"ஹலோ தலைவரே, நடிகர் விஜய் நடத்திய ’த.வெ.க.வின் மாநாடு பற்றி பல்வேறு தகவல்கள் வெளியே வந்துகொண்டிருக்கிறது.''”

"ஆமாம்பா, அந்த மாநாட் டிற்காக பெருமளவில் வாரி இறைக்கப்பட்ட கரன்ஸிகள் குறித்த ரகசியங்களும் இப்ப பரபரப்பாகக் கசியுதே?''”

"உண்மைதாங்க தலைவரே, பெரும் திரளாக இளைஞர்களைத் திரட்டி, தனது தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டை விஜய் நடத்தியிருப்பது, தமிழக அரசியல் கட்சிகளைத் திகைக்க வைத் திருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதி களிலிருந்தும், வாகனங்கள் மூலம் ஆட் களைக் கொண்டுவந்து திரட்டி, விழுப்புரம் மாவட்டத்தையே திணற வைத்திருக்கிறார் கள். அதே சமயம் அடிப்படையாகச் செய்யவேண்டிய நிழலுக்கான பந்தல், குடிநீர், காற்றோட்டம் ஆகியவற்றுக்கான அடிப்படை ஏற்பாடுகளில் விஜய் தரப்பு கோட்டை விட்டதால், மாநாட்டுக்கு வந்தவர்கள் படாதபாடு பட்டுவிட்டார்கள். இப்படி, அவசரத்தில் அள்ளித் தெளித்தது போல், நடத்தப்பட்ட இந்த மாநாட்டிற்காக, ஏறத்தாழ 80 கோடி ரூபாய் வரை அள்ளிக்கொடுத்திருப்பவர், பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின்தான் என்கிறார்கள்.''”

"என்ன எதிர்பார்ப்பில் இப்படி மார்டின் தரப்பு கரன்ஸி தானம் பண்ணியிருக்கிறதாம்?''”

Advertisment

"இப்போதும்கூட கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் லாட்டரித் தொழிலில் கொடிகட்டிப் பறந்துவரும் மார்ட்டின், அண்மையில் மேற்கு வங்கத்திலும், லாட்டரி விற்பனைக்கான அனுமதியை வாங்கியிருக் கிறாராம். அதேபோல், தமிழகத்திலும் எப்படியாவது லாட்டரியைக் கொண்டு வந்துவிட வேண்டும் என்று அவர் தொடர்ந்து போராடி வருகிறார். இந்த தி.மு.க. ஆட்சியிலும் கூட அதற்கான மூவ்களை அவர் நடத்திய போது, முதல்வர் தரப்பு, கொஞ்சமும் அசைந்துகொடுக்கவில்லையாம். இந்த நிலையில், எதிர்காலத்தில் விஜய் ஆட்சிக்கு வந்தால், அப்போது லாட்டரியை தமிழகத்தில் அனுமதிக்க வேண்டும் என்கிற நிபந்தனையோடுதான், லாட்டரி மார்ட்டின் இந்த மாநாட்டிற்கு தாராளம் காட்டினார் என்கிறார்கள். இதே மார்ட்டின் தரப்புதான் அண்மையில் உளுந்தூர்ப்பேட்டையில் நடந்த விடுதலைச் சிறுத்தைகளின் ’மது ஒழிப்புக் கோரிக்கை’ மாநாட்டிற்கும் கைகொடுத்தது என்று, அவர்கள் தரப்பே சொல்லிவருகிறது.''”

rr

"துணை முதல்வர் உதயநிதி, தீபாவளி வாழ்த்து தெரிவித்து அனைத்துத் தரப் பினரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறாரே?''”

Advertisment

"ஆமாங்க தலைவரே, நடிகர் விஜய் நடத்திய தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை, மற்ற அரசியல் கட்சிகள் எல்லாம் சீரியசாக உற்றுக் கவனித்துக்கொண்டிருந்த நேரத்தில், அதைப்பற்றிக் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாத துணை முதல்வர் உதயநிதி, தனது தீபாவளி வாழ்த்தின் மூலம் பொதுமக்கள் மத்தியில் ஆச்சரியம் கலந்த கைத்தட்டலைப் பெற்றிருக்கிறார். பொதுவாக, தீபாவளி உள்ளிட்ட இந்துப் பண்டிகைகளுக்கு தி.மு.க. தலைவர்கள் வாழ்த்துச் சொல்வதில்லை. இது குறித்த சர்ச்சைகளை பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளும், இந்துத்துவா அமைப்புகளும் எழுப்பிய போதெல்லாம், கலைஞரும் சரி, தற்போதைய முதல்வர் ஸ்டாலினும் சரி, அதைக் கண்டுகொண்டதே இல்லை. இந்த நிலையில், தி.மு.க. தரப்பிலிருந்து முதன் முதலாக, உதயநிதி, ’நம்பிக்கை உள்ள வர்களுக்கும் கொண்டாடுபவர்களுக்கும் தீபஒளித் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்’என்று சொல்லியிருக்கிறார். உதயநிதியின் இந்த அப்ரோச் இந்துமத பிரமுகர்களையும் உற்சாகப்படுத்தி யிருக்கிறது என்கிறார்கள். தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்துச் சொல்லிய உதயநிதி, திராவிடக் கருத்தியல் ஆசிரியர்கள் சங்கத் தொடக்க விழாவிலும் கலந்துகொண்டதோடு, ‘"நாடெங்கும் கல்வியை காவிமயமாக்கத் துடிக்கிறார்கள் பாசிஸ்டுகள். அவர்களின் முயற்சிகளை முறியடிக்க இந்த சங்கம் பாடுபடவேண்டும்'’ என்றும் அதிரடிக் குரலை எழுப்பியிருக்கிறார்.''”

"சரிப்பா, அ.தி.மு.க. மாஜி மந்திரி எஸ்.பி.வேலுமணி மீது, எடப்பாடி அதிரடி நடவடிக்கை எடுக்கத் தயாராகிவிட்டார்னு செய்தி வருதே?''”

r

"தற்போது ஈஷா மைய ஜக்கியின் பாலியல் லீலைகள் அம்பலப்பட்டிருக்கும் நிலையில், அவர் தரப்பு தங்களைக் காப்பாற்றிக்கொள்ளும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கி இருக்கிறது. இந்த நிலையில், பா.ஜ.க.வின் அசைன்மெண்ட்படி, அ.தி. மு.க.வை உடைக்க முயலும் வேலுமணிக்கு, சகலவிதத்திலும் உதவிவந்தவர் இந்த ஜக்கிதான் என்கிறார்கள். அவர் பலத்தில்தான், பா.ஜ.க.வுடன் டீலிங் போட்டுக்கொண்டு, அ.தி.மு.க.வினர் மத்தியில் உள்நாட்டுப் போரை உருவாக்கும் முயற்சியில் வேலுமணி, ஈடுபட்டுவந்தாராம். இப்போது ஜக்கியின் வில்லத்தனங்கள் பகிரங்கமாகி, அவரது அடித்தளமே ஆடிபோயிருப்பதால், அவரை வைத்து ஆட்டம்போட்டு வந்த மாஜி மந்திரி வேலுமணி மீது, நடவடிக்கை எடுக்கும் முடிவுக்கு வந்திருக்கிறாராம் எடப்பாடி. வேலுமணிக்கு கல்தா கொடுப்பது குறித்து கட்சி சீனியர்களிடம் அவர் தீவிரமாக விவாதித்துவருகிறார் என்றும் சொல்கிறார்கள். எனவே, இதுகுறித்த அதிரடி அறிவிப்பு விரைவில் வரலாம் என்கிறார்கள் அ.தி.மு.க. சீனியர்கள்.''”

"மணல் அதிபர்கள் மத்தியில் ஏதேதோ டீலிங் நடப்பதாக செய்தி வருகிறதே?''”

"தமிழகத்தின் மணல் அள்ளும் உரிமையை வைத்திருக்கும் கரிகாலன் தரப்பிடமிருந்து, அந்த உரிமை மயிலாடுதுறை ராஜப்பா தரப்புக்கு மாற இருக்கிறதாம். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் மட்டும் இந்த உரிமையைத் தங்கள் வசம் வைத்துக் கொண்டு, மற்ற மாவட்டங்களின் உரிமையை ராஜப்பா தரப்பிடம் கைமாற்றுகிறதாம் கரிகாலன் தரப்பு. இதற்கான ஏற் பாடுகள் இப் போது விறுவிறுப் பாக நடக்கிறதாம். ’சக்தி இன்ப்ரா ஸ்ட்ரெக்சர்’ என்ற நிறுவனத்தை நடத்திவரும் மயி லாடுதுறை ராஜப்பா, சிறிய அளவில் மணல் பிசினஸிலும் ஈடு பட்டவர் என் கிறார்கள். இந்த மணல் உரிமை கைமாறுவதற்கான டீலிங்கை, முக்கிய அமைச்சர் தரப்புதான் முன்னின்று செய்துமுடித்ததாம். இப்போது இந்த ராஜப்பா, அமைச்சர் மூலம் மரியாதை நிமித்தமாக முதல்வரை சந்திக்கும் முயற்சியிலும் இருக்கிறாராம். அ.தி.மு.க. மாஜி மந்திரி ஓ.எஸ்.மணியனுக்கு மிக நெருக்கமானவர்தான் இந்த ராஜப்பா என்கிறார்கள் மயிலாடுதுறைக்காரர்கள்.’''

"வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும் பக்தர்களுக்கு அதிகக் கட்டணம் விதிக் கப்பட்டிருப்பதாக சலசலப்பு எழுந்திருக் கிறதே?''”

"கோவை மாவட்டத்திலுள்ள உள்ள வெள்ளியங்கிரி மலைத்தொடரின் ஏழாவது மலையில் பிரசித்திபெற்ற சிவன் கோயில் உள்ளது. அடிவாரத்தில் இருந்து கரடுமுரடான பாதை வழியாக ஏறிச்சென்று, பக்தர்கள் அங்கு வழிபட்டு வருகிறார்கள். இப்படி வழிபாட்டிற்காக மலையேறும் பக்தர்களுக்கு, தலா ரூ 5 ஆயிரம் கட்டணத்தை அரசு நிர்ணயித் திருப்பதாக திடீரெனத் தகவல் கிளம்ப, இது சோசியல் மீடியாக்களிலும் வைரலானது. இது, பக்தர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது. இதுகுறித்து நாம் விசாரித்த போது, தமிழகத்திலுள்ள மலைப் பகுதிகளில் மலையேற்றம் செய்வதற்கான ’"டிரெக் தமிழ்நாடு'’ என்னும் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்திருக்கிறது. அதன்படி, வழக்கமான பாதைகளைத் தவிர்த்து, கயிறுகளைக் கட்டிக்கொண்டு, மலையேறும் வீரர்களுக்கு மட்டுமே 5 ஆயிரத்து 90 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதுகூட, மலையேறுவோருக்கான காப்பீடு மற்றும் வழிகாட்டி வசதிகள், இருவேளை உணவு, ஸ்நாக்ஸ், 13 கி.மீ. வாகனப் பயணம், துணி பேக், தொப்பி, உள்ளிட்ட வசதிகளைப் பெறு வதற்கான கட்டணம்தான். மற்றபடி, மலையேறும் ஆன்மிக பக்தர்களுக்கு இந்தக் கட்டணம் கிடையாது என்கிறார்கள் வனத்துறையினர்.''’

"நானும் என் கவனத்திற்கு வந்த ஒரு தகவலை இங்கே பகிர்ந்துக்கறேன். தமிழக அரசின் சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக இருப்பவர் பாதிரியாரான கோ.அருண். இவரை இப்போதைய தி.மு.க. அரசுதான் நியமித்தது. அவரோடு, துணைத் தலைவராக அப்துல் குத்தூஸும், 8 உறுப் பினர்களும் நியமிக்கப்பட்டனர். தற்போது, இந்த ஆணையத்தின் தலைவரான அருண், தனது மதத்தைச் சாராத உறுப்பினர்களை மதிப்பதே இல்லை என்கிற குற்றச்சாட்டு பலமாக எழுந்துள்ளது. இதுகுறித்து யாரேனும் கேட்டால், ’முதல்வரையே நான் எந்த நேரத்திலும் நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசக்கூடியவன். முதல்வரின் செயலாளர் அனு ஜார்ஜின் ஆதரவும் எனக்கு இருக்கிறது. அதனால் என்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்று தெனாவெட்டாகப் பேசி, அவர்களை மிரட்டி வருகிறாராம். இதனால், ஆணையத்தின் செயல்பாடுகள் பெரிதும் முடங்கியிருப்பதாக சிறுபான்மை ஆணையத்தில் பணிபுரிபவர்கள் ஆதங்கப்படுகிறார்கள்.''