ராங்கால் : தேவகவுடா பேரனின் பாலியல் ஆபாச வீடியோ! பின்னணியில் தமிழக பா.ஜ.க. நிர்வாகி! அப்ரூவராகும் ஜாபர் சாதிக்! அலறும் அரசியல் புள்ளிகள்!

ff

"ஹலோ தலைவரே, தேர்தல் முடிந்த நிலையில், தமிழக அரசியல் கட்சிகளுக்குள், அது தொடர்பான சூறாவளி வீசிக்கிட்டு இருக்கு.''

"ஆமாம்பா, இப்ப பா.ஜ.க.வுக்குள் பெரும் மோசடிப் புகாரெல்லாம் எழுந்திருக்கே?”

"உண்மைதாங்க தலைவரே, தேர்தல் செலவுக்காகக் கட்சித் தலைமையால் கொடுக்கப்பட்ட பணத்தில், கட்சி நிர்வாகிகள்

rr

ஏகத்துக்கும் விளையாடி விட்டார்கள் என தமிழக பா.ஜ.க.வில் இப்போது பலமான சூறாவளி வீசி வருகிறது. எங்கள் தொகுதிக்குத் தரவேண்டிய பணத்தை எங்களுக்குக் கொடுக்கவில்லை என நடிகை ராதிகா சரத்குமார், சௌமியா அன்புமணி, ஏ.சி.எஸ்., தேவநாதன் யாதவ், பாரிவேந்தர் உள்ளிட்ட பா.ஜ.க. அணி வேட்பாளர்கள், பா.ஜ.க.வின் தேசியத் தலைமைக்குப் புகார்களை அனுப்ப, இதைக்கண்டு ஷாக்கான பா.ஜ.க.வின் தேசியத் தலைமை, தமிழக நிர்வாகியான அந்த நபரை அழைத்துக் கடுமையாக விசாரித்திருக்கிறது. இதில் மிரண்டுபோன அந்த நபர், இந்தப் பணத்தையெல்லாம் வினியோகிக்கும் பொறுப்பை, ஆர்கனைசிங் செகரட்டரி என்ற முறையில் கவனித்தது கேசவ விநாயகம்தான். இந்தத் திருவிளையாடல்களுக்கு அவர்தான் பொறுப்பு என்று சொல்லியிருக்கிறார். இதேபோல் கீழ்மட்டத்திலும் பணப்புகார்கள் பரவலாக எழ, அதன் அடிப்படையில் நிர்வாகிகள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறதாம். நீலாங்கரையில் இதுபோன்ற பணப் பிரச்சினை போலீஸ்வரை போயிருக்கிறது என்கிறார்கள்.''”

"தமிழிசையும் இதேபோன்ற புகாரை கிளப்பி யிருக்கிறாரே?''”

"பா.ஜ.க.வின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான கரு. நாகராஜன், தேர்தல் செலவுக்காகக் கொடுத்த பணத்தில், ரூபாய் 4 கோடி வரை மோசடி செய்துவிட்டார் என்று புகார் வாசித்து, கட்சியின் தேசியத் தலைமைக்கு ஷாக் கொடுத்திருக் கிறார் தமிழிசை. இதுகுறித்து, கரு. நாகராஜனிடம் கட்சித் தலைமை விசாரித்தபோது, "இந்தமுறை தமிழிசை, தென்சென்னையில் டெபாசிட் வாங்குவதே கஷ்டம். எனவே, இதையெல்லாம் திசை திருப்

"ஹலோ தலைவரே, தேர்தல் முடிந்த நிலையில், தமிழக அரசியல் கட்சிகளுக்குள், அது தொடர்பான சூறாவளி வீசிக்கிட்டு இருக்கு.''

"ஆமாம்பா, இப்ப பா.ஜ.க.வுக்குள் பெரும் மோசடிப் புகாரெல்லாம் எழுந்திருக்கே?”

"உண்மைதாங்க தலைவரே, தேர்தல் செலவுக்காகக் கட்சித் தலைமையால் கொடுக்கப்பட்ட பணத்தில், கட்சி நிர்வாகிகள்

rr

ஏகத்துக்கும் விளையாடி விட்டார்கள் என தமிழக பா.ஜ.க.வில் இப்போது பலமான சூறாவளி வீசி வருகிறது. எங்கள் தொகுதிக்குத் தரவேண்டிய பணத்தை எங்களுக்குக் கொடுக்கவில்லை என நடிகை ராதிகா சரத்குமார், சௌமியா அன்புமணி, ஏ.சி.எஸ்., தேவநாதன் யாதவ், பாரிவேந்தர் உள்ளிட்ட பா.ஜ.க. அணி வேட்பாளர்கள், பா.ஜ.க.வின் தேசியத் தலைமைக்குப் புகார்களை அனுப்ப, இதைக்கண்டு ஷாக்கான பா.ஜ.க.வின் தேசியத் தலைமை, தமிழக நிர்வாகியான அந்த நபரை அழைத்துக் கடுமையாக விசாரித்திருக்கிறது. இதில் மிரண்டுபோன அந்த நபர், இந்தப் பணத்தையெல்லாம் வினியோகிக்கும் பொறுப்பை, ஆர்கனைசிங் செகரட்டரி என்ற முறையில் கவனித்தது கேசவ விநாயகம்தான். இந்தத் திருவிளையாடல்களுக்கு அவர்தான் பொறுப்பு என்று சொல்லியிருக்கிறார். இதேபோல் கீழ்மட்டத்திலும் பணப்புகார்கள் பரவலாக எழ, அதன் அடிப்படையில் நிர்வாகிகள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறதாம். நீலாங்கரையில் இதுபோன்ற பணப் பிரச்சினை போலீஸ்வரை போயிருக்கிறது என்கிறார்கள்.''”

"தமிழிசையும் இதேபோன்ற புகாரை கிளப்பி யிருக்கிறாரே?''”

"பா.ஜ.க.வின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான கரு. நாகராஜன், தேர்தல் செலவுக்காகக் கொடுத்த பணத்தில், ரூபாய் 4 கோடி வரை மோசடி செய்துவிட்டார் என்று புகார் வாசித்து, கட்சியின் தேசியத் தலைமைக்கு ஷாக் கொடுத்திருக் கிறார் தமிழிசை. இதுகுறித்து, கரு. நாகராஜனிடம் கட்சித் தலைமை விசாரித்தபோது, "இந்தமுறை தமிழிசை, தென்சென்னையில் டெபாசிட் வாங்குவதே கஷ்டம். எனவே, இதையெல்லாம் திசை திருப்பவே, அவர் பொய்ப் புகார் களைச் சொல்லி இப்போதே நாடகம் ஆட ஆரம்பித்து விட்டார்' என்று பதில் சொல்லியிருக்கிறார். ஆனாலும் விசாரணை தொடர்கிறதாம். காரணம், தமிழிசையோ, நாகராஜனிடம் கொடுத்த பணத்திற்கு, உரிய ஆதாரங் களை வைத்திருக்கிறாராம். குறிப்பாக, எங்களுக்குப் பணம் தரப்படவில்லை என்று, கட்சியின் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள், தங்கள் கைப்பட எழுதிய புகார் கடிதங்களையும் தமிழிசை தன் வசம் வைத்திருக்கிறார். எனவே இந்த விவகாரம் பெரிதாக உருவெடுத்து வருகிறது. ஒட்டுமொத்தமாக, இந்தத் தேர்தலை சாக்காக்கி ஏறத்தாழ 1000 கோடி ரூபாய் அளவுக்கு கட்சிக்குள் நிதி மோசடி நடந்திருக்க லாம் என்று திகைக்க வைக்கிறார்கள் கமலாலயத் தரப்பினரே.''”

"கர்நாடக அரசியலைப் பரப்பரபாக்கி வரும் ஆபாச வீடியோக்களின் பின்னணி யிலும் அந்த பா.ஜ.க. நிர்வாகியின் பெயர் அடி படுகிறதே?''”

"ஆமாங்க தலைவரே, முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் பேரனும், மதசார்பற்ற ஜனதா தளக் கட்சியின் எம்.பி.யுமான பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள், அங்கே தேர்தல் நேரத்தில் வெளி யாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த பிரஜ்வால் ரேவண்ணாவின் சித்தப்பாவான குமாரசாமியின் அரசியல் பிம்பத்தை வீழ்த்தவே, இந்த வீடியோக்கள் வெளியிடப்படுவதாக அவர் கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர். இந்த நிலையில் இந்த வில்லங்க சி.டி.க்கள் குறித்து விசாரித்தபோது, "தமிழகத்தின் அந்த பா.ஜ.க. நிர்வாகி, எங்கள் கர்நாடகத்தில் காவல்துறை அதிகாரியாக இருந்தபோது, அவருக்கும் குமாரசாமிக்கும் ஒத்துப்போகவில்லை. அந்தக் கடுப்பில் குமாரசாமியைப் பழிவாங்க, அவரது அண்ணன் மகனான பிரஜ்வால் ரேவண்ணாவைக் குறிவைத்து, அந்த நபரின் திட்டப்படி எடுக்கப்பட்டவைதான் இந்த நீல வீடியோக்கள். அந்த நபர் அப்பவே இப்படித்தான்’ என்று புன்னகைக்கிறார்கள்.''”

"போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய ஜாபர்சாதிக்கை வைத்து பல்வேறு திட்டங்களை அமலாக்கத்துறை வகுப்பதாகத் தகவல் வருகிறதே?''”

rr

"உண்மைதாங்க தலைவரே, ஏறத்தாழ இரண்டாயிரம் கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில், தி.மு.க.வின் அயலகப்பிரிவு துணைச்செயலாளராக இருந்த ஜாபர்சாதிக் உள்ளிட்ட 5 பேரை, டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் அண்மையில் கைதுசெய்தது. கைதான இவர்கள் அனைவரும் இப்போது திகார் சிறையில் இருக்கிறார்கள். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையும் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதற்கிடையே இந்த விவகாரத்தில், ஹவாலா மூலம் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்க, அவற்றை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர், அம லாக்கத்துறையிடம் ஒப்படைத்திருக்கிறார்களாம்.''”

"சரி’''’

"இது தொடர்பாக வழக்கைப் பதிவு செய்திருக்கும் அமலாக்கத்துறை, சிறையில் இருக்கும் ஜாபர் சாதிக் உள்ளிட்ட ஐவரிடமும் விசாரணை நடத்த வேண்டியும், வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டியும் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி கோரி ஒரு மனுவைத் தாக்கல் செய்தது. இதை விசாரித்த நீதிமன்றமும், அதற்கான அனுமதியை அமலாக்கத்துறைக்கு கொடுத்திருக் கிறது. தற்போது ஜாபர் சாதிக் உள்ளிட்டவர் களிடம் 3 நாட்களுக்கு வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை அமலாக்கத் துறை தொடங்கியிருக்கிறது. இந்த விசாரணையில் ஜாபர் சாதிக், அப்ரூவராக மாற வாய்ப்பிருப்பதாக தற்போது பரபர செய்திகள் அடிபடுகின்றன. அமலாக்கத்துறை எதிர்பார்க்கும் வகையில் ஜாபர் அப்ரூவராக மாறினாலோ அல்லது ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தாலோ அது, தமிழகத்தில் அரசியல் ரீதியாக பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தும் என்கிறார்கள்.''”

"விருதுநகர் வெடிவிபத்து தமிழக அளவில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கி யிருக்கிறதே?''”

rr

"விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகில் ஆவியூரில் நடந்த கல்குவாரி வெடி விபத்தில் மூன்று பேர் உடல் சிதறி இறந்திருக் கிறார்கள். இது குறித்து கவலையடைந்த முதல்வர் ஸ்டாலின், ஒரு அறிக்கை கொடுத்திருக்கிறார். ஆனால் துறை அமைச்சரான துரைமுருகன் இது குறித்து எந்த ஒரு விளக்கத்தையும் தரவில்லையே என்கிற ஆதங்கம் தி.மு.க.விலேயே இருக்கிறதாம். மணல் பிசினஸில் கொடிகட்டிப் பறப்பவர்கள் கட்டுப்பாட்டில்தான் அந்த கல்குவாரி இயங்கி வந்ததாம். அங்கு வைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகள், கடுமையான வெயில் காரண மாகவே வெடித்திருக்கிறது என்கிறார்கள். ஆபத்தான இந்தக் குவாரி, எங்கள் பகுதியில் இருக்கக்கூடாது என்று அந்தப் பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வந்த நிலையில்தான் இந்த விபத்து நடந்திருக்கிறது. இந்த குவாரி இங்கு செயல்படுவது சரியில்லை என்ற ரீதியில் அதிகாரிகளும் ரிப்போர்ட் கொடுத் திருந்தார்களாம்.''”

"சென்னை போக்குவரத்துக் காவல்துறையில் சலசலப்பு தெரியுதே?''”

"தமிழக போக்குவரத்து காவல் துறையில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் என்கிற பதவியில் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானவர்கள் பணியாற்றி வருகிறார்கள். வாகன சோதனைக்கு இவர்களைப் பயன்படுத்துவதுடன், இவர்கள் கையில் பில்லிங் மெஷினையும் கொடுத்து, வழக்கைப் பதியவும், ஃபைன் போடவும் அனுமதி கொடுத்திருக்கிறது காவல்துறை. குறிப்பாக டைரக்ட் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு ஃபைன் போடும் தகுதி உண்டு. அதேபோல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கும் ஃபைன் போடும் தகுதி உண்டு என்று சொல்லி, இந்தக் கருவி யைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், வடசென்னை போக்குவரத்து காவல்துறையிலுள்ள இன்ஸ்பெக்டர்களோ, சிறப்பு எஸ்.ஐ.களிடம், "நீங்கள் வெறும் ஏட்டுதான்; எஸ்.ஐ. கிடையாது. எனவே அடக்கி வாசியுங்கள்' என்று அவர்களிடம் கடுமை காட்டு கிறார்களாம். அதனால், சிறப்பு எஸ்.ஐ.க்களுக்கென உள்ள உரிமைகளைக்கூட எங்களால் பெற முடியவில்லை என்கிற ஆதங்கம், போக்குவரத்துக் காவல்துறையில் அவர்கள் மத்தியில் எதிரொலிக்கிறது. அதுமட்டுமல்லாது...''”

"ம்..முழுசா சொல்லுப்பா.''”

"அதாவது சட்ட விதிகளின்படி, சிறப்பு எஸ்.ஐ.க்களாக இருப்பவர்கள், நேரடியாக மருத்துவ சான்றிதழ் பெற்று மெடிக்கல் லீவ் எடுக்க உரிமை இருக்கிறது. அதன்படி மெடிக்கல் லீவ் எடுக்க முயற்சித்தால், "நீங்கள் ஆஃபீசர்ஸ் கிடையாது. ஹெட் கான்ஸ்டபிள் ரேஞ்சில் உள்ளவர்கள். உங்களுக்கு இதற்கான உரிமை இல்லை'' என்றபடி, அவர்கள் கொடுக்கும் மருத்துவச் சான்றிதழை, இன்ஸ்பெக்டர்கள் ஏற்க மறுக்கிறார்களாம். ஏட்டு நிலையில் இருப்பவர்கள் மருத்துவ விடுப்பு எடுக்க வேண்டுமானால் முத லில் இன்ஸ்பெக்டரிடம் ஒரு அனுமதிப் படிவம் பெற்று, அதன்மூலம் மருத்துவச் சான்றிதழை வாங்கி வந்து அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இப்படி இந்த விதியின்படியும் சிறப்பு எஸ்.ஐ.க்களின் உரிமைகளைப் பறிக்கிறார்களாம். இது போன்ற சிக்கல்கள் அங்கே இருப்பதால், தமிழக உள்துறைச் செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ். இதில் தலையிட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பும் சிறப்பு எஸ்.ஐ.க்களிடம் இருக்கிறது.''”

"நானும் எனக்குக் கிடைத்த ஒரு தகவலைப் பகிர்ந்துக்கிறேன். பா.ஜ.க.வின் உறவை உதறித்தள்ளிய நிலையில், இந்தத் தேர்தலில் தங்கள் கட்சிக்கான வாக்கு பலத்தை பெரிய அளவில் நிரூபித்துக்காட்ட நினைத்திருந்தாராம் எடப்பாடி. ஆனால் நிலைமை மோசமாக இருக்கிறதாம். அவருக்குக் கிடைத்த ஒரு ரிப்போர்ட்டில், திருச்சி, தேனி, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க. டெப்பாசிட் வாங்குவதே கஷ்டம் என்று சொல்லப் பட்டிருக்கிறதாம். இந்த ரிப்போர்ட்டின் படி நடந்தால், கட்சிக்கே அது அவமானமாகிவிடுமே என்று எடப்பாடி அதிர்ந்து போயிருக்கிறாராம். இந்த நிலையில், தேர்தலில் அ.தி.மு.க. பலவீனமானால், அதற்குக் காரணம் எடப்பாடியின் தலைமைதான் என்று, அவருக்கு எதிராக கட்சியின் சீனியர்கள் சிலர் கலகக் கொடிபிடிக்க அ.தி.மு.க.வில் தயாராகி வருகிறார்களாம்.''’

nkn040524
இதையும் படியுங்கள்
Subscribe