம் வார்டு பெண் உறுப்பினர் தி.மு.க. விஜி கூறும்போது, "எனது வார்டில் வெறும் 5 லட்ச ரூபாய்க்கு மட்டும் இரண்டு வேலைகள் நடந்திருக்கு. நான் சொன்ன முட்டம் சாலைப்பணியைச் செய்யாமல் வேறொரு சாலைப்பணியை, அதுவும் எனக்குத் தெரியாமல் பா.ஜ.க.வினரோடு வந்து அடிக்கல் நாட்டி, அங்கு பா.ஜ.க. பிம்பத்தை ஏற்படுத்தினாங்க. அதுக்குப் பிறகு எப்ப கேட்டாலும் நிதி இல்லை. ஆனால் 7-ஆம் வார்டு பா.ஜ.க. உறுப்பினர் சிவகாமி அம்மாள் இறந்து 8 மாதமாகிறது. ஆளே இல்லாமல், அந்த 8 மாதத்தில் 12 லட்ச ரூபாய்க்கு பல்வேறு வேலைகள் நடந்திருக்கு. இடைத்தேர்தலில் பா.ஜ.க. ஜெயிக்க வேண்டும் என்பதற்காக இப்படி பண்றாங்க. கவுன்சிலிங் கூட்டம் நடக்கும்போது பா.ஜ.க. ஒன்றிய தலைவர் ஜெனில் கண்ணன் சொல்வது போல்தான் கூட்டத்தில் தீர்மானத்தை நிறைவேற்று கிறார்கள். கட்சியின் ஒன்றிய தலைவருக்கு இந்தப் பணி என்றால், தலைவரின் கணவர் மதுகுமார் காண்ட்ராக்டர்களைக் கையாளுகிறார்''’என்றார்.

dd

ஊராட்சி ஒன்றியத் தலைவர் அனுஷா தேவியிடம் கேட்டபோது, “"எனக்கு 10 உறுப் பினர்களும் ஒண்ணுதான். யாரிடமும் எந்த பாரபட்சமும் காட்டியதில்லை. நிதி இல்லாததால் ஊழியர்களுக்கு சம்பளம்கூட கொடுக்கமுடியாமல் உள்ளது. கலெக்டர்கிட்ட பலமுறை முறையிட்டு அதன்பிறகு ஒதுக்கிய நிதியில்தான் சம்பளத்தைக் கொடுத்து சமாளித்துவருகிறோம். உறுப்பினர் களிலே அதிகப் பணி நடந்திருப்பது துணைத் தலைவர் எனல்ராஜ் வார்டில்தான். அவருடைய கட்டுப்பாட்டில் நானும், இங்குள்ள அதிகாரிகளும் இருக்கணும்னு நினைக்கிறார். இதற்காக 50-க்கு மேற்பட்ட மொட்டை பெட்டிசன் போட்டுக்கிட்டே இருக்கிறார்''’என பதிலுக்கு புகார்களை அடுக்கினார்.

பா.ஜ.க. ஒன்றிய தலைவர் ஜெனில் கண்ணனிடம் பேசியபோது, “ஊராட்சி ஒன்றிய தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தபோது எங்க கட்சி உறுப்பினர்களை ஒருங்கிணைப்பது எங்க கடமை. அதைச் செய்தது தவறா? கட்சி ரீதியாக மற்ற உறுப் பினர்கள் தலைவருக்கு நெருக்கடி கொடுக்கும்போது, ஒன்றிய பொறுப் பாக இருக்கும் நான் சும்மா இருக்க முடியாது அல்லவா? இருக்கிற நிதியில் அதிகம் செலவு செய்திருக்கிறதே காங்கிரஸ், தி.மு.க. உறுப்பினர் வார்டுகளில்தான். கவுன்சிலிங் நடக்கும்போது உறுப்பினர்களும் பத்திரிகைகாரர்களும்தான் உள்ளே இருப்பாங்க அதில் ஏதாவது ஒரு கூட்டத்தில் நான் கலந்துகொண்டிருக்கிறேன்னு ஒரு ஆதாரத்தைக் காட்டட்டும். ஆனா நான் காட்டுவேன். தி.மு.க. உறுப்பினரின் கணவர் கலந்து இருக்கிறார்''’என்றார்.