HONEY TRAPPING செய்து பா.ஜ.க. தலைவர்களை ஆபாசப் படம் எடுத்த குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க அண்ணாமலை எடுத்த இன்னொரு ஆயுதம், அவர் கட்டியிருக்கும் வாட்ச் பற்றிய செய்தி. அது இப்பொழுது அவருக்கே ‘பூமராங்காக மாறியிருக்கிறது என்கிறார்கள் பா.ஜ.க.வினர்.
கடந்தவாரம் திடீரென பத்திரிகையாளர்களை சந்தித்த அண்ணாமலை, அவர்களில் ஒருவரை ‘செட்டப்’ செய்து அவர் கட்டியிருக்கும் வாட்ச் பற்றி கேள்வி கேட்க வைத்தார். அந்த வாட்சை "நான் ஆட்டுக்குட்டி வளர்க்கிறேன்' என முன்னர் பேட்டியளித்தபோது கட்டியிருந்தார். திடீரென “"ரபேல் கம்பெனி இந்தியாவுக்கு போர் விமானங்கள் அனுப்பியிருக்கிறது. அந்தக் கம்பெனி தயாரித்த ‘பெல்ஸ்’ வாட்ச்சை நான் கட்டி யிருக்கிறேன். நான் ஒரு தேச பக்தன்''’என பேட்டியளித்தார்.
ரபேல் விமானத்தை வாங்கு வதில் ஊழல் நடந்தது. 524 கோடி ரூபாய் மதிப்புள்ள விமானங்களை 1724 கோடி ரூபாய்க்கு பா.ஜ.க. அரசு வாங்கியது என இந்து பத்தி ரிகையின் ஆசிரியர் என்.ராம் தனது புலனாய்வு செய்திகள் மூலம் வெளிப்படுத்தினார். ரபேல் விமானத் தை வாங்கியதில் முக்கிய பங்கு வகித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ் நாத்சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி என யாரும் ரபேல் விமானத்தின் உதிரி பாகங்களால் பெல்ஸ் என்கிற சுவிட்சர்லாந்து கம்பெனி தயாரித்த 500 வாட்சுகளில் ஒன்றைக்கூட அணிய வில்லை. 58 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சட்டை, வெளிநாட்டு கார், வெளிநாட்டு கூலிங் கிளாஸ், வெளிநாட்டு போன் உபயோகிக்கும் நரேந்திரமோடி கூட தேசபக்தி என்ற பேரில் ரபேல் வாட்சை அணியவில
HONEY TRAPPING செய்து பா.ஜ.க. தலைவர்களை ஆபாசப் படம் எடுத்த குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க அண்ணாமலை எடுத்த இன்னொரு ஆயுதம், அவர் கட்டியிருக்கும் வாட்ச் பற்றிய செய்தி. அது இப்பொழுது அவருக்கே ‘பூமராங்காக மாறியிருக்கிறது என்கிறார்கள் பா.ஜ.க.வினர்.
கடந்தவாரம் திடீரென பத்திரிகையாளர்களை சந்தித்த அண்ணாமலை, அவர்களில் ஒருவரை ‘செட்டப்’ செய்து அவர் கட்டியிருக்கும் வாட்ச் பற்றி கேள்வி கேட்க வைத்தார். அந்த வாட்சை "நான் ஆட்டுக்குட்டி வளர்க்கிறேன்' என முன்னர் பேட்டியளித்தபோது கட்டியிருந்தார். திடீரென “"ரபேல் கம்பெனி இந்தியாவுக்கு போர் விமானங்கள் அனுப்பியிருக்கிறது. அந்தக் கம்பெனி தயாரித்த ‘பெல்ஸ்’ வாட்ச்சை நான் கட்டி யிருக்கிறேன். நான் ஒரு தேச பக்தன்''’என பேட்டியளித்தார்.
ரபேல் விமானத்தை வாங்கு வதில் ஊழல் நடந்தது. 524 கோடி ரூபாய் மதிப்புள்ள விமானங்களை 1724 கோடி ரூபாய்க்கு பா.ஜ.க. அரசு வாங்கியது என இந்து பத்தி ரிகையின் ஆசிரியர் என்.ராம் தனது புலனாய்வு செய்திகள் மூலம் வெளிப்படுத்தினார். ரபேல் விமானத் தை வாங்கியதில் முக்கிய பங்கு வகித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ் நாத்சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி என யாரும் ரபேல் விமானத்தின் உதிரி பாகங்களால் பெல்ஸ் என்கிற சுவிட்சர்லாந்து கம்பெனி தயாரித்த 500 வாட்சுகளில் ஒன்றைக்கூட அணிய வில்லை. 58 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சட்டை, வெளிநாட்டு கார், வெளிநாட்டு கூலிங் கிளாஸ், வெளிநாட்டு போன் உபயோகிக்கும் நரேந்திரமோடி கூட தேசபக்தி என்ற பேரில் ரபேல் வாட்சை அணியவில்லை. இந்தியாவில் தேசபக்தி பற்றி அதிகம் பேசும் ராணுவ தளபதிகளில் யாரும் அந்த வாட்சை அணியவில்லை.
மிக சொற்ப எண்ணிக்கையில் தயாரிக்கப் பட்ட அந்த வாட்ச், கிடைப்பதற்கு மிகவும் அரிதான ஒரு பொருள். ஐந்து லட்சம் ரூபாய் என விற்கப்பட்ட அந்த வாட்ச், இறக்குமதி வரியோடு சேர்த்து தோராயமாக பத்துலட்ச ரூபாய்க்கு மேல் ஆகிறது. மொத்தம் ஐநூறு வாட்சுகள் உலகத்தில் உள்ளது. அதில் 149-வது வாட்ச்சைத்தான் அண்ணாமலை கட்டியிருக்கிறார். நான் ஐ.பி.எஸ். அதிகாரி ஆன பின்பு இன்றுவரை சம்பாதித்த சொத்துக்களின் கணக்கை சரியாக சமர்ப்பித் திருக்கிறேன் எனச்சொல்லும் அண்ணாமலை, இந்த வாட்ச் விலை தோராயமாக பத்து லட்ச ரூபாய் என தேர்தலில் போட்டியிட்டபோது தேர்தல் கமிஷனுக்கு கொடுத்த சொத்துப் பட்டியலில் சொல்லவில்லை. தன்னிடம் இருக்கும் ஆடுகள், மாடுகள் பற்றியெல்லாம் கணக்கு சொல்லி, தன்னை நேர்மையாளனாக காட்டிக்கொண்ட அண்ணா மலை, இந்த வாட்ச்சைப் பற்றி இவ்வளவுநாள் ஏன் வாய் திறக்கவில்லை என கேள்வி கேட்கிறார்கள் பா.ஜ.க.வினர்.
அந்த வாட்ச்சில் ஒரு ரகசியம் இருக்கிறது. இந்த வாட்ச்சில் வாய்ஸ் ரெக்கார்டர் உள்ளது. ஐஞசஊவ HONEY TRAPING செய்வதுபோல யார் அண்ணாமலையிடம் பேசினாலும் அதை இந்த வாட்ச்சில் இணைக்கப்பட்ட ஒரு கருவிமூலம் ரெகார்டு செய்யலாம். பிரதமர் மோடியுடன் சமீபத்தில் ஒருமணி நேரம் தனியாக காரில் பயணம் செய்தார் அண்ணாமலை. பிரதமர் மோடியை மட்டுமல்ல, அமித்ஷா, ராஜ்நாத்சிங், நட்டா போன்ற தேசியத் தலைவர்களை இந்த வாட்ச் அணிந்துதான் அண்ணாமலை சந்தித்துள்ளார். HONEY TRAPING செய்த அண்ணாமலை, பா.ஜ.க. தலைவர்களின் பேச்சை ரெக்கார்டு செய்து வைத்துள்ளார்.
அதுபோல, “பிரதமர் மோடியுடன் பேசிய பேச்சை, நீங்கள் தனியாக அவருடன் காரில் வரும்போது இந்த வாட்ச்சில் உள்ள கருவிகளைப் பயன்படுத்தி ரெகார்டிங் செய் தீர்களா? என அண்ணாமலைக்கு நெருக்கமான பா.ஜ.க. வினர் கேட்டபோது, அண்ணாமலை எந்த பதிலும் சொல்லவில்லை. பத்துலட்ச ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள வாட்ச், ஆட்டுக் குட்டிகளை வளர்க் கும் ஏழை விவசாயியான அண்ணா மலைக்கு எப்படி வந்தது. அதற்கான பில் இருக்கின்றதா?”என தி.மு.க. அமைச்சர் செந்தில் பாலாஜி டிவிட்டரில் கேள்வி எழுப்பி இருக்கிறார். அதற்கு தனது ஆதரவாளர்கள் மூலம் ’"அண்ணாமலை மிகவும் நேர்மையானவர்' என்று பதில் அளித்திருக்கின்றார்.
ஆனால், “அண்ணாமலை மிகவும் ரகசிய மானவர். அவர் தமிழக பா.ஜ.க. தலைவர் ஆனதிலிருந்து “வார் ரூம்” எனப்படும் இணைய தள வசதியை ஏற்படுத்தி இருக்கிறார். வார் ரூம், என்பது பேரிடர் காலங்களில் எழும் அசாதாரண சூழல்களை சமாளிப்பதற்காக அரசின் ஒருங்கிணைப்பு முயற்சிக்காக உருவாக்கப்படுவது. அப்படிப்பட்ட வார் ரூம் தமிழகத்தில் எந்த அரசியல் கட்சிக்கும் இல்லை. அண்ணாமலையின் வார் ரூம்தான் திருக்காட்டுப்பள்ளியில் இறந்த ஒரு மாணவி மதம் மாற்றத்திற்காக கொல்லப்பட்டாள் என பொய் ஆதாரங்களை திரட்டி வெளியிடப் பயன்பட்டது. தமிழகத்தில் சாதி, மத கலவரங்களை உருவாக்குவதற்கு மூளையாக செயல்படுகிறது.
அதேநேரத்தில் அந்த வார் ரூம், மக்களை ஏமாற்றும் நிதி நிறுவனங்களுடன் அமர்பிரசாத் ரெட்டி மூலம் தொடர்பு வைத்துக்கொள்கிறது. பதினைந்தாயிரம் கோடி ரூபாய் மக்களை ஏமாற்றிய நிதி நிறுவனங்கள், அ.தி.மு.க. அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணி ஆகியோரை மிரட்டி கோடிக்கணக்கான ரூபாயை, இந்த வார் ரூம் அண்ணாமலைக்கு வசூல் செய்து கொடுத்துள்ளன. அந்தப் பணத்தை வைத்து தமிழக -கர்நாடக எல்லை யான ஊட்டியில் அண்ணா மலையின் மனைவியும் அவ ரது மச்சானும் ஏகப்பட்ட சொத்துக்களை வாங்கியுள் ளார்கள். இந்த ரபேல் வாட்சும், தமிழகத்தில் ஆளுநர் ரவியால் ஆதரிக்கப் படும் ஆன்லைன் சூதாட்டக் கம்பெனிகள் வாங்கிக் கொடுத்ததுதான் என்கிறார் கள் தமிழக பா.ஜ.க.வினர்.
"வரும் ஏப்ரல் மாதம் கன்னியாகுமரியிலிருந்து முதலமைச்சரின் வீடுவரை பாத யாத்திரை தொடங்கப் போகிறேன், அப்பொழுது அனைத்துக் கும் பதில் சொல்கிறேன்'' என்கிறார் அண்ணாமலை. ஊழல் செய்ததுதான் தேச பக்தியா? ஒரு நிலையில்லாத கருத்துக்களை சொல்லும் அண்ணாமலை எப்படி தேச பக்தர் ஆவார்? என கேள்வி எழுப்புகிறார்கள் பா.ஜ.க.வினர்.
ரபேல் கம்பெனி வாட்ச்சான ‘பெல்ஸ்’ கட்டியவன் தேச பக்தன் என்றால், ஹெச்.எம்.டி வாட்ச் கட்டுபர்கள் எல்லாம் தேச விரோதிகளா? என்றும், பா.ஜ.க. தலைவர் ஆவதற்கு முன்பே வாட்ச் வாங்கிவிட்டேன் எனச்சொல்லும் அண்ணாமலை, அதை ஏன் தேர்தல் சொத்து விவரக் கணக்குகளில் காண்பிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்புகிறார்கள் பா.ஜ.க.வினர்.
___________
இறுதிச்சுற்று
டிசம்பர் 19, 2022 திங்களன்று பேராசிரியர் க.அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் இல்லத்திற்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், பேராசிரியரின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின், நுங்கம்பாக்கத்திலுள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலக (டி.பி.ஐ.) வளாக முகப்பில் அமைக்கப்பட்டுள்ள பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு வளைவினை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், டி.பி.ஐ. வளாகத்திற்கு "பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்' என்று பெயர் சூட்டினார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள் மற்றும் திரளான தி.மு.க.வினர் கலந்துகொண்டனர்.
அமைச்சர் பொறுப்பேற்றுக் கொண்டதையடுத்து சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத்துறையின் உயரதிகாரிகள் மற்றும் அலுவலர்களுடன் கடந்த சனிக்கிழமை விரிவாக விவாதித்தார் உதயநிதி. பல்வேறு துறைகளில் செயல்படுத்தும் திட்டங்களின் நிலை குறித்து ஆய்வு நடத்தினார். பொங்கல் பண்டிகை நெருங்குவதால், பரிசுத் தொகுப்பு மற்றும் பணம் கொடுப்பது பற்றியும் விவாதித்துள்ளார் உதயநிதி. இதன் தொடர்ச்சியாக, பொங்கல் பரிசு குறித்து 5 மூத்த அமைச்சர்களுடன் திங்கள்கிழமை விரிவாக ஆலோசித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்த பரிசுத் தொகுப்பு வழங்குவதன் மூலம் அரசுக்கு கூடுதலாக எவ்வளவு செலவாகும் என்பதும் ஆராயப்பட்டது. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும். இதற்கிடையே, 2023-ஆம் ஆண்டிற்கான, முதல் கூட்டத்தொடர் கவர்னர் தலைமையில் தொடங்கப்பட வேண்டும். அதனை எந்த நாளில் துவக்குவது என்பது குறித்து முடிவெடுக்க, ஜனவரி 4-ந் தேதி அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டுவதற்கு திட்டமிட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
-இளையர்